சீனாவில் ஹாங்சு ஒபன் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த், ஜோடி, ஜெர்மனியின் கான்ஸ்டன்டின் ஹென்ரிக், ஜெபன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்தது. இரண்டாவது செட் டை பிரேக்கர் வரை சென்றது. இதை இந்திய ஜோடி 7-6 என வசப்படுத்தியது. 1 hour 51 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், இந்திய ஜோடி 4-6, 7-6, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
அக்டோபர் 1-5 ல் லக்னோவில் நடக்க உள்ள இந்திய கிரிக்கெட் போட்டு சார்பில் ஈரானி கோப்பை முதல் தர போட்டி நடத்தப்படுகிறது.ரஞ்சி கோப்பை சாம்பியன் மும்பையுடன் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி மோத உள்ளது. ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார். அபிமன்யு ஈஸ்வரன் துணைக்கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்தியா வரவுள்ள ஜெர்மனி ஹாக்கி அணி, இரு போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. டில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் இப்போட்டி வரும் அக்டோபர் 23, 24ல் நடக்கவுள்ளது. கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா, ஜெர்மணி அணிகள் அரையிறுதியில் மோதின. இதில் இந்திய அணி 2-3 என தோற்றது. பின் ஸ்பெயினை வென்று இந்தியா வெண்கலம் கைப்பற்றியது.உலகின் மிக வலிமையான அணிகளுக்கு இடையிலான போட்டியை காண ரசிகர்களுக்கு வாய்ப்பாக அமையும்.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45 வது சீசன் ஹங்கேரியில் நடந்தது. மொத்தம் 197 அணிகள் களமிறங்கின. ஒபன் பிரிவில் இந்தியா சார்பில் குகேஷ் அர்ஜீன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பங்கேற்றனர்.செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன்முறையாக 11 சுற்றில் 10 வெற்றி 1 டிரா என 21 புள்ளி எடுத்த இந்தியா முதலிடம் பிடித்து, இந்தியா சாம்பியன் ஆனது. 10 போட்டியில் 9 புள்ளி எடுத்த குகேஷ் ( 8 வெற்றி 2 டிரா ) 11-ல் 10 புள்ளி எடுத்த அர்ஜீன் ( 9 வெற்றி 2 டிரா ) என இருவரும் தனிநபர் பிரிவுகளில் தங்கம் வென்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் ஹரிகா, திவ்யா, வைஷாலி, வந்திகா, தானியா பங்கேற்றனர். 11 சுற்றில் 19 புள்ளி ( 9 வெற்றி 1 டிரா 1 தோல்வி ) எடுத்து முதன்முறையாக தங்கம் வென்று சாதித்தது. தனிநபர் பிரிவில் திவ்யா ( 11-ல் 8 வெற்றி 3 டிரா ) வந்திகா ( 9-ல் 6 வெற்றி 3 டிரா ) தங்கம் கைப்பற்றினர்.உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை கோப்பை வென்றவர் இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 54 இளம் இந்திய செஸ் நட்சத்திரங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவர் குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியில் இந்திய செஸ் வளர்ச்சியின் தந்தை என பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2024 2025 புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 71.67 வெற்றி சதவீதம் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியா 62.50 % நியுசிலாந்து 50.00% அணிகள் உள்ளன. வங்கதேச அணி 39.239% 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.ஒரே மைதானத்தில் (சென்னை சேப்பாக்கம் )இரு முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சதம் அடித்த உலகின் முதல் வீரர் என சாதனை படைத்தார் அஷ்வின். இங்கு வங்கதேசம். ( 6 விக்கெட் 113 ரன் 2024.) இங்கிலாந்துக்கு எதிராக (5 விக்கெட் 106 ரன் 2021) சாதித்தார்.அஷ்வின் ஒரே டெஸ்டில் சதம் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்துவது நான்காவது முறை.( வெஸ்ட் இன்டிஸ்க்கு எதிராக 2 இங்கிலாந்து, வங்கத்துடன் தலா ஒரு முறை), இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் போத்தம்( 5 முறை) உள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அஷ்வின். (11 முறை 36 போட்டி )இவர் ஆஸ்திரேலியாவின் லியானை (10 முறை 43 )போட்டி முந்தினார்.சென்னை போட்டியில் தனது 92 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இந்தியா முதல் முறையாக அதிக வெற்றியை பதிவு செய்தது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், செஸ் ஒலிம்பியாட் 45வது சீசன் நடந்தது. பத்து சுற்றுகளின் முடிவில் 19 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் நீடித்தது. நேற்று நடந்த 11-வது கடைசி சுற்றில் இந்தியா கலோவேனியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் அர்ஜீன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜராத்தி, பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்றனர்.முதல் போட்டியில் அர்ஜீன் கலோவேனியாவின் ஜான் கபெல்ஜ் மோதினர். அர்ஜீன் 49வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்த போட்டியில் குகேஷ் கலோவேனியாவின் விளாடிமி பெடோசீவ் மோதினர். குகேஷ் 48வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்தியாவின் தங்கப்பதக்கம் உறுதியானது.இந்திய அணிக்கு தமிழகத்தின் பிரக்ஞானந்தா வெற்றி தேடித் தந்தார். விதித் சந்தோஷ், தனது ஆட்டத்தை டிரா செய்தார். முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 11 சுற்றுகளின் முடிவில் 21 புள்ளிகளுடன் (10 வெற்றி ஒரு டிரா) முதலிடத்தை கைப்பற்றிய இந்தியா, முன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது.பெண்கள் பிரிவு 10வது சுற்றில் இந்திய அணி 2.5-1.5 என சீனாவை வென்றது. பத்து சுற்றின் முடிவில் இந்திய அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தை கஜகஸ்தாதுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. 11வது சுற்றில் இந்தியா அஜர்பைஜான் மோதின. இதில் இந்திய அணி 3.5 0.5 என வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவில் 11 சுற்றுகளின் முடிவில் 19 புள்ளிகளுடன் (9 வெற்றி ஒரு டிரா ஒரு தோல்வி) முதலிடத்தை கைப்பற்றிய இந்தியா முதன்முறையாக தங்கம் வென்று சாதித்தது.
ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிற ஓப்ன் பிரிவு எட்டாவது சற்றில் இந்திய இணி ஈரானுடன் மோதியது. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜீன் பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி களமிறங்கினர்.முதலில் பிரக்ஞானந்தா, ஈரானின் அமின் மோதிய போட்டி டிரா ஆனது. அதுத்து அர்ஜீன் பாதியாவை வீழ்த்த குகேஷ், தன் பங்கிற்கு பர்ஹாமை சாய்த்தார். மற்றொரு இந்திய வீரர் வித் குஜ்ராத்தி இடானியை வென்றார். முடிவில் இந்திய அணி 3,0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் தொடர்ந்து 8வது வெற்றி பெற்ற இந்திய அணி 16 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது.இந்திய பெண்கள் அணி 8வது சுற்றில் போலந்தை எதிர் கொண்டது. இந்தியாவின் வைஷாலி, தனது போட்டியில் தோல்வியடைய, மற்றொரு போட்டியில் திவ்யா, வெற்றி பெற்றார், இத்தொடரில் இந்திய பெண் அணி 1.5-2-5 என இத்தொடரில் பெண்கள் அணி தோல்வியடைந்தது. இருப்பினும் 14 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது.
கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என சாதனை படைத்தார். போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ வயது 39 இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் யூடியூப், என பல்வேறு சமூகவலை தளங்களில் இவரை பின் பற்றுபவர்கள் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இவரை கவுரவிக்க முடிவு செய்த போர்ச்சுகல் அரசு 7 யூரோ மதிப்புள்ள நாணயம் வெளியிட உள்ளது. ரொனால்டோ தலையுடன் அவரது ஜெர்சி எண்ணை குறிக்கும் வகையில் சி.ஆர்.7 என இதில்பொறிக்கப் பட்டிருக்கும்.பொதுவாக அரசு தலைவர்கள், அரசு குடும்ப உறப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நாணய கவுரவும் தற்போது ரொனால்டோவுக்கு கிடைக்க உள்ளது.
ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 48வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு ஏழாவது அணி, வலிமையான சீனாவை எதிர்கொண்டது. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, ஹரி கிருஷ்ணா களமிறங்கினர். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் இல்லாமல் களமிறங்கியது சீனா .முதலில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். தொடர்ந்து ஹரிகிருஷ்ணா மோதிய போட்டியும் டிரா ஆக, ஸ்கோர் 1.5-1.5 என சம நிலையில் இருந்தது. குகேஷ் வெற்றி பெற்றதை அடுத்து, இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவை வீழ்த் தியது. 14 புள்ளியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய பெண்கள் அணி ஏழாவது சுற்றில், ஜார்ஜியாவை சந்தித்தது. முதலில் திவ்யா, ஹரிகா தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். வைஷாலி, வந்திதா இருவரும் வெற்றி பெற்றனர்.
பிஜிங்கில் காமன்வெல்த் யூத் ஜீனியர் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன் ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான யூத் 49 கிலோ பிரிவில் இந்தியாவின் பாபுலால் ஹெம்புரோம், காமன்வெல்த் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.பெண்களுக்கான யூத் 55 கிலோ மினா சான்டா தேசிய சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான யூத் 73 கிலோ பிரிவில் இந்தியாவின் பேதபாரத் பதலி தேசிய சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். மற்ற பிரிவுகளில் இந்தியாவின் ஜோஷ்னா சபர், அகன்ஷா, அஷ்மிதா, பார்கவி, மஹாராஜன், கிஷோர், மாதவன் போலோ யாலம் ஆகியோர் தங்கம் வென்றனர். இதுவரை இத்தொடரில் இந்தியாவுக்கு 11 தங்கம் 3 வெள்ளி கிடைத்துள்ளது.