கீர்த்தி சுரேஷ் நெட்பிலிக்ஸ் தளத்திற்காக எடுக்கப்பட்ட வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.அக்கா என அந்த சீரிஸுக்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் கீர்த்தி மாஸ் ஆன லுக்கில் நடித்து இருக்கிறார்.அதன் டீசர் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார் .
பிரமாண்ட சரித் திர புராண படம் 'கண் ணப்பா'சிவ பக்தர் கண்ண வாழ்க்கையை தழுவி தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் ருத்ராவாக பிரபாஸ் . விஷ்ணு மஞ்சு நடிக்க, முகேஷ் குமார் சிங் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் காஜல் அகர்வால், மோகன்பாபு ஆகியோர் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன் லால், அக்ஷய் குமார் நடித்து வருகின்றனர். இவர்களுடன் 'ருத்ரா' எனும் வேடத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இவரின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஏப்., 25ல் பன்மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
தமிழகம் வந்துள்ள ரஷ்ய நடன கலைஞர்கள் சென்னையில் ,இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தனர். பின்னர் அவர் இசையமைத்த மீரா படத்தில் வரும்” ஓ பட்டர்பிளை. சொல்ல துடிக்குது மனசு' படத்தில் வரும் “பூவே செம்பூவே.”. இளையராஜா. பாடல்களுக்கு தங்களது நேர்த்தியான ரஷ்யர்கள் நடனத்தால் கவர்ந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்து, "ரஷ்ய நடன கலைஞர்களுக்கு நன்றி. அவர்களின் நடனம் நளினமாக, உணர்வுப்பூர்வமாக, இதயத்தை தொடும் விதமாக வசீகரிக்க கூடியதாக இருந்தது" என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
'விருமாண்டி' படம் மூலம் கமல் இயக்கி, நடித்து பிரபலமானவர் அபிராமி, இவர்அளித்தபேட்டியில் 'விருமாண்டியில் நடித்தசமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் படிக்க அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் கல்லுாரியில் சேர விரும்பினேன். அதற்கு இங்கிருந்து பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந் தால் நன்றாக இருக்கும் என நினைத்து. கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு சிபாரிசு கடிதம் தந்தார். கமலிடமும் கடிதம் கேட்ட.தற்கு அவர் சினிமாவை விட்டு நீ போகக்கூடாது, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு எனக் கூறி மறுத்தார். விருமாண்டி படம் முடிந்த பின் அந்த கல்லுாரியில் அட்மிஷன் கிடைத்து படிக்க சென்றுவிட்டேன்" என்றார்.
ரஜினி நடித்த “ஜெயிலர்” படம் நெல்சன் இயக்கத்தில் ரூ. 650 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. தற்போது லோகேஷ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்கும் ரஜினி, அடுத்ததாக 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறார். இப்ப டம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் நிலையில் ரஜினியின் முந்தைய படங்களை விட அதிக நாடுகளில் படத்தை வெளியிடும் நோக்கில் ஆங்கில மொழியிலும் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.
ஜவான் படத்தை ஹிந்தியில், இயக்கி வெற்றி பெற்ற. அட்லி, அதன் பின் தமிழில், விஜய் நடிப்பில் இயக்கிய, தெறி படத்தை ஹிந்தியில், பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்த,. படம் தோல்வி அடைந்து விட்டது.அடுத்து, ஹிந்தி நடிகர், சாகித் கபூரை நாயகனாக வைத்து ஒர் ஹிந்தி படத்தை தயாரிக்கப் போகிறார். அட்லி.
லோகேஷ் கனகராஜ், கமல், விஜய் மற்றும் கார்த்தி நடிப்பில் இயக்கிய படங்கள் தற்போது, ரஜினி நடிப்பில், கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், அடுத்தபடியாக, அஜித் நடிப்பிலும் படம் இயக்க,அஜித்துக்கு ஏற்ற கதையைஉருவாக்கிவருவதாககூறும், லோகேஷ்கனகராஜ்,கைதி 2' படத்தைஇயக்கிமுடித்ததும், அடுத்து, அஜித்தை சந்தித்து கதை சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்.
இயக்குனர் ஷங்கர். கேம் சேஞ்சர் படம் திரைக்கு வந்ததை அடுத்து, 'வேள்பாரி' என்ற நாவலை மையமாக வைத்து, பாகுபலி போன்று, பிரமாண்ட படம் இயக்க தயாராகி வருகிறார். சரித்திர பின்னணி கொண்ட இந்த படம், 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அதையடுத்து, ஹாலிவுட் தரத்தில், 'சயின்ஸ் பிக் ஷன்' படத்தையும் இயக்கப் போகிறார். 'மல்டி ஹீரோ கதையில் உருவாகும் அந்த படம், 'ஸ்பை திரில்லர்' கதையில் உருவாகிறது.
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'வீரதீர சூரன்' பகுதி 2. ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.. இப் போது மார்ச்27ல் இப்படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
பிரபாஸ், அமிதாப் பச்சன். கமல், தீபிகா படுகோனே நடிப் பில் கடந்தாண்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியாகி ரூ.1200 கோடி வசூலித்த படம் 'கல்கி 2898 ஏடி'. இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை நாக் அஷ்வின் துவங்கி உள்ளார். இந்நிலையில் ஜூனில் இரண்டாம் பாக படப்பிடிப்பு துவங்கும் என தயாரிப்பாளர் அஷ்வினி தத் தெரிவித்துள்ளார்.