நியூசிலாந்தில் நடக்கும் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய பெண்கள் அணி உருகுவேயை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி, தற்போது கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான புரோ லீக் ஹாக்கி போட்டியில் (இந்தியா 3-1 என வெற்றி) களமிறங்கியதன் மூலம், இந்திய வீரர் மன்பிரீத் சிங் தனது 413-வது சர்வதேச போட்டியில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய திலிப் டிர்கேவின் (412 போட்டிகள்) சாதனையை முறியடித்து அவர் முதலிடம் பிடித்தார். இந்த சாதனைக்காக அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
2026 உலகக்கோப்பையில் அல்ஜீரியாவுக்கு எதிராக விளையாடிய Lionel Messi, தனது 200வது சர்வதேச போட்டியை நிறைவு செய்து இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 3வது வீரராக சாதனை படைத்தார்.17வது நிமிடத்தில் கோல் அடித்த அவர், 6 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் வீரர் மற்றும் 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த 2வது வீரர் என்ற சாதனைகளையும் பதிவு செய்தார். மேலும் தனது முதல் உலகக்கோப்பை ஹாட்ரிக் கோலை அடித்து, 16 உலகக்கோப்பை கோல்களுடன் Miroslav Klose-யின் சாதனையை சமன் செய்தார்.இந்தப் போட்டியில் Argentina national football team 3-0 என்ற கோல் கணக்கில் Algeria national football team அணியை வீழ்த்தியது.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நேற்றுஅரங்கேறிய 'ஐ' பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், ஆப்பிரிக்க நாடான செனகலை சந்தித்தது.உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் ,பிரான்சுக்கு, தொடக்கத்தில் செனகல் கடும் சவால் அளித்தது. முடிவில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக் கில் செனகலை தோற்கடித்து வெற்றியோடு தொடங்கியது.
இந்திய பெண்கள் அணி டி-20 உலக கோப்பை லீக் போட்டியில் 95 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.பெண்களுக்கான .'டி-20' உலக கோப்பை 10வது சீசன் இங்கிலாந்து, வேல்சில், நடக்கிறது.லீட்சில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நேற்று, இந்தியா, நெதர்லாந்து - அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது இந்திய அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்ததுநெதர்லாந்து அணி 17.3 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடந்து வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று முடிவுகள்:உருகுவே - சவுதி அரேபியா (1-1): மயாமி நகரில் நடந்த 'எச்' பிரிவு போட்டியில், சவுதி அரேபியாவின் அல்அம்ரி 41-வது நிமிடத்தில் கோல் அடித்தார். உருகுவே அணி பதிலடி கொடுக்க, ஆட்டம் 1-1 என 'டிரா' ஆனது.பெல்ஜியம் - எகிப்து (1-1): சியாட்டில் நகரில் நடந்த 'ஜி' பிரிவு போட்டியில், எகிப்தின் எமாம் அஷூர் 19-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 66-வது நிமிடத்தில் எகிப்து வீரர் முகமது ஹனி 'சேம்சைடு' கோல் அடிக்க, இப்போட்டியும் 1-1 என சமனில் முடிந்தது.ஈரான் - நியூசிலாந்து (2-2): லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த மற்றொரு 'ஜி' பிரிவு ஆட்டத்தில், நியூசிலாந்தின் ஹென்றி ஜஸ்ட் 2 கோல்களும், ஈரானின் ராமின் மற்றும் முகமது தலா ஒரு கோலும் அடித்தனர். இறுதியில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் (4வது சீசன்) நடந்து வருகிறது. இதில் கோப்பை வெல்லும் அணி 2026-27 புரோ லீக் தொடருக்குத் தகுதி பெறும்.'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியதைத் தொடர்ந்து, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 2-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, தனது பிரிவில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்த இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை உருகுவேயை எதிர்கொள்கிறது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகிறது டைம் இதழ். இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசியல், அறிவியல், கலை உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் உலகின் 'டாப் -100' நபர்கள் பட்டியல் வெளியிடப்படும்.இந்த வரிசையில் விளையாட்டு பிரிவில் நட்சத்திரங்கள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 29, இடம் பெற்றுள்ளார்.இப்பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு நட்சத்திரம் ஆனார். உள்ளூர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட், ஒருநாள், 'டி-20' என மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை, பெண்கள் கிரிக்கெட்டில் அதிக சதம் (17) அடித்தவர், சர்வதேச அரங்கில் ஒரே ஆண்டில் 1000 ரன்னுக்கும் மேல் குவித்த முதல் வீராங்கனை என சாதித்துள்ளார்.
லண்டனில் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் நட்சத்திர சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் (46) மற்றும் செரினா வில்லியம்ஸ் (44) ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் களம் இறங்குகிறது. இதற்காக இவர்களுக்கு சிறப்பு அனுமதி (Wild Card) வழங்கப்பட்டுள்ளது.சாதனை ஜோடி: ஒற்றையர் பிரிவில் செரினா 23 பட்டங்களையும், வீனஸ் 7 பட்டங்களையும் வென்றுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து இரட்டையர் பிரிவில் இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அள்ளியுள்ளனர்.மீண்டும் கம்பேக்: கடைசியாக 2022 யு.எஸ். ஓபனில் விளையாடிய இந்த ஜோடி, தற்போது நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விம்பிள்டன் இரட்டையர் களத்தில் ஒன்றாக இணையப் போகிறது.ஓய்வு முடிவை மாற்றிக்கொண்ட செரினா வில்லியம்ஸ், கடந்த வாரம் நடந்த குயின்ஸ் கிளப் தொடரின் மூலம் டென்னிஸ் களத்திற்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர், இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.பின்னர் களமிறங்கிய இலங்கை 'ஏ' அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 'ஏ' அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 'ஏ' அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இலங்கை 'ஏ' அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு இலங்கை வீரர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை 'ஏ' அணி தொடரில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.