மாதந் தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை வாக்கெடுப்பு வாயிலாக (ஐ.சி.சி.) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்துக்கானசிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் 5 பேட்ஸ்மேன் சஞ்சுசாம்சன், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க - பேட்ஸ்மேன் கனோர் எஸ்டர் ஹய்ஜென் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்களில் ரசிகர்கள் மற்றும் விருதுக்கான கமிட்டியினர் அளித்த வாக்குகள்அடிப்படையில் சஞ்சு சாம்சன் விருதுக்கு தேர்வானார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் 3 அரைசதம் உள்பட 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதுக்கு தேர்வானார். அவருக்கு முதல்முறை யாக ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை பெற்றுக் கொடுத்துள்ளது.
கிரிக் கெட் லீக் தொடர் நேற்று, மும்பை யில் உள்ள வான்கடே மைதானத்தில் , நடந்த போட்டியில் மும்பை, பெங் களூரு அணிகள் மோதின.'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது.மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டு 222 ரன்களே எடுத்தது.பெங்களூரு அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி, குஜராத் டைட்டன்சை ,லக்னோவில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டது.'டாஸ்' ஜெயித்த குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. குஜராத் அணி 18.4 ஓவர்களில், 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று மோதின. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கி, ஓவர் எதுவும்குறைக்கப்படவில்லை. 'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். 20 ஓவர்களில் பெங்களுரூ அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் /அணி 202 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. நான்காவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
.பெண்கள் அணிகளுக்கான 6 அணிகள் பங்கேற்றுள்ள ,பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்1 போட்டி டெல்லியில் ,நேற்றுநடந்த ஆட்டத்தில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்தது. இந்திய வீராங்கனைகள் ஜீல் தேசாய் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் அனு விஜின் கான்டோரையும், சஹஹா யமலாபள்ளி 6-0, 6-0 என்ற நேர்செட்டில் ஜர்கல் அல்டன்சர்னாயையும் ஒற்றையர் ஆட்டங்களில் தோற்கடித்தனர். இந்தியாவின் வைஷ்ணவி அட்கர்-ருதுஜா போசாலே இணை 6-1, 6-0 என்ற நேர்செட்டில் கோங்கோர்சுல் அல்டர்கிஷிக்-ஜர்கல் அல்டன்சர்னா ஜோடியையும் இரட்டையர் பிரிவில் தோற்கடித்தது. இந்திய அணி 3–0 என்ற கணக்கில் ,மங்கோலியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ,ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி யில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரரான விஸ்வநாத் சுரேஷ், ஜப்பானின் டாய்சி இவாயை சந்தித்தார். விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சென்னை பெரம்பூரை சேர்ந்த 21 வயதான விஸ்வநாத் சுரேஷ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்திய வீராங்கனைகள் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்று பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.இந்தியா மொத்தம் 5 தங்கம் உள்பட 16 பதக்கங் களை கைப்பற்றி ,2-வது இடம் பிடித்தது.
கொல்கத்தா, லக்னோ அணிகள் நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டனில் மோதின. 'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தது.லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுண்டாரி என்க் அம்கலானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் ,54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் ஹூவாங்சியாயோவென்னை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் பிரியா 60 கிலோ எடைப்பிரிவில், 3-0 என்ற கோல் கணக்கில்வடகொரியாவின் வோன் அன் கியோங்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். உலக கோப்பை போட்டியில், 70 கிலோ எடைப்பிரிவில், தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பக்கித் செய்டிசைதோற்கடித்து தங்கப்பதக்கத்தைதனதாக்கினார்.இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை பெண்கள் பிரிவில் வென்று ஆதிக்கம் செலுத்தியது.
சைப்ரஸ் நாட்டில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தேர்வு செய்வதற்கான ' நடப்பு கேண்டி டேட்ஸ் செஸ் போட்டி சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 9-வது சுற்றுநடந்தது. பெண்கள் பிரிவில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தின் ஆர்.வைஷாலி 31-வது நகர்த்தலில் ,திவ்யா தேஷ் முக்கை வென்று3-வது வெற்றியை பெற்றார். 9-வது சுற்று முடிவில் வைஷாலி, சீனாவின் ஜூஜினெர்ஆகியோர் தலா 5½ புள்ளியுடன் முன்னணியில் உள்ளனர். இன்று 10-வது சுற்று நடக்கிறது.
சீனாவின் நிங்போ நகரில் ,43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 12-21, 19-21 என்றநேர் செட்டில் லீசேக்யிடம் (சீனதைபே) தோற்றார். உலக தரவரிசையில் 25-வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற நேர் செட்டில் 7-ம் நிலை வீரர் லின் ஷிபெங்கை (சீனா) வென்றார். இந்தியாவின் பிரனாய் தன்னை எதிர்த்த நுயேன் ஹாய் டாங்கை (வியட்நாம்) 24-22, 21-12 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 'பெண்கள் ஒற்றையரில் 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வோங் லிங்சிங்கை வென்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 67 நிமிடங்கள் தேவைப்பட்டது. 2-வது சுற்றில் சிந்து, 2 முறை உலக சாம்பியனான சீனாவின் வாங்ஷியியை எதிர்கொள்கிறார்.