தமிழ்நாடுநாள் தினத்தை யொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் நடைபெற்ற போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன .
தமிழ்நாடுநாள் விழாவினையொட்டி தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 14.07.2026 ஆம் நாளன்று விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றன. அரசு, தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 73 மாணவர்கள் பேச்சுப் போட்டியிலும், 69 மாணவர்கள் கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்றனர். இப்போட்டிகளில் 6 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பேச்சுப்போட்டியில் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி சி.சவிதா முதல் பரிசாக ரூ 10000/-மும், ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி கூ.பிரதீபா இரண்டாம் பரிசாக ரூ.7000/-மும், திருத்தங்கல் எஸ்.என்.ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி வ.லோகபிரியா மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும் வென்றனர்.
அதேபோல், கட்டுரைப்போட்டியில், மம்சாபுரம், பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி அ.வைதேகிலட்சுமி முதல் பரிசாக ரூ.10000/- மும், தோனூகால் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி இரா.சங்கீதா இரண்டாம் பரிசாக ரூ.7000/-மும், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி மா.யோக சந்திரிகா மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply