சூரி கதை யின் நாயகனாக நடித் துள்ள படம் ,பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “மாமன்.” அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். மே 16ல் படம் வெளியாகும் நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது. 3 நிமிடம் ஓடும் டிரைலரில் குடும்ப உறவுகளுக்குஇடையே நடக்கும் மோதல்கள், பாசப் போராட்டம்ஆகியவற்றுடன் அக்கா மகன், தாய் மாமன் பந்தத்தை முதன்மையாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.'மாமன்' படம் மே 16ல் ரிலீஸாகிறது. 'மாமன்' பட கதையை சூரி எழுதி யுள்ளார். இவர் கூறுகையில் "கதையை நான் எழுதியிருந்தாலும் எனது பெயர் வர வேண்டாம் என இயக்குந ரிடம் சொன்னேன். ஆனாலும் பெயரை போட்டு விட்டார். நான் இங்கு நிற்க என் குடும்பம் தான் காரணம். என் குடும்பம் தான் எனக்கு சாமி. இந்த கதை அங்கிருந்து தான் உருவானது. சின்ன பையனுக்கும், அவனது தாய் மாமனுக்கும் இடையேயான உறவே கதை. படத்தில் சின்ன பையனாக நடித்தவர் இயக்குனரின் மகன் என்றார்.
இயக்குனர் லெனின் பாரதியிடம் இணை இயக்குன ராக இருந்தவர் ராஜ்மோகன். இவர் யோகிபாபுவை வைத்துபுதிய படம் இயக்குகிறார். அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி ராஜ்மோகன்கூறுகையில் . உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டு "இரும் புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலும் தான் இப்படம்..
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த என்.டி.ஆரின் மகன்களான பாலகிருஷ்ணா (பாலய்யா), ஹரிகிருஷ்ணா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள். இதில் ஹரிகிருஷ்ணாவின் மகன்களான ஜானகிராம், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரும் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஜானகிராமின் மகன் தாரக ராமராவும் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். ஒய்.வி.எஸ்.சவுத்ரி தயாரித்து, இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குச்சிப்புடி நடன கலைஞர் வீணா ராவ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி 'கிளாப்' அடித்து தொடங்கி வைத்தார்.என்.டி.ஆரின் மகளுமான புரந்தரேசுவரி கூறும்போது, சினிமா உள்ளவரை என். டி.ஆரின் புகழ் மறையாது. தற்போது அவரது குடும்பத்தில் இருந்து 4-ம் தலைமுறையாகவும் நடிக்க வந்துவிட்டார். என்.டி.ஆரின் ரசிகர்கள் அவரை பார்த்துகொள்வார்கள்" என்றார்.
நடிகை இவானா “லவ் டுடே “திரைப்படத்தின்மூலம்பிரபலமானார்.இப்படத்தைகார்த்திக்ராஜுஇயக்கஸ்ரீவிஷ்ணுகதாநாயகனாகநடித்துள்ளார்.பிரதீப்ரங்கநாதன்இயக்கத்தில்வெளியானலவ்டுடேதிரைப்படத்தின்மூலம்பிரபலமானார்நடிகைஇவானா. தெலுங்குதிரையுலகில்காலடிஎடுத்துவைத்து,.“சிங்கிள்“என்றதெலுங்குதிரைப்படத்தில்நடித்துள்ளார்.இப்படத்தைகார்த்திக்ராஜுஇயக்கஸ்ரீவிஷ்ணுகதாநாயகனாகநடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.இவர்களுடன் முன்னணி கதாப்பாத்திரத்தில் கேடிகா ஷர்மா மற்றும் வென்னிலாகிஷோர் நடித்துள்ளனர்.திரைப்படம் முதல் நாள் மட்டும் 5.1 கோடிரூபாய்வசூலித்துள்ளது.திரைப்படம்வெளியான3நாட்களில்16.30 கோடிரூபாய்வசூலித்துள்ளது.விரைவில்இப்படம்உலகளவில் 20 கோடிரூபாய்இலக்கைஅடையும்எனஎதிர்ப்பார்க்கப்படுகிறது.
காமெடி நடிகராக இருந்து 'விடுதலை' படம் மூலம் ஹீரோவான சூரி நடித்துள்ள 'மாமன்' படமும் அதே நாளில் ரிலீசாவதாக அறி விக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி யன்களாக இருந்து அதன்பிறகு ஹீரோ வாகி விட்ட சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே 16ல் ரிலீசாகிறது. இந்த நிலையில், காமெடி நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' என்ற காமெடி படமும் மே 16ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். காமெடி நடிகர்களாக இருந்தவர்கள் ஹீரோ வாக நடித்துள்ள 3 படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.
ரூ.10 லட்சத்தில் முழு 'ஏஐ' திரைப்படத்தை, கர்நாடகாவை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி கிராபிக் டிசைனர் நுாதன் என்பவருடன் இணைந்து உருவாக்கியுள்ளார். சம்பந்தப்பட்ட மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே அந்த பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நாயகன், நாயகி, இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் 'ஏஐ' மூலம் உருவாக்கியுள்ளனர். 12 பாடல்களுடன் கூடிய இப்படத்திற்கு 'லவ் யூ' என தலைப்பிடப்பட்டுள்ளது. சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அரன் நிறுவனம் தயாரிக்க, பார்கவன் சோழன் இயக்க ,சுதந்திர போராட்ட வீரரும். சுதேசி இயக்கத்தின் முன்னோடியு மான வ.உ. சிதம்பரம் -ன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ஏஐ தொழில்நுட்பத் தின் உதவியுடன் "நாவாய்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
மே 1ல் ரிலீசான தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ' ஹிட் 3' படம். நானி பேசுகையில், "இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் வர்மா ஆகியோர் தங்களுக்கான சினிமா யுனிவர்ஸ் உருவாக்கியுள்ளனர். நான் 'ஹிட்' படத்தின் யுனிவர்ஸில் இணைந்துவிட்டேன். அதேபோல்எதிர்காலத்தில்ஏதாவதுநடந்தால், நானும்லோகேஷின்சினிமாயுனிவர்ஸில்(எல்சியூ)இணைந்தால்மகிழ்ச்சியடைவேன்.அவரின் படைப்புகள் எனக்கு பிடிக்கும்" என்றார்.
'புலிகொண்டா, ஸ்பைடர், கேம் சேஞ்சர்' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்ர கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கோர்ட்' படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. பிரியதர்ஷி கூறுகையில், ''ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்ததும் சந்தோஷம். சினிமாவில் நடிகர் கமல் தான் என் இன்ஸ்பிரேஷன் அவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை" என்றார்.
மே 1ல் ரிலீசான சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இப்பட விழாவில் பேசிய சிம்ரன் "நல்ல குடும்ப கதையாக இருப்பதால் 'டூரிஸ்ட் பேமிலி' படத்துக்கு உடனே 'ஓகே' சொன்னேன். இன்னொரு காரணம், சசிகுமார். அவருடன் நடிப்பது எனக்கு பெருமை தான். சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் கூடாது திறமைக்கு முதலிடம். அந்தவகையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பதை எனது அதிர்ஷ்டம் .அடுத்தடுத்து குடும்ப பாங்கான கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்"என்றார்.
மோகன்லால் நடித்து வெளியான படம் 'தொடரும்.” ஷோபனா நாயகியாக நடித்துள்ளார்.இருவரும் நீண்ட இடை வெளிக்கு பிறகு இணைத் துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள மோகன்லால் “தொட ரும்” படத்திற்கான வரவேற்பால் நெகிழ்ச்கிய டைந்தேன். படத்தை கருணையுடன் ஏற்றதற்கு நன்றி. இந்த நன்றியுணர்வு என்னுடையது மட்டுமல்ல. இந்தப் பயணத் தில் என்னுடன் பயணித்து, ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் அன்பையும், முயற் சியையும், உணர்வையும் அளித்த ஒவ்வொருவருக்கும் இது சொந் தமானது' எனக் கூறியுள்ளார். 'தொடரும்'. கிரைம் திரில்லர் களத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வசூலில் உலகளவில் ரூ.100 கோடியை கடந்தது. இப்படத்திற்கு தமிழகத்திலும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதன் தமிழ் பதிப்பு தமிழகத்தில் மே 9ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.