“உயிர்த்திறள் ஒன்றெனக்கோரி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாரின் தருமசாலை துவக்கி 156வது ஆண்டு தொடக்கமும் (25.06.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகத்திற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (05.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் (05.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா அரசு சார்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது“. இதனைத்தொடர்ந்து, மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 02.07.2023 அன்று வள்ளலார் முப்பெரும் விழா விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.அதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் வள்ளலார் அவர்களின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் போட்டி ஆகியன விருதுநகர், கே.வி.எஸ். வித்யாசலா மேல்நிலைப்பள்ளியில் வைத்து 20.06.2023 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.மேற்படி போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு 02.07.2023 அன்று நடைபெறும் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை விருதுநகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:தலைமை எழுத்தர் அலைபேசி எண் - 9688041776பிரிவு எழுத்தர் அலைபேசி எண் - 9360687563அலுவலக தொலைபேசி எண் - 04562 294607
. 2023-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை விரிவுபடுத்தி ,செயல்படுத்துவது தொடர்பாக அரசிடமிருந்து வரப்பெற்றுள்ள கீழ்க்காணும் நிலையான வழிகாட்டி செயல்முறைகளின்;படி காலை உணவு சமையல் செய்வதற்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள்ஃசமையலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை வேறு பள்ளிக்கு மாற்றப்படும் பட்சத்தில்,சமையலர்,சுய உதவிக்குழு உறுப்பினர் மாற்றப்பட்டு, அதே பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயாரும் சுயஉதவிக்குழு உறுப்பினருமான வேறு நபர் பணியமர்த்தப்படுவார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள சுயஉதவிக்குழுக்கள் ஊராட்;சி அளவிலான கூட்டமைப்புஃபகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் சுயஉதவிக்குழுக்கள்ஃஊராட்;சி அளவிலான கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில்ஃநகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறைந்த பட்சக்கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிமாக தேர்வுசெய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள சமையலர் பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் அபாய நிலையில் உள்ளது கோஃபர்ஸ்ட் நிறுவனம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்திருந்தது.அதில், அமெரிக்காவில் பிடபிள்யூ என்று அழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து விமான இன்ஜின்கள் முறையாக விநியோகிக்கப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இதனால் ஊழியர்களுக்கு ஊதியம், விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால் கடும் இழப்பை சந்தித்துள்ளது என்றும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கும்பட்சத்தில் மே9ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்யப்படுவதாகவருத்தத்துடன் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் விரைவில் டிக்கெட் தொகை ரீஃபண்ட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
'irctcconnect.apk'என்கிற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கக்கோரி வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் செயலியை பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளதுஇந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 'irctcconnect.apk' என்கிற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்க வேண்டாம் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான தளங்களில் இதுபோன்ற செயலிகளை பதிவிறக்க கோரி செய்திகள் அனுப்பப்படுகிறது. இந்த apk உங்கள் மொபைலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. செயலியின் பின்னணியில் உள்ள மோசடி நபர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகள் போல நடித்து ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர். எனவே இந்த செயலியை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2022 முதல் 31.03.2023 வரை) கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தில். கிராம வளர்ச்சித் திட்டம்(VPDP). அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம் குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரம் மற்றும் தொழிலாளர் மதிப்பீடு (Labour Budget) குறித்து விவாதித்தல். பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் - குறித்து விவாதித்தல். அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து விவாதித்தல். பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்து விவாதித்தல். தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல். கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல். எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் உறுதிமொழி எடுத்தல். ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல். வறுமை குறைப்பு திட்டம்(VPRP) இதர பொருட்கள் குறித்து விவாதித்தல்.எனவே, 01.05.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் SSC CGL தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 7500 பணிக்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023.இத்தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் 24.04.2023 அன்று முதல் நேரடியாக நடைபெறவுள்ளது.இப்போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக எழுதலாம்.இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562 - 293613 அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் இந்த அரிய வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
DISPOSE USED PLASTICS BAGS IN A PLASTIC BOTTLE BEFORE YOU THROW ! Please forward this message to as many as possible. Excellent suggestion which all should follow.
2022 -2023ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த விழுதுகளை வேர்களாக்க உயர்கல்வி வழிகாட்டி வகுப்பு மாவட்ட நிர்வாகத்தால் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேற்படி ஆலோசனை முகாம்களை Mass Movement for Transformation(MMT) and NURTURE என்ற தன்னார்வ இயக்கம் பிற தன்னார்வ இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் 20.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் AAA பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் விழுதுகளை வேர்களாக்க உயர்கல்வி ஆலோசனை வகுப்பில் (Career Guidance Program) கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆதார் நம்மோடு ஒன்றிவிட்டநிலையில் ஆதார் எண் பெற்ற ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற புதிய தகவலை, இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு வெளியிட்டுள்ளது ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கும், ஆதாரை புதுப்பித்தல் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.ஆதாரை பதிவு செய்து 10 வருடம் ஆனவர்கள் புதுப்பிக்க வரும் ஜூன் 14ம் தேதி வரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு தெரிவித்துள்ளது.இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India), இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்துவமாக பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் எண் வழங்கப்படுகிறது.பிறந்த குழந்தை முதல், இறந்த பின்னர் அந்த பிணத்திற்கு இறுதி செய்யும் வரை இப்போது எல்லா இடங்களிலும் ஆதார் கேட்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் இந்திய மக்களின் வாழ்க்கையில் 'ஆதார்' மிகப்பெரிய அங்கமாகிவிட்டது. சிம்கார்டு வாங்குவதாகட்டும், அரசின் மானியங்கள் கிடைக்க வேண்டும் என்றாலும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் எது வாங்க வேண்டுமானாலும் ஆதார் கார்டை கையோடு கொண்டு போக வேண்டும்.போலி கார்டுகள் தமிழகத்தில் ஒரே நபர் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரேஷன் அட்டை வைத்திருந்த போது ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டபோது தமிழகத்தில் எங்கு வசித்தாலும் ஒரே ஒரு ரேஷன் கார்டில் மட்டுமே பெயரை இணைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பல லட்சக்கணக்கான போலி ரேஷன்கார்டுகள் ஒழிந்து போனது,வங்கி கணக்கு இதேபோல் பான்கார்டு உடன் ஆதார் இணைப்பால் இப்போது யாரும் வருமான வரியில் முறைகேட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைரேகை வங்கி பணப்பரிவர்த்தனையில் ஆதார் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது ஏ.டி.எம். கார்டு இல்லாமல், வங்கி கணக்கு எண் இல்லாமல் ஆதார் எண், கைரேகை வைத்து பணம் எடுக்கக்கூடிய ஏ.இ.பி.எஸ். எனப்படும் ஆதார் எனேபல் பேமெண்ட் சிஸ்டம் (ஆதார் ஏ.டி.எம்.) என்ற பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. முகவரி சான்று ஆதார் பதிவு செய்த பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் கூடுதல் ஆவணங்களை வைத்து ஆதாரை புதுப்பிக்க வேண்டும். வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பதிவேற்றம் செய்து கொண்டு ஆதாரை புதுப்பித்து பலப்படுத்த முடியும்.. அதன்பிறகு கட்டணம் வசூலிப்பார்கள். எனவே myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் அல்லது உங்களது மொபைல் போனில் mAadhaar App என்ற ஆன்ட்ராய்டு ஆப் அல்லது IOS செயலியை பதிவிறக்கம் செய்து அல்லது மொபைல் மூலமாகவும் ஆவணங்களை எளிதாக புதுப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம் மற்றும் நகரம், இராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பாதாள சாக்கடைத்திட்டம், தாமிரபரணி குடிநீர் திட்டம் மற்றும் இரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிப்பது தொடர்பாக இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சார்பில் 28.03.2023 அன்று நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்தது தொடர்பாக இரண்டு தரப்பினரையும் அழைத்து சமாதானக்கூட்டம் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து 26.03.2023 அன்று மாலை 05.00 மணியளவில் சிறப்பு அழைப்பாளர்களாக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர், இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் இராஜபாளையம் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.1 மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்ட அலுவலர்களின் விபரம்:1. வருவாய் ஆய்வாளர், இராஜபாளையம்2. கிராம நிர்வாக அலுவலர், இராஜபாளையம்3.சார்பு ஆய்வாளர், தெற்கு காவல் நிலையம், இராஜபாளையம்/I-நகராட்சி தரப்பினர் சார்பாக கலந்து கொண்டவர்கள்Tதகராட்சி ஆணையாளர், இராஜபாளையம்இராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போரட்டக்குழு சார்பாக கலந்து கொண்டவர்கள்1.திரு.மாரியப்பன், (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்) 9488717452.2. திரு.என்.ஏ. ராமச்சந்திரராஜா (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்)3. திரு.எம்.மணிகண்டன் (போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்) மற்றும் 15 நபர்கள்மேற்படி கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது;1.08.03.2023-ல் நகர்மன்ற தீர்மானம் எண்:94-ன்படி வரிவிதிப்பு குறைப்பிற்கான நடவடிக்கை அரசாணை வருகிற எப்ரல் மாதம் 20-ம் தேதிக்குள் பெற்றுத் தருவதாக நகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.2. சொத்து வரி விகிதம் (Basic Kate) 19% இருந்து 16 ஆக குறைப்பதற்கான நடவடிக்கைகள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் சட்டமன்றத்தில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். 3. குடிநீர் இணைப்புக் கட்டணம் மற்றும் கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி, செலுத்தியவர்களின் தொகை அடுத்து வரும் நிதியாண்டிற்கான கட்டணத்தில் அல்லது வைப்பு தொகையில் ஈடு செய்யப்படும்.4. மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் 28.03.2023 அன்று நடைபெற இருந்த முற்றுகை போரட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.