25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Aug 20, 2024

பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதிக்க தயாராக இருக்கும் சுமித் அன்டில், மாரியப்பன்

ஹரியானாவை சேர்ந்தவர் சுமித் அன்டில், 26 -இளம் பருவத்தில் மல்யுத்தம், இந்திய ராணுவத்தில் சேர விரும்பினார். இவரது 17-வது வயதில் விதி விளையாடியது டீயூஷன் முடித்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது, வேகமாக வந்த டிரக் மோதியது. விபத்தில் காயமடைந்த இவரது இடது காலின் கீழ் பகுதி அகற்றப்பட, மல்யுத்த கனவு தகர்ந்தது. பின் மனம் தளராமல் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் களமிறங்கினார். விரைவில் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க துவங்கினார். தங்கப்பதக்கங்களை குவித்தார்.கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் ( 2021 ) 68..55 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். 2023-ல் ஹாங்சுவில் கடந்த பாரா ஆசிய விளையாட்டில் 73.29 மீட்டர் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். பாரிஸ் பாராலிம்பிக்கிலும் சாதிக்க காத்திருக்கிறார்.சுமித் அன்டில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு 2021 கொரோனா கட்டுப்பாடு காரணமாக தாமதமாக சென்று ., துவக்க விழாவை மிஸ் செய்தார். இம்முறை இந்திய கொடியை ஏந்தி செல்ல இருப்பதை பெரிய கவுரவமாக கருதுகிறார்.பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் (ரியோ 2016) வெள்ளி (டோக்கியோ 2021) என இரு பதக்கமும் வென்றவர் தமிழகத்தின் மாரியப்பன், சமீபத்தில் நடந்த பாரா உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் கைப்பற்றினார். தற்போது மூன்றாவது முறையாக பாரிசில் களமிறங்கும் மாரியப்பன் பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லலாம்.. பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

Aug 19, 2024

வினேஷ் போகத்துக்கு தாய்நாடு தந்த உற்சாக வரவேற்பு

பாரிஸ் 33-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது மல்யுத்த 150 கிலோ பிரிஸ்டைல் பைனலுக்கு முன்னேறிய, முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார். வினேஷ் போகத் பைனலுக்கு முன் நடந்த எடை சோதனையில் 100 கிராம். கூடுதலாக இருக்க, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்தார். குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கம் வழங்க கோரிய இவரது அப்பீலை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரித்தது.பாரிசில் இருந்து கிளம்பிய வினேஷ் நேற்று டில்லி விமான நிலையம்  வந்திறங்கினார்.. இவருக்கு மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சக மல்யுத்த நட்சத்திரங்களான பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் உள்ளிட்டோர் வரவேற்றனர். இவர்களை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட வினேஷ், சாக்சி மாலிக்கின் தோளில் சாய்ந்தவாறு அழுதார்.டில்லியில் இருந்து மதியம் 11 மணி அளவில் திறந்த ஜீப்பில் ஹரியானாவில் உள்ள தனது சொந்த கிராமமான பலாலிக்கு புறப்பட்டார் வினேஷ் .இவரது ஜீப்பை பின் தொடர்ந்து பலரும் கார்களில் அணிவகுத்து வந்தனர். செல்லும் வழியில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.வினேஷ் கூறுகையில் எனக்கு ஆதரவு அளித்த ஒட்டுமொத்த தேசத்துக்கும் நன்றி, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி பாரிஸ் ஒலிம்பிக்கில் எனக்கு தங்கப்பதக்கம் தர வில்லை. ஆனாலும் இந்திய மக்கள், தாய்நாடு தந்த உற்சாக வரவேற்பு, என் மீது காட்டிய அன்பும், மரியாதையும் ஆயிரம் தங்கப் பதக்கங்களை விட அதிகம் என்றார்.

Aug 19, 2024

பாராலிம்பிக்கில் இந்திய 25 பதக்கங்களை வெல்லும் என தேவந்திர ஐஜாரியா தெவிரித்தார்.

பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கவுள்ளது. 22 விளையாட்டில் 549 பிரிவுகளில் போட்டி நடக்க உள்ளன. இந்தியா சார்பில் 84 பேர் 12 போட்டிகளில் களமிறங்க காத்திருக்கின்றனர். கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் 54 பேர் பங்கேற்க. இந்தியா 19 பதக்கம் வசப்படுத்தியது. பாரிஸ் போட்டி குறித்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி BCI தலைவர் தேவேந்திர ஐஜாரியா வயது 43 கூறியது. பிரமோத் பகத் பாட்மின்டன், நமது நட்சத்திர வீரர் இம்முறை தடை காரணமாக துரதிருஷ்டவசமாக இந்திய அணயில் இடம் பெறாதது சோகம். பிரமோத் இல்லை என்றாலும், குறைந்தது 25 பதக்கம் வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். நமது நட்சத்திரங்கள் பாராலிம்பிக் போட்டிக்காக சிறப்பான முறையில் தயாராகி உள்ளனர். 25 பதக்கம் கைப்பற்றி, டாப் 20 இடத்துக்குள் வர திட்டமிட்டு உள்ளோம். நிர்ணயிக்கப்பட்டதை விட, இந்தியா இன்னும் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் ,என இலக்கு வைத்துள்ளோம். தடகளத்தில் மட்டும் இந்தியா சார்பில் 28 பேர் களமிறங்குவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Aug 17, 2024

வினேஷ் போகத்திற்கு பெருமை

வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ பிரிவின் பைனலுக்கு முன்னேறினார். பைனலுக்கு  முன் 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடியதால். தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் என்று, ஆறுதலாக பிரதமர் மோடி கூறினார். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்றார்.வினேஷ் போகத்திற்கும் பெருமை தான்.

Aug 17, 2024

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியர்கள்

 பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 17-வது சீசன் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை நடக்க உள்ளது.இதில் இந்தியா சார்பில் 84 பேர், வில்விததை, தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட12 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்திய பாராலிம்பிக் கமிட்டி பிசிஐ. இந்திய விளையாட்டு ஆணையம் சாய் சார்பில் இவர்களை வழியனுப்பும் விழா நேற்று டில்லியில் நடந்தது.இதில் பங்கேற்ற மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில் நமது பாரா விளையாட்டு நட்சத்திரங்கள் தடைகளை தாண்டி சாதிக்கும் திறமை பெற்றவர்கள் ,பாராலிம்பிக் போட்டியில் நிறைய பதக்கம் வெல்வர் என நம்புகிறேன் என்று இதில் பங்கேற்ற மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார் .4 பாரிஸ் பாராலிம் பிக் போட்டிக்கான துவக்க விழா அணி வகுப்பில்,, டோக்கியோ பாரா லிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அன்டில், ஆசிய பாராலிம்பிக் விளையாட்டு குண்டு எறிதலில் வெள்ளி வென்ற பாக்யஸ்ரீ ஜாதவுக்கு இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி வரும் கவுரவம் வழங்கப் பட்டுள்ளது.

Aug 16, 2024

பிரதமர் மோடியுடன் பாரிஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஒலிம்பிக் நட்சத்திரங்கள்.

"பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற நட்சத்திரங்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி .அவர்களது விளையாட்டு அனுபவங்களை கேட்டு அறிந்து பாராட்டு தெரிவித்தேன். ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற, ஒவ்வொரு வீரர் வீராங்கனையும் சாம்பியன் தான். உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கவும், விளையாட்டு வளர்ச்சிக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு தரும். இவ்வாறு  தெரிவித்தார்.பிரதமர் மோடி கூறுகையில் இந்தியாவில் 2036-ல் ஒலிம்பிக் நடத்த வேண்டும் என்பது கனவு இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்." என்றார்.

Aug 16, 2024

T-20 உலக கோப்பை இந்தியாவில் நடத்த மறுப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி. சார்பில் வங்கதேசத்தில் பெண்களுக்கான T-20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்கவுள்ளது. கலவரம் காரணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அங்கு ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் வங்கதேசத்தில் இருந்து உலக கோப்பை தொடரை வேறு இடத்துக்கு மாற்ற ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. பெண்களுக்டகான T-20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என ஐ.சி.சி கேட்டது மறுப்பு தெரிவித்து, ஏனெனில் அக்டோபர் மாதம் இந்தியாவில் மழைக்காலம் தவிர அடுத்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கான உலக கோப்பை ஒரு நாள் தொடர் நடக்க உள்ளது. இதனால் அடுத்தடுத்து உலக கோப்பை தொடரை நடத்தும் நிலை ஏற்படும் என்பதால் மறுப்பு தெரிவித்தனர்.இதனால் இலங்கை அல்லது ஐக்கியஅரபு எமிரேட்சில் T-20 உலக கோப்பை தொடர் நடத்தப்படலாம். இதுகுறித்து ஆகஸ்ட் 20ல் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

Aug 14, 2024

இளம் வீராங்கனை மனு பாகர் இந்தியாவுக்காக ஒலிப்பிக்கில் அதிக பதக்கம் வெல்வதே குறிக்கோள்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இளம் வீராங்கனை மனு பாகர் ,10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநகர் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங் உடன் சேர்ந்து வெண்கலம் வென்றார். சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் வெண்கலத்தை நழுவவிட்ட இவர் நான்காவது இடம் பிடித்தார்.  நிறைவு விழாவில் இந்திய ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் உடன் மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தார்.ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தி வந்தது. மறக்க முடியாத அனுபவம். வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்  என தெரிவித்தார் மனுபாகரின் பயிற்சியாளரும், இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரருமான ஐஸ்பால் ராணா கூறுகையில் ஒலிம்பிக் போட்டிக்காக மனு பாகர் நீண்ட காலம் பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளார். வரும் அக்டோபரில் டில்லியில் சுடுதலில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. சிறிய ஒய்வுக்கு பின், 2026-ல் நடக்க உள்ள ஆசிய, காமன்வெல்த் போட்டியில் சாதிக்க பயிற்சியை துவக்குவார். 

Aug 14, 2024

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 25 பதக்கம் வெல்வர், ஐஜாரியா நம்பிக்கை தெரிவித்தார்.

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ல் நடக்க உள்ளது. இதில் இந்திய நட்சத்திரங்கள் 25 க்கும் மேல் பதக்கம் வெல்வர். என தலைவர் ஐஜாரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ,ஆமித் ரோஹி தாஸ். சுமித், அபிஷேக், சஞ்சய் உள்ளிட்ட வீரர்கள் நேற்று பாரிசில் இருந்து டில்லி விமான நிலையம் வந்தனர். இவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சுமித் கூறுகையில் டோக்கியோ பாரிஸ் என தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற எங்கள் மீது மக்கள் அன்பை பொழிகின்றனர். இது இந்தியாவில் ஹாக்கி விளையாட்டுக்கும், அதன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம். என்றார்.பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத் தாயகம் திரும்பினார். இவருக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Aug 13, 2024

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா, 13 ஆகஸ்ட் 2024.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜீலை 26-ல் துவங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 10,714, பேர் பங்கேற்றனர். நிறைவு விழாவை 80,000 ரசிகர்கள் கண்டு களித்தனர்.இந்தியா சார்பில்  வீராங்கனை மனுபாகர், ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சேர்ந்து மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தனர். உலகின் சிறந்த இசை கலைஞர்களின் ஆடல், பாடல், சர்க்கஸ் கலைஞர்களின் வித்தை, பாலே நடனம் இடம் பெற்றன..மிஷன் இம்பாசிபிள் புகழ் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டாம் குருஸ் மிரட்டினார். 62 வயதான இவர் துடிப்பான இளைஞர் போல சாகசம் நிகழ்த்தினார். 'ஸ்டேட் டி பிரான்ஸ்' மைதான மேற்கூரையில் தோன்றினார்.160 அடி உயரத்தில் இருந்து கயிறு கட்டியவாறு, நிறைவு விழா மேடைக்கு துல்லியமாக குதித்தார். இவரை பாத்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனா பைல்சிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்றார்.பாரிசின் 'ஸ்டேட்டி பிரான்ஸ் மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடந்தன. வானவேடிக்கையில் மைதானம்.ஜொலித்தது பாரிசில் ஒலிம்பிக் போட்டிக்கான நிறைவு விழா நடந்தது. கிராமி விருது வென்ற கேப்ரியலா சர்மியன்டோ வில்சன் (எச்.இ.ஆர்) அமெரிக்க தேசிய கீதத்தை பாடினார்.லாஸ் ஏஞ்சல்சில் 2028-ல் ஒலிம்பிக் நடக்கவுள்ளது. இதற்கான கொடியை லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்சியம் வழங்கினார்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 24 25

AD's



More News