1.கோவிலில் தூங்கக் கூடாது. 2. தலையில் துணி, தொப்பி அணியக் கூடாது. 3. கொடிமரம், நந்தி, பலிபீடம் நிழல்களை மிதிக்கக் கூடாது. 4.விளக்கு இல்லாமல் வணங்கக் கூடாது. 5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது. 6 .குளிக்காமல் கோவில் போகக் கூடாது. 7. கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக் கூடாது. 8. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது. 9. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது. 10. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது. 11.கோவில் படிகளில் உட்காரக் கூடாது. 12.சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும். 13.பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
100 சதுர அடியில் இருந்தாலும் 10,000 சதுரஅடியில் இருந்தாலும் அந்த வீட்டுக்கு பாதுகாப்பு நிலை வாசல் கதவு தானே.அப்பேற்பட்ட நிலைவாசலை - நம்மில் பலர் சரியாக கவனித்துக் கொள்வதில்லை.ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காலை 6-7 மணிக்குள் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து 2 சாமந்தி பூவாவது வாசலின் இரு புறத்தில் வைக்கவும்.முடிந்தவர்கள் வாசலில் ஒர் அகல் விளக்கு ஏற்றி 2 ஊதுபத்தி வைக்கவும்."பன்னீர் பச்சைகற்பூரம் சேர்த்து மஞ்சள்குழப்பிவைக்கவும்.குல தெய்வமும் மற்ற தெய்வங்களும் வரும் வழியை இப்படி தான் வைக்க வேண்டும். தினமும் வெளியில் சென்று வந்தவுடன் நிலை வாசலின் மேற்பகுதியை தொட்டு நல்ல படியாக வீடு வந்து சேர்ந்ததற்கு நன்றி சொல்லவும்.தினமும் தூங்கி எழுந்தவுடன் கதவு திறக்கும் போது நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்து பாதுகாப்பாய் இருந்ததற்குநன்றி என்று சொல்லிப் பாருங்கள். முன்னேற்றத்தைக் கண்கூடாக பார்க்கலாம்.
நாம் அரிசியை வீணாக்குபர்களுக்கும், ஒருவர் நம் வீட்டு படியேறி வந்து, தானம் கேட்டால் இல்லை என்பவர்களுக்கும். செய்யும் பாவங்கள் இரட்டிப்பாகும் என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.அரிசி கொஞ்சம் கீழே சிந்தினாலும் பெரியவர்கள் அதை ஒவ்வொன்றாக பொறுக்கி அரிசியோடு சேர்ப்பார்கள். அரிசியை வீணாக்கினால் அன்னபூரணியை வீணாக்குவது போல ஆகும். பசிப்பவர்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.தானத்திலேயே சிறந்தது அன்னதானம் வாழ்க்கையில் எவர் ஒருவர் அடுத்தவர்களின் பசியை போக்கி உள்ளார்களோ அவர்கள் தான்அதிகபுண்ணியத்தைசேர்த்து வைத்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாசி மகம் அன்று தான் முருகப் பெருமான், தன்னுடைய தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது.அதே போல் பாதாள உலகத்தில் இருந்து பூமியை பெருமாள், வராக அவதாரம் எடுத்து மீட்டு வந்ததும் மாசி மகம் நாளில் தான்.அதனால் இந்த நாளில் சிவ பெருமான், அம்பாள், முருகப் பெருமான், பெருமாள், முன்னோர்கள், குலதெய்வம் என எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம்.மாசி மகம் அன்று விரதம் இருந்து, வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.முடிந்தவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடலாம்.
*சித்திரை - மரிக்கொழுந்து வைகாசி -சந்தனம் *ஆனி - முக்கனிகள் ஆடி-பால் ஆவணி-நாட்டுச்சர்க்கரை புரட்டாசி - அப்பம் ஐப்பசி -அன்னம் *கார்த்திகை - தீபவரிசை மார்கழி - நெய் தை - கருப்பஞ்சாறு மாசி - நெய்யில் நனைந்த கம்பளம் *பங்குனி-கெட்டித்தயிர் இதை செய்து சிவ பெருமானை வழிபட்டால் எல்லா செல்வ வளங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.
பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள் . முதல் இடம் நெற்றி, 2-வது இடம் மாங்கல்யம், மூன்றாம் இடம் தலைமுடி வகிட்டின் ஆரம்பம். பெண்கள் தலையின் மத்தியில் கோணலாக இல்லாமல் மூக்கு நுனிக்கு நேராகத் தான் வகிடு எடுக்க வேண்டும்.இந்த 3 இடங்களிலும் குங்குமம் வைத்து ஸ்ரீலட்சுமி தேவியை வணங்குவதை ஒவ்வொரு திருமணமான பெண்ணும் தினமும் அவசியம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டால் மாங்கல்ய பலன் அதிகரித்து கணவனின் ஆயுள் பலம் கூடும்.
எந்த வீட்டில் வெள்ளி பொருட்கள் இருக்கின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக தங்கம் குவிந்து கிடக்கும்வெள்ளியை நம்முடைய வீட்டில் நிறைய வாங்கி சேர்த்துக் கொண்டே இருந்தால், அந்த வெள்ளி பொருட்கள் மற்ற உலோகமான தங்கத்தை ஈர்க்கும், தங்கத்தோடு மட்டுமல்லாமல் மற்ற உலோகத்தினால் செய்யப்பட்ட பொருட்களையு ம் நம்முடைய வீட்டில் வாங்கக்கூடிய யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும்,பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலையின் மேல் ,ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து, கொஞ்சமாக மஞ்சள்தூளை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சிட்டிகை அளவு மஞ்சளை எடுத்து அந்த வெற்றிலையில் இருக்கும் வெள்ளி' பொருளின் மேலே மூன்று முறை அர்ச்சனை செய்தால் போதும், அர்ச்சனை செய்யும்போது 'எம் சுக்கிர தேவாய நமஹ' என்று மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.தொடர்ந்து செய்து வர தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும்.
திருஷ்டி கழிக்க பூசணிக்காய், கற்பூரம், எலுமிச்சை பழம், கல் உப்பு, மிளகாய் உள்ளிட்டவைகளில் சுத்தி போடுவது வழக்கம். அந்த வகையில் எரிந்த திரிகளை கொண்டும் சுத்தி போடலாம்.தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும் அல்லது வாரம் ஒருமுறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து வைக்க வேண்டும். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வைத்து இந்த திரிகளை பயன்படுத்தி திருஷ்டி சுத்த வேண்டும். இரவு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கச் செல்வதற்கு முன்பாக, திரிகளை தூபக் காலில் போட்டு, அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி கழிக்க வேண்டும். திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனைக் கொளுத்தி விடுங்கள். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். திரிகள் முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் எரிந்து சாம்பலாயிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நன்மை அளிக்கும்.
1.வலது உள்ளங்கை.2.தனது வலதுதோள்.3.கண்ணாடி. 4. கோபுரம்.5.சூரியன்.6. விளக்கு.7.சிவ லிங்கம். 8.இறைநூல்கள்.9.பெற்றோர்.10.தாமரை,11துளசி மாடம்.12.பசு,13.யானை.14.கடல்.15.பொன்.
பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில்பாதங்களை தரிசித்த பிறகு தான், முகத்தை தரிசிக்க வேண்டும் என்பார்கள். அதாவது, இறைவனின் திருவடியை அடைவதே இந்த பிறவியின் நோக்கம் என்பதை உணர்த்தவே இப்படி சொல்லப்படுகிறது. இதற்குள் பலரும் அறியாத மற்றொரு ரகசியமும் உள்ளது. கிருஷ்ணரின் பாதங்களை தாமரை பாதங்கள் என்பார்கள். தாமரை, சேற்றில் முனைத்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் மேலே உயர்ந்து நிற்கும். அது போல உலக இன்பங்களாக சேற்றை விட கிருஷ்ணரின் கருணை உயர்ந்தது என காட்டுதாகும். கிருஷ்ணரின் அனைத்து புனித சின்னங்களும் கிருஷ்ணரின் திருவடிகளில் உள்ளது. சங்கு, சக்கரம், வில், ஸ்வஸ்திக், தாமரை பிறை சந்திரன், மீனம் வஜ்ராயுதம் உள்ளிட்ட பலவிதமான ஆயுத சின்னங்கள் உள்ளன. இவைகள் இருக்கும் இடத்தில் அனைத்து விதமான நன்மைகளும் பெருகும். தீமைகள் எதுவும் நெருங்காமல் பக்தர்களை காக்கும். இது தான் கிருஷ்ணரின் பாதத்தை தரிசிப்பதற்கும் பாதங்களை வீடுகளில் வரைவதற்கு, வைத்து வணங்குவதற்குமான காரணம்.