இந்திய பாட்மின்டன் வீராங்கனை தான்வி சர்மா தைபே ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.சீனதைபேயில் நடைபெற்ற இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், 17 வயதான தான்வி சர்மா, வியட்நாமின் துய்லின் நுகுயெனை எதிர்கொண்டார். வெறும் 36 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த போட்டியில், தான்வி 21-16, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் 'சூப்பர் 300' சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.17 வயது 222 நாட்களில் இந்த சாதனையை படைத்த தான்வி, சர்வதேச பாட்மின்டன் அரங்கில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.
ஹாங்காங்கில் நடைபெற்ற ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிளிட்ஸ் பிரிவில் 46 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் ஹரிகா 9 வெற்றி, 3 டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் மொத்தம் 10.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான ரேபிட் பிரிவில் 52 வீராங்கனைகள் களமிறங்கினர். இதில் ஹரிகா 11 சுற்றுகளில் 6 வெற்றி மற்றும் 5 டிரா செய்து 8.5 புள்ளிகளுடன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று இரட்டை சாதனை படைத்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது.ஜூடோநேற்று நடைபெற்ற ஜூடோ போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்மிதா தே, ஸ்காட்லாந்தின் சம்மர் ஷாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.இறுதிப்போட்டியில் கனடாவின் ஹெய்தியை எதிர்கொண்ட அஸ்மிதா, நிர்ணயிக்கப்பட்ட 4 நிமிட முடிவில் 1-1 என்ற சமநிலையில் இருந்தார். இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க கோல்டன் ஸ்கோர் முறை பின்பற்றப்பட்டது. இதில் முதல் புள்ளி பெற்றவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.கோல்டன் ஸ்கோர் முறையில் ஹெய்தியை கீழே தள்ளி ஒரு புள்ளி பெற்ற அஸ்மிதா, 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் காமன்வெல்த் ஜூடோ வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ச்வை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹர்ஷ் சிங் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் ஜூடோவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.பளுதூக்குதல்ஆண்களுக்கான +110 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் பங்கேற்றார்.முதலில் நடைபெற்ற ஸ்னாட்ச் பிரிவில் 176 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். நியூசிலாந்தின் டேவிட் ஆன்ட்ரூ 166 கிலோ எடையுடன் 2-வது இடத்தில் இருந்தார்.தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியிலேயே 205 கிலோ எடையைத் தூக்கிய லவ்பிரீத் சிங் தங்கத்தை நோக்கி முன்னிலை வகித்தார். ஆனால் நியூசிலாந்தின் டேவிட் ஆன்ட்ரூ தனது 2-வது முயற்சியில் 223 கிலோ எடையைத் தூக்கி மொத்தம் 389 கிலோவுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மொத்தம் 388 கிலோ எடை தூக்கிய லவ்பிரீத் சிங் ஒரு கிலோ வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.குத்துச்சண்டைநேற்று நடைபெற்ற குத்துச்சண்டை அரையிறுதி போட்டிகளில், பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரீத்தி, ஜாம்பியாவின் கேத்தரின்வை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்குஷ், கனடாவின் ஜோஷுவாவை 5-0 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.55 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜடுமானி சிங், நமீபியாவின் பிலிப்வை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு வழக்கமான நீல நிற ஜெர்சிக்கு பதிலாக காவி நிற ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. ஹாக்கி மைதானத்தின் நீல நிற ஆடுகளத்துடன் வீரர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிரந்தர மாற்றம் அல்ல என்றும், எதிர்காலத்தில் வீரர்களின் கருத்துகளின் அடிப்படையில் ஜெர்சி நிறம் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தைபே ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தான்வி சர்மா, தேவிகா சிஹாக் மற்றும் கிரண் ஜார்ஜ் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். அன் மோல் சீனதைபே வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் திலீப் மஹாது காவிட் தங்கப் பதக்கமும், முகமது பாசில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சந்தோஷ்குமார் தமிழரசன் மற்றும் யாஷஸ் பாலக் ஷா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டி-20 பேட்டர் தரவரிசையில், இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தை பிடித்துள்ளார். 536 புள்ளிகளுடன் 278-வது இடத்தில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார்.
சீன தைபேயில் நடைபெறும் சூப்பர் 300 தைபே ஓபன் பாட்மின்டன் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற நேர் செட்களில் பெய் யு வாஙை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.மேலும், அன்மோல் கார்ப், தான்யா, தான்வி சர்மா ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ். பிரனாய், ஜப்பானின் மினோரு கோகாவை 21-11, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 10,000 மீட்டர் ஓட்டத்தில் குல்விந்தர் சிங் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பதிவு செய்தார். பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளி வென்றார். இதன்மூலம் பளுதூக்குதலில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதில் மீராபாய் சானு மட்டுமே தங்கம் வென்றுள்ளார்.குத்துச்சண்டையில், பெண்கள் 51 கிலோ பிரிவு காலிறுதியில் சாக்சி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தின் கெய்த்லினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மொத்தமாக 4 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என 9 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்று, குறைந்தபட்சம் 9 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.ஆண்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் அனிமேஷ் குஜுர் 20.46 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.இதற்கிடையில், இன்று நடைபெறும் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில், இரு முறை ஒலிம்பிக் பதக்க நாயகன் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 18 இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.
வாழ்க்கையில் வந்த எண்ணற்ற சவால்களை தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் வென்று, சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார் ஷர்மிளா தன்கர். பலருக்கும் ஊக்கமளிக்கும் அவரது சாதனை, "முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.