தென் கொரியாவில் ‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறினர்.காலிறுதியில் இந்திய வீராங்கனைகள் தான்வி சர்மா மற்றும் ரக்ஷிதா ஸ்ரீ மோதினர். முதல் செட்டை தான்வி சர்மா 21-18 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை ரக்ஷிதா ஸ்ரீ 21-19 என வென்றார்.வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் ரக்ஷிதா ஸ்ரீ 21-18 என வெற்றி பெற்றார். ஒரு மணி நேரம் 1 நிமிடம் நீடித்த போட்டியில் 18-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ரக்ஷிதா ஸ்ரீ அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ஜப்பானின் ஹினா அகேச்சியை எதிர்கொண்டார். இதில் அஷ்மிதா சாலிஹா 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பிலிப்பைன்சில் ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அரிஹா வீராங்கனை பங்கேற்றார்.முதலில் நடைபெற்ற ‘ஆர்டிஸ்டிக்’ பிரிவில் அரிஹா 8.650 புள்ளிகளும், அடுத்து நடைபெற்ற ‘எக்ஸிகியூஷன்’ பிரிவில் 7.600 புள்ளிகளும் பெற்றார். ‘டிஃபிகல்ட்டி’ பிரிவில் 2.850 புள்ளிகள் பெற்றார்.ஒட்டுமொத்தமாக 19.100 புள்ளிகள் பெற்ற அரிஹா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் அரிஹா படைத்தார்.
அமெரிக்காவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 21-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 147 அணிகளைச் சேர்ந்த சுமார் 1,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இந்தியா சார்பில் 23 வீரர்கள், 13 வீராங்கனைகள் என 36 பேர் களமிறங்கியுள்ளனர்.ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் 5-வது பிரிவில் களமிறங்கிய முகமது ஆஷ்பக் 45.81 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 4-வது இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மேலும், 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அவர் பதிவு செய்த 45.81 வினாடிகள் புதிய தேசிய சாதனையாக அமைந்தது.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் பசந்த் அதிகபட்சமாக 2.14 மீட்டர் உயரம் தாண்டினார். ஒட்டுமொத்தமாக 11-வது இடம் பிடித்த அவர், 13 பேர் பங்கேற்கும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அமனத் கம்போஜ் 53.24 மீட்டர் தூரம் எறிந்தார். இது அவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. எனினும், அவருக்கு 6-வது இடமே கிடைத்தது.
மும்பையில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் சுராஜ் குமார் சந்த் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப்போட்டியில் ஹங்கேரியின் பெனடிக் டகக்ஸ் வீரரை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் கைப்பற்றிய சுராஜ், உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.ஈட்டி எறிதலில் ஆஷிஷ் மற்றும் தரணிதரன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.பெண்கள் வட்டு எறிதலில் அமனத் கம்போஜ் 52.58 மீட்டர் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் மொகாலி வெங்கட்ராம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.உவின் ஆனந்த் தனது பிரிவில் 7-வது இடம் பிடித்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.இந்தியாவுக்கு ஈட்டி எறிதல், வட்டு எறிதல் மற்றும் 800 மீட்டர் ஓட்டப் பிரிவுகளில் பதக்க நம்பிக்கை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் கோவை அணி, சேலம் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 194/8 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சேலம் அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜோதி யாராஜி, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து இந்திய தடகளத்தின் முன்னணி வீராங்கனையாக உயர்ந்துள்ளார். தந்தை தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், தாய் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகவும் பணியாற்றிய நிலையில், கடின உழைப்பால் தடகளத்தில் தனக்கென இடம்பிடித்தார்.2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2023 உலக பல்கலைக்கழக போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி, 12.78 வினாடிகளில் தேசிய சாதனையும் படைத்தார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.2025-ல் ஏற்பட்ட முழங்கால் காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓராண்டு ஓய்வில் இருந்த ஜோதி, 2026 தேசிய சீனியர் தடகளப் போட்டியில் 12.99 வினாடிகளில் தங்கம் வென்று வலுவான மீள்பிரவேசம் செய்தார். இதன் மூலம் ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் சார்பில் நடைபெறும் சர்வதேச ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.முதலில் நடைபெற்ற ரேபிட் பிரிவின் கடைசி மூன்று சுற்றுகள் நேற்று நடைபெற்றன. 9-வது சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரீஸ்டை கருப்பு காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, 28 நகர்வுகளில் தோல்வியடைந்தார்.இருப்பினும், 9 சுற்றுகள் முடிவில் 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரேபிட் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார்.
தென் கொரியாவில் நடைபெற்று வரும் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்தனர்.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் தான்வி சர்மா, சீனாவின் ஆன் கி யுவானை 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், ஹாங்காங்கின் சின் யான் ஹேப்பி லோவை 16-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.மேலும் இந்தியாவின் ஸ்ரீயான்ஷியும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியில் சேப்பாக்கம் மற்றும் நெல்லை அணிகள் மோதின.டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.205 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 17.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.மற்றொரு லீக் போட்டியில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதலில் விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மதுரை அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து, கடைசி கட்டத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.