முகம் பளிச்சென்று இருக்க....
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதன் தோலை முகத்தில் வைக்க வேண்டும். முகத்தில் வைத்து ஒரு 5 முதல் 10 நிமிடம் வரை ஊற வைத்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு உருளைக்கிழங்கை சமைக்கும் போதெல்லாம் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கில் இருந்து தோலை சீவிய பின், அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வந்தால், கருப்பாக காட்சியளிக்கும் முகம் விரைவில் வெள்ளையாகும்.
0
Leave a Reply