25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Oct 08, 2024

முதல்வர் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் சென்னை வீரர் ஆகர்ஷ், தங்கம் வென்றார் .

 சென்னையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. நேற்று, கல்லுாரி மாணவர்களுக்கானஜிம்னாஸ்டிக்போட்டியில், சென்னையைசேர்ந்தஆகர்ஷ்,12.30 புள்ளிகள்பெற்றுதங்கத்தையும், கவுசிக் 9.65 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்றனர். கோவையைச் சேர்ந்த மத்னேஷ், 8.05 புள்ளிகள் பெற்று வெண்கலத்தை பெற்றார்.. பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம் போட்டியில் 44-55 கிலோ பிரிவில் திருச்சி சந்தோஷ், சேலம் மதனை, 16-10 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் பெற்றார். 75 கிலோ பிரிவில், நாமக்கல் நதீஷை, சென்னை ஹரிகரன் 24 - 20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

Oct 08, 2024

சர்வதேச ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன்  வெற்றி 

அமெரிக்காவின் நியூ யார்க்கில் ஓபன் ஸ்கு வாஷ் கிளாசிக் தொடர் நடக்கிறது.ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், சுவிட்சர்லாந்தின் வில் ஹெல்மியை சந்தித்தார். 3-1 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார்.மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங், கொலம்பியா வின் ஜூவான் வர்காசை எதிர்கொண்டார்.இதில் அபேசிங்3-1 என (11-5, 7-11, 11-9, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

Oct 07, 2024

மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி 12வது சீசன் வரும் அக்டோபர் 19-26-ல் நடக்கிறது.

மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி 12வது சீசன் வரும் அக்டோபர் 19-26-ல் நடக்கிறது.இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் (அக்டோபர் 19) ஐப்பானை சந்திக்கிறது. அதன்பின் பிரிட்டன் (அக்டோபர் 20) மலேசியா (அக்டோபர் 22) ஆஸ்திரேலியா (அக்டோபர் 23) நியூசிலாந்து (அக்டோபர் 25)/ அணிகளை எதிர்கொள்கிறது. பைனல், அக்டோபர் 26-ல் நடக்கிறது. இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக அமிர் அலி, துணை கேப்டனாக ரோகித் அறிவிக்கப்பட்டனர். 

Oct 07, 2024

ஐ.சி.சி சார்பில் பெண்களுக்கான 9-வது T-20 உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு  எமிரேட்சில் நடக்கிறது.

ஐ.சி.சி சார்பில் பெண்களுக்கான 9-வது T-20 உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு  எமிரேட்சில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த 'A' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.இந்திய அணியின் அபார பந்து வீச்சில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. ரேணுகாசிங் வேகத்தில் குல்பெரோசா (0) போல்டானார். அமின் (8) ஓமைமா (3) நிலைக்கவில்லை. முனீபா அலி, 17 ரன்னுக்கு வெளியேற, 13 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 58 ரன் எடுத்து தத்தளித்தது.பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 105 ரன் மட்டும் எடுத்தது. இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்தது. இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தீப்தி சர்மா (7) சஜனா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

Oct 05, 2024

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, குரோஷியாவின் டோடிக் ஜோடி வெற்றி.

சீனாவில், ஷாங்காய் மாஸ்டர்ஸ்   டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன், போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, ஸ்பெயினின் பாப்லோ பஸ்டா, பெட்ரோ மாட்டினஸ் ஜோடியை எதிர்கொண்டது.63 நிமிடங்கள் நீடித்த தொடக்க சுற்று ஆட்டத்தில் ஐந்தாம் நிலை இந்திய-குரோஷிய ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய இந்திய -குரோஷிய ஜோடி,இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

Oct 05, 2024

இந்திய கிரிக்கெட் போர்டு பி.சி.சி.ஐ ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சரத்குமார் நியமனம்

இந்திய கிரிக்கெட் போர்டு பி.சி.சி.ஐ ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சரத்குமார் நியமனம்.3 ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார். 

Oct 05, 2024

T-20 பெண்கள் உலக கோப்பை முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான 9-வது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. A பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில் வலிமையான நியூசிலாந்தை எதிர்கொண்டது.நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன் குவித்தது. கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷபாலி 2, மந்தனா 12 மோசமான துவக்கம் கொடுத்தனர். இந்திய அணி 19 ஓவரில் 102 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

Oct 05, 2024

பிஜிங்கில் நடக்கும் சீன ஒப்ன் டென்னிஸ் காலிறுதியில் பெலாரசின் சபலென்கா 6-7, 6-2, 4-6, என செக்குடியரசின் கரோலினா முசோவா வெற்றி

பிஜிங்கில் நடக்கும் சீன ஒப்ன் டென்னிஸ் காலிறுதியில் பெலாரசின் சபலென்கா 6-7, 6-2, 4-6, என செக்குடியரசின் கரோலினா முசோவாவிடம் தோல்வி அடைந்தார் .

Oct 03, 2024

உலக ஜீனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

பெருவில் உலக ஜீனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் திவான்ஷி, 577.19 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். பைனலில் அசத்திய இவர், 35 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.ஆண்களுக்கான தனிநபர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு பைனலில் இந்தியாவின் முகேஷ் நெலவல்லி. 555 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் சூரஜ் சர்மா 583 புள்ளி வெள்ளி வென்றார். இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெள்ளிப்பதக்கம் ஆனது.ஆண்கள் அணிகளுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் முகேஷ் (585) சூரஜ் (583) பிரத்யும்ன் சிங்(561) அடங்கிய இந்திய அணி 1726 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றியது.

Oct 01, 2024

தெற்காசிய கால்பந்தில் கோப்பை வென்றது இந்தியா

பூடானில் 17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 9வது சீசன் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், உட்பட மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி யூத் பிரிவில் 6-வது முறையாக (2013, 2017, 2019, 2022, 2023,2024) தெற்காசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 24 25

AD's



More News