25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Jul 17, 2024

புருவங்களை அழகாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் எண்ணெய்கள்

 பாதாம் எண்ணெயை புருவங்களில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த எண்ணெயை இரவில் புருவங்களில் தடவி காலையில் குளித்தால் அதிக பலன் கிடைக்கும். இந்த எளிய வீட்டு வைத்தியத்தை வாரம் இருமுறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். ஆமணக்கு எண்ணெய் மிகவும் தடிமனாகவும் எண்ணெய் நிறைந்ததாகவும் தெரிகிறது. ஆமணக்கு எண்ணெயில் பஞ்சை தோய்த்து புருவங்களில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த எண்ணெயின் பண்புகள் சருமத்திற்கு சரியான ஊட்டச்சத்தை அளித்து புருவங்களை அடர்த்தியாக வளரச் செய்கிறது. புருவங்கள் அடர்த்தியாக இருக்க தேங்காய் எண்ணெய் தடவலாம். அதுமட்டுமின்றி, புருவங்களுக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது. எனவே, உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும் அழகாகவும் மாற்ற, இயற்கையான தேங்காய் எண்ணெயை ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவுவது நல்ல பலனைத் தரும். ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால் இரண்டே நாட்களில் பலன் கிடைக்கும். ஆலிவ் எண்ணெய் சிறந்த வீட்டு வைத்தியம். தூங்குவதற்கு முன், ஆலிவ் எண்ணெயை புருவங்களில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் புருவங்களின் முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது.ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால் இரண்டே நாட்களில் பலன் கிடைக்கும். ஆலிவ் எண்ணெய் சிறந்த வீட்டு வைத்தியம். தூங்குவதற்கு முன், ஆலிவ் எண்ணெயை புருவங்களில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் புருவங்களின் முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது. வெதுவெதுப்பான பாலில் பருத்தியை நனைத்து புருவங்களில் தடவவும். பால் காய்ந்த பிறகு. குளிர்ந்த நீரில் கழுவவும்.         

Jul 15, 2024

பெண்களுக்கு உதட்டின் மேல் முடி வளராமல் இருக்க…

சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை முடி முளைத்திருக்கும். அது முகத்தின் அழகை கெடுக்கும்.அதனால் சிலர் பார்லருக்குச் சென்று திரட்டிங் செய்து கொள்வதுண்டு, திரெட்டிங் செய்வதினால் முடி வளர்வது  குறையாது என்பதை முதலில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை குறைக்க இயற்கையாகவே மருத்துவம் இருக்கிறது. குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து. விரலி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு அரைத்து  தூங்கச் செல்லும் முன் மேல்உதட்டில் பூசவும். காலை எழுத்ததும் கழுவிவிட வேண்டும் .தொடர்ந்து இரு  வாரங்கள் இவ்வாறு பூசி வந்தால் முடி அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி  நிரந்தரமாக உதிர்ந்து விடும். மறுபடியும் அந்த இடத்தில் முடி வளரவே வளராது.

Jul 13, 2024

வயதான தோற்றம்ஏற்படுவதை முதலில் உணர்த்துவதுமுகத்தில் தோன்றும் சுருக்கங்கள்தான்.

முகத்தில் தோன்றும்சுருக்கங்கள் நமக்கு வயதாகிவிட்டதைஉணர்த்துவது மட்டுமின்றி நம்முடையதன்னம்பிக்கையையும்சிதைக்கும்.சில பழக்கங்கள்நம்முடைய உண்மையான வயதை விட விரைவாகவயதானத் தோற்றத்தைக் ஏற்படுத்தும்.இந்த சுருக்கங்களைத் தாமதப்படுத்தவும் அவற்றின் தோற்றத்தைக்குறைக்கவும் உடனடியாக சில பழக்கவழக்கங்களை விட வேண்டும்.சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது சுருக்கங்களுக்குப்பின்னால் உள்ள மிகப்பெரியகாரணங்களில் ஒன்று சூரியனால்சருமத்திற்கு ஏற்படும் சேதம்.சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில்ஊடுருவி, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையைபராமரிக்க முக்கியமான கொலாஜன்மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றைஉடைக்கிறது.உங்கள் சருமத்தைப்பாதுகாக்க, மேகமூட்டமான நாட்களிலும்கூட, சன்ஸ்கிரீனைதடவுவதை தினசரி பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல்இருப்பது நீரிழப்பும் சுருக்கங்கள்உருவாக ஒரு முக்கியகாரணம். சருமத்தில் போதுமானஈரப்பதம் இல்லாவிட்டால், அது அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து வறண்டு,சுருக்கமாகத் தோன்றும். உங்கள்சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க நாள் முழுவதும், குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர்பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.புகைபிடித்தல் கடுமையான உடல்நலஅபாயங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தில் வயதான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. புகையிலை புகையில் உள்ள இரசாயனங்கள் கொலாஜன்மற்றும் எலாஸ்டின் ஃபைபர்களைசேதப்படுத்துகின்றன, அவை முன்கூட்டிய சுருக்கங்களைஏற்படுத்தும்.தவறான தூக்கமுறைதரமான தூக்கமின்மை உங்கள்சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்,மேலும் கொலாஜன் முறிவுமற்றும் மந்தமான தன்மையைஏற்படுத்தும். ஒவ்வொரு இரவும்ஏழு முதல் ஒன்பதுமணிநேரம் உறங்குவதை உறுதிசெய்துகொள்ளுங்கள், இதனால் உங்கள்உடல் போதுமான ஓய்வு நேரத்தை பெறுவதோடு, உடலைபுத்துயிர் பெறவும் வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற டயட் மோசமானஉணவுத் தேர்வுகள் தோல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தும். வைட்டமின்கள் சி மற்றும்ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்நிறைந்த பல்வேறு பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உங்கள்உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்,சருமத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்பாதுகாக்க சிறந்த வழியாகும்.

Jul 12, 2024

புருவம் அடர்த்தியாக வளர ….

புருவங்களை அழகாகவும்.. அடர்த்தியாகவும் வளர சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. கண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், அழகான புருவங்கள் இல்லையென்றால், முகம் எவ்வளவு அலங்கரித்தாலும் அழகில்லாமல் இருக்கும்வாஸ்லைன் ஜெல் முடி வளர்ச்சிக்கு சிறந்தது. ஆனால் இந்த பெட்ரோலியம் ஜெல்லியின் காரணமாக, ஒரு குறையும் உள்ளது. இது சருமத்தை கருமையாக்கும். மேலும் புருவங்களை அழகாக்க ஐப்ரோ பென்சில் அல்லது ஐலைனர் பயன்படுத்தினால், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்தி சிறந்த பலனைக் காணலாம். இந்த இரண்டு கலவையும் மிகவும் திறம்பட செயல்படுகிறதுஇயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அறிகுறிகள் இருந்தால், பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.அடர்த்தியான புருவங்களுக்கு மற்றொரு பயனுள்ள வீட்டு வைத்தியம் வெங்காய சாறு, ஆனால் இந்த வாசனை சிலருக்கு இல்லை, ஆனால் வேறு வழியில்லை. வெங்காயச் சாற்றில் பஞ்சை நனைத்து புருவத்தில் தடவவும். இந்த சாற்றை தடவி, காய்ந்ததும் ரோஸ் வாட்டரால் கழுவ வேண்டும். இது சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல்லை நேரடியாக புருவங்களில் தடவ வேண்டும். 20 நிமிடம் உலர்த்திய பின் கழுவவும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வலுவான புருவத்தை அடைய முடியும் வெதுவெதுப்பான பாலில் பருத்தியை நனைத்து புருவங்களில் தடவவும். பால் காய்ந்த பிறகு. குளிர்ந்த நீரில் கழுவவும். 

Jul 06, 2024

 முகம் வெள்ளையாக மாற தேங்காய் எண்ணெயில்  ஃபேஸ் பேக்

ஃபேஸ் பேக் தயாரிக்க தேவையான பொருட்கள்:  ஃபேஸ் வாஷ் கிரீம், தேங்காய் எண்ணெய், சர்க்கரைபயன்படுத்தும் முறை:இந்த மூன்று பொருட்களைக் கொண்டு, முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுப்பு நிறத்தை எளிதில் நீக்கலாம். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் சிறிது ஃபேஸ் வாஷ் போடவும். அதன் பிறகு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். கடுமையாக தேய்த்தால், சர்க்கரை முகத்தில் சொறி, கீறவுகள் ஏற்படும். எனவே மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த பேக் நன்றாக காய்ந்த பிறகு, தண்ணீரில் கழுவவும். இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் மறையும்.

Jun 26, 2024

உங்கள்சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க….

வயது ஏற ஏற கிடைப்பது அறிவும்,அனுபவமும் மட்டுமல்ல, வயதான தோற்றமும்தான். வயதான தோற்றம்ஏற்படுவதை முதலில் உணர்த்துவதுமுகத்தில் தோன்றும் சுருக்கங்கள்தான்.முகத்தில் தோன்றும் சுருக்கங்கள்நமக்கு வயதாகிவிட்டதை உணர்த்துவது மட்டுமின்றிநம்முடைய தன்னம்பிக்கையையும் சிதைக்கும்.துரதிர்ஷ்டவசமாக சில பழக்கங்கள்நம்முடைய உண்மையான வயதை விட விரைவாகவயதானத் தோற்றத்தைக் ஏற்படுத்தும்.இந்த சுருக்கங்களைத் தாமதப்படுத்தவும் அவற்றின் தோற்றத்தைக்குறைக்கவும் உடனடியாக சில பழக்கவழக்கங்களை விட வேண்டும். சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது சுருக்கங்களுக்குப்பின்னால் உள்ள மிகப்பெரியகாரணங்களில் ஒன்று சூரியனால்சருமத்திற்கு ஏற்படும் சேதம்.சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில்ஊடுருவி, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையைபராமரிக்க முக்கியமான கொலாஜன்மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றைஉடைக்கிறது. உங்கள் சருமத்தைப்பாதுகாக்க, மேகமூட்டமான நாட்களிலும்கூட, சன்ஸ்கிரீனைதடவுவதை தினசரி பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். குறைந்தபட்சம் SPF 30 கொண்ட பரந்த-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனைப்பயன்படுத்தவும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல்இருப்பது நீரிழப்பும் சுருக்கங்கள்உருவாக ஒரு முக்கியகாரணியாக இருக்கலாம். சருமத்தில் போதுமானஈரப்பதம் இல்லாவிட்டால், அது அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து வறண்டு, சுருக்கமாகத் தோன்றும். உங்கள்சருமத்தை உள்ளே இருந்துஈரப்பதத்துடன் வைத்திருக்க நாள் முழுவதும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதைஉறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், பழங்கள்மற்றும் காய்கறிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்தஉணவுகளை உட்கொள்ளுங்கள்.அதிகமாக புகைபிடிப்பது புகைபிடித்தல் கடுமையான உடல்நலஅபாயங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தில் வயதான செயல்முறையை துரிதப்படுத்துகிறது.புகையிலை புகையில் உள்ள இரசாயனங்கள் கொலாஜன்மற்றும் எலாஸ்டின் ஃபைபர்களைசேதப்படுத்துகின்றன,அவை முன்கூட்டிய சுருக்கங்களைஏற்படுத்தும். புகைபிடிப்பதை நிறுத்துவது உங்கள்சருமத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்பாதுகாக்க சிறந்த வழியாகும்.தவறான தூக்கமுறை தரமான தூக்கமின்மை உங்கள்சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்,மேலும் கொலாஜன் முறிவுமற்றும் மந்தமான தன்மையைஏற்படுத்தும். ஒவ்வொரு இரவும்ஏழு முதல் ஒன்பதுமணிநேரம் உறங்குவதை உறுதிசெய்துகொள்ளுங்கள், இதனால் உங்கள்உடல் போதுமான ஓய்வு நேரத்தை பெறுவதோடு,உடலைபுத்துயிர் பெறவும் வழிவகுக்கும்.ஆரோக்கியமற்ற டயட் மோசமானஉணவுத் தேர்வுகள் தோல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தும்.வைட்டமின்கள் சி மற்றும்ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்நிறைந்த பல்வேறு பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உங்கள்உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்,

Jun 21, 2024

தலைமுடி வறட்சியை போக்கும் செம்பருத்தி இலைகள்

குளிர்ச்சியான இலைகள் என்பதால்,பெரும்பாலும் செம்பருத்தியை தலைக்கு பயன்படுத்துகிறார்கள்..ஷாம்புகளில் மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்..செம்பருத்தியின் பூக்களும், இலைகளும் இரண்டுமே மருத்துவ குணம் நிறைந்தது.தலைமுடி வறட்சியை போக்குவதற்கும், தலைமுடி கொட்டுவதை நிறுத்தவும், தலைமுடியும் அதிகமாக வளரவும், கண்களுக்கும் குளிர்ச்சி கிடைக்கவும், இந்த செம்பருத்தி பூக்கள், இலைகள் உபயோகமாகின்றன. வெறும் இலைகளையும் தலைக்கு கண்டிஷனர் போல பயன்படுத்தலாம்.. இந்த இலையை மைய அரைத்து தலைக்கு தடவினால், இயற்கையான கண்டிஷனர் கிடைத்துவிடும்..பேன்கள், அரிப்பு இருந்தாலும் நீங்கிவிடும்.. அல்லது வெறுமனே செம்பருத்தி பூக்களை,தலையில் வைத்துக் கொண்டு தூங்கினாலும், இந்த பூக்களின் வாசனைக்கு பேன்கள் ஓடிவிடும்... 

Jun 20, 2024

உடல் பருமனைக் குறைக்கும் பூண்டுப் பால்

இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனை காணலாம். மேலும். பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

Jun 18, 2024

சார்கோல் Facepack

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்.1. தேவையான பொருட்கள் - சார்க்கோல்- 1 ஸ்பூன்,முல்தானி மட்டி- 1 ஸ்பூன்,ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்தயாரிக்கும் முறை - ஒரு பவுலில் சார்க்கோல், முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும்.சருமம் ஏற்கனவே வறண்டிருந்தால் இந்த பேஸ்பேக்கில் சிறிது தேனைக் கலக்கவும். 2. தேவையான பொருட்கள் - சார்க்கோல்- 1 ஸ்பூன்,கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்,அரிசி மாவு- 1 ஸ்பூன்தயாரிக்கும் முறை - ஒரு பவுலில் சார்க்கோல், கற்றாழை ஜெல் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒகலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தேய்த்து சுத்தம் செய்யவும்.முகத்தில் கரும்புள்ளிகள் பிரச்சனை இருந்தால் முகத்தில் பேஸ்பேக் பயன்படுத்துவதன் மூலம் கரும்புள்ளிகளும் நீங்கும்.3. தேவையான பொருட்கள் - சார்க்கோல்- 1 ஸ்பூன் ,சோள மாவு- 1 ஸ்பூன் ,தேங்காய் தண்ணீர்- 1 ஸ்பூன்தயாரிக்கும் முறை - ஒரு பவுலில் சார்க்கோல், கார்ன்ஃப்ளார் மற்றும் தேங்காய் தண்ணீர் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைத் தண்ணீரில் கழுவலாம்.உங்கள் சருமம் வறண்டு இருந்தால் இந்த கலவையில் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.        

Jun 14, 2024

சருமஆரோக்கியத்தை அதிகரிக்கும் மணத்தக்காளி பழங்கள்

சருமம் பளபளப்பாவதற்கு மணத்தக்காளி பழத்தை, அடிக்கடி மென்று சாப்பிடவேண்டும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தை சேதத்தில் இருந்து காக்கிறது. சருமத்தின் பளபளப்பை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பால் சருமம் இழக்கும் பொலிவை மீட்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News