இந்தியா–இலங்கை இளையோர் டெஸ்ட் சமநிலையில் முடிவு.
இலங்கையின் காலேவில் நடைபெற்ற இந்தியா–இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையேயான முதல் யூத் டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்தது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 424/9 ரன்களில் டிக்ளேர் செய்தது. பதிலுக்கு இந்திய அணி லக்சயா ராய்சந்தனி இரட்டைச் சதம் மற்றும் மானவ் கிருஷ்ணாவின் சதம் உதவியுடன் முதல் இன்னிங்சில் 576 ரன்கள் குவித்தது. லக்சயா 207 ரன்கள் விளாசி அணியின் முன்னிலை பெற முக்கிய பங்காற்றினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 178/6 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆட்ட நேரம் முடிவடைந்ததால் முதல் யூத் டெஸ்ட் போட்டி டிராவாக அறிவிக்கப்பட்டது.
0
Leave a Reply