ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் நேற்று 49வது லீக் ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பீல்ட்ங் தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி 20 ஓவரில், 202/7 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.
சென்னை, டெல்லி அணிகள்,நேற்று டெல்லியில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல் பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணி 20 ஓவரில், 155/7 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 17.3 ஓவரில் 159/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 87 ரன்கள் எடுத்தார்.
'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர் சுவீடனின் மால்மோ நகரில், நடக்கிறது. இந்தி யாவின் அர்ஜுன் எரிகைசி ,5 முறை உலக சாம் பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், உள்ளிட்ட 8 பேர் பங்கேற் கின்றனர்.இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ் தானின் நாடிர்பெக்கை ,4வது சுற்றில் எதிர்கொண்டார்.துவக்கத்தில் இருந்து இருவரும் சமபலத்தில் விளையாடி,. முடிவில், 62 நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் கார்ல்சன், நெதர்லாந்தின் ஜோர்டென் -பாரீஸ்ட் மோதி,. 88 நகர்த்தல் வரை நீடித்த இப்போட்டி யில், கார்ல்சன் தோல்வியடைந்தார்.நான்கு சுற்று முடிவில் துருக்கியின் யாஜிஸ் (3.0) முதலிடத் தில் உள்ளார். உஸ்பெ கிஸ்தானின் நாடிர்பெக், அர்ஜுன் தலா 2.5 புள் ளியுடன் அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
மும்பை, லக்னோ அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற, மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்ட்ங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த, லக்னோ அணி 20 ஓவரில் 228/5 ரன்கள் எடுத்தது. மும்பை அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பைக்கு இது 3-வது வெற்றியாகும். லக்னோவுக்கு 7-வது தோல்வியாகும்.
கொல்கத்தா, ஹைதெராபாத் அணிகள்நேற்று மாலை ஹைதெராபாத்தில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது . கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத், பஞ்சாப் அணிகள், நேற்று ஆமதாபாத்தில் நடந்த போட்டியில், மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பீல்ட்ங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 163/9 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி 19.5 ஓவரில் 167/4 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.
டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில், இந்தியா ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் ,தாமஸ் கோப்பை போட்டியில், இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. காயம் காரணமாக லக்ஷயா சென் ஆடவில்லை. மற்ற இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் நேர் செட்டில் தோல்வி அடைந்தனர். முடிவில் பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்தியா வெண்கலப்ப தக்கத்துடன் திருப்தி கண்டது. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இது 5-வது முறையாகும்.
லீக் போட்டிநேற்று, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது. சென்னை அணி 18.1 ஓவரில் 160/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
.டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில், ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 2022-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, சீன தைபேவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின்முடிவில்இந்தியஅணி 3-0 என்றகணக்கில்சீன தைபேயை வென்று அரைஇறுதிக்குமுன்னேறியது.வெண்கலப்பதக்கத்தை உறுதிசெய்தது.இந்திய வீரர் லக்ஷயா சென்முதலாவது ஒற்றையர் ஆட்டத்தின், சரிவில் இருந்து மீண்டு வந்து 18-21, 22-20, 21-17 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரான சோய் டிம் சென்னை (சீன தைபே) வென்றார்.இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணைந்து, அடுத்துநடந்த இரட்டையர் ஆட்டத்தில் 23-21, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் சியுஹிசாங்சிக்- வாங்சிலின் (சீன தைபே)ஜோடியை வென்றனர். இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் 8-ம் நிலை வீரரான லின் சுன் யியை (சீன தைபே). இந்திய அணி, அரை இறுதியில் ,பிரான்ஸ் அல்லது ஜப்பானை சந்திக்கும்.
ராஜஸ்தான், டில்லி அணிகள்நேற்று ஜெய்ப்பூரில் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 225/6 ரன் எடுத்தது. டெல்லி அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.