தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவி டம் பேச்சுவார்த்தை நடக் கிறது. ரூ.18 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனை குறைக்க சொல்லியும் பேச்சு நடக்கி றதாம். ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்''சைரா' நரசிம்மரெட்டி, காட்பாதர்' படங்களுக்கு அடுத்து 3வது முறையாக சிரஞ்சீவி - நயன் தாரா இணைந்து நடிப்பது உறுதியாகிவிடும். 'டாக்ஸிக், மண்ணாங் கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன் தாரா.
2024ல் 'ஸ்பிரிட்' படம் துவங்க இருந்தபோது தீபிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது.அந்த சமயத்தில் குழந்தைக்கு தாயாக இருந்ததால் நடிக்க முடியாது என மறுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தற்போதுஒப்புக்கொண்டுள்ளார் தீபிகாபடுகோன். நடிகர் பிரபாஸ் கைவசம், 'தி ராஜா சாப், பாஜி, ஸ்பிரிட், சலார் 2' படங்கள் உள்ளன. இதில் தி ராஜா சாப், பாஜி படங்களின் படப்பிடிப்பு' விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில்நடிக்கஉள்ளார்.அக்டோபரில்படப்பிடிப்புதுவங்குகிறது.இதில்நடிகைதீபிகாபடுகோன்நாயகியாகஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஏற்கனவே 'கல்கி' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் மலையாள நடிகையான பாவனா தமிழில் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக கன்னடத்தில் மட்டும் நடித்து வரும் இவர் 14 ஆண்டுகளுக்கு பின் தமிழில் மீண்டும் ஜெயதேவ் இயக்கத்தில் 'தி டோர்' என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி நடித்துள்ளனர். ஹாரர் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி உள்ள இப்படம் இம்மாதம் வெளியாகிறது.
“டிராகன்” படத்தை தொடர்ந்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது டிராகன் படத்தை தொடர்ந்து “பரதா “என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியான நிலையில் நடிகை சமந்தா முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார்.
ஆர்யா, நயன் தாரா, சந்தானம் நடிப்பில், 2010ல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படம் கடந்தவாரம் ரீ ரிலீஸானது. 15 ஆண்டுகளுக்குப் பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எண்ணி உள்ளார் ராஜேஷ். இவர் கூறுகையில் "நானும், ஆர்யாவும் இதற்கான முயற்சியில் உள்ளோம். கதையை உருவாக்கி விட்டேன். ஆர்யா உடன் நயன்தாரா, சந்தானமும் இணைந்தால் படம் நன்றாக ஒர்க் அவுட் ஆகும். அதற்கான பேச்சுவார்த்தை அவர்களிடம் நடக்கிறது" என்றார்.
'மாமன்னன்'. மாரி செல்வராஜ் இயக்கிய படம் வெற்றி பெற்ற நிலையில், வடிவேலு, பஹத் பாசில் இந்த இருவரும் இணைந்து நடித்த ''மாரீசன்'எனும் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள் ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கும் நிலையில் ஜூலையில் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை படக்குழு குறிப்பிடவில்லை
முடிகளை ஸ்டைலாக பராமரிக்க, பாலிவுட்டை சேர்ந்த, 'ஹேர் டிரஸ்சர்' ஆலிம் ஹக்கீம் என்பவரை, நடிகர் ரஜினி சென்னைக்கு வர வைக்கிறார் .நடிகர் ரஜினியின் தலையில் வழுக்கை இருப்பினும், மீதமுள்ள முடிகளை ஸ்டைலாக பராமரிக்க, 'ஹேர் டிரஸ்சர்' ரை, சென்னைக்கு வர வைக்கிறார். தன் தலை முடியை ஒரு தடவை, 'கட்டிங்' செய்வதற்கே அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய், சம்பளம் கொடுக்கிறார், ரஜினிகாந்த்.ரஜினி மட்டுமின்றி, மகேஷ் பாபு, ராம்சரண், ரன்பீர் கபூர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்ற பிரபலங்களுக்கும், ஹேர் டிரஸ்சராக இருந்து வருகிறார், ஆலிம் ஹக்கீம்.
சவாலான பட் - ஜெட் காரணமாக எம்.ஜி.ஆர்., கமல் இருவரும் முன்னதாக எடுக்க முயற்சித்து தோல்வியடைந்த,.கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன் னியின் செல் வன்' கதையை இயக்குனர் மணிரத்னம் இரு பாகங்களாக திரைப்ப டமாக எடுத்து வெளியிட்டார்.. இதனை மணி ரத்னம் இயக்கி சாதித்தார். 'நாயகன்' படத்திற்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து மணி ரத்னம்-கமல் கூட்டணியில் 'தக்லைப்' படம் தற்போது உருவாகியுள்ளது. இத் தனை ஆண்டுகள் இடை வெளி மற்றும் இடையில் இணைய முயற்சித்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பொன்னியின் செல் வன் படத்தின் முழு ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு மணிரத்னம் வந்தார். அவர் சொன்ன பட்ஜெட்டை பார்த்து என்னால் தாங்க முடியாது எனக்கூறிமறுத்துவிட்டேன்" என தயாரிக்க மறுத்ததை தெரிவித்தார் கமல்.
ரன்வீர் சிங்,தீபிகா படு கோனே பாலிவுட்டின் பிரபலமான நட் சத்திர ஜோடியான தம்பதியினருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் விரைவில் குடியேறப் போகிறார்கள். 11 ஆயிரம் சதுர அடி கொண்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்பான இதன் மதிப்பு ரூ.100 கோடி என்கிறார்கள்.
பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்ஜே பாலாஜி ,உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் 'யங் மங் சங்'. படம் ரெடியாகி 6 ஆண்டுகள் ஆகிறது. நிதி பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப் படத்தை தற்போது வெளியிடும் முயற்சி நடக்கிறது. காமெடி கலந்த படமாக குங்பூ கலையை வைத்து 17ம் நூற்றாண்டில் துவங்கி 1980 வரை நடக்கும் கதையாக உருவாகி உள்ளது.