ஜப்பான் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சிந்து.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 'சூப்பர் 750' ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சிந்து, சீனாவின் ஹான் யூவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர், முதல் செட்டை 21-16 என்றும், இரண்டாவது செட்டை 21-14 என்றும் கைப்பற்றி, 35 நிமிடங்களில் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதேவேளை, கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா – தனிஷா கிராஸ்டோ ஜோடி, சீனாவின் யான் ஜீ பெங் – டங் பிங் ஹுவாங் இணையை எதிர்கொண்டு 20-22, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
0
Leave a Reply