25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Feb 05, 2024

மேனி மினுமினுப்பாக.....

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள்கலந்து உடம்பில் தேய்த்து,சிறிது நேரம் கழித்துபயத்தமாவை தேய்த்து குளித்துவந்தால் மேனி பளப்பளப்பாகவும், சருமம்மிருதுவாகவும் இருக்கும்.மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுக்கும் 

Feb 03, 2024

இயற்கையான முறையில் மென்மையான சருமத்தை  தரும் சந்தனம்

 நம் முகத்தை இயற்கையான முறையில்  நம் வீட்டில் இருக்கும் சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக அழகு பெறலாம்.சந்தனம்  மருத்துவக் குணம் கொண்டது. மிகவும் வாசனையாகவும் இருக்கும்,இது அதிக குளிர்ச்சி வாய்ந்தது. இதைநாம் முகத்தில் அப்ளை செய்தால் முகம் வறட்சி தன்மையை குணப்படுத்துகிறது. முகத்திற்கு அதிகம் ஈரப்பதத்தை அளிக்கின்றது. சந்தனம்முகத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைக்கும் சிறந்த ஃபேஸ் பேக்காக சந்தனம் விளங்குகிறது.சந்தன பவுடர்- சந்தன பொடியை முகத்தில் அப்ளை செய்வதனால் முகதளர்வுகள், முகத்தின் ஈரப்பதம் மற்றும் நிறம் மேம்படுத்தப்படுகிறது.வறட்சியின் காரணமாக முகத்தில் அரிப்பு மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.சந்தன பொடி சருமத்தின் சுருக்கங்களை இறுக்கமாக்குகிறது.முகத்தில் தோன்றும் தொற்றுகள் மற்றும் அரிப்புகளை சந்தனப் பொடி குணப்படுத்துகிறது.மேலும் புத்துணர்வையும், குழந்தையின் தோல் போன்று மென்மையான சருமத்தையும் தரும் ஆற்றல் சந்தனத்திற்கு உண்டு.சந்தனத்தை பயன்படுத்தினால் சருமத்தை சந்தனம் போன்று பளபளவென்று இருக்கும்..சந்தனம் இறந்த செல்கள் தேங்கியிருக்கும் சருமத்தின் மந்தமான தோற்றத்தை தடுக்க கூடியது. சந்தனத்தை பயன்படுத்தும் போது சில காலம் சருமத்தில் இறந்த செல்கள் இல்லாமல் சருமம் புத்துணர்ச்சியாக , பொலிவுடன் இருக்கும். இதை முகத்தில் மட்டும் அல்லாமல் கண்களுக்கு கீழ், கழுத்திலும் கூட பயன்படுத்தலாம். இது மருக்களை வரவிடாமல் செய்ய தடுக்கிறது. அழகுப் பராமரிப்பில் முகப் பருக்களை தடுக்க உதவுகிறது..சந்தனக்கட்டை வாங்கி கல்லில் இழைத்து பயன்படுத்துவது. இது மிக நல்லது. ஏனெனில் இது செயற்கையாக எதுவும் கலக்காத இழைத்த தூய்மையான சந்தனம். இதை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினாலே சருமத்தின் உஷ்ணம் தணிக்கும்.எக்காரணம் கொண்டும் பூஜைக்கான சந்தன வில்லை (குறைந்த விலை ) வாங்க கூடாது. இது அசல் சந்தனம் கிடையாது. எம்போரியம் இருக்கும் இடங்களில் அசல் சந்தனம் கிடைக்கும். சந்தனம் எண்ணெய். இது அரோமா எண்ணெய் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும். இதுவும் சிறந்தது.வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் சந்தன எண்ணெயை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சந்தன பவுடர் அல்லது சந்தனத்தை இழைத்து பயன்படுத்தலாம்.

Feb 02, 2024

நகங்களை பராமரிக்க....

நகங்களை வெட்டுவதற்கு முன் நகத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால், நீங்கள்விரும்பும் வடிவத்திற்கு நகங்களை வெட்டலாம்.தினமும் பாலுடன் கொஞ்சம் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைத்தல் குறையும். மேலும் நகத்திற்கு பாதாம் எண்ணெயை தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.

Jan 29, 2024

பொடுகு தொல்லைதீர உப்பு

 பொடுகுதொல்லை வருவதற்கான முக்கிய காரணங்கள் ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதினாலும்,தலைமுடியை எண்ணெயைபசையுடன் அழுக்காக வைத்துக்கொள்வது, சரியாகதலை அலசாமல் இருப்பதினாலும், தினமும்தலைக்கு ஷாம்பு போடுவதினாலும்,தலைகுளித்துவிட்டு தலைமுடியை நன்றாக துவட்டாமல் இருப்பது., பொடுகு உள்ளவரின் சீப்பை பயன்படுத்துவது எனபல காரணங்கள் இருக்கின்றது..இந்தபொடுகு தொல்லை , உப்பு தலைமுடியில் இருக்கும் பொடுகை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. எனவேஉப்பு இரண்டு ஸ்பூன்எடுத்து கொண்டு, சிறிதளவுதண்ணீரில் கலந்து கொள்ளவும்.பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10,15 நிமிடம் மசாஜ்செய்ய வேண்டும்.பின்புமைல்டு ஷாம்பு போட்டுதலை அலச வேண்டும்.இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில்குணமாகும்.

Jan 26, 2024

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க தினமும் எலுமிச்சை சாறை தேய்த்து வர முடி வளரும் தன்மையை இழந்து முகம் அழகு பெரும்.முகத்தில் உள்ள முடி நீங்க முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அவற்றில் சோளமாவு, சர்க்கரைஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்டு போல் கலந்து முகத்தில் தடவி, பின்புகாய்ந்தவுடன் அவற்றை கைகளால் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதாக வந்துவிடும்.கை, கால்களில் கருப்பு நிறம் முடிகள் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை சாறை தடவி சோப்பு போட்டு குளித்து வர கை, கால்களில் இருக்கும் கருப்பு நிறம் முடிகள் போய் விடும்.

Jan 25, 2024

முகப்பரு தழும்புகள் மறைய...

முக்கியமாக பருக்களை கைகளால் தொடக்கூடாது.கொழுந்து வேப்பிலையை அரைத்து முகத்தில் உள்ள முகப்பரு மீது தடவி10 நிமிடம் பின் கழுவ வேண்டும். இது தொடர்ந்து செய்து வர நல்லது.வல்லாரை சாற்றுடன், முல்தானி மெட்டி பவுடருடன் கலந்து பேஸ் பேக் போட்டு வரலாம்.துளசியை சுடு நீரில் போட்டு பின் அதனை அரைத்து முகத்தில் தடவி வர நீங்கும்.பருவினால் ஏற்படும் தழும்புகள் மறைய இரவு உறங்குவதற்கு முன் புதினா சாறு 2 தேய்க்கரண்டி, 1/2 மூடி எலுமிச்சை சாறு மற்றும் பயத்தமாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் 10 நிமிடம் ஊறவைத்து பின்பு ஐஸ் கட்டியால் ஓத்தடம் கொடுத்தால், பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையும்.

Jan 24, 2024

புருவம் அடர்த்தியாக வளர...

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்..வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம்  குறையும்.உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.

Jan 20, 2024

உலர்ந்த தலை முடி சாப்டாக்க ஹேர் கண்டிஷனர்

இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி.?தேவையான பொருட்கள்:ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்,கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்இரண்டையும் நன்றாக கலக்கவும்:முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து ,உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். பயன்படுத்தும் முறை:இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும்.இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விடவும்.முக்கிய குறிப்புகள்:எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்த கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.

Jan 19, 2024

முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்க...

இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய பல பொருட்கள் நம்முடைய தோலின் நிறத்தை மாற்றும் வல்லமை படைத்ததாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வெயிலால் ஏற்படக்கூடிய கருமையை நீக்குவதற்கு மட்டுமல்லாமல் ,கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கி இளமையாக தக்கவைத்துக் கொள்ள பல இயற்கையான பொருட்கள் கிடைக்கின்றன.கருமை நிறத்தை வெண்மையாக்கும் கிரீம் முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை சீவி விட்டு அதை நன்றாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகுஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் சுத்தமான பசும்பாலை ஊற்றி அதில் நாம் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு, குறைந்த தீயில் வைத்து உருளைக்கிழங்கு நன்றாக வேக விட வேண்டும். நாம் உபயோகப்படுத்தும் சோப்பை எடுத்து அதையும் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று ஸ்பூன் அளவிற்கு துருவிய சோப்பு கிடைத்தால் போதும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு துருவிய சோப்பை அதில் சேர்த்து சோப்பு கரையும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். சோப்பு அனைத்தும் நன்றாக கரைந்த பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை மறுபடியும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு அல்லது ஆரஞ்சு பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறை இரண்டு ஸ்பூன் ஊற்ற வேண்டும்.இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்த்து ,ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்த பிறகு மறுபடியும் இதை அடுப்பில்  வைத்து கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து,கை விடாமல் கிளறி விட வேண்டும். இது கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கிஆற வைத்து சுத்தமான காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். நிறத்தை வெண்மையாக்க கூடிய க்ரீம் தயாராகிவிட்டது. இந்த கிரீமை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். இந்த கிரீமை நாம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகச்சுருக்கத்தையும் நீக்குவதற்கு இது பெரிதும் துணை புரிகிறது. ஒரு முறை உபயோகப்படுத்தினாலேயே நல்ல பலனை தரக்கூடியது. 

Jan 18, 2024

வயது முதிர்ச்சியின் காரணமாக முகச்சுருக்கத்தை தடுக்கும் ஃபேஸ் க்ரீம்

வயது முதிர்ச்சியின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும்.ஒருசிலருக்குஇளம்வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். எந்த வயது சுருக்கமாக இருந்தாலும் அந்த முகச்சுருக்கத்தை நீக்கி இளமையாக பார்த்துக் கொள்ள  உதவக்கூடிய ஒரு ஃபேஸ் க்ரீம்.முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து,வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை போட்டு நன்றாக தேய்த்து கழுவிக்கொள்ளுங்கள். பிறகு இந்த ஆரஞ்சு பழத் தோலை மட்டும் துருவி,ஒரு கேரட்டைதுருவி எடுத்துக் கொள்ளுங்கள்.. இவை இரண்டையும் எடுத்து ஒரு கண்ணாடி பௌலில் போட்டு, ஆறு பிரியாணி இலையை பொடி பொடியாக உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணையும், நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணையும் சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த கண்ணாடி பவுலை டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் இந்த பவுலை வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும்.குறைந்த தீயில்40 நிமிடம் இருக்க வேண்டும். பிறகு இதை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த எண்ணெயை ஃப்ரீசரில்வைத்து விட வேண்டும். அது கிரீம் பதத்திற்கு மாறிவிடும். இப்பொழுது இந்த கிரீமை எடுத்து முகத்தில் இரவு படுக்க செல்வதற்கு முன் தடவுவதன் மூலம் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆரஞ்சு பழத்தோல் வயது முதிர்ச்சியை தடுப்பதற்கு உதவுகிறது. மேலும் முக வறட்சியை நீக்கி சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.ஒருமுறைஇந்தக்ரீமைஉபயோகப்படுத்தினாலேயே உடனடியாக முகம் மிகவும் மிருதுவாக தோன்றுவதை நம்மால் கண்கூடாக காண முடியும்முகச்சுருக்கமே வயது முதிர்ச்சியை காட்டக்கூடிய ஒரு காரணியாக திகழ்வதால் இந்த கிரீமை பயன்படுத்தி முக சுருக்கத்தை நீக்கி என்றும் இளமையாக தென்படுவோம்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 21 22

AD's



More News