டில்லியில், 'கோ கோ' உலக கோப்பை முதல் சீசன் அடுத்த ஆண்டு ஜன. 13-19ல் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான லோகோ நேற்று டில்லியில் அறிமுகமானது. டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அகில் ஷியோரன்.வெண்கலம் வென்றார் ..
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் இன்று நேபாளத்தில் துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 7 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி முதலில் லீக் முறையில் நடக்கின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு அக்டோபர் 27-ம் தேதி முன்னேறும். இதில் வெல்லும் அணிகள் அக்டோபர் 30-ல் நடக்கவுள்ள பைனலில் பலப்பரிட்சை நடத்தும்.இந்திய அணி "A" பிரிவில் பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்கதேசம் என வலுவான அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இன்று தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.இந்திய அணி கேப்டன் ஆஷாலதா தேவி 31 மணிப்பூரின் இம்பாலை சேர்ந்தவர் தனது 15 வயதில், இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட அணியில் முதன் முறையாக தேர்வானார் .கடந்த 2011-ல் வங்கதேசத்திற்கு எதிராக அறிமுகம் ஆனார். இன்று தனது 100வது சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார். இந்திய பெண்கள் கால்பந்தில் இம் மைல் கல்லை எட்டும் முதல் வீராங்கனை என்ற பெருமை பெறவுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் ஐ.சி.சி “ஹால் ஆப் பேம்” பட்டியலில் சேர்க்கப்படுவர், ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பின் தான் இப்பட்டியலில் இடம் பெற பரிந்துரைக்கப்படுவர் இந்திய பெண்கள் அணி தேர்வுக்குழு தலைவராக உள்ள நீத்து டேவிட், "ஹால் ஆப் பேம்" பட்டியலில் சேர்க்கப்பட்ட 2-வது இந்திய வீராங்கனை .
இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஐந்து முறை ,உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சக வீரர் பிரஞ்ஞானந்தா மோதினர். கடைசியாக 2018-ல் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் இருவரும் மோதினார். தவிர ஆனந்த் பயிற்சியில் வளர்ந்த பிரஞ்ஞானந்தா, தற்போது 6 ஆண்டுக்குப் பின், மீண்டும் அவருடன் மோதியதால் எதிர்பார்ப்பு எகிறியது.காலிறுதியில் முதல் இரு போட்டியும் டிரா ஆக, ஸ்கோர் 1.0 1.0 என சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி டைபிரேக்கருக்கு சென்றது. இதில் ஆனந்த், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்தே பிரக்ஞானந்தா ஆதிக்கம் செலுத்தினார்.22-வது நகர்த்தலில் ஆனந்த் தவறு செய்தார். இதைச் சரியாக பயன்படுத்திய பிரஞ்ஞானந்தா, 26 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 2-0 1-0 என வென்று ,அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் டில்லியில் உலக கோப்பை துப்பாக்கி சூடுதல் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியா சார்பில் சோனம் உத்தம் மஸ்கர் களமிறங்கினார். தகுதிச்சுற்றில் 632.1 புள்ளி எடுத்த இவர், பைனலுக்கு முன்னேறினார். இதில் 252.9 புள்ளி எடுத்த சோனம், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்..
இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா உட்பட இந்தியாவின் 5 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். நேற்று காலிறுதி போட்டி நடந்தன. இந்தியாவின் ஆனந்த் - பிரக்ஞானந்தாவை சந்தித்தார். இதன் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஆனந்த், 30-வது நகர்த்தல் வரை ஆதிக்கம் செலுத்தி முன்னேறினார். பின் சிறப்பாக செயல்பட்ட பிரஞ்ஞானந்தா 52வது நகர்த்தலில் டிரா செய்தார்.
ஹாக்கி இந்திய லீக் (எச்.ஐ.எல்.) தொடரில் ,ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் (எச்.ஐ.). தொடரில் கடந்த 2017 க்குப் பின், மீன்டும் இத்தொடர் வரும் 2024 டிசம்பர் 28 முதல் 1 பிப்ரவரி 2025 வரை நடக்கவுள்ளது. ஆண்கள் 8 பெண்கள் 4 என மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் டில்லியில் நடந்தது. ஹர்மன்பிரீத் சிங், அதிகபட்சமாக (ரூ.78 லட்சம்)-த்துக்கும், சூர்மா ஹாக்கி கிளப் அணி பஞ்சாப் வாங்கியது. தமிழகத்தின் செல்வம் கார்த்தி ரூ.24 லட்சம்)-த்துக்கும், தமிழக டிராகன்ஸ் அணியில் இணைந்தார். பெண்களுக்கான ஏலம் நடந்தது. 350 பேர் இடம் பெற்றுள்ளனர். 4 அணி சார்பில் 86 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் உதித்தா துஹான், அதிகபட்சம் (ரூ.32 லட்சம்)- த்துக்கும், ஏலம் போனார். இவரை பெங்கால் டைகர்ஸ் அணி வாங்கியது. அடுத்து நெதர்லாந்தின் இப்பி ஜான்சென், (ரூ.29 லட்சம்)-த்துக்கும், ஒடிசா வாரியர்ஸ் அணியில் இணைந்தார். தவிர இந்திய வீராங்கனைகள் லால்ரெம்சியாமி (ரூ.25 லட்சம், பெங்கால்) சுனேலிதா (ரூ.24 லட்சம். டில்லி) சங்கீதா குமாரி (ரூ.22 லட்சம், டில்லி) கோல் கீப்பர் சவிதா புனியா (ரூ.20 லட்சம், டில்லி சூர்மா) சலிமா (ரூ.20 லட்சம், சூர்மா) தீபிகா (ரூ.20 லட்சம், டில்லி) நவ்னீத் கவுர் (ரூ.19 லட்சம், டில்லி) இஷிகா சவுத்ரி (ரூ.16 லட்சம், ஒடிசா) அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.
டென்மார்க் ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சிந்து, லக்சயாசென், மாளவிகா, ஆகர்ஷி காஷ்யப், காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சாதிப்பரா சிந்து, லக்சயா.
ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் சுமித் நாகல், 83வது இடத்தில் இருந்து 78வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் இத்தாலியின் சின்னர் நீடிக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஓமன் தலைநகர் மஸ்கட்டில், அக்டோபர் 18- முதல் 27 வரை வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 6-வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியா 'A' அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக திலக் வர்மா (வயது 21) நியமிக்கப்பட்டார்.. துணை கேப்டனாக அபிஷேக் சர்மா அறிவிக்கப்பட்டார்.