25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

Feb 26, 2025

  தன்னுடைய கேரவனை வாடகைக்கு விட்ட கமலஹாசன்.

தன்னுடைய கேரவனை பிரதமர் மற்றும் முதல்வருக்கு வாடகைக்கு விட்ட நடிகர் கமல்.7 ஸ்டார் ஹோட்டல் போல காட்சியளிக்க கூடிய இந்த கேரவனில், நான்கு பக்கமும் ஏசி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஏசிகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், அதனை மாற்றுவதற்காக ஸ்பேர் ஏசிகள் உள்ளது.இந்த கேரவனில் 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டிருப்பதாகவும் 2 மேக்கப் ரூம்கள் உள்ளது.யாராவது வந்தால் அவர்களுடன் கலந்து பேசுவதற்கு தனியாக மீட்டிங் ஹால் என பல்வேறு வசதிகள் இந்த கேரவனில் உள்ளது.

Feb 26, 2025

 'சங்கராந்திகி வஸ்துனம்' 2ம் பாகம் 2027ல்…..

தெலுங்கில் இந்த பொங்கலுக்கு அனில் ரவிபுடி இயக்கத்தில், வெங்கடேஷ் நடிப்பில் வெளியான படம் 'சங்கராந் திகி வஸ்துனம். ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி நாயகிகளாக நடித்திருந்த இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து பேசிய வெங்கடேஷ், "மீண்டும் சங்கராந்திகி வஸ்துனம் படத்தில் நிகழ்ந்ததை போன்ற அதே மேஜிக்கை, இதன் இரண்டாம் பாகத்தில் நிகழ்த்துவேன்.. வரும் 2027 சங்கராந்தி பண்டிகையில் (ஜன.14) வெளியாகும்" என்றார்.

Feb 26, 2025

பழைய பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்- மீண்டும் 'மதராஸி'-

 சிவ கார்த்திகேயன் தனது 23வது படத்தில் , ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்  நடித்து வந்தார். நாயகியாக ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கின்றனர். பெயர் வைக்காமலே படப்பிடிப்பு பாதிக்கு மேல் வளர்ந்த நிலையில் ஹிந்தியில் சல்மான் நடிக் கும் சிக்கந்தர் பட வாய்ப்பு வந்ததால் இப்படம் நின்றுள்ளது. தற்போது இந்த படத்திற்கு 'மதராஸி' என பெயரிட்டுள்ளனர். 2006ல் அர்ஜுன் நடிப்பில் இதேபெயரில் ஒரு படம் வந்தது. இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் "எதிர் நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன்" ஆகிய படங்கள் பழைய பட தலைப்பில் வந்துள்ளது. இதுதவிர பழைய பட தலைப்பில் சுதா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

Feb 26, 2025

பாட்டிக்காக சாய் பல்லவியின் தேசிய விருது ஆசை

சாய் பல்லவி அளித்த பேட்டியில் எனது திருமணத்தின் போது நான் அணிந்து கொள்ள ஒரு புடவையை எனது பாட்டி பரிசளித்தார். திருமணம் எப்போது நடக்கும் என தெரியாது.சாய் பல்லவி கடைசியாக நடித்த இரு படங்களான அமரன், தண்டேல் வெற்றி பெற்றுள்ளது. அமரன் படத் திற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கலாம் என்கிறார்கள்.. திருமணம் எப்போது நடக்கும் என தெரியாது. அதேசமயம் தேசிய விருது போன்று உயரிய விருது விழாவில் அந்த புட வையை அணிந்து கொள்வது சரியாக இருக்கும். அதற்காகவே எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்கிறார்

Feb 26, 2025

யோகி பாபு  கார் விபத்தில் சிக்கியது. . அதில்  அவர் பயணிக்கவில்லை. தவறான செய்தி பரவுகிறது.

 காமெடி நடிகரான யோகிபாபு, அவர் நடித்து வரும் ஒரு படத்தின் படப் பிடிப்புக்கு செல்கையில் அவரது கார் விபத்துக் குள்ளாகி, அவரும்,உதவியாளரும் காயமடைந்ததாக செய்தி பரவியது. இதனை மறுத்த யோகி பாபு, "எனக்கு விபத்து ஏற்படவில்லை, நலமாக இருக்கிறேன். படப்பிடிப்புக்கு வந்த கார் விபத்தில் சிக்கியது. அதில் நாங்கள் பயணிக்கவில்லை. தவறான செய்தி பரவுகிறது.என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி" என்றார்.

Feb 26, 2025

நிறைவடைந்த'பைசன் காள மாடன்' படப்பிடிப்பு .

நடிகர் விக்ரம் மகன் துருவ்வை வைத்து 'வாழை' படத்திற்கு பின் 'பைசன் காள மாடன்' என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகி றார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள னர். கபடி வீரர் கதைகளத் தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. துருவ் வெளியிட்ட பதிவில் ''பல மாத படப் பிடிப்பு, ரத்தம், வியர்வை,கண்ணீர் கடந்து இறுதியாக பைசன் படப் பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

Feb 26, 2025

தடம் கதை 2 மணிநேர 18 நிமிடப் படம் உங்களை உங்கள் இருக்கையின் நுனியில் வைத்திருக்கும், 8.1 IMDb மதிப்பீட்டைப் பெற்றுள்ளது

படத்தின் சஸ்பென்ஸ் கடைசி வரை நீடிக்கிறது. இந்த நடிகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்..வெளியிடப்பட்டது: ஜனவரி29, 20252:10PMISTஷான் தாஸ் மூலம்எடிட் செய்தவர் ஷான் தாஸ்நீங்கள் க்ரைம் த்ரில்லர் படங்களின் ரசிகராக இருந்தால், இன்றைய வாட் டு வாட்ச் தொடரில் உள்ள இந்தத் திரைப்படம் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இந்த தென்னிந்தியத் திரைப்படம் உங்கள் மனதை மிகவும் கவர்ந்திழுக்கும் அனைத்து கூறுகளையும் கொண்டுள்ளது, கொலையாளியைப் பிடிக்க முயற்சிப்பதில் ஈர்க்கக்கூடிய மதிப்பீடுகளையும் பெற்றுள்ளது. சிறந்த தென்னிந்திய க்ரைம் திரில்லர்இந்த2 மணி நேரம்18 நிமிட தமிழ் க்ரைம் த்ரில்லர் அதன் கதையில் உங்களை மிகவும் சிக்க வைக்கும், நீங்கள் விடுபடுவது கடினமாக இருக்கும். சதி ஒரு கொலை மற்றும் இரண்டு சந்தேக நபர்களை சுற்றி சுழல்கிறது, ஆனால் உண்மையானகுற்றவாளியார்என்பதைக்கண்டுபிடிப்பதுகாவல்துறையினரிடமிருந்து நிறைய முயற்சிகளை எடுக்கிறது. இறுதியில் அதிர்ச்சியூட்டும் திருப்பம் உங்கள் மனதை உலுக்கும்.ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகளான கவின் மற்றும் எழில் ஆகிய இருவரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது. எழில் சற்றே எளிமையானவர், அதே சமயம் கவின் குறைந்த கல்வியறிவு பெற்றிருந்தாலும், புத்திசாலிகள் கூட அவர் முன் தோல்வியடையும் அளவுக்கு சட்டத்தின் ஆழமான அறிவைப் பெற்றிருக்கிறார்.ஒரு கொலை மற்றும் இரண்டு ஒத்த இரட்டையர்கள்ஒரு நாள், ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலையாளி யார் என்பது தெளிவாகத்தெரியவில்லை. குற்றம் நடந்த இடத்தில் இருந்து ஒரு புகைப்படம் இரண்டு ஒத்த இரட்டையர்களின் முகங்களைக் காட்டுகிறது. கொலையை யார் செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் உறுதியாக உள்ளனர்.படத்தின் இறுதி வரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது ஐஎம்டிபியில் 8.1 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. 2019 இல் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தைYouTube இல் இலவசமாகப் பார்க்கலாம், மேலும் இது OTT இயங்குதளமான Prime Videoவிலும் கிடைக்கிறது.

Feb 19, 2025

 ஆலம்பனா' மார்ச் 7ல் ரிலீஸ்.

  பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நடித்து 2023லேயே ரிலீஸாக வேண்டிய படம் 'ஆலம்பனா'  தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இப்படம் இப்போது மார்ச் 7ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளாக கிடப்பில் கடந்த மதகஜராஜா படம் பொங்கலுக்கு ரிலீஸாகி வெற்றி பெற்றது. இதை யடுத்து கிடப்பில் கிடக்கும் பல படங்கள் ரிலீஸிற்கு தயாராகின்றன.

Feb 19, 2025

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாக, அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் நடித்துள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் பிப்., 21ல் வெளியாகிறது . ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் வெளியானது. காதல், காதல் தோல்வி, நண்பர்களுடனான லூட்டி என டிரைலர் கலர்புல்லாக இருக்கிறது. டிலைரின் துவக்கத்தில் வரும் தனுஷ், 'இது வழக்கமான கதை தான்' என்று கூறுபவர் முடிவில் 'ஜாலியா வாங்க, ஜாலியா  போங்க' என பேசி உள்ளார். 6 மணிநேரத்திலே 11லட்சம்  பார்வைகளை இந்த டிரைலர் கடந்தது.

Feb 19, 2025

ராஷ்மிகா நடிப்பில் வெளி வந்த ஹிந்திப் படம்  'சாவா'

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அசத்தி வருகிறார். கடந்தாண்டு இவர் நடித்து வெளியான அனிமல் ரூ.900 கோடி, புஷ்பா 2 ரூ.1800 கோடி வசூலை கடந்தன. இவர் நடிப்பில் வெளி வந்த ஹிந்திப் படமான 'சாவா' வெளியான மூன்று நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து அசத்தி உள்ளது. இந்த வெற்றியுடன் சேர்த்து ராஷ்மிகா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார்.

1 2 ... 48 49 50 51 52 53 54 ... 79 80

AD's



More News