25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Aug 28, 2026

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா 1-0 என வெற்றி.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி கோப்பையை வென்றது.கொழும்பு டெஸ்ட் போட்டியில் பெரும்பாலான நேரங்களில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, வெற்றி பெற வேண்டிய போட்டியை கடைசி நாளில் தவறவிட்டது. இந்திய பவுலர்களால் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டுகளை வீழ்த்த முடியாததால் போட்டி டிராவில் முடிந்தது.இலங்கை சென்ற இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 503/9 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி, 2வது இன்னிங்சில் விளையாடியது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 229/6 ரன்கள் எடுத்திருந்தது.கடைசி நாளில் இந்திய அணிக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்தபோதிலும், கடைசி ஒரு மணி நேரத்தில் 17 ஓவர்களில் 217 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வெற்றிக்கான வாய்ப்பு குறைந்த நிலையில், போட்டி டிராவில் முடிந்தது.இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Aug 28, 2026

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: இன்று மதுரை - கோவை அணிகள் மோதல்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை மற்றும் கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றும்.மதுரை அணி ஏற்கனவே 2018ஆம் ஆண்டிலும், கோவை அணி 2023ஆம் ஆண்டிலும் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.இதனால், 2வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

Aug 27, 2026

ஜெர்மனியுடன் பலப்பரீட்சை: இந்திய பெண்கள் ஹாக்கி அணி.

பெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 5-6வது இடத்துக்கான போட்டியில் இன்று ஜெர்மனியை எதிர்கொள்கிறது.லீக் சுற்றில் 2வது இடம் பிடித்த இந்தியா, அரையிறுதிக்கு முந்தைய 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது. ‘இ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.அடுத்ததாக ஆஸ்திரேலியாவை கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி, கோல் எதுவும் அடிக்காமல் ஆட்டத்தை ‘டிரா’ செய்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தது.இந்நிலையில், 5-6வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ‘எப்’ பிரிவில் 3வது இடம் பிடித்த ஜெர்மனியுடன் மோதுகிறது.

Aug 27, 2026

டி.என்.பி.எல்.: இறுதிப்போட்டிக்கு கோவை அணி தகுதி.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு மதுரை அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், 2வது தகுதிச்சுற்றில் கோவை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை, திருச்சி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணி, கோவை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி அபார வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை அணியுடன் கோவை அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

Aug 27, 2026

ஆசிய விளையாட்டு: காலிறுதியில் ஜப்பானை எதிர்கொள்ளும் இந்திய பெண்கள்.

ஜப்பானில் செப்டம்பர் 29-ம் தேதி தொடங்க உள்ள 20வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணிகள் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்குகின்றன.பெண்கள் கிரிக்கெட் பிரிவில் இந்தியா, வங்கதேசம், சீனா, இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 8 அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.ஆண்கள் பிரிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் காலிறுதியில் இந்திய அணி, முதல் சுற்றின் ‘ஏ’ பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியை சந்திக்கிறது. அந்தப் பிரிவில் ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி செப்டம்பர் 22-ம் தேதியும், ஆண்கள் இறுதிப்போட்டி அக்டோபர் 3-ம் தேதியும் நடைபெற உள்ளது.

Aug 26, 2026

பாட்மின்டன் இரட்டையர் தரவரிசையில் திரீஷா–காயத்ரி ஜோடி 27-வது இடத்துக்கு முன்னேற்றம்.

உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.) சார்பில், பாட்மின்டன் வீரர், வீராங்கனைகளுக்கான புதிய உலகத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.சமீபத்தில் டெல்லியில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில், உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் இருந்த இந்தியாவின் திரீஷா–காயத்ரி ஜோடி பங்கேற்றது.இந்திய ஜோடி, தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த ஜப்பான் ஜோடியையும், 4-வது இடத்தில் இருந்த சீன ஜோடியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்தது. இதன் காரணமாக திரீஷா–காயத்ரி ஜோடி 39-வது இடத்தில் இருந்து 27-வது இடத்துக்கு முன்னேறியது.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து 10-வது இடத்தில் தொடர்ந்து உள்ளார். உன்னதி 25-வது இடத்திலும், தான்வி 26-வது இடத்திலும் உள்ளனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 2 இடங்கள் முன்னேறி, ‘டாப்-20’ பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென் 13-வது இடத்துக்கு முன்னேறினார்.

Aug 26, 2026

விளையாட்டு போட்டிகள். 26 TH AUGUST

ஆசிய ஜூனியர் செஸ்மும்பையில் ஆசிய ஜூனியர் கிளாசிக்கல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகள் முடிவில், 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை பிரதிதீ (13 வயது, 5 மாதம்) 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஓபன் பிரிவில் இந்தியாவின் மயங்க் 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனார்.டென்னிஸ்மெக்சிகோவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி–அனிருத் சந்திரசேகர் ஜோடி 6-3, 7-6 என்ற செட் கணக்கில் மெக்சிகோவின் மைக்கேல் வரேலா–ரஷ்யாவின் இவான் ஜோடியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.உலக செஸ் தொடர்ஹங்கேரியில் முதன்முறையாக ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நவம்பர் 10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலகின் நம்பர்-1 வீரர் கார்ல்சன் (நார்வே), நம்பர்-2 வீரர் பேபியானோ (அமெரிக்கா) உள்ளிட்ட 18 பேர் பங்கேற்க உள்ளனர்.இந்தியா சார்பில் நார்வே மற்றும் செயின்ட் லூயிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகிய 3 பேர் பங்கேற்க உள்ளனர்.காமன்வெல்த் கியூ விளையாட்டுகாமன்வெல்த் கியூ விளையாட்டு (ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ்) சீசன்-2 போட்டிகள் ஆமதாபாத்தில் அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 46 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 6 வீரர்கள், 7 வீராங்கனைகள் என மொத்தம் 13 பேர் கொண்ட அணி பங்கேற்க உள்ளது.ஸ்குவாஷ்ஹங்கேரியில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் 3-0 (11-9, 11-6, 11-5) என்ற கணக்கில் பிரிட்டனின் வில் சால்டரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Aug 25, 2026

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு ஏமாற்றம்.

ஆண்கள் போட்டிபெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஆண்களுக்கான போட்டியில், அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. இதையடுத்து நேற்று ஆம்ஸ்டல்வீனில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்திய அணி குறைந்தது 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.இதனால் ‘இ’ பிரிவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்தது.பெண்கள் போட்டிபெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கியின் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது.உலகக் கோப்பையில் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்ததால், கோல் கீப்பர் சவிதா புனியா, பிச்சுதேவி உள்ளிட்ட வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

Aug 24, 2026

செஸ்: பிரக்ஞானந்தா போட்டி ‘டிரா’.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் ‘கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்’ தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சன்ட் கீமருடன் மோதினார்.இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா கறுப்பு காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டம் 80-வது நகர்த்தலில் ‘டிரா’வில் முடிந்தது.மற்றொரு அரையிறுதி முதல் சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோ, பிரான்சின் அலிரெஸா ஃபிரோஜாவுடன் மோதினார். இந்த ஆட்டமும் 36-வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.

Aug 24, 2026

உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவுக்கு வெற்றி அவசியம்.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க, இந்திய அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் உலகக் கோப்பை ஹாக்கியின் 16-வது சீசன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, வேல்ஸ் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியது. இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, தனது பிரிவில் 2-வது இடம் பிடித்தது.அரையிறுதிக்கான 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்துக்கு இங்கிலாந்து, அர்ஜென்டினா மற்றும் இந்தியா அணிகள் போட்டியிடுகின்றன. இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா தலா 3 புள்ளிகளுடன் உள்ள நிலையில், இந்தியாவுக்கு இன்னும் புள்ளிகள் கிடைக்கவில்லை.இன்று ‘இ’ பிரிவில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா–அர்ஜென்டினா அணிகளும், நெதர்லாந்து–இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதுடன், மற்ற போட்டியின் முடிவும் சாதகமாக அமைய வேண்டும். அப்போதுதான் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 171 172

AD's



More News