25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Mar 22, 2024

சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்த

..கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி,10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் செய்து வந்தால், முகத்தில்,சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி வருவது பலன் தரும். கடலை மாவு, பயத்தம் மாவு உபயோகப்படுத்தலாம்.

Mar 18, 2024

வெயிலின்  கருமை நீங்க.....

வெள்ளரிக்காய், கற்றாழை, வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க கருமை நீங்கும்.ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கி அதனுடன் முல்தானிமட்டி, சந்தனம், தயிர் கலந்து முகத்தில் பேக் போட்டு கழுவ கருமை போகும்.இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், இரண்டு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர்கலந்து முகத்தில் பூசி20-நிமிடம் பின் கழுவ வேண்டும்.சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். எலுமிச்சை மற்றும் தேன்: இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், இரண்டு ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.

Mar 14, 2024

வெயில் பாதிப்பு  மங்கு,கருப்பு திட்டுக்கள்  மறைய..

 வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள், வெயில் பாதிப்பு அதிகம் தாக்கக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மங்கு வருவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது. அதேபோல் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு மங்கு வரும் வாய்ப்பு உள்ளது.2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை மங்கு மற்றும் பிக்மண்டேஷன் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள்.அதை அப்படியே15,20 நிமிடங்கள் வரை வைத்திருங்கள். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வர மங்கு வேகமாக மறைவதைக் காணமுடியும்.

Mar 12, 2024

வயோதிக தோற்றத்திலிருந்து தப்பிக்க!....

பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சளை தேய்த்து குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும் முக அலர்ஜியில் இருந்தும் அவர்கள் எளிதில் தப்பிக்கலாம்.கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கு பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும். இவற்றை பொடியாக தயாரித்து முகம் மற்றும் கை கால்களில் தடவி குளிர்த்து வர வேண்டும்.தினமும் ஒரு ஜூஸ் என்ற அடிப்படையில் நெல்லி எலுமிச்சை மாதுளை போன்ற பழச்சாறுகளை அருந்தி வர வயோதிக தோற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.

Mar 09, 2024

பற்சொத்தையை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் 

வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் மாவுச்சத்து மற்றும் சர்க்கரையிலிருந்து அமிலத்தை உருவாக்குகிறது. இவை பற்களின் மேல் அடுக்கை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களில் துளைகள் உருவாகும். இது குழி அல்லது புழு தொற்று எனப்படுகிறது.இனிப்பு பொருள்கள் அதிக இனிப்புகள், இனிப்பு குளிர்பானங்கள் மற்றும் ஒட்டும் உணவுகள் போன்றவை பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது. இவை துவாரங்களை வேகமாக வளரச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஃப்ளூரைடு பற்பசையை ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரு முறையும் குறைந்தது 2நிமிடங்களுக்கு துலக்க வேண்டும்பற்களுக்கு இடையில் மறைந்துள்ள உணவுத்துகள்கள் அல்லது பாக்டீரியாக்களை அகற்ற  (FLOSS ) ஃப்ளோசிங் செய்யலாம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் வாயை சுத்தம் செய்யலாம். இதனுடன், இனிப்பு உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லதுபச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்களைப் பெறலாம் ஒவ்வொரு6 மாதங்களுக்கும் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும். இதன் மூலம் துளைகளின் ஆரம்ப நிலையிலையை அடையாளம் கண்டு நிரப்பி, பெரிய சேதத்தைத் தடுக்கலாம் 

Mar 06, 2024

மூக்கில் உள்ள வெண்புள்ளி, கரும்புள்ளிகள் மறைய..

ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து20 நிமிடங்கள் கழித்து துடைத்தெடுக்கவும்.எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து10 நிமிடங்கள்கழித்து துடைக்கவும்.டீ ட்ரீ ஆயிலை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து துடைத்து எடுக்கவும்.பருக்கள் வந்துவிட்டால் க்ரீம், ஜெல் என எதுவும் தேடத் தேவையில்லை. ஐஸ் கட்டிகளை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்து நன்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தாலே போதும் பருக்கள் வேகமாக மறைய ஆரம்பிக்கும்.முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

Mar 05, 2024

கண்களில்கருவளையம் வராமல் தடுக்க…

கண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே .கண்களை சுற்றிகருவளையம்  இருக்காதுகருவளையம் ஆனது மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இதுபோன்ற காரணங்களினால் தான் வருகிறது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் உடல்நிலையினை பொறுத்ததுகண்களில் நீர்சத்து அதிகம் இல்லை என்றால் கருவளையம் வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு நிகழாமல் கருவளையம் வருவதை தடுக்க ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி முட்டைகோஸ் மற்றும் ஆரஞ்சு இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டாலே போதும் கருவளையம் என்பதே எட்டி பார்க்காது.ஒருநாளைக்கு நாம் அனைவரும் தூங்க வேண்டிய சராசரியான தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் கண்களில் கருவளையம் வரும். ஆகையால் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணிநேரம் தூங்க வேண்டும்நீங்கள் கண்களுக்கு கிரீம் பயன்படுத்தும் போதும் அல்லது கண்களில் இருக்கும் கிரீமினை அகற்றும் போதும் கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியினை பொறுமையாக கையாள வேண்டும் கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மசாஜ் செய்வது என்பது நாம் செய்யும் வழக்கமான ஒன்று. கண்களுக்கு கீழே மசாஜ் செய்வது என்பது நம்முடைய கண்களில் கருவளையம் வருவதை தடுக்க செய்கிறது. எப்படி என்றால் கண்களில் நீர்சத்து அதிகமாக ஆகிவிட்டது என்றால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்றவை ஏற்படும். ஆனால் நாம் மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படியான நீர்சத்து ஏற்படுவதை தடுக்கலாம்.முகத்தில் இருக்கும் கண்களுக்கு கீழே வறட்சி ஏற்பட்டால் அதனை சரிசெய்ய Moisturizer பயன்படுத்துவோம். ஆனால் இதற்கு பதிலாக,அவர் அவருடைய கண்களுக்கு கீழே உள்ள தோலிற்கு ஏற்றவாறு, கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கருவளையம் வருவதையும் தடுக்கிறது

Mar 04, 2024

கைகள் பளிச்சென்று இருக்க....

வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கைகள் கருமையாக இருக்கும். இந்த கருமையை போக்க1 கிண்ணத்தில்2 தேக்கரண்டி காபித்தூள்,2 தேக்கரண்டி சர்க்கரை,3 தேக்கரண்டி தயிர் எடுத்து நன்றாக கலந்து, கைகளில் தடவி15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வர கைகளில் உள்ள கருமை நீங்கி, கைகள் பளிச்சென்று இருக்கும்.

Mar 01, 2024

அடர்த்தியாக  தலைமுடி வளர அழுகிய தேங்காய்

அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். இருந்தாலும் தலைமுடி வளர வேண்டும் என்றால், முடியை நன்றாக பராமரிக்க வேண்டும்.ஷாம்பை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஏன் என்றால் அவற்றில் இருக்கும் ரசாயனப்பொருட்கள் உங்களுக்கு இருக்கும் முடியையும் அதிகமாக உதிர வழிவகுக்கும்.இயற்கை முறையை தினமும் பயன்படுத்தினால் தலைமுடிக்கு மட்டுமின்றி உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது.இயற்கை முறையில் தலைமுடியை அடர்த்தியாகவும், மிகவும் கருமையாகவும் தலைமுடி வளர, அழுகிய தேங்காயில் கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி அரைத்து அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் வரை காத்திருந்து பின்பு தலை தேய்த்து குளிக்கவும்.இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வர தலைமுடி வேர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.

Feb 29, 2024

முகப்பருவை தடுக்கும் பேஸ்ட்கள்

புதினா பேஸ்ட் பயன்படுத்தினால் முகப்பரு மாயமாகி விடும். பாக்டீரியாவை அழித்திடும்.வேப்பிலை மஞ்சள் பேஸ்ட் போட்டால் வீக்கம் குறைந்துவிடும்ஆரஞ்சு தோலை அரைத்து பருவில் போட்டால் பரு வேகமாக ஆறிவிடும்மஞ்சள், தேன் பேஸ்ட் விளக்கெண்ணெய் மஞ்சள் பேஸ்ட்இதை பயன்படுத்தினால் முகப்பருவை குணப்படுத்துவதுடன், தோலை பாதுகாக்கவும்' செய்யும்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 21 22

AD's



More News