இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (அனுபவ பயிற்சி)
இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (அனுபவ பயிற்சி) வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் வேதியல் துறை தலைவர் திரு ரமேஷ் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் முனைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் செயலர் திரு சோமசுந்தரம் வரவேற்புரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். திரு குமாரசாமி ராஜா உரிமையாளர் பேஷன் வேர்ல்ட் ராஜபாளையம் தனது சிறப்புரையில் இன்டர்ன்ஷிப் என்றால் என்ன அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் பயிற்சிகள் நடைமுறை அனுபவத்தை வழங்குகின்றன, திறன்களை மேம்படுத்துகின்றன மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துகின்றன. அவை நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், தொழில் நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவு மற்றும் வகுப்பறை அறிவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஒரு தொழில்முறை விண்ணப்பத்தை உருவாக்கவும் இன்டர்ன்ஷிப் உதவுகிறது மற்றும் வேலை வாய்ப்புகள் அல்லது மதிப்புமிக்க குறிப்புகளுக்கு வழிவகுக்கும். ஒட்டுமொத்தமாக, அவை கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன என்று தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் திரு சுரேந்திரன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
0
Leave a Reply