25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

May 03, 2023

பொன்னியின் செல்வன்-2 நடிகர்கள் சம்பளம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்2. முன்னணி நடிகர்கள் இப்படம் நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வருகிறது.இப்படத்தில் இவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நட்சத்திரங்களிலேயே விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவிக்கு மட்டுமே10 கோடிக்கு மேல் சம்பளமாக கொடுத்துள்ளனர்.ஐஸ்வர்யா ராய்10 கோடி, விக்ரம்12 கோடி, ஜெயம்ரவி8 கோடி, திரிஷா-5 கோடி, கார்த்தி5.5 கோடி, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு போன்ற நட்சத்திரங்களுக்கு சுமார் 1.5 கோடி, சோபிதா, ஜெயராமுக்கு 1 கோடியும் சம்பளமாக கொடுத்து ,கோடியால் குளிப்பாட்டிய மணிரத்னம் 

Apr 26, 2023

நயன்தாராவின் சொத்து மதிப்பு

 மக்கள் மத்தியில் பிரபலமான தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ,ஜோடியாக நடித்தவர், நடிகை  நயன்தாரா . இவர் 2005 -ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான "ஐயா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.நயன்தாரா. தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் .ஜவான் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.சமீபத்தில் நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் இவருக்கு ரூபாய் 200 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Apr 26, 2023

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ( APR 28TH)

பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் லைகா நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது.   இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 அட்வான்ஸ் புக்கிங்கில் எதிர்பார்த்ததை விடவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு. அதன்படி, நள்ளிரவு 1 மணி, அல்லது அதிகாலை 3, 4, 5 மணிக்கெல்லாம் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்புக் காட்சி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் விபத்தில் உயிரிழந்தார். இதேபோல் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என சொல்லப்படுகிறது , டிக்கெட் கட்டணங்கள் அதிகமாக வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூலிக்கும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. 

Apr 19, 2023

உதவிகளை செய்து வரும் SUPER STAR ரஜினி

படையப்பா படத்தில் ரஜினியிடம்‘ஏனுங்க இந்த பாம்பு பொத்தில் கைவிட்டீங்களே கடிச்சிராத்துங்களா’ என்று அடிக்கடி கேட்டு அனுமோகன்,அந்த வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் அனுமோகன். மகளுக்கு திருமணநேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்த அனுமோகன் யாரிடமாவது கடன் கேட்கலாமா? என்று நினைத்தாராம். உடனே அவர் நினைவுக்கு வந்தது ரஜினிதானாம்.ரஜினியிடம் நாம் ஏன் கடன் கேட்க வேண்டும்? உதவியாகவே கேட்கலாம் என்று நினைத்து பத்திரிக்கையும் கூடவே ஒரு கடிதத்தையும் வைத்து ரஜினியிடம் கொடுத்து விட்டு வந்தாராம்.ரஜினி அவரது மேனேஜரிடம் அனுமோகன் என்ன எதிர்பார்த்தாரோ அதைவிட பத்து மடங்கு தொகையை அவரிடம் கொடுத்து அனுமோகனிடம் கொடுக்க சொன்னாராம்.இந்த செயலால் அனுமோகன் மிகவும்கண்கலங்கிமெய்சிலிர்த்து போனாராம். பொன்னம்பலம், போண்டாமணி, பிதாமகன் தயாரிப்பாளர் போன்ற பலருக்கு ரஜினி உதவிகளை செய்தும் வருகிறார் .தமிழ் சினிமாவில் அனைவரும் கொண்டாடும் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கோடான கோடி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். பலருக்கு ரஜினி உதவிகளை செய்தும் வருகிறார். 

Apr 19, 2023

'பொன்னியின் செல்வன்' இரண்டாவது பாகம்  ஏப்ரல்28ம் தேதி வெளியாகிறது

கல்கி எழுதிய'பொன்னியின் செல்வன்' நாவலைஇயக்குனர் மணிரத்னம்,வெற்றிகரமாக ,அந்த நாவலை இரண்டு பாகப் படங்களாக எடுத்து முடித்தார்.கடந்த எழுபது வருடங்களாகப் பலரும் திரைப்படமாக்க முயற்சித்து, முடியாமல் போனது.முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இரண்டாவது பாகம் அடுத்த வாரம் ஏப்ரல்28ம் தேதி வெளியாகிறது. அதை அதை முன்னிட்டு நேற்று மணிரத்னம், விக்ரம்,ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா துலிபலா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது மணிரத்னம் பல கேள்விகளுக்குபதில் சொன்னார்.“பொன்னியின் செல்வன்” படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய சரித்திரப் படங்கள் வரும் என நினைக்கிறேன். உங்களை மாதிரியே நானும் அம்மாதிரியான படங்களைப் பார்க்க விரும்புகிறேன். ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்படறதுக்குக் காரணம் படத்தோட கதை. பிரம்மாண்டம்  பண்ணணும்னுபடம் எடுக்க மாட்டேன். அடுத்த சரித்திரப் படங்கள், நிறைய இயக்குனர்கள் இருக்காங்க, அவங்ககிட்ட இருந்து வரணும். நான் இது மட்டும் பண்ணிட்டிருந்தேன்னா தேங்கிப் போயிடுவேன்.கல்கி எழுதின கதையை வச்சி எடுக்கப்பட்ட படம். இதுல எதுக்கு தேவையற்றமதத்தை எடுத்து வந்து நுழைக்கறீங்க. இந்தப் படத்துல நடிச்ச பலர் கிட்ட இருந்து, ஒரு கதாபாத்திரத்துக்கு எப்படி லைப் கொடுக்கணும்? கத்துக்கிட்டேன்.டைரக்டர் வேலை ஈஸி, நடிகர்கள் கிட்ட இது, அதுன்னு ஏதாவது சொல்லலாம். ஆனால், ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டியது இவங்கதான். ஒரு சரித்திரப் படம், படிச்சது மட்டும்தான், கற்பனை உலகம்.  அங்க ஒரு இளவரசன் இருந்தால், உடல்மொழி மூலமா, நடிப்பு மூலமா அந்தக் கதாபாத்திரங்களை இவங்க உயிரோட கொண்டு வந்தாங்க. “ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கர் போனது ரொம்ப பெருமையான விஷயம். போயிட்டு ஒரு அவார்டு வாங்கியதும் பெருமை. இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது, ஆஸ்கருக்கு எடுத்துட்டு போகணும்கற நோக்கத்தோட நாங்க ஆரம்பிக்கல. உங்ககிட்ட.. கொண்டு வரணும். கல்கியோட இந்த நாவலை 70 வருஷமா அதிகமா விற்கப்பட்ட புக்கா இருந்திருக்கு. சினிமாவா சரியா. கொண்டு வரணும்கறதுதான் நோக்கம். அதைத்தாண்டி நடந்தா மகிழ்ச்சிதான். இரண்டாவது பாகம் பார்த்துட்டு நீங்க வந்து பாராட்டு சொன்னீங்கன்னா, ரொம்ப சந்தோஷப்படுவேன்,” என பதிலளித்தார் மணிரத்னம்.இரண்டாவது பாகம் அடுத்த வாரம் ஏப்ரல்28ம் தேதி வெளியாகிறது .ரசிகர்கள் ஒவ்வொருத்தரும்  ஆவலுடன் எதிர்ப்பார்த்து க்கொண்டிருக்கின்றனர்.

Apr 17, 2023

கொட்டும் மழையில் குடை பிடித்தபடி  ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கிய  விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர்

நயன்தாரா நடிக்கும்75வது படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது அவருடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை நீல் கிருஷ்ணா இயக்குகிறார் தமன் இசை அமைக்கிறார் சில தினங்களுக்கு முன்பு தங்களது குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்ட விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர் சாலை ஓரத்தில் உள்ள மக்களுக்கு உணவளித்து உள்ளனர் இருவரும் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி இருக்கிறார்கள் அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இப்படி கொட்டும் மழையில் அவர்கள் ஏழைகளுக்கு உணவளிப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.  

Apr 12, 2023

ஆண்டவன் மேல் பாரத்தை போட்ட சூரி இப்போது பல மடங்கு சம்பாதித்து வருகிறார்.

சூரி சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சூரி ஆலமரமாய் தற்போது வளர்ந்து நிற்கிறார்.மதுரையில் சொந்தமாக ஹோட்டல், சென்னையில் தனக்கு தேவையான அளவு சொத்து என, பல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கதாநாயகனாக நடித்து, சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்திற்கு ,ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அவருடைய நடிப்புக்கு, சூப்பர் ஸ்டார் முதல் பல பிரபலங்கள், பாராட்டுகளை கூறிவருகிறார்கள். விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி உள்ளது.கடைசியாக ஆண்டவன் மேல் பாரத்தை போட்ட சூரி இப்போது பல மடங்கு சம்பாதித்து வருகிறார். பார்க்கும் இடமெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறாராம். நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்து,ஒரு கதவை மூடினால் கண்டிப்பாக இன்னொரு கதவு திறக்கும் என்பது போல அவமானப்பட்டாலும் தன்னுடைய கடின உழைப்பால் சூரி முன்னேறி உள்ளார்.

Mar 31, 2023

விடுதலை திரைப்படம்

விடுதலை திரைப்படம்  உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் ,இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள. இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  விடுதலை முதல் பாதி- காவியத் திரைப்படத் தரத்தை மீண்டும் வெற்றிமாறன் வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் விபத்தின் பின்விளைவுகளை உள்ளடக்கிய முதல் பதினைந்து நிமிடங்கள் இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று! பிரம்மாண்டம் என்பது பளபளக்கும் செட் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மட்டுமல்ல, திரையில் பாதிக்கப்பட்டவர்களின் ஆழமான உணர்ச்சிகள், கஷ்டங்கள், கொடூரமான வன்முறை மற்றும் வலி ஆகியவற்றை நம்பவைத்து வெளிப்படுத்தும் விதம் உண்மையிலேயே விதிவிலக்கானது! அரசியல் ரீதியாக அவர் எப்போதும் சமநிலையானவர்! அதை விரும்புகிறேன்.. என சூப்பர் ஈமோஜியை குறிப்பிட்டுள்ளார்.விடுதலை முதல் பாதி ரயில் விபத்துக்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை உலகத்தரம் வாய்ந்தது. சூரி மனிதாபிமான காவலர் சிறந்தவர். காவல்துறை, அரசு அமைப்பு மற்றும் அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மீண்டும் பாராட்டுக்கள், அவரது கேமரா கோணங்களும் பிரேம்களும் சூப்பர் என பாராட்டியுள்ளார். விடுதலை படம் விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருவது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சூரி செம்ம பொருத்தம்.. அவரது அப்பாவித்தனம் மிகவும் இயல்பாக இருந்தது. நேர்மையான காவலராக பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் என குறிப்பிட்டுள்ளார். . இதுவரை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும் இது கதையின் நாயகர்களின் காலம்என்றும் மனதையும் காதையும் இம்சிக்காத தேனாய் பின்னணி இசை! என்றும் விடுதலை படத்தை குறிப்பிட்டுள்ளார்.விடுதலை முதல் பாதி என ஒரு ஸ்டார் பதிவிட்டுள்ளார். மேலும் வெற்றிமாறன் ஒருபோதும் இம்ப்ரஸ் செய்ய தவறுவதில்லை. பவானி ஸ்ரீ மற்றும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். லொகேஷன் மற்றும் உருவாக்கம் டாப். அறிமுகம் ஒரே ஷாட்.மெதுவான விவரிப்பு ஆனால் முற்றிலும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. விஜய் சேதுபதிக்கான பில்ட்அப்ஸ் சூப்பர்.இரண்டாம் பாதியில், கதை இப்போது தொடங்குகிறது சூப்பர் என குறிப்பிட்டுள்ளார்.

Mar 28, 2023

,ஈழத்தமிழர்களின் நலனுக்காக திவ்யா சத்யராஜ்

இந்தியஅளவில்பிரபலமானநடிகர்களில்ஒருவர்சத்யராஜ்.இவருக்குசிபிராஜ்,திவ்யாசத்யராஜ்எனஇருபிள்ளைகள்உள்ளனர்.இந்நிலையில்,நடிகர்சத்யராஜ்தனதுமகள்குறித்துபெருமிதமாகபேசியுள்ளார்.அவர்கூறியதாவதுபசுமைப்பள்ளி,பசுமைசமுதாயம்திட்டத்தில்,ஈழத்தமிழர்களின் நலனுக்காக  ஈழத்து செல்வா பேத்தியுடன் என் மகள்  திவ்யா சத்யராஜ் இணைந்துசெயல்படுவார் என்று கூறியுள்ளார். 

Mar 23, 2023

95-வது ஆஸ்கர் விருதினை வென்ற சிறந்த ஆவணக் குறும் படம்."THE ELEPHANT WHISPERERS" .

தாயை இழந்த இரண்டு யானைக்கன்றுகளைப் பெற்றோரைப்போலப் பராமரித்து வளர்த்த தென்னிந்தியாவின் முதல் தம்பதியைப் பற்றிய உண்மைச் சம்பவம்தான், இயக்குநர் கார்த்திகி கான்சால்வஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள "The Elephant Whisperers' ஆவணப்படம். இந்தப் படம் இன்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும் படத்துக்கான விருதினை வென்றிருக்கிறது. காட்டின்பேரழகைப்படம்பிடிக்கும்ட்ரோன்காட்சிகள்,நம்கண்களைஅங்குமிங்கும்சுழலவிடாமல்கட்டிப்போட்டுவிடுகின்றன.பொம்மன் செல்லமாக அழைத்ததும் ரகு தனது குடிசையிலிருந்து வந்து குளிப்பது, அவரோடு ஃபுட்பால் விளையாடுவது, மற்றொரு யானை புல் சாப்பிடுவதைப் பார்த்து அப்படியே தானும் சாப்பிடுவது, ஸ்ட்ரா போட்டு ஜூஸ் குடிப்பது என ரகுவின் குறும்புகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். பெற்ற பிள்ளையைப்போல் வளர்த்துவிட்டு ரகுவை முகாமில் விடவேண்டும் என்ற சூழல் வரும்போது, இதயத்தைக் கனக்கவைத்துவிடுகிறது அந்த காட்சி, அதுவும், ரகு பிரியும்போது அம்முக்குட்டியின் கதறல்... ரகு திரும்ப ஓடிவருவது எல்லாமே. சகோதரத்துவ சென்டிமெண்ட காட்டின் பேரழகையும் மலையில் தேன் எடுக்கும் காட்சியையும் அப்படியே டெம்பிடித்திருக்கிறார்கள்தென்னிந்தியாவிலேயே, தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளை வளர்க்கும் தம்பதி என்ற பெருமையை அடைந்த பொம்மன் - பெல்லியின் பாசம் நிறைந்த வாழ்வியல், விலங்குகள் மீதான நேசிப்பை அதிகப்படுத்துகிறது.

1 2 ... 71 72 73 74 75 76 77 78 79 80

AD's



More News