கடந்த ஆண்டில் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத் தில் அர்ஜுன் தாஸ் நடித்து வெளி யான படம் 'ரசாவதி'. நல்ல விமர் சனம் கிடைத்தாலும் வசூலில் தோற்றது. இந்த நிலையில் 7வது நியூ ஜெர்ஸி இந்தியன் அன்ட் இன் டர்நேஷனல் திரைப்பட விழாவில் 'ரசாவதி' படம் பங்கேற்றது. இதில் அர்ஜுன் தாஸிற்கு சிறந்த நடிகர் விருதை அறிவித்துள்ளனர். இதனை பகிர்ந்த இயக்குனர் சாந்தகுமரர், அர் ஜூன் தாஸிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பாலிவுட்டில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் மகள் சுஹானாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுஹானாவிற்கு அம்மாவாக தீபிகா நடிக்கிறார். அதே சமயம் கதாநாயகி அந்தஸ்து பாதிக்காத வகையில், தீபிகாவின் ரோல் வலுவாக இருப்பதாக சொல்கிறார்கள்
நடிகை தபு, தமிழில் கடைசியாக 2000ல் வெளியான 'சிநேகிதியே' படத்தில் நடித்திருந்தார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில், இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் தபு. பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் ஏப்.10ல் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. 3 நாளில் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் விரைவில் ரூ.150 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
“என்னால் உன்னைத் தொடவோ உன் பேச்சைக் கேட்கவோ, பார்க்கவோ முடியாது, என் இதயத்தில் உன்னை உணர முடிகிறது.” "வானத்தில் பிரகாசிக்கும் நீ, படைப்பாளர்களின் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன்" என உருக்கமாக கூறியுள்ளார். 2011 ஏப்ரல் 14 ஆம் தேதி கே.எஸ்.சித்ராவின் மகள் நந்தனா வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மரணமடைந்த நாள்.
கடந்த60 வருடங்களாக தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங்,20 நிமிடங்கள் யோகாசனம்,20 நிமிடங்கள் பிராணயாமம் பண்றேன். பெட்ல தூங்குறது கிடையாது தரையிலதான் தூங்குவேன். சர்க்கரை, உப்பு. மைதா என வெள்ளை நிற உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். தேவையில்லாத எண்ணங்கள் வரும்போது குரு மந்திரத்தை சொல்லிட்டு இருப்பேன். எண்ணங்கள் நல்லா இருந்தால்தான் மனசு நல்லா இருக்கும்.ரஜினிகாந்த் பேட்டி.
அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1000 கோடி வசூலித்த 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லியும், 1800 கோடியை - வசூலித்த 'புஷ்பா 2' படத் தில் நடித்த அல்லு அர்ஜுனும் புதியபடத்தில் இணைந் துள்ளனர். இதனைவீடியோ உடன் படக்குழு அறிவித்தது. அதில், அமெரிக்காவில் உள்ள பிரபல வி.எப்.எக்ஸ் நிறுவனமான லோலா வல்லுனர்களுடன் அட்லி, அல்லு அர்ஜூன் விவாதித்தது, படத் தின் கதை பற்றி அவர்கள் வியந்து பேசியது, அல்லு அர்ஜூனின் ஸ்க்ரீன் டெஸ்ட் ஆகியவை இடம்பெற்றிருந்தது. தெளிவாக ஹாலிவுட் படம்போன்ற வித்யாசமான கதையை பிரமாண்டமாக எடுக்க உள்ளது .
மார்க்கெட் சரிந்து கிடப்பதால், ரவி மோகன் மற்றும் ஆர்யா போன்ற நடிகர்களும், விஜய் சேதுபதி பாணியில் மற்ற மொழிப்படங்களிலும் வில்லனாக டித்து, தங்களது மார்க்கெட்டை இந்திய அளவில் விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.'ஹீரோ' மார்க்கெட் ஸ்டெடியாக இருந்த போதே,தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, பல மொழி படங்களில் வில்லனாகவும் நடித்தார், விஜய் சேதுபதி.
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படம்ஆக்ஷன் கதையாக உருவாகி உள்ளது. படம் பார்க்க வருபவர்கள் 10 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுங்கள். முதல் ஷாட்டில் இருந்தே கதை துவங்கி விடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு ஏ ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.விக்ரம் நடித்த 'வீர தீர சூரன் 2' திரைப்படம் ரசிகர்களிடம் வர வேற்பை பெற்று 2வது வாரமாக திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.52 கோடி வசூ த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.38 கோடி வசூலித்துள்ளது. இதன் முதல் பாகம் இனிமேல் தான் வெளியாகும் என்றும், 3ம் பாகத்தையும் எடுக்க இயக்குனர் அருண்குமார் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், கூலி படம், படப்பிடிப்பு முடியும் முன்பே, ஏரியாக்கள் மட்டுமின்றி, டிஜிட்டல் உரிமையும் விற்பனை ஆகிவிட்டது., முன் வரிசையில் இருக்கும் இளவட்ட, 'ஹீரோ'களின் படங்களே உடனடியாக வியாபாரம் ஆகாமல் தடுமாறி வரும் நிலையில், , மார்க்கெட்டில், ரஜினி படங்களுக்கு இருக்கும் இந்த வரவேற்பை பார்த்து, அடுத்தபடியாக விஜய், அஜீத்துக்கான, 'ஸ்கிரிப்டு'களை வைத்துள்ள இயக்குனர்களும். மார்க்கெட்டில், ரஜினி படங்களுக்கு இருக்கும் இந்த வரவேற்பை பார்த்து,ரஜினியை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.