25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

. 2023-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில்  தமிழக நிதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை விரிவுபடுத்தி ,செயல்படுத்துவது தொடர்பாக அரசிடமிருந்து வரப்பெற்றுள்ள கீழ்க்காணும் நிலையான  வழிகாட்டி செயல்முறைகளின்;படி காலை உணவு சமையல் செய்வதற்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள்ஃசமையலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
 இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.
 இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை வேறு பள்ளிக்கு மாற்றப்படும் பட்சத்தில்,சமையலர்,சுய உதவிக்குழு உறுப்பினர் மாற்றப்பட்டு, அதே பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயாரும் சுயஉதவிக்குழு உறுப்பினருமான வேறு நபர் பணியமர்த்தப்படுவார்.

 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3  ஆண்டுகள் அனுபவம் உள்ள சுயஉதவிக்குழுக்கள் ஊராட்;சி அளவிலான கூட்டமைப்புஃபகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் சுயஉதவிக்குழுக்கள்ஃஊராட்;சி அளவிலான கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில்ஃநகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறைந்த பட்சக்கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிமாக தேர்வுசெய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள சமையலர் பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News