25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Aug 31, 2024

பாராஒலிம்பிக்கில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கம்

மாற்றத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்திய 4 பதக்கங்களை அறுவடை செய்தது,பெண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லேகரா 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பந்தயத்தின் இறுதி சுற்றில் மீண்டும் தங்கம் வென்று வரலாறு படைத்தார். மேலும் மோனா அகர்வாலும் துப்பாக்கி சூடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான் 10 மீட்டர்போட்டியில் இந்திய வீரர் மனிஷ் நர்வால் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். Iபதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ஐனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

Aug 28, 2024

பாரிஸ் பாராலிம்பிக்போட்டி இன்று வண்ணமயமான விழாவுடன் ஆரம்பமாகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிமபிக் போட்டி இன்று துவங்குகிறது. இன்று முதல் ஆரம்பித்து செப்டம்பர் 8ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 12 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில் 169 நாடுகளை சேர்ந்த 440 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 84 பேர் 12 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் ஏந்தி வர உள்ளனர்.பிரான்சின் மையப்பகுதியில் பிளேஸ் டி லா கான்கார்ட் சதுக்கத்தில் துவக்க விழா நடக்க உள்ளது. முதன் முறையாக திறந்த வெளியில் பாராலிம்பிக் துவக்க விழா நடக்க உள்ளது. 65,000 பேர் அமர்ந்து ரசிக்க உள்ளனர். பாராலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்.பாராலிம்பிக் போட்டிகள் மனிதர்களின் மனஉறுதி., விடா முயற்சியை நிருபிக்கும் களம் விபத்தில் பாதிப்பு, பிறவியில் குறைபாடு பார்வைதிறன் இல்லாதது என ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் வாழ்விலும் ஏதாவது ஒரு சோகம் நிறைந்திருக்கும் இதிலிருந்து லட்சியத்துடன் போராடி முன்னேறியுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றனர்.

Aug 27, 2024

பாரிஸ் பாராலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் தங்கம் வெல்வாரா ஷீத்தல் தேவி

பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டி நாளை தொடங்குகிறது. உலகின் 4400 நட்சத்திரங்கள் அசத்த உள்ளனர். இந்தியா சார்பில் 84 போர் களமிறங்குகின்றனர்.பாராலிம்பிக் துவங்கிய 1960-ல் வில்வித்தை இடம்பெற்று வருகிறது. பிரிட்டன், தென்கொரியா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மட்டும் ஒரு வெண்கலம் 2021-ல் டோக்கியோவில் வென்றார்இம்முறை இந்தியாவின் ஐம்மு காஷ்மீரை சேர்ந்த 17 வயது வீராங்கனை ஷீத்தல் தேவி களமிறங்க உள்ளார். பாராலிம்பிக் வில்வித்தையில் இரு கைகள் இல்லாமல் முதல் இந்திய பெண் வீராங்கனை ஷீத்தர் தேவி இந்தப் போட்டியல் பங்கேற்கிறார். பாரிஸ் பராலிம்பிக் போட்டி வில்வித்தையில் தங்கம் வெல்ல முயற்சிப்பேன். என் இந்தியாவின் ஷீத்தர் தேவி தெரிவித்துள்ளார்.

Aug 26, 2024

டேபிள் டென்னிசில் அசத்தும் பவினா படேல்

பிரான்ஸ் தலை நகர் பாரிசில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் (ஆக. 28- செப். 8) நடக்க உள்ளது. இந்தியா சார்பில் 84 விளையாட்டு நட்சத்தி ரங்கள், 95 அதிகாரிகள் (பயிற்சியாளர் உட்பட) என மொத்தம் 179 பேர் பாரிஸ் செல்கின்றனர்.குஜராத்தை சேர்ந்தவர் பவினா படேல் கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021), கிளாஸ் 4 பிரி வில் வெள்ளி வென்று சாதனை படைத்தார். பாரிஸ் மண்ணிலும் சாதிக்க காத்திருக்கிறார்.சீன வீராங்கனைகளில் சவாலை சமாளிப் பேன். பதக்கத்துடன் இந்தியா திரும்பு வேன்."என பவினா படேல் தெரிவித்தார்.

Aug 24, 2024

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகள் துப்பாக்கி சூடுதல் பாராலிம்பிக் போட்டி

பாரா   துப்பாக்கி சூடுதல் மாற்றுத்திறனாளிகள் ராஜஸ்தானை சேர்ந்த, வீராங்கனை மோனா அகர்வால் இவர் கூறுகையில் நானும் என் கணவரும் மாற்றுத்திறனாளிகள் எங்களது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருவதே இலக்கு பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதிப்பேன் என்றார்.சமீபத்தில் கணவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சோகங்களை கடந்து டில்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தங்கம் வென்றார்.ராஜஸ்தானை சேர்ந்தவர் அவனி லெக்கேரா வயது 22 தனது 11 வது வயதில் கார் விபத்தில் சிக்கினார். இடுப்பு பகுதிக்கு கீழ் பாதிக்கப்பட வீல் சேர் வாழ்க்கைக்கு மாறினார். தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் ஜொலித்தார். டோக்கியோ பாராலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர்ரைபிள், 3 பொசிஷன் பிரிவில் வெண்கலம் வென்றார். மீண்டும் சாதிக்கும் இலக்குடன் பாரிஸ் பாராலிம்பிக்கில் களமிறங்குகிறார்.டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்றதால், இம்முறை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளது. கடந்த மார்ச்சில் எனது பித்தப்பையில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக ஆப்பரேஷன் செய்து கொண்டேன். இதிலிருந்து மீள ஒன்றரை மாதம் தேவைப்பட்டது. மீண்டும் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

Aug 23, 2024

சோதனைகளை கடந்து சாதிக்கின்ற பிரணவ் சூர்மாவின் நம்பிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்க உள்ளது இந்தியா சார்பில் 84 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இவர்களது வாழ்க்கை பயணம் கடினமானது. மனஉறுதியுடன் சோதனைகளை கடந்து சாதிக்கின்றனர்.ஹியானாவின் பரிதாபாத்தை சேர்ந்தவர் பிரணவ் சூர்மா வயது 29 இவரது 16-வது வயதில் 2011-ம் ஆண்டு பெரும் சோகத்தை சந்தித்தார். வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழ இடிபாடுகளில் சிக்கினார். தண்டுவடம் பாதிக்கப்பட, நடக்க முடியவில்லை. பின் வீல்சேரில் வாழ்க்கையை தொடர்ந்தார். மனம் தளராமல் போராடினார். பி.காம் முடித்தார் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பரோடா வங்கியில் துணை மேனேஜர் ஆனார்.உலக விளையாட்டு அரங்கில் என் பெயரை ஒலிக்க செய்யவும். பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், பாரிஸ் பாராலிம்பிக் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்வேன். பதக்கத்துடன் இந்தியா திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார் .சின்க்பீல்டு செஸ் கோப்பை -பிரக்ஞானந்தா, குகேஷ் ஆட்டம் டிராஅமெரிக்காவில் நடக்கும் சின்க்பீல்டு கோப்பை செஸ் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினர். 62-வது நகர்த்தலின் போது  ஆட்டம் டிரா ஆனது.

Aug 22, 2024

பிரான்ஸ் பாரிசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆண்கள் ஹாக்கியில் அசத்திய இந்திய அணி வீரர் ஸ்ரீஜேஷிற்கு அரசு ரூ.2 கோடி பரிசுத்தொகை

பிரான்சில் பாரிசல் 33-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆண்கள் ஹாக்கியில் அசத்திய இந்திய அணி 1972-க்குப் பின்அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் 2021, 2014 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இதற்கு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கிய காரணமாக இருந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என முன்னணி அணிகளை சாய்க்க கைகொடுத்தார். இத்தொடர் முழுவதும் ஜொலித்த இவர் 8 போட்டியில் எதிரணிகள் 12 கோல் மட்டும் அடிக்க விட்டார். ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஒய்வு பெற்ற ஸ்ரீஜேஷ், இந்திய ஜீனியர் அணி பயிற்சியாளராக செயல்பட  காத்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவருக்கு அம்மாநில அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Aug 22, 2024

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று துவங்குகிறது.

இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் யுடிடி தொடர் நடத்தக்படுகிறது. சென்னை, டில்லி, கோவா உட்படி 6 அணிகளுடன் இம்முறை கூடுதலாக ஆமதாபாத், ஜெய்ப்பூர் என மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. இதன் ஐந்தாவது சீசன் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று துவங்குகிறது. 8 அணிகள் இரு பிரிவுகாளக பிரிக்கப்பட்டு போட்டி நடக்கும். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு ஆண்கள் ஒற்றையர், இரண்டு பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் என 5 ஆட்டம் இருக்கும். இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கோவா, அறிமுக அணியான ஜெய்ப்பூர் மோதுகின்றன.ஒவ்வொரு அணியிலும் தலா 2 வெளிநாட்டு நட்சத்திரங்கள் 4 இந்திய நட்சத்திரம் என 6 பேர் இடம் பெற்றுள்ளனர். 8 அணியில் 12 சர்வதேச 36 இந்தியர் என மொத்தம் 48 பேர் களமிறங்குகின்றனர்.

Aug 21, 2024

'டி-20' உலக கோப்பை  வங்கதேசத்தில் இருந்து எமிரேட்ஸ்க்கு மாற்றம்

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார் பில், வங்கதேசத்தில் பெண்களுக்கான 'டி20'உலக கோப்பை தொடர் வரும் அக்., 3-20ல் நடக்க இருந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டது. பிரதமர் ஷேக்  ஹசீனா பதவி விலக, ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது.இதன் காரணமாக இத்தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு  மாற்றப்பட்டது. இங்குள்ள துபாய்,சார்ஜாவில் போட்டி நடக்க உள்ளன.டி20 உலகக் கோப்பை: 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

Aug 21, 2024

கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, குகேஷ்

கிராண்ட் செஸ் தொடரின் 9வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. ஒட்டுமொத்த புள் ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பை கொண்டு செல்வார். குகேஷ்கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருவரும் சமபலத்தில் விளையாடினர்.18வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, லிரென் முந்தினார். இருப்  பினும், 20 வது நகர்த்தலில்  லிரென் தவறு காரணமாக,  சமநிலைக்கு சென்றது.பின் 28 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, நாடிர்  பெக் (உஸ்பெகிஸ்தான்) மோதினர். இப்போட்டி  36வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.பிரக்ஞானந்தா, குகேஷ் 8, 9 வது இடத்தில் உள்ளனர்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 24 25

AD's



More News