மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், நேற்று மாலை 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 69-வது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன்களான மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின.. டாஸ் வென்ற மும்பை அணி பீல்ட்ங் தேர்வு செய்தார். ராஜஸ் தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. மும்பை அணி 20 ஓவரில் 175/9 ரன்களே எடுக்க முடிந்தது.
ஆஸ்லோ நகரில் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம். 5-ந்தேதி வரை நடக்கிறது.உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல் சென் (நார்வே), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), அலிரெஜா பிரோஸ்ஜா (பிரான்ஸ்), வெஸ்லி சோ (அமெரிக்கா) ஆகிய 6 முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர் வாகை சூடுவார். இதேபோல் 10 சுற்று கொண்ட இதன் பெண்கள் பிரிவில் ஜூ ஜினெர், ஜூ வென்ஜன் (இருவரும் சீனா), கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் (இருவரும் இந்தியா), அன்னா முசிசுக் (உக்ரைன்) பிபிசரா அசாப யேவா (கஜகஸ்தான்) ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.
பெங்களூரு, ஹைதெராபாத் அணிகள் நேற்று ஹைதெராபாத்தில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற ஹைதெராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல்.-ல் ஐதராபாத்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும், பெங்களூரு அணி 20 ஓவரில்200/4 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
. சென்னை, குஜராத் அணிகள், நேற்று ஆமதாபாத், மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின. குஜராத் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி விட்டது. தனது கடைசி லீக் போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி சென்னை களமிறங்கியது. 'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார். குஜராத் அணி 20 ஓவரில் 229/4 ரன் குவித்தது. சென்னை அணி 13.4 ஓவரில் 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி ,பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.
கோலாலம்பூரில் மலேசிய மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500' பேட்மிண் டன் போட்டி,நேற்று நடந்த பெண்கள் ஒற் றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சலிஹா அஷ்மிதா 21-13, 21-16 என்ற நேர்செட்டில் மலேசியாவின் கோஹ் ஜின் வெய்யை எளிதில் வீழ்த்தி கால் இறுதிக்குமுன்னேறினார். இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத், மற்றொரு ஆட்டத்தில் 21-16, 8-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிஜார்ஸ் பெல்ட்டிடமும் , தேவிகா சிஹாக் 16-21, 13-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் யூபெய்யிடம் தோற்று வெளியேறினார்.இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-எம்.ஆர்.அர்ஜூன் இணை 14-21, 15–21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹூகிய் யூயான்–லின் ஜியாங்யி ஜோடியிடம் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான், லக்னோ அணிகள், நேற்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின.லக்னோ அணி ஏற்கனவே 'பிளே - ஆப்' வாய்ப்பை இழந்துவிட்டது. ராஜஸ்தான் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. டாஸ்' வென்ற தற்காலிக கேப்டன் ஜெய்ஸ்வால், 'பவுலிங்' தேர்வு செய்தார். லக்னோ அணி 20 ஓவரில் 220/5 ரன் குவித்தது. ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 225/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் "கோலாலம்பூரில் ,நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, இத் தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற பிரான்சின் கிறிஸ்டோபோபோவ், டோமா போபோவ் சகோதரர்கள் ஜோடியை எதிர் கொண்டது.முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட 21-15 என எளிதாக வசப்படுத்தியது. 36 நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 21-19, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.இந்தியாவின் அஷ்மிதா ,பெண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றில் 21-23, 21-16, 21-16 न செட் கணக்கில் சீன தைபேவின் பாய் யு போவை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் சாத்வித் ரெட்டி கனபுரம், ராதிகா சர்மா ஜோடி கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்றில் 21-15, 21-17 என மலேசியாவின் தது ஆனிப், கிளாரிசா ஜோடியை வென்றது.
சென்னை, ஐதராபாத் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற சென்னைகேப்டன் ருதுராஜ், 'பேட்டிங்' தேர்வு செய்தார். சென்னை அணி 20 ஓவரில் 180/7 ரன் எடுத்தது. ஐதராபாத் அணி, 19 ஓவரில் 181/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரோம் நகரில் நடந்த இத்தாலி ஓபன் சர்வதேசடென்னிஸ் போட்டி நேற்று முன்தினம்இரவு ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர்ஜானிக் சினெர் (இத் தாலி), கேஸ்பர் ரூட்டுடன் (நார்வே) மோதினார். சினெர் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்து முதல் முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இத்தாலி ஓபனை இத்தாலி வீரர் ஒருவர் வெல்வது 1976-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். அவருக்கு ரூ.11% கோடியும், 2-வது இடம் பிடித்த கேஸ்பருக்கு ரூ.6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.இதற்கு முன்புசெர்பியாவின்நோவக்ஜோகோவிச் 2018ம்ஆண்டுமாஸ்டர்ஸ்பட்டத்தைமுழுமையாகவென்றுசாதனை படைத்திருந்தார். இச்சாதனையை நிகழ்த்திய 24 வயதான இளம் வீரர் சினெர் 'இத்தாலி ஓபனை 50 ஆண்டுக்கு பிறகு வென்ற இத்தாலி வீரர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
இமாசலம் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் நேற்று பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 222/4 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி, 20 ஓவரில் 199/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றது.