25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Oct 01, 2024

இந்தியன் ஒபன் தடகள போட்டியில் வெள்ளி வென்றார் ஸ்ரீராம்.

23 வயதுக்குட்பட்ட பீகாரில் நேற்று மூன்றாவது கடைசி நாள் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஸ்ரீராம், அதிகபட்சம் 770 மீட்டர் தாண்டி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் சன்மத் தர்ஷன் (7.68 மீட்டர்) வெண்கலம் கைப்பற்றினார் கேரளாவின் அனுராக் (7.87 மீட்டர்) தங்கம் வசப்படுத்தினார்.ஆண்களுக்கான 200 மீட்டர் ஒட்டத்தில் தமிழகத்தின் தமிழ் அரசு, 2152 வினாடி நேரத்தில் ஒடி, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார். இவர் ஏற்கனவே 100 மீட்டர் ஓட்டத்திலும் வெண்கலம்வென்றிருந்தார்.பெண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டியில் தமிழகத்தின் தீபிகா, மொத்தம் 4975 புள்ளி எடுத்து வெண்கலம் கைப்பற்றினார்.

Sep 30, 2024

இன்று நடக்கும் தெற்காசிய கால்பந்து தொடர்  பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

.பூடானில் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து தொடர் நடக்கிறது. நடப்பு சாம்பியன், இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 7 அணிகள் மோதுகின்றன. 'A' பிரிவில் வங்கதேசம், மாலத்தீவை வென்ற இந்தியா, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.இதில் நேற்று 'B' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த நேபாள அணியை சந்தித்தது. முதல் பாதியில் இரு அணிகளும், கோல் அடிக்கவில்லை. இன்று நடக்கும்  தெற்காசிய கால்பந்து தொடர்  பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

Sep 30, 2024

ஐ.பி.எல். தொடரின் 18 வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதம் நடக்கவுள்ள வீரர்களுக்கு  வீரர்கள் ஒப்பந்த தொகை தவிர ,ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் ரூ.7.5 லட்சம் தரப்படும்

ஐ.பி.எல். தொடரின் 18 வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதம் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்க முன்னதாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம். விடுவிக்கப்பட்ட வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்பது குறித்து முடிவெடுக்க, ஐ.பி.எல் கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஏலத்தொகை ரூ.120 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டினை விட ரூ.20 கோடி அதிகம் தவிர அணிகள் தலா 6 வீரர்களை தக்கவைக்கலாம். விடுவிக்கப்பட்ட வீரரை மீண்டும் வாஙகிக் கொள்ளம் வகையிலான 'ரைட் டு மேட்சி முறை நீடிக்க உள்ளது. எனினும் இதுகுறித்து இறதி அறிவிப்பு வெளியாகவில்லை.பி.சி.சி.ஐ. செயலர் ஜெய் ஷா வெளியிட்ட செய்தியில் முதன்முறையாக ஐ.பி.எல். போட்டி சம்பளம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.5 லட்சம் தரப்படும். ஒரு சீசன் முழுவதும் களமிறங்கும் வீரருக்கு ரூ.1.05 கோடி கிடைக்கும், இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ.12.60 கோடி ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் வீரர்கள் ஒப்பந்த தொகை தவிர ஒரு போட்டியில் களமிறங்கினால், தனியா ரூ.7.5 லட்சம் சம்பளம் பெறவுள்ளனர்.

Sep 30, 2024

இந்தியன் ஒபன் தடகள போட்டி உயரம் தாண்டுதலில் கோபிகா தங்கம்.,ஜப்பான் சாலஞ்ச் கோப்பை தங்கம் வென்றார் குல்வீர்.

இந்தியன் ஒபன் தடகள போட்டி 23 வயதுக்குட்பட்ட பீஹாரில் நடக்கிறது. நேற்று இரண்டாவது நாள் போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா, அதிகபட்சம், 1.76 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதே உயரத்தை குஜராத்தின் பயலுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இருவரும் இந்தியன் ஒபன்  தடகளத்தின் சாதனையை சமன் செய்தனர். ஜப்பான் சாலஞ்ச் கோப்பை தங்கம் வென்றார் குல்வீர்.ஜப்பானில் யோகிபோ உலக தடகள சாலஞ்ச  கோப்பை நடந்தது. 500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 13.11.82 வினாடி தங்கம் வென்று, தேசிய சாதனை படைத்தார். 

Sep 28, 2024

மக்காவ் ஓபன் பாட்மின்டனில்  காயத்ரி, திரீசா ஜோடி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தனர். 

   ஒபன் “சூப்பர் 300 பாட்மின்டன் தொடர் மக்காவில் நடக்கிறது. இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனதை பேயின் யின்- ஹூய் ஹசு, ஜி யுன் லின் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-17 என வென்றது.39 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் கா லாங் அங்கஸ் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.  

Sep 28, 2024

இந்தியா, வங்கதேசம் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அஷ்வின், ஆகாஷ் தீப் அபார ஆட்டம்.

இந்தியா வந்துள்ள வங்ககேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது கடைசி டெஸ்ட் உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நேற்று துவங்கியது.முதல் நாள் இரவு பெய்த மழை காரணமாக, போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் துவங்கியது. வங்கதேச அணிக்கு ஷாத்மன், ஜாகிர் ஹசன் ஜோடி துவக்கம் தந்தது. ஆகாஷ் தீப் வேகத்தில் ,ஜாகிர் ஹசன் வெளியேறினார். மீண்டும் மிரட்டிய ஆகாஷ் இம்முறை ஷாத்மனை  அவுட்டாக்கினார். வங்கதேச அணி 29/2 ரன் என திணறியது.இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 அஷ்வின் 1 விக்கெட் சாய்த்தனர். ஆசிய மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் கும்ளேவை (419) முந்தி, இரண்டாவது இடம் பிடித்தார். இந்தியாவின் அஷ்வின் 420 விக்கெட்.கான்பூரில் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடியுடன் கூடிய மழை வர 98 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் இரண்டாவது நாள் முழுவதும் போட்டி நடப்பது. சந்தேகம்.

Sep 27, 2024

மூன்றாவது 'யூத்' ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

புதுச்சேரியில், 19 வயதுக்குட்பட்ட இந்தியா, ஆஸ்திரே லியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட 'யூத்' ஒருநாள் தொடரில் பங்கேற்றன. முதலிரண்டு போட்டி யில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி யது. நேற்று, மூன்றா வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ் திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் டுக்கு 324 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆலிவர் பீக் (111), ஸ்டீவன் ஹோகன் (104) சதம் கடந்து கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்றஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட் டுக்கு 317 ரன் எடுத்து அதிர்ச்சி தோல்விய டைந்தது.இந்தியா சார்பில் ஹர்திக் ராஜ் 3, கிரண் சோர்மலே, யுதாஜித் குஹா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.வெற்றி கண்ட இந்தியா 3-0 என, தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

Sep 27, 2024

மக்காவ் ஓபன் பாட் மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் தகுதிபெற்றார்.

மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வதுசுற்றில் இந்தியாவின்ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி மோதினர். மொத்தம் 37 நிமிட ம் நீடித்த போட்டி யில் ஸ்ரீகாந்த் 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறு திக்குள் நுழைந்தார். பெண்கள் இரட்டை யர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி 22-20, 21-11 என  சீனதைபேயின் சி- சுன் லின், சுன் சன் டெங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. பெண்கள் ஒற்றை யர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தஸ்னிம் மிர் 17-21, 21-13, 10-21 என ஜப்பானின் டோமோகா மியாசகியிடம் தோல்வியடைந்தார்.கலப்பு இரட்டை யர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமீத், சிக்கி ரெட்டி ஜோடி 17-21, 14-21 என மலேசியா வின் டியன் சி வோங், சீவ் சியன் லிம் ஜோடியிடம் தோல்விய டைந்தது.

Sep 26, 2024

பாரிசில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் காசோலைகளை வழங்கினார்.

பாரிசில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு 2 கோடி, வெண்கலம் வென்ற வீராங்கனைகள் நித்யஸ்ரீ, மனிஷா உயரம் தாண்டுதலில் வெண்கலம், வென்ற மாரியப்பன் ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Sep 26, 2024

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற செஸ் வீரர்கள், வீராங்கனைகள்.

.ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் செஸ் ஒலிம்பியாட் 45 வது சீசன் சமீபத்தில் நடந்தது. தமிழக வீரர்கள் குகேஷ் ஸ்ரீநாத், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட பலர் பங்கேற்ற இந்தத் தொடரின் 11 சுற்றுகளின் முடிவில், இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணி முதலிடம் பிடித்தது. இதன் வாயிலாக தங்கப் பதக்கஙகளை முதன்முறையாக வென்று வரலாற்ற சாதனையையும் படைத்தது இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் சாதனைப் படைத்த இந்திய அணியினரை சந்தித்து வாழ்த்து கூற பிரதமர் மோடி முடிவு செய்தார்.திடீரென இந்த சந்திப்பு முடிவு செய்யப்பட்டது செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி, அஜர்பைஜானில் நடந்த செஸ் தொடரில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார் இந்திய செஸ் அணியினரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானதை அறிந்த அவர், உடனே நாடு திரும்ப முடிவு செய்தார். இதையடுத்து. அஜர்பைஜான் செஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், தனக்கு பதிலாக கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் பங்கேற்பார் ,எனவும் போட்டி குழுவினரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு செஸ் பலகை ஒன்றை, இந்திய செஸ் அணியினர் வழங்கினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 24 25

AD's



More News