25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெள்ளித்திரை

Aug 14, 2025

இந்திய அனிமேஷன் படங்களில் 210 கோடியை கடந்த 'மகாவதார் நரசிம்மா' அதிக வசூல் குவித்த படமானது.

கடவுள் விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை கருவாகக் கொண்டு உருவான அஸ்வின் குமார் படம் 'மகாவதார் நரசிம்மா'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீசானது. கடவுள் விஷ்ணு வின் அவதாரங் வைத்து இயக்குநர் அஷ்வின் குமார் கன்னடத்தில் 3டி  தொழில்நுட்பத் தில் அனிமேஷன் படம் இயக்குகிறார். இதன் முதல் படமாக 'மஹாவதார் நரசிம்மா'. விஷ்ணுவின் நரசிம்மர் அவதாரத்தை  மையமாக  வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.  உலகளவில் ரூ.210 கோடி வசூலித்து இந்திய அனிமேஷன் படங்களில் அதிக வசூல் குவித்த படமானது.இதையடுத்து விஷ்ணுவின் மற்ற அவதாரங்களை வைத்து 'மஹாவதார் பரசுராம்', 'மஹா வதார் ரகுநந்தன்', 'மஹாவதார் கோகுலானந்தா', கல்கி பகுதி 1' மற்றும் 'மஹாவ தார் கல்கி பகுதி 2' ஆகிய படங்களை  2027, 2030, 2033, 2035, 2037 ஆண்டுகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Aug 14, 2025

ஒரே தியேட்டரில் ரஜினியின் முதல் படம், 50வது ஆண்டு படம் ரிலீஸ்.

முதல் படமும் 50வது ஆண்டு படமும் ஒரே தியேட்டரில் ரிலீஸ் ஆவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.1975, ஆகஸ்ட் 15ல் ரஜினியின் முதல் பட மான அபூர்வ ராகங்கள்' சென்னையில், மிட்லேண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ண வேணி ஆகிய தியேட்டர்களில் வெளியானது. இதில் கிருஷ்ண வேணி தவிர மற்ற தியேட்டர் களை மூடிவிட்டனர். தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் தற்போது திரை யுலகில் ரஜினியின் 50வது ஆண்டு திரைப்படமான 'கூலி' ஆகஸ்ட் 14ல் ரிலீஸ்.

Aug 14, 2025

2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள 'ரெட் பிளவர்' கதை.

நடிகர் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள ,ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் படம் 'ரெட் பிளவர்'. இதன்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்னேஷ், "ரெட் பிளவர் படத்தின் கிரா பிக்ஸ் காட்சிகளுக்கே அதிக செலவானது. இந்த படம் ரூ.8 கோடி பட்ஜெட்டை தாண்டியது" என்றார். 2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அந்த காலகட்டத்தில் வரும் பிரச்னையை ரெட் பிளவர் என்ற ஆர்மி எப்படி தடுக்கிறது என்ற ரீதியில் உருவாகியுள்ளதாம். அப்போதைய பிரதமராக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்

Aug 07, 2025

'பரம் சுந்தரி “ரிலீஸ் தேதி அறிவிப்பு.

துஷார் ஜலோட்டா இயக்கி , நடிகை ஜான்வி கபூர் ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக 'பரம் சுந்தரி என்ற படத்தில் நடித்துள்ளார். வட மாநில பையனுக்கும், தென் மாநில பொண்ணுக்கும் உண்டான காதல், திருமணம், அதில் வரும் பிரச்னைகளை கலகலப்பாக இந்தப டம் பேசுகிறது. ஆக. 29ல் படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.

Aug 07, 2025

விக்னேஷ் ராஜா இயக்கத்தில்'தனுஷ் 54' படப்பிடிப்பு தொடங்கியது.

'தனுஷ் 54'  54வது படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பழைய எஸ்டிடி பூத் ஒன்றில் தனுஷ் நின்று பேசுவது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டு இந்த படம் துவங்கியதாக அறிவித்துள்ளனர். தனுஷ் இயக்கி நடித்து, உள்ள 'இட்லி கடை படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடக்கின் றன..

Aug 07, 2025

கிங்டம்' தெலுங்குப் படம் முதல் நாளில் 39 கோடி வசூலித்தது.

விஜய் தேவரகொண்டா, பாக் யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கவுதம் தின்னனுாரி இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் 'கிங் டம்'. ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. அண்ணன், தம்பி சென்ட்டிமென்ட், அதிரடி ஆக்ஷன் கலந்து வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Aug 07, 2025

ஜி.வி.பிரகாசுக்கு தேசிய விருது .

 'சூரரை போற்று' படத்துக்காக தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகா சுக்கு, மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது .71-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் 'பார்க்கிங்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தது. 'வாத்தி’படத்தில் இசையமைத்த ஜி.வி.பிரகாசுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது. அவர் கூறும்போது, "ஜி.வி.பிரகாசுக்கு 2-வது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்திருப்பதால்  முன்னாள் மனைவி சைந்தவி  வாழ்த்தி பாராட்டி விருதுக்காக அவரை தேர்வு செய்த தேர்வுக்குழுவினர், வாத்தி படத்தில் அவரை இடம்பெற செய்த படக்குழுவினர், படத்தில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்திட்ட தனுசுக்கும் என் நன்றிகள்”, என்றார்.ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், இசை நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வருகிறார்கள் .இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிகராகவும் பயணிக்கிறார். இவர் நடித்துள்ள 'பிளாக்மெயில்' படம் ரிலீஸாவதாக இருந்தது. நிதி பிரச்னையால் கடைசிநேரத் தில் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல்இவர் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த அடங்காதே படம் ஆக., 27ல் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் இப்பட தயா ரிப்பாளர் சரவணன் சிறையில் உள்ளதால் தள்ளிப் போகிறதாம்.

Aug 07, 2025

புதுமையை விரும்பும்  நாகார்ஜுனா

ஆகஸ்ட் 14 ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படம் ரிலீஸ்  ஆகிறது. ஆக., 2ல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாடல் வெளியீட்டு விழா. படத்தின் டிரைலரும் வெளியானது. அனிருத் இசையமைத்து, நாகார்ஜுனா, அமீர் கான், சவுபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதில் வில்லனாக நடித்த நாகர்ஜூனா, ஐதராபாத்தில் பேசும்போது “எனக்கு புதுமை பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய விரும்புவேன். லோகேஷ் உடன் பணி செய்ய ஆசைப்பட்டேன். கூலி கதையை கேட்டதும் பிடித்து விட்டது. ரஜினி இந்த கதையை  ஏற்றாரா என  கேட்டேன். ஏனென் றால் இதில் நான் நடித்த 'சைமன்' கதாபாத்திரம் தான் ஹீரோவை போல இருக்கும். ஹீரோவையும், வில்லனையும் லோகேஷ் சமமாக சித்தரிக்கிறார். படங்களில் எப்போதும் நல்லவர்களாக நடிப்பது நல்லதல்ல" என்றார்.

Aug 07, 2025

ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா.

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர தம்பதியர் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது குடும்பத்தாருடன் வசிக்க மும்பை, பாந்த்ரா மேற்குப் பகுதியில் 250 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லம் ஒன்றை கட்டி உள்ளனர். 6 மாடி கொண்ட இந்த வீட்டின் பணிகள் முடிந்துவிட்டதால் விரைவில் அங்கு குடியேற உள்ளனர். 

Aug 07, 2025

தெலுங்கு திரைப் பட தொழிலாளர் கூட்டமைப்பு  30 சதவீதம் ஊதிய உயர்வு கோரி ஸ்டிரைக்

30 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப் பட தொழிலாளர் கூட்டமைப்பு ஸ்டிரைக்கில் ஈடுபட் டுள்ள நிலையில். படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை, எந்த திரைப்பட தொழிலாளர் சங்கத்திலும் உறுப் பினர் அல்லாதவர்களை, தங்கள் படங்களின் படப்பிடிப்புக்கு பயன்படுத்துவோம். தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் சினிமா தொழில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

1 2 ... 38 39 40 41 42 43 44 ... 85 86

AD's



More News