இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பய ணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலா வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டுவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
IPL CRICKET முதலாவது , தகுதி சுற்றில் நேற்று இமைச்சலா பிரதேசம் தர்மசாலாவில் குஜராத், பெங்களூர், அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பீல்ட்ங் தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 254/5 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி, 19.3 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது தகுதி சுற்றில் ஹைதெராபாத், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
இலங்கையில் நடந்தகாமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக்கல் ஆகிய 3 வடிவங்களில் ,ஓபன் பிரிவில் 96 பேர் பங்கேற்றனர். இதன் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் 7-வது மற்றும் கடைசி சுற்று முடிவில் 6½ புள்ளிகள்பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.இந்தியாவின் ஸ்ரீஹரி ரேபிட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மித்ரபா வெண்கலப் பதக்கமும், பிளிட்ஸ் பிரிவில் இந்தியாவின் ரோகித் கிருஷ்ணா வெள்ளிப்பதக்கமும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆஸ்லோ நகரில் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை வெற்றி பெறுவர்.உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் ஆண்கள் பிரிவில் முதல் சுற்றில் மோதினார். குகேஷ் கிட்டத்தட்ட 5 மணிநேர போராட்டதுக்கு பிறகு 144-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதையடுத்து வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க ஆர்மகேட்டன் முறை கடைபிடிக்கப்பட்டு, ஆடிய குகேஷ் 22-வது நகர்த்தலில் கீமரை தோற்கடித்தார். அவருக்கு 12 புள்ளியும், கீமருக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது. தமிழகத்தின் பிரக்ஞானந்தா, இதேபோல் ஆர்மகேட்டன் முறையில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை 43-வது நகர்த்தலில் வென்றார்.
டெல்லியில் நேற்று நடந்த இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபுரில் 21-வது தேசிய கேடட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, சப்ரே தனிநபர் பிரிவில் தமிழக வீரர் ஜோஷிக் ஸ்டெபின்டோ (கன்னியாகுமரி) சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் அணிகள் பிரிவில் ஜோஷிக் ஸ்டெபின்டோ, வினிஷ்குமார், துஷ்யந்திரம், ரீத் ஷித் ஆகியோர் அடங்கிய தமிழக அணி வெண்கலப்பதக்கம்வென்றனர். துஷியந்திரம் (சென்னை) தவிர மற்ற 3 வீரர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
ஜார்கண்ட் தலை நகர் ராஞ்சியில் ,பெடரேஷன் கோப்பைக்கான 29-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன் ஷிப்போட்டி நடந்து வந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜூர் 20.64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் ,பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 56.51 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தைவென்றார்.
இன்று முதல் 31-ந் தேதி வரை சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடக்க உள்ளது.தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான டாமோகா மியா ஜஜியுடனும் (ஜப்பான்), மாள்விகா பான்சோத், லின் ஹிசாங் டியுடனும் (சீன தைபே) மோதுகின்றனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான புத்ரி குசுமாவர்தானியுடன் (இந்தோனேசியா) தனது சவாலை தொடங்குகிறார்ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, ஹரிகரன் அம்சகருணன்- எம்.ஆர். அர்ஜூன், பெண்கள் இரட்டையர் பிரிவில் கவிபிரியா-சிம்ரன் சிங், ருதபர்ணா- ஸ்வேதா பர்ணா உள்ளிட்ட இந்திய ஜோடிகள் களம் காணுகின்றன.
முதல் நான்கு இடங்களை பிடித்த அணி பெங்களூர், குஜராத், ஹைதெராபாத், ராஜஸ்தான் அணிகள், இந்த நான்கு அணிகளும், ஒரு முறை கோப்பையை வென்றது. இன்று நடக்கும் பிளே ஆப் சுற்றுக்கு முதல் போட்டியாளர் , பெங்களூர், குஜராத் அணிகள், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 68-வது லீக் ஆட் டத்தில் மோதின.டாஸ்' ஜெயித்த பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 18 ஓவகளில் 200/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசிவரைஆட்டம் இழக்காமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 51 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.