வாழைக்காயை துணி பையில் போட்டு வைத்திருந்தால்
உப்பு, மஞ்சள்,எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது
'புளித்த மோரில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல இருக்கும்.
வாழைக்காயை துணி பையில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளரி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும்
காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.
0
Leave a Reply