25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Sep 09, 2024

பாராலிம்பிக்கில் 29 பதக்கம் வென்று 18ம் இடம் பிடித்துஇந்தியா சாதனை

தடகளம் -தங்கம் 4, வெள்ளி 6, வெண்கலம் 7 பாட்மின்டன் - தங்கம் 1 வெள்ளி 2, வெண்கலம் 2 துப்பாக்கி சுடுதல் - தங்கம் 1, வெள்ளி 1, வெண்கலம் 2 வில்வித்தை - தங்கம் 1, வெள்ளி 0, வெண்கலம் 1 ஜீடோ - தங்கம் 0, வெள்ளி 0, வெண்கலம் 1ஆக மொத்தம் 29 பதக்கங்களை இந்திய விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர்.

Sep 09, 2024

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் சீனாவை வீழ்த்தியது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணி ,அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14-வது நிமிடத்தில் ஜீக்ராஜ் துல்லியமாக பந்தை பாஸ் செய்தார். இதை கச்சிதமாக பெற்ற சுக்ஜீத் சிங் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க சீன வீரர்கள் முயற்சித்தனர். ஆனால் இந்தியாவின் புதிய  கோல் கீப்பர் கிருஷ்ணன் பதக் அலர்ட் ஆக இருந்தார் எதிரணியின் வாய்ப்புகளை துடிப்பாக தடுத்தார். இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

Sep 07, 2024

பாரா ஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான பதக்கங்கள்

உயரம் தாண்டுதலில் பிரவீன்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.]பாராஒலிம்பிக்கில் ஆண்களுக்கான் உயரம் தாண்டுதலில் 164 பிரிவில் இறுதி சுற்றில் 6 வீரார்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் நொய்டாவைச் சேர்ந்த பிரவீன்குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த பிரவீன்குமார். இந்த முறை அதை தங்கமாக மாற்றி அசத்தியிருக்கிறார்.பாராஒலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்..     

Sep 07, 2024

கால்பந்து அரங்கில் 900 கோல் ரொனால்டோ சாதனை

ஐரோப்பிய கால்பந்து அணிகள் மோதும் நேஷன்ஸ் லீக்தொடர் நடக்கிறது. போர்ச்சுக்கலின்லிஸ்பன் நகரில் குருப் 1 போட்டி நடந்தது. இதில் போர்ச்சுக்கல் குரோஷிய அணிகள் மோதின 7வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் தியாகோ தலாட் ஒரு கோல் அடித்தார். 34வது நிமிடத்தில் மெண்டெஸ் துல்லியமாக கொடுத்த பந்தை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோலாக மாற்றினார். இது போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 131 வது கோல், இத்துடன் கிளப் அரங்கில் 739 என சேர்த்து ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் 900 கோல் அடித்த முதல் வீரர் ஆனார். 

Sep 07, 2024

டைமண்ட் லீக் தொடரின் பைனலில் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளதின் 15-வது சீசன் தற்போது நட க்கிறது. 2024-ல் உலகின் 14 இடங்களில் போட்டி நடந்தன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட டாப் 6 நட்சத்திரங்கள் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடக்கவுள்ள டைமண்ட் லீக் பைனலில் செப்டம் பர் 13-14 பங்கேற்க தகுதி பெற்றனர்.இதற்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். 2024 சீசனில் தோகா, லாசேன் என இரு டைமண்ட் லீக் தடகளத்தில் மட்டும் இவர் பங்கேற்றிருந்தார். இந்த இரு போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா மொத்தம் 14 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.

Sep 06, 2024

பாராலிம்பிக் கிளப் த்ரோ போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் தரம்பிர்.

இடுப்புக்கு கீழ் பகுதி பாதிக்கப்பட்டு, கால் கைகளில் அதிக பலம் இல்லாதவர்கள் உட்கார்ந்த நிலையில் போட்டியில் பங்கேற்பவர் மரத்தினால் ஆன சுமார் 35 முதல் 39 செண்டி மீட்டர் நீளம் 6 செண்டி மீட்டர் அகலம் கொண்ட நீண்ட உருளை வடிவ கிளப்பை எறிவர்.இந்தப் போட்டியில் தரம்பிர்.34.92 மீட்டர் தூரம் எறிந்து முதல் தங்கம் வென்றார். இரண்டாவது பரிசாக பிரனவ் 34.59 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

Sep 05, 2024

ஹாட்ரிக் பதக்கம் - வரலாறு படைத்தார் மாரியப்பன் தங்கவேலு

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. 1.85 மீட்டர் உயரம் தாண்டி அசத்தல். சேலம் மாவட்டத்தில் பெரியவடகம்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர். 2016ல் தங்கம், 2020ல் வெள்ளி, 2024ல் வெண்கலம் என பாராலிம்பிக்ஸில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

Sep 04, 2024

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அண்டில்

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதலில் 70.59 மீட்டர் தூரம் எறிந்து சாதனையை தகர்த்து தங்கம் வென்றார், சுமித் அன்டில் ஹரியானாவை சேர்ந்தவர்.பெண்களுக்கான பாட்மின்டன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நித்யஸ்ரீ சிவன். 21-14, 21-6, என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என ஆக மொத்தம் இந்தியா 15 பதக்கங்கள் வென்றுள்ளது.

Sep 03, 2024

பாராலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் கைப்பற்றினார் நிதேஷ் குமார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி - நடக்கிறது. பாட்மின்டன் ஒற்றையர் (எஸ். எல்.3) பைனலில் 'நம்பர்-1' வீரரான - நிதேஷ் குமார், பெத்தேல் டெனியலை (நம்பர்-2) சந்தித்தார். முதல் செட்டை நிதேஷ் 21-14 என எளிதாக வென்றார். அடுத்த செட்டை 18-21 என கோட்டை விட்டார். மூன்றாவது செட்டில் ஒரு கட்டத்தில் 20-21 என பின் தங்கினார். பின் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்த நிதேஷ், 23–21 என கைப்பற்றினார். முடிவில் நிதேஷ்  21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பாரிசில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம் ஆனது. முன்னதாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெஹரா, தங்கம் கைப்பற்றி இருந்தார்.

Sep 02, 2024

சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் இன்று தகுதி சுற்றுகளுடன் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரேசிங் புரோமோட்டார்ஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து பார்முலா 4 ரேஸ் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் கார் சாம்பியன் ஷிப் போட்டியின் முதல் சுற்று கடந்த 24, 25, ம் தேதிகளில் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடத்தின.இரண்டாம் சுற்றுக்கான போட்டி நேற்று சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர்தூர சாலையில் இரவு நேர போட்டியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.சென்னையில் நடக்கும் கார் பந்தயம் உலக அளவில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரப்போவது உறுதி என அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 24 25

AD's



More News