ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 27வது சீசன் கஜகஸ்தானில், நடந்தது.. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுதிர்தா, அய்ஹிகா முகர்ஜி ஜோடி, ஐப்பானின் மிவா ஹரிமோடோ, மியூ கிஹாரா ஜோடியை எதிர்கொண்டது. மொத்தம் 30 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய இந்திய ஜோடி 0-3 (4-11, 9-11, 9-11) என தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது
சீனாவில் ஏ.டி.பி.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஒற்றையர்பிரிவுபைனலில்இத்தாலியின்ஜானிக்சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர்.டை பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய சின்னர், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் சின்னர் 7-6, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கர்நாடகாவில் மைசூருவில், பெண்களுக்கான ஐ.டி.எப். டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அமெரிக்காவின் ஜெஸ்சி அணி மோதினர்.முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ராஷ்மிகா, இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பிரேக்கர் வரை சென்றது. ராஷ்மிகா 6-3,3-6 6-7, என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2-வது இடத்தை கைப்பற்றினார்.
இமாச்சல பிரதேசத்தில் தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் (யூத் ஜீனியர், சீனியர்) நடக்கிறது. 480 வீரர், 380 வீராங்கனை என மொத்தம் 860 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சீனியர் பெண்களுக்கான 71 கிலோ பிரிவில் பஞ்சாப்பின் ஹர்விந்தர் கவுர் களமிறங்கினார். 2022 காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலம் வென்ற இவர், முதலில் ஸ்னாட்சி பிரிவில் 98 கிலோ தூக்கினார். தனது முந்தைய தேசிய சாதனை (96 கிலோ) தகர்த்தார். கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 125 கிலோ தூக்கி மீண்டும் தேசிய சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக 223 கிலோ தூக்கி, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்றார்.
கஜகஸ்தானில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.பெண்கள் அணி முதன்முறையாக இத்தொடரில் பதக்கம் (வெண்கலம்) வசப்படுத்தியது. தற்போது இரட்டையர் பிரிவு போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி கஜகஸ்தானின் மிர்கடிரோவா, ஆகாஷேவா ஜோடியை சந்தித்தது இதில் ஜோடி 3-0 என (11-4, 11-7, 11-8) நேர் செட்டில் வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை மாஸ்டர்ஸ், ஆனந்த் தலைமையிலான காங்கஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் அணிகள் லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடரில் மோதினர். இதில் ஐந்து முறை உலக சாம்பியன் இந்தியாவின் ஆனந்த், மும்பை சார்பில் களமிறங்கிய மேக்சிம் வாசியர் (பிரான்ஸ்) மோதிய போட்டி டிரா ஆனது .மற்றொரு போட்டியில் காங்கஸ் வீராங்கனை வைஷாலி, மும்பை அணியின் கோனேரு ஹம்பி மோதினர். இப்போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். வைஷாலி இவர் 65 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முடிவில் காங்கஸ் அணி 12-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சீனதைபேயில், ஆசிய யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ரீகர்வ் பிரிவில் வைஷ்ணவி, பிரஞ்சல் தோலியா, ஐன்னத் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பைனலில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. இப்போட்டி 4-4 என சமநிலை அடைந்தது. பின் 'ஷூட் ஆப்' முறையில் ஏமாற்றிய இந்தியா 4-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. சீனதைபே அணி தங்கம் வென்றது. வைஷ்ணவி கூறுகையில் "ஆசிய யூத் வில்வித்தையில் வெள்ளி வென்றது. எங்களது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்றார்.
கஜகஸ்தானில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான காலிறுதியில் இந்தியா, தென் கொரியா, மோதின. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் உலகத் தரவரிசையில் 92வது இடத்திலுள்ள இந்தியாவின் ஆயிஹா, 3-1 என (7-11, 11-6, 12-10, 12-10) 16-வது இடத்திலுள்ள ஜியீ ஜியோனை வென்றார். முடிவில் இந்திய அணி 3-2 என வெற்றி பெற்று, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்து, வரலாறு படைத்தது.
.பெண்கள் T-20 போட்டியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் ரேங்கிங்கில் முன்னேற்றம்.ஐ.சி.சி. T-20 ரேங்கிங் பேட்டர் பட்டியலில், இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 12-வது இடத்துக்கு முன்னேற்றம் மந்தனா 5-வது, ஜெமிமா 20-வது இடத்தில் உள்ளனர்.கேப்டன் சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங், பவுலிங் வலுவாக உள்ளது. வங்கதேச அணியின் நிலை பரிதாபமாக கடந்த போட்டியில் 127 ரன்னுக்கு சுருண்டது. இரண் டாவது 'டி-20' போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தி, தொடரை வெல்ல தயாராக உள்ளது.
அக். 20ல் ஹாங்காங்கில் ஆசிய கிராஸ் கன்ட்ரி தடகள போட்டி நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் குல்வீர் சிங் (5,000, 10,000 மீ ., ஓட்டம்) இடம் பெற்றார்.