25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்திய சுதந்திர தினம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய சுதந்திர தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினம், 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று சுதந்திர நாடாக மாறிய வரலாற்று தருணத்தை இந்த நாள் குறிக்கிறது. இந்தியாவில் ஒரு முக்கிய தேசியவிழாவாகும்1947 ஆகஸ்ட் 15 அன்றுநாடுசுதந்திரமாகஅறிவிக்கப்பட்டது.பிரிட்டிஷ்ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்15ம்தேதி சுதந்திரம் கிடைத்தது.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்து அதன் பொறுப்பை கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தது. அவர் 1947-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி அதற்கான திட்டத்தை வெளியிட்டார். திருப்பூர் குமரன், பாரதியார், வ. உ.சி, பழசிராஜா, கட்டபொம்மன், திப்பு சுல்தான், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என்று ஏராளமான தென்னிந்திய போராளிகளும் தியாகிகளும் தான் சுதந்திரம் வாங்கபோராடினார்கள். வாங்கித் தந்தார்கள்.

.மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் தொடர்ந்தது மகாத்மா காந்தி அகிம்சை வழி நாடு முழுவதும் வேகமாக பரவி அனைவரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட முன் வந்தனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு டெல்லியில் செங்கோட்டையில் லகோரி கேட் மீது இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திரத்திற்காக சுதந்திர வீரர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்தனர். அவர்களுடைய நினைவாகவே ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் குமரன், பாரதியார், வ. உ.சி, பழசிராஜா, கட்டபொம்மன், திப்பு சுல்தான், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என்று ஏராளமான தென்னிந்திய போராளிகளும் தியாகிகளும் தான் சுதந்திரம் வாங்கபோராடினார்கள். வாங்கித் தந்தார்கள்

இந்தியசுதந்திர தின விழா உற்சாகமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவின் தேசிய கொடி உயரமாக உயர்த்தப்பட்டு பெருமை மற்றும் தேசபக்தியுடன் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். சுதந்திர தினத்தன்று பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களில் நாடக நடனங்கள், கலாச்சார நிகழ்வு மற்றும் நடனம், இசை போன்றவை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் தேசியக்கொடி கொண்டு அலங்கரித்து மக்கள் தங்களது சுதந்திர தின விழாவை கொண்டாடுகின்றனர். அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி, அரசுஅலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நடன நிகழ்ச்சி கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

சுதந்திர தினத்தன்று மாநில தலைநகரங்களில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது, அதில் பிரதமர் பங்கேற்று கொடியேற்ற விழா நடந்த பிறகு ஆயுதப்படை மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தப்படும், ஆண்டின் இந்தியாவில் முக்கிய சாதனைகள் குறித்தும் எதிர்கால சவால்கள் மற்றும் இலக்குகள் போன்றவற்றைக் குறித்து பேசப்படுகின்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News