25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Aug 06, 2026

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சிந்துவுக்கு எளிதான முதல் சுற்று.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்ட உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்திய அணியில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து (2016 – வெள்ளி, 2021 – வெண்கலம்), லக்ஷ்யா சென், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி, தனிஷா கிராஸ்டோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.நேற்று போட்டிக்கான டிரா வெளியிடப்பட்டது. அதன்படி, பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் சிந்து, அயர்லாந்தின் சோபியா நோபிளை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டியில் சிந்து எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்றில் சீனாவின் வாங் ஜி யியையும், காலிறுதியில் இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தானியையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.இந்தியாவின் மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா, முதல் சுற்றில் மியான்மரின் தெட் ஹ்தார் துஜாரை எதிர்கொள்கிறார்.

Aug 05, 2026

உலக சாம்பியன்ஷிப் தரவரிசை: பி.வி. சிந்து 9வது இடம்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்ட உலக தரவரிசையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.ஜூலை 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின் அடிப்படையில் போட்டிக்கான சீடிங் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒலிம்பிக்கில் வெள்ளி (2016) மற்றும் வெண்கலப் பதக்கம் (2021) வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 9வது சீட் பெற்றுள்ளார்.

Aug 05, 2026

செயின்ட் லூயிஸ் செஸ்: முன்னிலை தொடரும் பிரக்ஞானந்தா.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் நடத்தும் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வகித்து வருகிறார்.இந்த தொடரில் இந்தியாவிலிருந்து பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது 'ரேபிட்' சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 4, 5, 6வது சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.5வது சுற்றில் அமெரிக்காவின் அவாண்டர் லியாங்-ஐ கருப்பு காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, வெறும் 32 நகர்த்தல்களில் வெற்றியை பதிவு செய்தார்.

Aug 05, 2026

இலங்கையை சென்றடைந்த இந்திய டெஸ்ட் அணி.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை சென்றடைந்துள்ளது.சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலேவில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்புவில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 7 முதல் 9 வரை கொழும்புவில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் நடைபெறும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை உள்ளூர் அணியை எதிர்கொள்கிறது.

Aug 05, 2026

உலக கோப்பை ஹாக்கி: 51 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் கனவை நோக்கும் இந்தியா.

உலக கோப்பை ஹாக்கியில் வரலாறு படைக்கும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 51 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவுடன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை சுமந்தபடி போட்டியில் பங்கேற்கிறது.பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் ஆகஸ்ட் 14 முதல் 30 வரை 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு) நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து லீக் சுற்றில் மோதுகின்றன.'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆம்ஸ்டல்வீனில் உள்ள வாகனர் மைதானத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டு தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்குகிறது.உலகக் கோப்பை கனவுடன் இந்திய பெண்கள் அணி.இந்திய பெண்கள் ஹாக்கி அணி, கேப்டன் சலிமா டேடே தலைமையில் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் நோக்குடன் களமிறங்குகிறது. 1974-ஆம் ஆண்டு பெற்ற 4வது இடமே இதுவரை இந்திய பெண்கள் அணியின் சிறந்த சாதனையாக உள்ளது.தொடருக்கு முன்பாக பேசிய கேப்டன் சலிமா டேடே, "உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி, நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே எங்களின் இலக்கு," என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Aug 04, 2026

காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கொடி... 2030 போட்டிக்கு பிரமாண்ட வரவேற்பு.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்த உள்ள இந்தியாவிடம் காமன்வெல்த் கொடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தது. குறிப்பாக குத்துச்சண்டையில் 7 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. 2030-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியை முன்னிறுத்தும் வகையில் இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் 'உலகம் ஒரே குடும்பம்' என்ற இந்திய தத்துவத்தை பிரதிபலிக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.'வந்தே மாதரம்' பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான மனுஷி சில்லர் தலைமையில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாடினர். இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தனது மகன்கள் சித்தார்த், ஷிவத்துடன் இணைந்து பாடியதோடு, குஜராத் பாடகி பூமி திரிவேதியும் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

Aug 04, 2026

உலக ஜூனியர் தடகளம்: இந்திய அணியில் 10 தமிழக வீரர்-வீராங்கனைகள்.

அமெரிக்காவின் யுஜின் நகரில் ஆகஸ்ட் 5 முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 36 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர்-வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்:இவின் ஆனந்த் – 800 மீட்டர் ஓட்டம்ஜிதின் அர்ஜூனன் – நீளம் தாண்டுதல்நீல் சாம் ராஜ் – 400 மீட்டர் தொடர் ஓட்டம்ரஞ்சித் குமார் – 400 மீட்டர் தொடர் ஓட்டம்நகுல் பிரபு – 400 மீட்டர் தொடர் ஓட்டம்தரணிதரன் – ஈட்டி எறிதல்அம்ப்ரிஷ் – உயரம் தாண்டுதல்ராய் ஷன் – டிரிபிள் ஜம்ப்பவானா – 400 மீட்டர் தொடர் ஓட்டம்தியா – 400 மீட்டர் தொடர் ஓட்டம்இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றிருப்பது மாநில தடகளத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வெல்வார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Aug 04, 2026

8 அணிகள் மோதும் டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்.

தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உயர்மட்ட போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதிகபட்சமாக 4 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகளும் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.இந்நிலையில், 8 அணிகள் பங்கேற்கும் 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நத்தத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. லீக் சுற்று, 'பிளே-ஆஃப்' மற்றும் இறுதிப்போட்டி என விறுவிறுப்பாக நடைபெறவுள்ள இந்த தொடரில் தமிழகத்தின் முன்னணி வீரர்களுடன், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களும் தங்களது திறமையை நிரூபிக்க களமிறங்குகின்றனர்.டி.என்.பி.என்.எல். தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) அணிகளில் இடம்பிடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. மேலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு இந்திய அணிக்கான கதவும் திறக்க வாய்ப்புள்ளதால், இந்த தொடருக்கு ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் வரவேற்பும் நிலவி வருகிறது.

Aug 03, 2026

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் அசத்தல்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்றன. இந்த தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 39 பதக்கங்களை வென்றனர்.இந்தியாவின் பதக்கப் பட்டியல்:🥇 தங்கம் – 13🥈 வெள்ளி – 17🥉 வெண்கலம் – 9மொத்தம் 39 பதக்கங்களுடன் இந்தியா தனது திறமையை மீண்டும் நிரூபித்தது.பாரா போட்டியிலும் இந்தியாவின் சாதனை.மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பிரிவிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர்.கடந்த ஆறு காமன்வெல்த் சீசன்களில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்கள் மட்டுமே வென்றிருந்த நிலையில், இந்த முறை அதே எண்ணிக்கையை ஒரே தொடரில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.அடுத்த காமன்வெல்த் போட்டி இந்தியாவில்..காமன்வெல்த் விளையாட்டின் அடுத்த சீசன் 2030ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. கிளாஸ்கோவில் நடைபெற்ற நிறைவு விழாவில், இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். அதனைத் தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு கொடி அதிகாரப்பூர்வமாக ஆமதாபாத் நகருக்கு ஒப்படைக்கப்பட்டது.

Aug 03, 2026

வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.

.காமன்வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்பியபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முதல் கட்டமாக பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, லவ்ப்ரீத் சிங், ராஜா முத்துப்பாண்டி உள்ளிட்டோர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மலர்மாலைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: முதல் 4 இடங்கள்.2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா வெறும் 24 மணி நேரத்தில் 8 தங்கம் உட்பட 16 பதக்கங்களை குவித்து அசத்தியது. இதன் மூலம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 11-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு மின்னல் வேகத்தில் முன்னேறி Top 4-ல் நிறைவு செய்தது.காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் பிரியா கங்காஸ் (60 கிலோ), அருந்ததி சௌத்ரி (70 கிலோ), சாக்ஷி சௌத்ரி (51 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தல்!குத்துச்சண்டை போட்டிகளில் மட்டும் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருவது, நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கும் இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 171 172

AD's



More News