29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ அணிகள் நியூசண்டிகாரில் நேற்றிரவு மோதின . 'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பீல்ட்ங் தேர்வுசெய்தார். லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு, 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு, 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
28-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணி நேற்று மாலை கொல்கத்தா ஈடன் கார்டனில் மோதின .டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி 19.4 ஓவர் களில் 6 விக்கெட்டுக்கு 161 ரன் கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த ஆர். வைஷாலி ,சைப்ரஸ்நாட்டில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் 8% பபுள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற அவர் ஆண்டின் இறுதியில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூவென் ஜூனுடன் மோத உள்ளார்.இந்த நிலையில் 24 வயதான ஆர். வைஷாலி நேற்று அதிகாலை சென்னை திரும்பி னார். விமான நிலையத்தில் எஸ்.டி.ஏ.டி, மற்றும் செஸ் சங்கம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட் டது. அகில இந்திய செஸ் சம்மேளன தலைமை ஆபரேட்டிங் அதிகாரி ஏ.கே. வர்மா வைஷாலியை நேரில் வர வேற்று கூறுகையில், 'உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு முயற்சிப்போம். இதற்காக முறைப்படி விண்ணப்பிப்போம். இரண்டு இந்தியர்கள் (ஆண்கள் பிரிவில் குகேஷ், பெண்கள் பிரிவில் வைஷாலி) உலக செஸ்சாம்பியன்ஷிப்பில் ஆட இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றார்.
கொல்கட்டா, குஜராத் அணிகள் நேற்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மோதின. கொல்கத்தா அணி கேப்டன் ரகானே, 'டாஸ்' வென்று பேட்டிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணி 20 ஓவரில் 180 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 14 அணிகள் இடையிலான தொடரில் சென்னை நேருஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லியை எதிர்கொண்டது.சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வென்றது. பாருக் சவுத்ரி (II-வது நிமிடம்) வெற்றிக்கான கோலை அடித் தார்.சென்னை அணிக்கு ,8-வது ஆட்டத்தில் ஆடிய 2-வது வெற்றியாகும்.டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.
மும்பை அணி, பஞ்சாப் அணி, நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதியது. 'டாஸ்' ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பீல்ட்ங் தேர்வு செய்தார். மும்பை அணி ,20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சைப்ரஸ் நாட்டில் கடந்த 3 வாரங்களாக நடந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் 14-வது மற்றும் கடைசி சுற்றில் ரஷியாவின் கேத்ரினா லாக்னோவை தோற்கடித்த வைஷாலி 8½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து ரூ.31 லட்சம் பரிசுத் தொகையைதட்டிச்சென்றார். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற வைஷாலி, ஆண்டின் இறுதியில் நடக்கும் பெண்கள் உலக செஸ் சாம்பி யன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூ வென் ஜூனுடன் மோதும்வாய்ப்பை பெற்றுள்ளார். சாதனை படைத்த 24 வயதான வைஷாலி நாளை மறுதினம் சென்னை திரும்புகிறார். 5 முறை உலகசாம்பியனான செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தும் பாராட்டியுள்ளார். தமிழக வீராங்கனை வைஷாலி கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஷிப்புக்கு தகுதிபெற்றதன்மூலம் கனவு நனவாகி இருப்பதாக கூறியுள்ளார்.
விக்டர் ஆக்சல்சென்டென்மார்க்கை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர். நம்பர் ஒன் வீரரான ஆக்சல்சென் 2020 மற்றும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.2017 மற்றும் 2022-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பிலும், 2020, 2022-ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனிலும், ஐரோப்பிய சாம்பி யன்ஷிப்பில் ஒற்றையரில் 3 முறையும், அணிகள் சாம்பியன்ஷிப்பில் 6 முறையும் மகுடம் சூடியுள்ளார். தரவரிசையில் 183 வாரங்கள் 'நம்பர் ஒன்இடத்தில் இருந்தார் . சீனாவின் லின்டானுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இருமுறை மகுடம் சூடிய வீரர் இவர்தான்.விக்டர் ஆக்சல்சென் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதுகுவலி பிரச்சினையால் எந்த போட்டியிலும் .விளையாடாமல் ஒதுங்கி இருந்தார். தனது 32-வது வயதிலேயே பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 23-வது ஆட்டத்தில் எதிர் கொண்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. லக்னோ அணி 20 ஓவரில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பெங்களூரு அணி 15.1 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 149 எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூர் அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா அணியும் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் மோதின. 'டாஸ்' ஜெயித்த கொல்கத்தா கேப்டன் அஜிங்யா ரஹானே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுக்கு 160 ரண்ணுக்குள் விழ்ந்தது. சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.