ஒரு நாளைக்கு. இரண்டு அல்லது மூன்று முறையாவது, முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள். இப்படி சுத்தம் செய்யும் போது, சோப்பையோ, பேஸ் வாஷை யோ பயன்படுத்தினால், முகத்திலுள்ள இயற்கையான எண்ணெய் பசை குறைந்து விடக் கூடும். அதனால், பனிக்காலத்தில் முகம் கழுவ, 'மாய்சுரைஸர் பேஸ்வாஷ்' தான் சிறந்தது குளிர் காலத்தில், தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்வது. சருமத்திற்கு மிக நல்லது. மிதமான சூடுள்ள எண்ணெயில், குளிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன், மசாஜ் செய்து குளியுங்கள். இதனால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்பெண்ணெய் மற்றும் அவகோடோ எண்ணெய் போன்றவை, 'மசாஜ்' செய்வதற்கு ஏற்றவைகுளிர் காலத்திற்கேற்ப 'ஆயில் மிக்ஸ்டு மாய்சுரைஸரை' உபயோகிக்கலாம். இது, உங்கள் சரும வறட்சியை தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்.கோடை காலத்தில் தான், 'சன் ஸ்கிரீன் லோஷன்' பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர், பலர். பனிக் காலத்திலும் வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன், 'சன் ஸ்கிரீன் லோஷனை' பூசிக் கொள்ளலாம்உடலில் மற்ற பகுதிகளை விட, கைகள் மிகவும் மிருதுவானது. எனவே, 'மாய்சுரைஸர் லோஷனை' உங்கள் கைகளிலும், கால் பாதங்களிலும் மறக்காமல் பூசிக் கொள்ளுங்கள். இது, அப்பகுதியில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
யாருக்குத்தான் கருமையான நீளமான பளபளப்பான கூந்தல் பிடிக்காது. ஆரோக்கியமான கூந்தலை பெற, நாம் தலை முடியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். நம்மில் பலர் கூந்தலை பராமரிக்க சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அவை ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் காலப்போக்கில் கூந்தலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே, சருமம் மற்றும் முடி ஆகிய இரண்டிற்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், இவை எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயார் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை, பொடுகு, முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு. காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும். சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும்.15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்' முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.
கற்றாழை ஜெல் அல்லது வீட்டில்வளர்ந்ததை சுத்தம் செய்து அதில் பால் சேர்த்து5 நிமிடம் மசாஜ் செய்யுங்க. கடலை மாவில், பால் அல்லது தயிர்சேர்த்து முகத்திற்கு ஃபேக் போட்டு,10 நிமிடம் கழித்து மெதுவாக குளிர்ந்த நீரில் கழுவுங்க. இயற்கையான ஃபேஷியல் வீட்டிலேயே,முகம் பொலிவாக மிருதுவாக வெண்மையாக இருக்கும்.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
காய்சாத பாலில்5 நிமிடம் முகத்தில் மசாஜ் செய்யுங்கஅரிசி மாவுடன் காய்ச்சாத பால் சேர்த்து நிமிடம் ஸ்கரப் செய்யுங்க ஆவி பிடித்து விட்டு காட்டன் துணியில், முகத்தை மெதுவா அழுத்தி துடைத்தால் ,வெண்மை, கரும்புள்ளிகள் வந்து விடும்.
கோதுமை மாவு நம்முடைய முகத்தில் பூசும் பொழுது நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் சரியாக விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் பருக்கள், கரும்புள்ளிகள் அனைத்தும் சரியாக மென்மையான தோல் அமைப்பை கொடுக்கின்றன. பேஸ் கிளினிங் பன்னும் பொழுது நம்முடைய முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீக்கப்படும் காய்ச்சாத பால் பிறகு ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டையும் கலந்து ஒரு கிண்ணம் டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதை காட்டன் துணியில் நனைத்து அதை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கப்படும் மேலும் இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்படும். ஐந்து நிமிடம் வரை இருக்க வேண்டும்.பேஸ் பேக் கோதுமை மாவு நான்கு டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன், காய்ச்சாத பால் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு கலந்து பேக் மாதிரி தயார் செய்து கொள்ளவும். பிறகு அந்த பேக்கை நம் முகத்தில் தடவ வேண்டும் 15 நிமிடம் நன்கு காய் விட வேண்டும். நன்க காய்ந்த பிறகு நம் இரு கைகளைக் கொண்டு மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு காட்டன் துணி எடுத்து மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் துடைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்க ஒரு முறை செய்தால் மட்டும் போதும். இதில் எந்த வித கெமிக்கல் எடையாது. நம்முடைய முகத்திற்கு எந்தவித பாதிப்பும் எற்படாது. இது நம்முடைய வீட்டில் ஹோம் ரெடிமேட்டாக செய்யக்கூடய ஒரு பேக். இதை செய்து விட்டு நம்முடைய முகத்தை தொட்டுப் பார்க்கம் பொழுது அவ்வளவு மென்மையாக தெரியும். கோதுமை மாவில் சிறிது கஸ்தூரி மஞ்சளை கலந்து நம்முடைய உடம்பில் தேய்நது குளித்து வர உடம்பில் உள்ள தோல்கள் நீங்கும். கோதுமை மாவை நம்முடைய தலைக்கு மென்மை கூட தேய்த்து வரலாம். மென்மையாக இருக்கம். ஆனால் சில பேர் தலைக்கு தேய்ப்பதற்கு பயப்படுவார்கள். கோதுமை மாவை வைத்து நம்முடைய சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்ற முடியும் .
ஸ்கின் செம்ம வெள்ளையாக செம்ம கலராக மாற, இதை மட்டும் செய்தால் போதும். அதற்கு, இட்லிக்கு அரைக்கிற அதே மாவை, இரவு அரைத்து காலையில் புளித்த மாவு ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், சர்க்கரை இரண்டு ஸ்பூன், ஆகிய இதையெல்லாம் ஒன்று கலந்து, முகத்தில் நல்ல மசாஜ் செய்து அப்படியே முகத்தில் நன்றாக தடவி ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால், முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாறும் இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருமைகள் மறைந்து முகம் நல்ல கலராக ஈஸியான புது டிப்ஸ் முகம் நல்ல கலராக நல்ல வெள்ளையாக நல்ல பளப்பளப்பாக மாற இதை மட்டும் செய்தால் போதும் அதற்கு அரிசி மாவு ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு எலுமிச்சை சாறு ஆகிய இதையெல்லாம் ஒன்று கலந்து முகத்தில் தடவி ஒருமணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் நல்ல கலராகவும் நல்ல வெள்ளையாகவும் இருக்கும் இப்படி தினமும் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
மஞ்சள், தேன், ஆரஞ்சு பழச்சாறு மூன்றும் கலந்து, முகத்தில் முடி உள்ள இடத்தில் அப்ளைசெய்து.15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.தினமும் செய்து வர முகத்திலுள்ள முடி உதிர்ந்து விடும்.