இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.அதே சமயம் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம்2 ஆம் தேதி காலை11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்கிறது.அதே சமயம் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்கிறது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் ஆயிரத்து475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் ஆதித்யா விண்கலத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனஇஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், விண்ணில் பாய தாயாராக இருக்கும் ஆதித்யா எல்1 விண்கலம்,இதனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் ஆகியவற்றின் புகைப்படங்களை இஸ்ரோ எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சூரியனைஆய்வுசெய்வதற்காகவிண்ணில்செலுத்தப்படுகிறதுஆதித்யாஎல்-1கிட்டவே நெருங்காத வல்லரசுகள்,தொட துணிந்த இந்தியாவின்ISRO- உலக விஞ்ஞானிகளை ஆட வைத்த அறிவிப்பு.ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் பாயும் நேரம் அறிவிப்பு- இஸ்ரோ. செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1- இஸ்ரோ."ஸ்ரீஹரிகோட்டாவில்இருந்து செப்டம்பர் 2ம்தேதி காலை 11.50 மணிக்குவிண்ணில் செலுத்தப்படுகிறது ஆதித்யா எல்-1".
ஆனந்தாஸ் திரு. M. B. ராதாகிருஷ்ணன் ராஜா அவர்களின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் நகைசுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைசுவை விருந்து செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 5.00 - 8.00 மணிக்குள் ஆனந்தா கார்டனில் நடைபெறும். நிகழ்ச்சி அன்பாதரவு ஆனந்தாஸ் குழுமம்
இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://isro.gov.in இல் பார்வையிடலாம்.இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ YouTube சேனல் https://youtube.com/watch?v=DLA_64yz8Ss ஐ பார்வையிடலாம். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ Facebook பக்கமான https://facebook.com/ISRO இல் பார்க்கலாம். மற்றும், DD தேசிய தொலைக்காட்சியிலும் காணலாம்.
நாடு முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக ரயில் சேவை உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பயணம் என்பதால் மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக ரயில் டிக்கெட் முன்பதிவில் போலி செயலிகள் மூலம் அதிகளவு மோசடிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஐஆர்சிடிசி செயலி அல்லது அதன் வெப் சைட்டில் டிக்கெட்டுகளை புக் செய்வார்கள். இந்நிலையில் ஐஆர்சிடிசியில் தளத்தின் பெயரில் போலியாக எஸ்எம்எஸ்களில் சில ஃபிஷிங் இணைப்புகளை கொடுத்து பயணிகளிடம் பெருமளவில் பண மோசடி நடைபெறுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.இந்த மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து தனது அதிகாரப்பூர்வ ரயில் கனெக்ட் மொபைல் செயலிகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஐஆர்சிடிசியில் இருந்து அனுப்பப்படுவதாக வரும் போலி எஸ்எம்எஸ்களில் உள்ள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் ஐஆர்சிடிசி கோரிக்கை விடுத்துள்ளது.போலி செயலிகளின் மூலம் பயணிகள் மோசடிக்கு ஆளானால் உடனடியாகCare@irctc.co.in என்ற இ மெயில் முகவரிக்கு உடனடியாக புகார் அளிக்குமாறும் இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது செயலிகள் சரியானதுதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இந்தியன் ரயில்வே எச்சரித்துள்ளது.அதிகாரப்பூர்வ செயலிகளை தவிர மற்ற இணையத்தில் கிடைக்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என்றும் இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. ஆன் லைன் பண மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஐஆர்சிடிசி பெயரிலும் போலி புழக்கத்தில் இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 85-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்13.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நமது நகர் தென்காசி சாலையில் உள்ள மாண்புமிகு P.S. குமாரசாமிராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில் நமது சங்கத் தலைவர் உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (சேர்மன். ராம்கோ குழுமம்) தலைமையில் நடைபெறும். உயர்திரு.A.M.விக்கிரமராஜா அவர்கள்(மாநிலதலைவர் தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு )முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.தாங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். தங்கள் அன்புள்ள- M.C.வெங்கடேஸ்வர ராஜா, R.நாராயணசாமி (செயலாளர்கள் ),இராஜபாளையம்.குறிப்பு : தலைவர் அரிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் , என தென்னக ரயில்வே அறிவிப்பு.சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும், தேஜஸ் விரைவு ரயில் இனி ,தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.ஆகஸ்ட்26ஆம் தேதி வரை தாம்பரத்தில் நின்று செல்லும், என ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிப்பு.
இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி. U. C. C. சீரான சிவில் கோட். சீரான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதற்கு அந்நாட்டு குடிமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரண்டு நாட்களில் 04 கோடி முஸ்லிம்களும் 02 கோடி கிறிஸ்தவர்களும் UCC க்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே, இறுதித் தேதியான ஜூலை 6 ஆம் தேதிக்கு முன், நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களும் UCC க்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். UCC ஐ ஆதரிக்கவும், நாட்டைக் காப்பாற்றவும் 9090902024 என்ற எண்ணிற்கு தவறவிட்ட அழைப்பை வழங்கவும். உங்கள் அழைப்பு UCC க்கு ஆதரவாகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். இந்த தகவலை அனைத்து இந்துக்களுக்கும் பகிரவும். 9090902024 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்த அனைவருக்கும் வணக்கம். ஜெய் பாரத் மாதா.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 24.06.2023 அன்று இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது.தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகிற விதமாக, தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்நோக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை APTSMPS மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் 24.06.2023, சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண்,காது மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட இருக்கிறது.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும்;, ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக்கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.இந்த மருத்துவ முகாமில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2022-2023 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் விருதுநகர் மாவட்டத்தில் 11.02.2023 முதல் 26.02.2023 வரை நடைபெற்று முடிவு பெற்றுவிட்டது.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்பான தகவல்கள் இணைதளத்தில் பதிவதற்கு பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது, போட்டிகள் இனிதே நிறைவு பெற்றது.தற்போது,முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், மற்றும் பரிசு தொகை வங்கி பரிவர்தனை மூலம் விடுவித்து வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்/ சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழாவினை சிறப்புடன் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழாவினை விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கத்தில் 23.06.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடத்திட விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.இது தொடர்பாக முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் அனைத்து பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகள் 23.06.2023 அன்று காலை 9.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கத்திற்கு வருகை தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் தாட்கோ அலுவலகத்தின் மூலம் உறுப்பினர் அட்டை பெற்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளில் எவரேனும் பன்னிரெண்டாம் வகுப்பு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பின், அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்க வேண்டியுள்ளது. எனவே பன்னிரெண்டாம் வகுப்பு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களின் விபரங்களுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன் விருதுநகர் தாட்கோ மேலாளர் அலுவலகத்தினை எதிர் வரும் 20.06.2023-ம் தேதிக்குள். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் அனுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்,