25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Aug 24, 2022

விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2022  மாதத்திற்கான  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  26.08.2022 அன்று காலை 10.30 மணியளவில்; விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்துமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 24, 2022

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பெண்கள் விடுதிகளும் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்யப்பட வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம்-2014-ன் கீழ்; அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள், தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் http://tnswp.com  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கபடுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின் படி, 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும், அபராதமும் விதிக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.  மேலும் பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04562-252701-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி., I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :31.08.2022

Aug 19, 2022

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்து அவர்களது ஆதார் எண்ணை பெற்று வாக்காளார் விபரங்களுடன் இணைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணினை இணைக்காத பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணினை தேசிய வாக்காளர் சேவை இணையதளம்(http://www.nvsp.in), வாக்காளர் உதவி செயலி அல்லது வாக்காளர் இணைய தளம் https://voterportal.eci.gov.in ஆகியவற்றின் மூலம்  தாங்களே ஆதார் எண்னை இணைத்துக்கொள்ளலாம்.          மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்- 6டீ-ல் வாக்காளர்களது ஆதார் எண்ணினை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும்  தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர்  பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.          வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண்ணானது பொது வெளியில் எக்காரணம்  கொண்டும் காட்சிப்படுத்தப்படாது. ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம்- 6B –ல் தங்களது ஆதார் விபரத்தினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து  தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S,, கேட்டுக்கொள்கிறார்.

Aug 12, 2022

விருதுநகர் மாவட்டம் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்

விருதுநகர் மாவட்டம்பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும்  முகாம்   13.08.2022- இரண்டாவது சனிக்கிழமை நடைபெறவுள்ளது.பொதுமக்கள் குறைபாடுகளைத் தெரிவித்துத் தீர்வு காணலாம்-மாவட்ட வருவாய்அலுவலர் திரு.ஜெ.ரவிக்குமார் அவர்கள் தகவல்பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 13.08.2022 இரண்டாவது சனிக்கிழமை அன்று, அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் இக்குறைதீர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.ரவிக்குமார் அவர்கள் கேட்டுக்கொள்கிறார். 

Jul 30, 2022

வாக்காளர் பட்டியலில் , ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணியானது 01.08.2022 முதல் தொடக்கம் 

வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே  தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்  பெறுதல் அல்லது  ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல், சிறப்பான வாக்காளர் சேவைகளை வழங்குதல்  ஆகிய  நோக்கங்களின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960-ல் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணியானது 01.08.2022 முதல் தொடங்கப்படவுள்ளது.வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணினை https://www.nvsp.in/ என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ தங்களது வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்- 6B –ல் வாக்காளர்களது ஆதார் எண்ணினை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும்  தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர்  பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம். வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண்ணானது பொது வெளியில் எக்காரணம்  கொண்டும் காட்சிப்படுத்தப்படாது, ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.                ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள்  கீழ்காணும் ஆவணங்களில் ஒன்றை அளிக்கலாம்.1.               மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்ட அடையாள அட்டை2.              வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய  கணக்கு புத்தகம்3.              தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை4.              ஓட்டுநர் உரிமம்5.              பான் கார்டு6.              தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்நிய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்டு அட்டை7.              இந்திய கடவுச்சீட்டு8.              புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணங்கள்9.              மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட                  புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை              10.            நாடாளுமன்ற,  சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ அடையாள அட்டை11.            இந்திய அரசின் சமூக நலம் மற்றும் திறன்  மேம்பாட்டு துறையால் வழங்கப்பட்ட தனித்துவ அடையாள அட்டை                                                       எனவே, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம்- 6B –ல் தங்களது ஆதார் விபரத்தினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து  தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு. ஜெ. மேகநாதரெட்டி I A S ,, அவர்கள்  தெரிவித்துள்ளார். 

1 2 ... 11 12 13 14 15 16 17 18 19 20

AD's



More News