கண்களில்கருவளையம் வராமல் தடுக்க…
கண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே .கண்களை சுற்றிகருவளையம் இருக்காதுகருவளையம் ஆனது மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இதுபோன்ற காரணங்களினால் தான் வருகிறது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் உடல்நிலையினை பொறுத்தது
கண்களில் நீர்சத்து அதிகம் இல்லை என்றால் கருவளையம் வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு நிகழாமல் கருவளையம் வருவதை தடுக்க ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி முட்டைகோஸ் மற்றும் ஆரஞ்சு இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டாலே போதும் கருவளையம் என்பதே எட்டி பார்க்காது.
ஒருநாளைக்கு நாம் அனைவரும் தூங்க வேண்டிய சராசரியான தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் கண்களில் கருவளையம் வரும். ஆகையால் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணிநேரம் தூங்க வேண்டும்நீங்கள் கண்களுக்கு கிரீம் பயன்படுத்தும் போதும் அல்லது கண்களில் இருக்கும் கிரீமினை அகற்றும் போதும் கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியினை பொறுமையாக கையாள வேண்டும்
கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மசாஜ் செய்வது என்பது நாம் செய்யும் வழக்கமான ஒன்று. கண்களுக்கு கீழே மசாஜ் செய்வது என்பது நம்முடைய கண்களில் கருவளையம் வருவதை தடுக்க செய்கிறது. எப்படி என்றால் கண்களில் நீர்சத்து அதிகமாக ஆகிவிட்டது என்றால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்றவை ஏற்படும். ஆனால் நாம் மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படியான நீர்சத்து ஏற்படுவதை தடுக்கலாம்.
முகத்தில் இருக்கும் கண்களுக்கு கீழே வறட்சி ஏற்பட்டால் அதனை சரிசெய்ய Moisturizer பயன்படுத்துவோம். ஆனால் இதற்கு பதிலாக,அவர் அவருடைய கண்களுக்கு கீழே உள்ள தோலிற்கு ஏற்றவாறு, கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கருவளையம் வருவதையும் தடுக்கிறது
0
Leave a Reply