25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முக்கிய அறிவிப்பு

May 27, 2024

இராஜபாளையம், ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் சந்நதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேக விழா

இராஜபாளையம், ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் மற்றும் பரிவார தேவதைகளும் நிகழும் மங்களகரமான 1199ம் ஆண்டு ஸ்ரீகுரோதி வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (02.06.2024) ஞாயிற்றுக்கிழமை ஏகாதசியும் ரேவதி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபத்தினத்தில்அன்று காலை 10.45 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாளின் பரிபூரண கிருபையாலும் ஆச்சார்யார்கள் அனுக்கிரஹத்தாலும் வெகுச்சிறப்பாக ஸ்ரீ பத்மாவதி தாயார்.ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார்க்கு மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற இருப்பதால் ஆன்மீக பக்த ஜனங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார் அருள்பெற வேண்டுகிறோம். ஸர்வசாதகம்:  G.சீத்தாராமன் அய்யங்கார் (எ) கண்ணன் அர்ச்சகர் மற்றும் குழுவினர்                              ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவில், இராஜபாளையம்.யாகசாலை பூஜைக்குரிய திரவியங்கள் காணிக்கையாக ஸமர்பிக்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:அன்புடன் -  வெ. சுந்தர்ராஜன்                         வெ. சௌந்தர்ராஜன்பரம்பரை அர்ச்சகர் - ஸ்தானிகமிராஸ் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவில்பொறுப்பாளர்: ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவில் இராஜபாளையம், செல்: 97894 38351, 9976108285குறிப்பு: 03.06.2024 முதல் 21.07.2024 வரை மண்டல பூஜைகளும், மண்டலாபிஷேகமும் நடைபெறவுள்ளது. இந் நாட்களில் திருமஞ்சனம், பூஜை. நைவேத்யம் ஆகிய சேவைகள் அவர்கள் வேண்டும் நாட்களில் அவரவர் கைங்கர்யமாக நடத்தி வைக்கப்படும்.

May 16, 2024

இந்திய ரயில்களில் குறிப்பிட்ட பயணிகளுக்கு இலவசமாக பயணிக்க சலுகைகள்

இந்திய ரயில்வேயில் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் பயணிகள்25% முதல்75% வரைசலுகையைப் பெறலாம். ஒரு பிரிவில், மக்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யலாம்!எலும்பியல் குறைபாடுகள் உள்ளவர்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்கள், மனநலம் குன்றியவர்கள் தனியாகவோ அல்லது துணையுடன் பயணம்செய்யலாம். டிக்கெட் விலையில்25 முதல்75% தள்ளுபடி பெறலாம். செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ளவர்களுக்கும் 50% சலுகை பொருந்தும்.புற்றுநோய் நோயாளிகள்50% முதல் சலுகை கிடைக்கும். ஸ்லீப்பர் மற்றும்3 டயர் ஏசியில்100% தள்ளுபடியில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். மூத்த குடிமக்களுக்கும் சலுகை உள்ளது.60 வயதை எட்டிய ஆண்கள் அனைத்து வகுப்புகளிலும்40% சலுகை பெறலாம். 58 வயதைஎட்டிய பெண்கள் அனைத்து வகுப்புகளிலும் 50% சலுகை பெறலாம்.பல்வேறு விருது பெற்றவர்கள் ரயில்வேயில் சிறப்புச் சலுகை பெற முடியும். சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம் மற்றும் இந்திய காவல் துறை விருது பெற்றவர்கள்60 வயதிற்குப் பிறகு எந்தநோக்கத்திற்காகவும் பயணம் செய்தாலும் சிறப்புச் சலுகை உண்டு. ஆண்களுக்கு 50%, பெண்களுக்கு 60% கட்டணச் சலுகை உண்டு.உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவிகள் எந்த நோக்கத்திற்காக பயணம் செய்தாலும்2வது வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் 75% சலுகை பெற முடியும். கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு 50% முதல் 75% வரை தள்ளுபடி கிடைக்கும்.கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறைஆய்வுச் சுற்றுலா செல்ல இரண்டாம் வகுப்பில்75% சலுகையில் டிக்கெட் கிடைக்கும். தேசிய இளைஞர் திட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றால்50%, மனவ்உத்தன் சேவா சமிதியில் கலந்துகொள்வதற்காகச் சென்றால்40% கிடைக்கும். இது 2வதுவகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்குப் பொருந்தும்.அரசு வேலைக்கான நேர்காணல்களில் கலந்துகொள்ள பயணம் செய்யும் வேலையில்லாத இளைஞர்கள் இரண்டாம் வகுப்பில் 100% சலுகை பெறலாம். ஸ்லீப்பர் வகுப்பிலும் 50% தள்ளபடி உண்டு.விவசாயிகள், பால்உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வருடாந்திர மாநாடுகளில் கலந்துகொள்வதற்காகச் செல்லும்போது, 25% முதல் 50% வரை சலுகை கிடைக்கும். கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்50% முதல்75% சலுகை பெறலாம். அலோபதி மருத்துவர்கள் ராஜ்தானி / சதாப்தி/ ஜன் சதாப்தி ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் 10% சலுகை பெறலாம். செவிலியர்கள் 25% சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம்.

May 09, 2024

கல்லூரி கனவு திட்டம்

பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் கல்லூரிப் படிப்பினை தொடர வழிகாட்டும் கல்லூரிக் கனவு திட்டம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 11.05.2024 அன்று காலை 09:00 மணி முதல் நடைபெற உள்ளது.இந்த கல்லூரிக் கனவு திட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல் தொழில் நுட்ப கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.எனவே, பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் படிப்பினை தேர்வு செய்யும் பொருட்டு இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.நிகழ்ச்சி நடைபெறும் இடம்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கம், விருதுநகர்.

May 06, 2024

போலி பனீரை அடையாளம் காண்பது  எப்படி?

உணவுக் கலப்படங்கள் அதிகரித்து வருவதால், போலி பனீர் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.பனீர், ஒரு பாரம்பரிய இந்திய வகை சீஸ் ஆகும். இதைப் பயன்படுத்தி பல்வேறு விதமான சுவையான உணவுகளைத் தயாரிக்கலாம். அது பனீர் டிக்காவாக இருந்தாலும் சரி அல்லது க்ரீமி பனீர் பட்டர் மசாலாவாக இருந்தாலும் சரி, இதைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவின் சுவை மற்றும் அமைப்பை சிறப்பாக மாற்றுவதில் தரமான பனீர் முக்கிய அங்கம் வகிக்கிறது.. போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது  எப்படி? உண்மையான பனீர் சற்று உறுதியாக இருக்கும். அதை லேசாக அழுத்தினால் அதன் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது மற்றும் விரைவில் உடைந்து போகாது. போலி பன்னீர் பெரும்பாலும் ரப்பர் அல்லது பஞ்சு போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இது செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிப்பதைக் குறிக்கிறது. மேலும் பனீர் ஒட்டும் அமைப்பில் இருந்தாலும் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். பயன்படுத்தப்படும் பாலைப் பொறுத்து பனீர் வெள்ளை அல்லது வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும். போலி பன்னீர் இயற்கைக்கு மாறான அதிக வெண்மைத் தன்மையுடன் காணப்படும். இது வெண்மையாக்கும் கலவைகள் சேர்க்கப்பட்டதன் அறிகுறி. எனவே அதிக வெண்மை நிறத்தில் இருக்கும் பனீரை வாங்க வேண்டாம்.உண்மையான பனீர் லேசான பால் வாசனையை வெளிப்படுத்தும். போலி பனீர் சில கடுமையான வாசனைகளை வெளிப்படுத்தலாம். ஒரு சிறிய துண்டு பனீரை எடுத்து தண்ணீரில் போடுங்கள். அது உண்மையான பன்னீராக இருந்தால் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். இதுவே போலி பனீர், மாவு பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படுவதால், அது தண்ணீரில் கரைந்து போகலாம் அல்லது வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம்.சுவையான பனீர் சாப்பிடும்போது அது ஒரு இனிப்பு சுவையைக் கொடுக்கும். இதுவே போலி பனீர் செயற்கை சுவை கொண்டிருக்கும். சாப்பிடுவதற்கு ஒரு ரப்பர் போன்ற உணர்வைக் கொடுக்கும். போலி பன்னீர் வாங்கும் அபாயத்தைக் குறைக்க நம்பகமான மற்றும் புகழ்பெற்ற பிராண்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பிரபலமாக இருக்கும் பிராண்டுகள் பொதுவாக தரத்திற்கு முன்னுரிமை அளிப்பதால், எப்போதும் நல்ல பிராண்ட் பனீர் வாங்குவது நல்லது. இப்படி பல வழிகளைப் பின்பற்றி போலி பனீரை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.

May 05, 2024

. "Blood_On_Call"

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... ", "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் போகிறது. "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், #இரத்தம் டெலிவரி செய்யப்படும்..  ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-.      தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும்.   இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

May 05, 2024

வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது.அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள். அதனால் என்னாயினும் பார்த்துக்கொள்ளலாம்.

என் வீட்டில் பெரிதாய் இரு மாமரங்கள், இரு தென்னை மரங்கள்  உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. வெந்து தணிகிறது. நான் மட்டும் மரங்களை வளர்த்து என்ன பயன் ? சுற்றிலும் உள்ள வீடுகளில் மருந்துக்கூட மண்தரை இல்லை. ஆயிரம் வீடுகட்கு ஐம்பது மரங்கள் என்ற அளவில்கூட இல்லை. வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது. இணையத்தில் ஊர்வெப்பத்தைத் தேடியபோது செல்சியசில் 46 பாகை காட்டுகிறது. அதனைப் பாரன்ஹீட்டில் மாற்றிப் பார்த்தால் 114.8 பாகை என்று வருகிறது. இன்னும் நம் ஊடகங்கள் “வெப்பநிலையில் செஞ்சுரி அடித்த நகரங்கள்” என்று கொண்டாட்டமாகச் செய்தி வெளியிட்டுக்கொண்டுள்ளன. எண்ணிப் பாருங்கள், நூற்றிரண்டு பாகை வெப்பநிலையில் காய்ச்சல் என்றாலே நம் உடல் எப்படிக் கொதிக்கிறது ! நம்மைச் சுற்றி நூற்றுப் பதினைந்து பாகை வெப்பம் நிலவுகிறது. வீட்டின் வெளிச்சுவரை உட்புறம்  தொட்டுப் பார்த்தால் அதுவே தகதகவென்று கொதிக்கிறது. இது முற்றிலும் கொடியது. ஆடு மாடு எருமை கன்றுகளின் நிலை என்ன ? பிற அஃறிணைகள் குடிநீர்க்கு என்ன செய்கின்றன ? அவற்றுக்கு ஏதேனும் நாமாவது செய்கிறோமா ? பகல் நேர வெளிப்பணியாளர்கள் வேலை செய்வதற்கு மாற்றாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது ? அவர்கட்கு மாற்றீடு என்ன ? வெட்டி வீழ்த்தப்பட்ட, பிடுங்கியெறியப்பட்ட பெருமரங்களால் விளைந்த வெப்பக்கேடுகள் பற்றிய அளவீடு உண்டா ? அவற்றுக்கு மாற்றாக ஒரு புல்லையேனும் வளர்க்க முயன்றார்களா ? வளர்ச்சி என்பது சாலை நீளமா, சாலை அகலமா ? இக்காலகட்டத்தில் தொழிற்சாலைகள் வெப்பத்தை, வெம்புகையை உமிழாமல் இருக்கும்படி ஏதேனும் கட்டுப்பாடுகள், பரிந்துரைகள் உண்டா ? எதுவுமே இராது. எல்லாம் அப்படியப்படியே கிடக்கும். அரசுகள் எதனைத்தான் செய்கின்றன ! நம்மை ஆள்பவர்கட்குச் சுற்றுச்சூழல் நுண்ணுணர்ச்சி உண்டா ? இந்நேரம் விரைந்து நின்று பலப்பல காப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கவேண்டாவா ? ஐயோ, இதற்கு என்ன செய்யலாம் என்று ஆளும் தரப்பு மண்டையை உலுக்கிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள் ! மக்களாகிய நாம்தான் இனியும் யாரையும் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள். அதனால் என்னாயினும் பார்த்துக்கொள்ளலாம். வீட்டிற்குள் வேர் பரவாத, பருக்காத பலமரங்கள் இருக்கின்றன, அவற்றை வளருங்கள். ஏதாவது ஒன்றை இறங்கிச் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த ஆண்டில் இன்னும் ஐந்தாறு பாகைகள் கூடக்கூடும். இனிமேல்கூடும் ஒவ்வொரு பாகையும் நம் நிலத்தைக் கரித்துவிடும். வாழத் தகுதியற்றதாக்கிவிடும். இருக்கப்பட்டவர்கள் காலப்போக்கில் வேற்றிடம் தேடிப் போய்விடுவார்கள். நமக்கு நம் மண்தான் ஒரே போக்கிடம். அதன் வாழ்தகுநிலையைக் காப்பதன்றி வேறு வழி நமக்கில்லை.      fb  பதிவு

May 03, 2024

கத்தரிக்காய்களில் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்தரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.இது குறித்து அதே பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உணவு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் பியும் டி.ஏ. அபேசுந்தர சுற்றுச்சூழல் நீதி மையத்திடம் தெரிவித்ததாவது“காய்கறிகள் மற்றும் பழங்களை  குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவுவதால் பூச்சிக்கொல்லிகளை நீக்க முடியும் என தெரிவித்திருந்தார்.அத்துடன் காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

Apr 26, 2024

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், கோடைகால பயிற்சி வகுப்பு முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், பள்ளி மாணவர்களுக்கான, ஒன்றிய அளவிலான கோடைகால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் வைத்து, நடைபெற உள்ளது.அதன்படி, 01.05.2024 அன்று ஓவியக் கலைகள் பயில்வோம் என்ற தலைப்பிலும், 02.05.2024 அன்று தனித்தமிழ் அறிவோம் என்ற தலைப்பிலும், 03.05.2024 அன்று விருதுநகர் மாவட்டம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும், 04.05.2024 போஸ்டர் தயாரித்தல் இணைய வழி பயிற்சியும், 06.05.2024 அன்று கதை சொல்லி என்ற தலைப்பிலும், 07.05.2024 அன்று புத்தகம் பேசுதல் என்ற தலைப்பிலும், 08.05.2024 அன்று நாட்டுப்புற கலைகள் பயிற்சியும், 09.05.2024 அன்று உணவே மருந்து என்ற தலைப்பிலும், 10.05.2024 அன்று உபயோகமற்ற பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரித்தல்(Art from Waste) என்ற தலைப்பிலும், 11.05.2024 அன்று மெகந்தி வரைதல் மற்றும் களிமண் பொருட்கள் தயாரித்தல்(Mehendi and clay Modelling) என்ற தலைப்பிலும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாம்களில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 50 மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள இயலும். ஒரு மாணவர் இரண்டு பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்க பதிவு செய்யலாம்.இந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற விரும்பும் மாணவர்கள் 30.4.2024- க்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி முகாம் முற்றிலும் கட்டணமில்லா பயிற்சியாகும். மதிய உணவு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98437- 21133 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 25, 2024

தகிக்கும் தமிழ்நாடு

தமிழகத்தில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில்தொடங்கிவிட்டது. மார்ச் முழுவதும் வெயில் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தீவிரமாகதான் இருக்கிறது.இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் பதிவான வெயிலின் அளவு குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான பகுதிகளில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆந்திராவின் அனந்தப்பூர் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் முதல் இடத்திலும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 109.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர், நீர் சத்து கொண்ட பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழ்நாட்டின் வானிலையை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் சேலம், ஈரோடு, திருப்பத்தூர், கரூர் பரமத்தி, வேலூர், தருமபுரி, மதுரை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது.இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களை பொறுத்த அளவில், வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும், தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஏப்.26 தொடங்கி ஏப்.30 வரை தமிழகம் காரைக்காலில் வறண்ட வானிலையை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மட்டுமல்லாது இன்றும் நாளையும் வட உள் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. 

Apr 22, 2024

இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 130 வது பிறந்தநாள் உத்சவம்

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தைபெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 130 வது பிறந்தநாள் உத்சவம்24.04.2024 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில்ஸ்ரீமான் பி.ஏ.சி .ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும்,  புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.காலை 7.45 மணிக்கு அமரர் ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24.04.2024  மாலை 6.30 மணிக்கு  இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமிராஜா அரங்கத்தில்"அக்கரை சகோதரிகளின்" கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 25 26

AD's



More News