25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Jan 02, 2024

முடி உதிர்வை தடுக்கும் வெங்காயம், பூண்டு, தேங்காய் எண்ணெய்.

 முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்கஅன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெங்காயமும் பூண்டும் இருந்தாலே போதும். வெங்காயத்தில் எந்த அளவிற்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது அதே அளவு தான் பூண்டிலும் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பூண்டையும் நாம் தலைக்கு பயன்படுத்தும் பொழுது தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது சரி செய்யப்படுகிறது.முடி வளர்ச்சியும் அது ஊக்குவித்து பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஒரு பொருளாக தான் பூண்டும் திகழ்கிறது. அந்த காலத்தில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்கும் பொழுது அதில் இரண்டு பூண்டை தட்டி போடும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து வந்தது. ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை நீக்கக் கூடாது. வேரையும் நுனியையும் மட்டும் நறுக்கிவிட்டு அதன் தோளுடன் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒன்பது பல் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி தண்ணீர் சூடானதும் அதனுள் ஒரு பாத்திரத்தை வைத்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு இவை இரண்டையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து250மிலி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.குறைந்த தீயில்30 நிமிடம் அடுப்பில்வைத்து எண்ணெயை கிளறி விட வேண்டும். வெங்காயமும் பூண்டும் எண்ணெயில் நன்றாக வேக அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு அதை அப்படியே எடுத்து ஆற வைக்க வேண்டும். பிறகு அதை காற்று புகாத அளவிற்கு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து ஒரு வாரம் அப்படியே விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கக்கூடிய சாறுகள் அனைத்தும் எண்ணெயில் இறங்கிவிடும். இந்த எண்ணையை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். நம் தலை முடிக்கு பாதுகாப்பை தரக்கூடிய அற்புதமான தேங்காய் எண்ணெய் தயாராகிவிட்டது. இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு தேய்த்து லேசாக சூடு செய்து தலை வேர்க்கால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.பூண்டு சேர்த்திருப்பதால் பூண்டு வாடை வரும் என்று நினைப்பவர்கள் தலைக்கு குளித்து கடைசியாக தலையை அலசும் பொழுது மட்டும் அரை எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் பிழிந்து தண்ணீரை தலைக்கு ஊற்றி அலசினால் பூண்டு வாடை எதுவும் ஏற்படாது. 

Jan 01, 2024

உதட்டை சிவப்பாக மாற்ற....

...கருமை நிற உதடுகளை இளஞ்சிவப்பு நிற உதடாக மாற்ற. கொஞ்சம் பராமரிப்பு கூடுதல் கவனம் இருந்தால் அழகான உதடுகளை பெற்று விடலாம். இளவயதினர் வெகு அரிதாகவே இந்த பாதிப்புக்கு ஆளானாலும் வயது அதிகமாகும் போது பெண்களும் இருண்ட கருமையான உதடுகளை பெறுகிறார்கள்.ஸ்ட்ராபெர்ரி நிறமே கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகானது. ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதை தினமும் இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்துக்கு சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். எனினும் இதை நீர்த்து அல்லது எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும். இதை உதட்டின் மீது தடவி நன்றாக உலரும் வரை வைத்திருந்து பிறகு மீண்டும் இந்த கலவையை மேல் அடுக்கில் தடவவும்.நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும். எலுமிச்சை இயற்கை சுத்தப்படுத்தியாக இருப்பதால் இது கறைபடிந்த உதடுகளை வெண்மையாக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

Dec 27, 2023

கருவளையத்தை மறைக்கும் 'தேங்காய் எண்ணெய்- மஞ்சள் பேக்!

 தேங்காய் எண்ணெய், மஞ்சள் மற்றும் கற்றாழை கலவையில் ஒரே வாரத்தில் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை மறைக்கிறதுதேவையான பொருட்கள்! தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் | கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன் | மஞ்சள் - 4 ஸ்பூன் | பெட்ரோலியம் ஜெல்லி -1 ஸ்பூன்செய்முறை ,முதலில் எடுத்துக்கொண்ட கற்றாழை ஜெல்லை ஒரு கோப்பையில் பெட்ரோலியம் ஜெல்லியுடன் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.தொடர்ந்து இதனுடன் மஞ்சள், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள கருவளையம் போக்கும் பேக் ரெடிதயாராக உள்ள இந்த பேக்கினை சருமத்தில் அப்ளை செய்து- மசாஜ் செய்து15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடவும்.மஞ்சள், தேங்காய் எண்ணெய் கலவையில் உண்டாகும் இந்த பேக் ஆனது, சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரும பொலிவை உறுதி செய்கிறது.அந்த வகையில் இது கருவளையத்தை மறைக்கிறதுஅழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஞ்சள், கற்றாழை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது, கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம், தடிப்புகளை கட்டுப்படுத்துகிறது.சரும தளர்வுகளை தடுக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது, கண்களுக்கு அருகில் உள்ள சுருக்கங்களை மறைத்து இளமை தோற்றத்தை மீட்டு தருகிறது.சருமத்தின் இயற்கை எண்ணெய் தக்க வைத்து, பொலிவான சருமம் பெற உதவும் இந்த பேக் ஆனது, சரும வறட்சி பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவியாக உள்ளது.

Dec 26, 2023

நரை முடிக்கு 'பாதாம் - வெந்தயம் 'மாஸ்க்'

நரை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை டைதேவையான பொருட்கள்!-பாதாம் - 4 | இஞ்சி - 2" அளவு | வெந்தயம் - 3 ஸ்பூன் | வெங்காய தோல் - 4 | தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்செய்முறை,முதலில் எடுத்துகொண்ட இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.தொடர்ந்து வெந்தயம், பாதாம் சேர்த்து பொடியாக அரைத்து எடுக்கவும்.பின் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் இந்த அரைத்தபொடிசேர்த்து நன்கு கருக(மிதமான சூட்டில்) வறுத்துக்கொள்ளவும். பின் இந்த பொடியை நன்கு ஆற விட்டு தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.இத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கரைக்கநரை முடி போக்கும் மாஸ்க் ரெடி.7 நாட்கள் வரை வைத்து இந்த மாஸ்கினை பயன்படுத்தலாம். இந்த மாஸ்கினை(2 நாட்களுக்கு ஒரு முறை) கூந்தலுக்கு அப்ளை செய்து3 மணி நேரங்கள் வரை உலர விடவும். பின் மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.நரை முடி மறையும்! வெள்ளை முடியின் நிறைத்தை மாற்றுவதோடு, பித்தத்தை கட்டுப்படுத்தி வெள்ளை முடி மீண்டும் வருவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.கிருமி நாசினிப் பண்பு கொண்ட இஞ்சி, வெங்காயதோல்கலவையில்தயார்செய்யப்படும்இந்தமாஸ்க்ஆனது,பொடுகு மற்றும் கிருமி தொற்று பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.தேங்காய் எண்ணெய், வெந்தயம் கலவையில் உண்டாகும் இந்த மாஸ்க், இயற்கை எண்ணெயை தக்க வைப்பதோடு, கூந்தல் வறட்சி பிரச்சனையையும் எதிர்த்து போராட உதவியாக உள்ளது.

Dec 23, 2023

முடி வளர்ச்சிக்கு கருஞ்சீரக எண்ணெய்

கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது.கருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.  கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.கருஞ்சீரகத்தை எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தும் போது ,தலைமுடி உதிர்தலை நிறுத்தி முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கின்றன.மேலும் உச்சந்தலை பகுதியில் இருக்கும் குறைபாட்டை நீக்கும். முடி வறட்சியையும் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்தும்.கருஞ்சீரக எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் - தேங்காய் எண்ணெய்- 100ml,கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்,வெந்தயம்- 1 ஸ்பூன்செய்முறை:முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.பின் அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தி வரலாம்.

Dec 20, 2023

முகத்தில் கரும்புள்ளிகள் மறைய

தேவையான பொருட்கள்-வெள்ளை சர்க்கரை - 1 டீஸ்பூன்; தேன் - 2 டீஸ்பூன்; எலுமிச்சை சாறு சில சொட்டுகள் முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள் உண்டாகுவதால், சரும அழகு மோசமாக பாதிக்கக்கூடும். தேன்- சர்க்கரை ஸ்க்ரப்சருமத்தில் சுருக்கம், கோடு போன்ற வயதான தோற்றத்தின் அறிகுறிகளை தடுக்க உதவுகிறது. மேலும், சிறந்த எக்ஸ்ஃபோலியட் முகவராக செயல்பட்டு, சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருப்பதை நீக்க சர்க்கரைஉதவுகிறதுதேன் சரும துளை அடைப்பை சரிசெய்வதோடு தழும்பு மற்றும் கருமையை போக்க உதவுகிறது.குறிப்பாக, ஈரப்பதத்தை தக்கவைத்து சன் பர்ன் பிரச்சனைக்கு பயனுள்ள தீர்வாக இருக்கும்எலுமிச்சை சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை நீக்க உதவுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறதுசெய்முறை -முதலில் ஒரு பவுலில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும்அத்துடன் தேனை மிக்ஸ் செய்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்இதை முகத்தில் குறிப்பாக கரும்புள்ளிகள் அதிகம் தென்படும் பகுதிகளில் தடவ வேண்டும்10 நிமிடங்களுக்கு பிறகு, முகத்தை குளிர்ந்த நீரில் வாஷ் செய்ய வேண்டும். இந்த பேஸ் ஸ்க்ரப் வாரத்திற்கு3 முறை பயன்படுத்தினால், ஒரே வாரத்தில் கரும்புள்ளிகள் மறைந்து சுத்தமான சருமத்தை  காண முடியும்..

Dec 16, 2023

மணப்பெண் மாதிரி முகம் பிரகாசமாக ஜொலித்திட, சருமத்தில் பால் - மஞ்சள் ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்-பால் -2 டீஸ்பூன், மஞ்சள் - ஒரு சிட்டிகை - சர்க்கரை - 1 டீஸ்பூன்பாலை சருமத்தில் பயன்படுத்துவது மூலம் ஈரப்பதம் அதிகரித்தல், வயதான தோற்றம் தடுத்தல், சருமத்தை சுத்தமாக்குதல், சரும மேற்பரப்பை சீராக்குதல் என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றனமஞ்சள் சருமத்தில் இயற்கை பொலிவை மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை மறைய செய்து சுத்தமான சருமத்தை பெற உதவுகிறதுசெய்முறை-முதலில் பவுல் ஒன்றில், பால் மற்றும் சர்க்கரை ஒன்றாக சேர்க்க வேண்டும்அத்துடன் மஞ்சளை சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி பொறுமையாக மசாஜ் செய்ய வேண்டும்கலவை நன்றாக காய்ந்தபிறகு முகத்தை குளிர்ந்த நீரில் வாஷ் செய்ய வேண்டும். முகம் ஜொலிக்கும்இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு3முறை முகத்தில் அப்ளை செய்தால், மணப்பெண் மாதிரி சருமம் இயற்கையாகவே ஜொலிக்கக்கூடும்.

Dec 13, 2023

ஆரோக்கியமான தலைமுடிக்கு......

செம்பருத்தி மலர்கள் பார்வைக்கு ஈர்க்கக்கூடியவை மட்டுமல்ல, ஆரோக்கியமான தலைமுடிகளை பராமரிப்பதற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் ஏ நிறைந்த, செம்பருத்தி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உச்சந்தலையின் pH அளவை சமப்படுத்தவும், அதிகப்படியான எண்ணெய் அல்லது வறட்சியைத் தடுக்கவும்,அடர்த்தியான, பளபளப்பான கூந்தலை உங்களுக்கு வழங்கவும் உதவுகிறது. ஹேர் மாஸ்க் நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி ஆகிய மூன்று இயற்கையான பொருட்களையும் இணைத்து, உங்கள் தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கும் சக்திவாய்ந்த ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம். இந்த ஹேர் மாஸ்க்கை தயாரிக்க, நெல்லிக்காய் தூள், தேங்காய் எண்ணெய் மற்றும் நறுக்கப்பட்ட செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றின் சம பாகங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக தயார் செய்துகொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தாராளமாக தடவி, சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். இந்த வழக்கமான பயன்பாடு முடி அமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் முடி உதிர்தலை குறைக்க வழிவகுக்கும். நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி ஆகியவற்றை உங்கள் வழக்கமான முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு சிறந்த இயற்கை சிகிச்சையாக இருக்கும். இந்த பொருட்கள் உச்சந்தலையை பராமரிக்கவும், முடியின் வேர்களை வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுகின்றன. எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நிலையானது மட்டுமின்றி, ரம்மியமான கூந்தலை பராமரிப்பதற்கு நீண்டகால நன்மைகளையும் வழங்குகிறது.

Dec 09, 2023

.சருமத்தை பளபளப்பாக்கும் கீரை ஃபேஷியல்

சருமத்தில் படிந்துள்ள அழுக்கு, தூசி போன்றவற்றை அகற்றி.முகத்தை பளபளப்பாக மாற்றக்கூடிய கீரை ஃபேஷியல் பற்றி இங்கு விரிவாக காணலாம்தேவையான பொருட்கள்- கீரை - ஒரு கைப்பிடி அளவு; தேன் - 1டீஸ்பூன்; தக்காளி - 1; சர்க்கரை - 1 டீஸ்பூன்கீரை சருமத்தில் நீரேற்றத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.இதன் காரணமாக, கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.முகத்தில் தக்காளியை பயன்படுத்துவது மூலம் அதிகப்படியான எண்ணெய் நீக்குதல், இறந்த சரும செல்களை அகற்றுதல், முகத்தை பிரகாசமாக்குதல், சரும துளை அளவை குறைத்தல் என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.செய்முறைமுதலில் கீரையை மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.பின் கீரை பேஸ்டில் தேனை மிக்ஸ் செய்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்இந்த கலவையை அப்ளை செய்யும் முன்பு, முகத்தை வாஷ் செய்ய வேண்டும். பின் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்பின் கீரை கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்சுமார்15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை தொடர்ச்சியாக அப்ளை செய்கையில், முகத்தில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

Dec 06, 2023

முகம் சுத்தமாக இருக்க...

.வெந்தயத்துடன் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட்டாக செய்து கொள்ளுங்கள். அதனை முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள்15 நிமிடங்களில் கழுவிடலாம். இப்படி செய்வதால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும்.தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவு பெரும்.பேஷ்வாஷை பயன்படுத்தி கழுவும்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுக்கள், கரும்புள்ளிகள் மறையும். முறையாக செய்தால் மட்டுமே அதற்குரிய பலனும் கிடைக்கும். இறந்த செல்கள் வெளிப்புற தோலில் தேங்கி, முகத்தை இறுக்கமாக வைத்திருக்கின்றன. முதலில் நீங்கள் முழுமையாக பேஷ்வாஷ் செய்ய வேண்டும். பின்னர், முகம்சுத்தமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் மட்டுமே இறந்த செல்களை அகற்ற முடியும்.முகத்தை சுத்தம் செய்யும்போது ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும். ஒரு சிலருக்கு சருமத்தில் பாதிப்புகள் உண்டாகும். அவற்றுக்கு முக்கிய காரணம் என்னவென்றால், முகத்தை கழுவும்போது அதிகமாக அவர்கள் தேய்த்து கழுவியிருப்பார்கள் அல்லது அதிகப்படியான மேக்கப் கிரீம்களை பயன்படுத்தியிருப்பார்கள். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது உங்கள் முகத்தின் வெளிப்புற தோலில் பாதிப்பு ஏற்பட்டு எரிச்சல் மற்றும் சரும பாதிப்புகள் உண்டாகும்.உங்கள் முகத்தின் தோல் அடிப்படையில் மட்டுமே மேக்கப் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருந்தால், தோலில் இருக்கும் எண்ணெய்யை அகற்றும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். வறட்சியான தோல் என்றால், அதற்கேற்ப மேக்கப் கிரீம்களை பயன்படுத்தலாம். இதனை மாற்றி செய்யும்பட்சத்தில் வறட்சியான முகம் மேலும் வறட்சியாகவும், எண்ணெய் படிந்த முகம் மேலும் எண்ணெய் படிந்தவாறு இருக்கும்.

1 2 ... 8 9 10 11 12 13 14 ... 21 22

AD's



More News