சூர்யா நடிப்பில் உருவாக இருந்த படம் ' புறநானுாறு'. சில காரணங்களால் அவர் விலக சிவகார்த்திகேயன் தற்போது அதில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் ஜெயம் ரவி,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பி டிப்பு நடக்கிறது. புறநானுாறு பட தலைப்பை சூர்யா நிறுவனம் தராததால் வேறு தலைப்பை தேடி வந்தனர். இப்போது 'பராசக்தி'என பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஒரு அறி விப்பு வீடியோவை உருவாக்கி உள்ளனர். அதற்காக சென்சார் சான்று பெற்ற போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.
திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக,. 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி இவர் முதன்முறையாக கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். நிஹாரிகா நவீன் நடிக்க, இளையராஜா இசைய மைத்துள்ளார். 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை இந்த குறும்படம் வென்றுள்ளது.
இன்றைய விவசாயி சந்திக்கும் பிரச்னைகளை சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக இப்படம் உரு வாகியுள்ளது" . விதார்த் நடிப்பில் வி.கஜேந்திரன் இயக்கியுள்ள படம் 'மருதம்'. ரக்ஷனா நாயகியாக நடித்துள்ளார். "இது விவசாயியின் வாழ்வியலை நிலத்தின் அவசியத்தை அழுத்தமாக பேசும் படைப்பு என்றார் கஜேந்திரன் .விவசாயம் ஆதி குடியின் முதல் தொழில். நிலத்திற்கும், மண்ணுக்கும், விவசாயிக்கும் இடை யிலான உறவு தான், மற்ற உறவுகளை விடவும் முதன்மையானது.
2025ல் முதல் வெள்ளிக்கிழமையான ஜன.3ல் ஏழு படங்கள் வெளிவந்தன. பொங்கலை முன்னிட்டு நான்கு வெவ்வேறு நாட்களில் 7 படங்கள் வெளிவந்தன. ஜன.24ல் 'பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், மிஸ்டர் ஹவுஷ்கீப்பிங், பூர்வீகம், வல்லான்' ஆகிய 6 படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியரான பா.விஜய் இயக்கி உள்ள படம் 'அகத் தியா'. ஜீவா,அர்ஜுன், ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. இப்போது இத்திரைப்படம் 2025, ஜனவரி 31ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
அபிஷேக் நமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிக் கும் படம் 'நாகபந்தம்'. தெலுங்கில் உருவாகி பான் இந் தியா படமாக வெளியாகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, புரி ஜகநாதர் கோயில்களில் மறைந்துள்ள பொக்கிஷங்கள், 108 விஷ்ணு கோயில்களை சுற்றியுள்ள மர்மங்கள், இந்த புனித தலங்களை காக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாக வைத்து ரூ.100 கோடியில் இப்படம் உருவாகிறது.
மும்பையின் முக்கிய இடங்களில் பாலிவுட்டின் சீனியர் ஹீரோ வான அமிதாப் பச்சனுக்கு சில வீடுகள் உள் ளன. அவற்றில் மும்பையின் ஓஷிவரா பகுதி யில் அமைந்துள்ள 'டூப்ளக்ஸ் அபார்ட்மென்ட்' ஒன்றை 83 கோடிக்கு விற்றுவிட்டார். 2021ல் ரூ.31 கோடிக்கு வாங்கிய அந்த இடம் இப்போது இவ்வளவு விலைக்கு விற்பனையாகி உள்ளது. இடம் 5795 சதுர அடி பில்ட் அப் ஏரியாவை கொண்ட, விசாலாமான மாடி மற்றும் ஆறு கார் பார்க்கிங் கொண்டது.
சுந்தர் சி இயக்கத்தில் ,தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் , ஏஆர் ரஹ்மான் இசையில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்க 2017ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறி விக்கப்பட்ட சரித்திரப் படம் 'சங்கமித்ரா'. நிதி பிரச்னை யால் 7 ஆண்டுகளாகியும் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது ஆண்டு அடுத்தாண்டு கொண்டாட. 'சங்கமித்ரா' படத்தை மீண்டும் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு,அதற்கான பணிகள் நடக்கின்றன.
மலையாளத்தில் மம்முட்டியை வைத்துஇயக்குனர் கவுதம் மேனன் தற்போது ' இயக்கிய 'டொமினிக்' படம் இந்த வாரம் வெளியாகிறது. கவுதம் மேனன் கூறுகையில், "தமிழில் அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெற்றி மாறன் கதையில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இதில் நாயகனாக ரவி மோகன் நடிக்கபடத்தின் ஆரம்பகட்ட பணி கள் நடக்கின்றன.
பொங்கலுக்கு குடும்பத்தோடு பார்த்து ரசிக்க கூடிய படம் தான் “மதகஜராஜா”.ஒரு படம் இரண்டு மூன்று வருடங்கள் தாமதம் ஆனாலே நிச்சயம் தோல்விதான் என முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் 12 வருடங்கள் கழித்து வெளிவந்தும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானத்தின் ஆர்ப்பாட்டத்தில் வெளிவந்த படம்.ஊரில்கேபிள்டிவிஆபரேட்டராகஇருக்கும்விஷால்ஒருதிருமணத்திற்குசெல்கிறார்.அங்குபழையநண்பர்கள்அனைவரும்ஒன்றுசேர்கின்றனர்.அவர்களில் சந்தானம் மனைவியுடன் பிரச்சனையில் இருக்கிறார்.இப்படி ஆளாளுக்கு ஒரு பிரச்சனையில் இருக்க அதை விஷால் தலையிட்டு எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை.இதில் வரலட்சுமி, அஞ்சலி, கேமியா ரோலில் வரும் ஆர்யா என கலகலப்பாக கதையை நகர்த்தி சென்றுள்ளார்.ஆனால் அந்த சந்தேகமே வேண்டாம் என்பது போல் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதிலும் ஆரம்பத்தில் இருந்து சந்தானத்தின் கவுண்டர் காமெடி படத்திற்கு பெரும் பலம்.சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு நேற்று திரைக்கு வந்த படம். விஷால் ''சமீபத்தில் 'மதகஜராஜா'. கூறுகையில், எனக்கு காய்ச்சல் சாதாரணமான தான் இருந்தது. இப்போது குணமாகி விட்டேன். கையெல்லாம் நடுங்கியது. இப்போது அந்த மாதிரி எந்தவொரு நடுக்கமும் இல்லை. மைக் சரியாக தான் பிடித்துள்ளேன். எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.சாகும் வரை உங்கள் அன்பை மறக்க மாட்டேன்" என்றார்.அந்த அளவுக்கு விஷாலுடன்,சந்தானம் காமெடி கூட்டணி ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது. சுந்தர் சி படம் என்றாலே நட்சத்திரங்களுக்கு பஞ்சம் இருக்காது.
துபாயில் நடைபெற்ற 246எச்' கார் ரேஸில் நடிகர் அஜித்தின் அணி, போர்ஷ்சே 991 கப் கார் (எண் 901) பந்தயத்தில் 3வது இடம் பிடித்தது. அத்துடன், ஜிடி4 பிரிவில் 'ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' எனும் விருதையும் வென்றது. கார் ரேஸில் பங்கேற்பதற்காக துபாய் சென் றுள்ள நடிகர் அஜித் அளித்த பேட்டி: நான் 2002, 2003, 2004 ஆண்டுகளில் கார் ரேஸில் பங்கேற் றிருக்கிறேன். ஆனால் 2004 தொடரில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. 2010ல் யூரோப்பியன் பார்முலா ரேஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால், இடையில் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்லாமல் உரிமையாளராகவும் வந்துள்ளேன். நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.துபாய் கார் ரேஸில் '24ளர்' சீரிஸில் அஜித் அவரது அணியினர் 3 வது இடத்தைப் பிடித்து சாதித்தனர். துபாயில் ஊட கம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித் "எனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். அதிக பயணத்தை விரும்புவேன். இவையெல்லாம் என்னை ஊக்குவிக்கும், புத்துணர்ச்சி யாக்கும். என் பிள்ளைகளை யும் கற்றல் உடன் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளக் கூறுவேன். வெற்றியைவிட தோல்வியே கற்றுக் கொடுக் கும்.அஜித் வெளியிட்ட வீடியோவில், "ரேஸை பார்க்க நிறைய ரசிகர்கள் நேரில் வந்திருந்தனர், எமோஷனலாக இருந்தது. நன்றாகப் படியுங்கள். கடுமையாக உழைத்து வேலை பாருங்கள். மன உறுதி, அர்ப்பணிப்பை எப்போதும் விட்டுத்தராதீர்கள். ப்ளீஸ், 'ச சண்டை போடாதீர்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் குடும்பத்தைப் பாருங்கள்" என ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கை அழகாகும். என் ரசிகர்களே படத்தை பாருங்கள். 'அஜித் வாழ்க, விஜய் வாழ்க' எனக் கூறுகிறீர் கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள். உங்கள்அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் வாழ்க்கையை கவ னியுங்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி" என்றார். இதனி டையே தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை என நெகிழ்ச்சி உடன் அறிக்கை வெளியிட்டார் அஜித், அதோடு, இந்த அன் பும் ஊக்கமும்தான் எனக்கு உந்து சக்தி. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்க கடமைப்பட்டுள் ளேன்" என தெரிவித்துள்ளார்.