25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அதிகரித்து வரும் ரயில் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு தொடர்பான மோசடிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிகரித்து வரும் ரயில் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு தொடர்பான மோசடிகள்

 நாடு முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக ரயில் சேவை உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பயணம் என்பதால் மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக ரயில் டிக்கெட் முன்பதிவில் போலி செயலிகள் மூலம் அதிகளவு மோசடிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஐஆர்சிடிசி செயலி அல்லது அதன் வெப் சைட்டில் டிக்கெட்டுகளை புக் செய்வார்கள். இந்நிலையில் ஐஆர்சிடிசியில் தளத்தின் பெயரில் போலியாக எஸ்எம்எஸ்களில் சில ஃபிஷிங் இணைப்புகளை கொடுத்து பயணிகளிடம் பெருமளவில் பண மோசடி நடைபெறுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து தனது அதிகாரப்பூர்வ ரயில் கனெக்ட் மொபைல் செயலிகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஐஆர்சிடிசியில் இருந்து அனுப்பப்படுவதாக வரும் போலி எஸ்எம்எஸ்களில் உள்ள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் ஐஆர்சிடிசி கோரிக்கை விடுத்துள்ளது.போலி செயலிகளின் மூலம் பயணிகள் மோசடிக்கு ஆளானால் உடனடியாகCare@irctc.co.in என்ற இ மெயில் முகவரிக்கு உடனடியாக புகார் அளிக்குமாறும் இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது செயலிகள் சரியானதுதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இந்தியன் ரயில்வே எச்சரித்துள்ளது.அதிகாரப்பூர்வ செயலிகளை தவிர மற்ற இணையத்தில் கிடைக்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என்றும் இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. ஆன் லைன் பண மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஐஆர்சிடிசி பெயரிலும் போலி புழக்கத்தில் இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News