பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். ஆனால் முகஅழகைகெடுக்கும்விதமாகபருக்கள்,கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்..தேவையான பொருட்கள்சார்க்கோல்- 1 ஸ்பூன்சோள மாவு- 1 ஸ்பூன்தேங்காய் தண்ணீர்- 1 ஸ்பூன்தயாரிக்கும் முறைஒரு பவுலில் சார்க்கோல், கார்ன்ஃப்ளார் மற்றும் தேங்காய் தண்ணீர் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைத் தண்ணீரில் கழுவலாம்.உங்கள் சருமம் வறண்டு இருந்தால் இந்த கலவையில் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.
மென்மையான, அழகான, மருத்துவக்குணம்நிறைந்தபூக்களைக்கொண்டுமுகத்தையும், சருமத்தையும், அழகாக்க முடியும். பூக்களில் வைட்டமின்கள், புரதங்கள், சத்துக்கள் நிறைந்துள்ளன. எளிய முறையில், குறைந்த செலவில், முகத்தின் அழகை பூக்களால் பாதுகாக்கலாம். சருமத்திற்கு அழகுத் தரும் பூக்களை பற்றி அறிந்துக் கொள்வோம்.ரோஜாஇன்றும் அழகு சாதனங்கள் அனைத்திலும், ரோஜாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. ரோஜாவின் நிறம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக தானே இருக்கும்.ரோஜா இதழை பறித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான பேஸ்ட் தயாரிக்க...ரோஜா பொடி _ 4 ஸ்பூன் வெந்தயப் பொடி _2 ஸ்பூன் தயிர் _தேவைக்குஇந்த மூன்றையும் பேஸ்ட் போல குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் இருக்கும் தழும்பு களும், கரும்புள்ளிகளும் நீங்கும். முக்கியமாக கரடு முரடான முகம் பளபளப்பாக பளிச்சென்று இருக்கும். தினமும் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்; ஒரு கப் பாசி பயறு, கால் கப் உளுந்து,4 டேபிள் ஸ்பூன் அரிசி, 1 டீஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு,1 வெங்காயம் நறுக்கியது, 4 பச்சை மிளகாய், பெருங்காயப் பொடி,கொத்தமல்லி ஒரு கை பிடிசெய்முறை: இதை நீங்கள் இரவு செய்வதற்கு முடிவு செய்தால், காலையில் மாவு ரெடி செய்து கொள்ளுங்கள். பாசி பயறு, உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்கவும்.4 மணி நேரம் ஊறியதும் அதை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். அதை4 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, வெங்காயம், கொத்தமல்லி நறுக்கியது ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய் ஊற்றி அடை போல் சுட்டு கொள்ளவும்.
கழுத்தைச் சுற்றிலும் சிலருக்கு கருப்பு கருப்பாக வளையம் விழுந்து கவலை வளையத்தை ஏற்படுத்திவிடும் இதற்கான தீர்வு.கடலை பருப்பு கால் கிலோ, பார்லி கால் கிலோ இரண்டையும் தனித்தனியே அரைத்து வையுங்கள். இரண்டிலிருந்தும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் பொடியாக்கிய பச்சை கற்பூரத்தை கடுகளவும், முல்தானி மட்டியை1 சிட்டிகையும் சேர்த்து, கழுத்தைச் சுற்றி பூசி காய்ந்ததும் அலசுங்கள்.தினமும் இதைச் செய்து வர, கழுத்து ''வரி''கள் காணாமல் போய்விடும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.கருப்பு வட்டங்கள் இல்லாத நல்ல முகத்தை பெற வேண்டும் என்றால் 8 மணி நேர தூக்கம் கட்டாயம்.வைட்டமின் சி முக்கியமானது, உங்கள் உணவில் ஆரஞ்சு எலுமிச்சை போன்றவை இருக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை வீட்டில் தயாரிக்கப்பட்ட மஞ்சள், தேன், தயிர், ரோஸ் வாட்டர், மற்றும் கொண்டைக்கடலை மாவு ஆகியவற்றின் பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தை கழுவுங்கள்.
தேவையான பொருட்கள்சார்க்கோல்- 1 ஸ்பூன்கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்அரிசி மாவு- 1 ஸ்பூன்தயாரிக்கும் முறைஒரு பவுலில் சார்க்கோல், கற்றாழை ஜெல் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒகலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தேய்த்து சுத்தம் செய்யவும்.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள்,கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்.1. தேவையான பொருட்கள்சார்க்கோல்- 1 ஸ்பூன்முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்தயாரிக்கும் முறைஒரு பவுலில் சார்க்கோல், முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றைக் கலந்து முகத்தில் தடவி15 நிமிடம் கழித்து கழுவவும்.சருமம் ஏற்கனவே வறண்டிருந்தால் இந்த பேஸ்பேக்கில் சிறிது தேனைக் கலக்கவும்
2 ஸ்பூன் உருளை கிழங்கு ஜூஸ், 2 ஸ்பூன் தக்காளி ஜூஸ், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் ,நல்ல ரிசல்ட் கிடைக்கும்.முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் வெள்ளையாகும். முகம் நல்ல வெள்ளையாக மாறும்.
பனிக் காலத்தில், உடலில் ஒருவித வறட்சித் தன்மை ஏற்படும். அதிகப்படியான குளிரால், பலருக்கும் சருமம் வறண்டு, முகம் பொலிவின்றி காட்சியளிக்கும். இச்சமயத்தில், நம் முகத்தின் மிருது தன்மை குறையும். குளிர்காலத்தில் தான் உங்களின் சருமத்திற்கும், தலை முடிக்கும் அதிககவனம்செலுத்தவேண்டும். இந்நேரத்தில், வெதுவெதுப்பான நீர் மிகவும் நல்லது. 'மாய்சுரைஸர்' சோப்பை பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, உங்கள் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.குளிர் காலத்தில், நிறைய தண்ணீர் குடிப்பதால், நம் சருமம் வறட்சியாகாமல், ஈரப்பதத்துடன் இருக்கும். நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது.மூலிகை தேநீரும், சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்கும்.பிரெஷ் ஆன அதிக நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றுடன் பிரக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க, சருமம் வறண்டு போகாது.உதட்டை அடிக்கடி எச்சில் படுத்தாதீர். இப்படி செய்வதால், உதடு காய்த்து போகும். அதற்குபதிலாக தரமான ' லிப் பாம் ' உபயோகிக்கலாம்.
நல்லெண்ணையை ஒரு கப் அளவு எடுத்து அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஆற வைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தடவ முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். "கறிவேப்பிலையை பொடி செய்து தினமும்2 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர கருகருப்பான ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலை பெறலாம். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.பின் அடுத்த நாள் ஊறவைத்த வெந்தய விதையில் செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகளை கலந்து மென்மையான பேஸ்ட்டைபோல் அரைக்கவும். இதனை உங்கள் தலைமுடியில் தடவி உலர்த்திய பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.இந்த அற்புதமான ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு வளரும்.இவ்வாறு வீட்டில் எளிதாகக் கிடைக்கும் வெந்தயம் மற்றும் செம்பருத்தியை பயன்படுத்தி தலைமுடியின் அழகை அதிகரிக்கவும்.