25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளையாட்டு (SPORTS)

Sep 18, 2024

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி, இந்திய அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது

50 நிமிடங்கள் வரை போராட்டம் நீடித்த நிலையில் ,இந்திய வீரர் ஜூக்ராஜ் சிங் முற்றுப்புள்ளி வைத்தார். 51-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் சீன வீரர்களுக்கு லாவகமாக தட்டிக் கொடுத்த பந்தை ஜூக்ராஜ் ஓங்கி அடித்து வலைக்குள் அனுப்பி இந்திய வீரர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். கோலாகவும் அமைந்தது. கடைசி 4 நிமிடங்களில் சீனா கோல் கீப்பரை எடுத்து விட்டு கூடுதலாக ஒரு வீரரை இறக்கிப் பார்த்தும் பலன் இல்லை.முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது. தொடரில் தோல் வியே சந்திக்காமல் வீறுநடைபோட்ட இந்தியா, ஏற்கனவே - 2011, 2016, 2018, 2023- ம் ஆண்டுகளிலும் இந்த கோப்பையை வென்றது. வேறு எந்த அணியும் 3 முறைக்கு மேல் வென்றதில்லை.தொடரில் மொத்தம் 7 கோல்கள் அடித்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்க்  தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கையோடு இந்தபோட்டிக்கு வந்த இந்தியா மீண்டும் 'ஆசியா கிங்' என்பதை நிரூபித்து காட்டி விட்டது.  சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் தொடர் முழுவதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. லீக் சுற்றில் 5 போட்டியிலும் வெற்றி பெற்றது. அரை யிறுதியில் தென் கொரியா, பைனலில் சீனா என பங்கேற்ற 7 போட்டியில் 100 சதவீத வெற்றியுடன் கோப்பை கைப்பற்றியது.கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் ஒவ் வொருவருக்கும் தலா ரூ. 3 லட்சம் தருவதாக இந்திய ஹாக்கி அமைப்பு அறிவித்துள்ளது. தவிர சக பயிற்சி யாளர்களுக்கு தலா ரூ. 1.5 லட்சம் தரப்பட உள்ளது.  வீரர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட இந்திய தேசிய கீதம் இசைக்கப் பட்டது. 

Sep 18, 2024

செஸ் ஒலிம்பியாட்:டில் இந்தியா 12 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 48வது சீசன் ,ஓபன் பிரிவு ஆறாவது சுற்றில் இந்திய அணி, ஹங்'கேரியை எதிர்கொண்டது. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் களமிறங்கினர். குகேஷ், பிரக்ஞானந்தா தங்களது போட்டியை 'டிரா' செய்தனர்.மற்றொரு போட்டியில் அர்ஜுன், சனன் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், முதலில் பின் தங்கிய இவர், 57 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். விதித் சந்தோஷ், பெஞ்ஜமினை வென்றார். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில், தொடர்ந்து ஆறாவது வெற்றி பெற்றது. நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென், வியட்நாம் வீரர் லீ லியமிடம் தோல்வியடைய, போட்டி 2.0-2.0 என சமன் ஆனது. இந்திய அணி 12 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.இந்திய பெண்கள் அணி ஆறாவது சுற்றில், ஆர்மேனியாவை சந்தித்தது. முதலில் வைஷாலி 'டிரா' செய்தார். இளம் வீராங்கனை திவ்யா, எலினாவை வீழ்த்தினார். மற்ற இரு போட்டிகளை ஹரிகா, தானியா 'டிரா' செய்தனர்.முடிவில் இந்திய அணி 2.5-1.5 ம். என இத்தொடரில் ஆறாவது வெற்றி பெற்றது. 12 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது

Sep 17, 2024

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா 5 வது வெற்றி பெற்றது.

ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி ஐந்தாவது சுற்றில் கஜகஸ்தானடன் மோதியது. இந்தியாவின் வந்திதா வெற்றி பெற, திவ்யா தனது போட்டியை டிரா செய்தார். மற்றொரு போட்டியில் ஹரிகா தோல்வியடைய ஸ்கோர் 1.5-1.5 என சமன் ஆனது. இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட வைஷாலி கஜகஸ்தானின் பிபிசாராவை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 2.5-1.5 என இத்தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றது. 10 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.ஒபன் பிரிவு ஐந்தாவது சுற்றில் இந்திய அணி அஜர்பெய்ஜானை சந்தித்தது. இந்தியா சார்பில் குகேஷ் அர்ஜீன், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் களமிறங்கினர். குகேஷ் அய்டின் சலேமானை சந்தித்து 38வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அர்ஜீன் ராப் மமதோவை வென்றார். பிரக்ஞானந்தா, விதித் தங்களது போட்டிகளை டிரா செய்தனர். முடிவில் இந்திய அணி 3-0, 1-0, என்ற கணக்கில் இத்தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றது. 10 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Sep 17, 2024

ஆசிய ஹாக்கி இன்று சீனாவுடன் பைனல்,  மோதல்

அரையிறுதியில் நேற்று இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொண்டது. முடிவில் இந்திய அணி 4-1 என் கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் கொரியா வெளியேறியது. ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இந்தியா இன்று நடக்கும் பைனலில் சீனாவை சாய்த்து மீண்டும் கோப்பை வெல்ல காத்திருக்கிறது.

Sep 16, 2024

செஸ் ஒலிம்பியாட் 4வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.

ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு நான்காவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, செர்பியாவை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்தியாவின் குகேஷ், செர்பியாவின் அலெக்சாண்டர் பிரெட்கே மோதினர். குகேஷ், 85வது நகர்த்தலில் வென்றார்.இந்தியாவின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்ஸி சரணா மோதிய மற்றொரு போட்டி 23வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 3.5- 0.5 என்ற கணக்கில் வரிசையாக 4வது வெற்றியை பதிவு செய்தது. நான்கு சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. பெண்களுக்கான நான்காவது சுற்றில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியில் இந்தியாவின் ஹரிகா, பிரான்சின் டாலிட்-கார்னெட் டீமான்டே மோதினர் வெள்ளை நிற காய்களுடன் சாமர்த்தியமாக விளையாடிய ஹரிகா, 52வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் வைஷாலி, பிரான்சின் மில்லியட் சோபி மோதிய மற்றொரு போட்டி, 26வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.மற்ற போட்டிகளில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், தனியா சச்தேவ் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.  

Sep 16, 2024

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2–1 என பாகிஸ்தானை வீழ்த்தியது.

சீனாவின் ஹீலுன்பியுரில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 8வது சீசன் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நான்கு போட்டியில் சீனா, ஐப்பான், மலேசியா, தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, முதல் அணியாக அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.இதற்கு 13, 19-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் இந்திய கேப்டன் ஹர்மனபிரீத் சிங் 2 கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது. நேற்று இந்தியா பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. கடைசி 10 நிமிடம் மீதமிருந்த போது இந்தியாவின் கோல் எல்லை பகுதிக்குள் பாகிஸ்தானின் அஷ்ரப் வாஹித் ராணா, இந்தியாவின் ஜக்ராஜ் சிங் மோதிக்கொண்டனர்.இதில் ஜக்ராஜ் சிங் கீழே விழுந்ததில் லேசாக காயம் அடைந்தார். அப்போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், ஐர்மன்பிரீத் சிங், பாகிஸ்தான் வீரர் ராணாவுடன் வார்த்தை மோதலில் ஈடுபட பதட்டம் ஏற்பட்டது.உடனடியாக அம்பயர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். இச்சம்பவம் குறித்து டிவி அம்பயரிடம் ரிவியூ கேட்கப்பட்டது. இதில் ராணாவின் தவறு உறுதியானதால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பாகிஸ்தான் அணி கடைசி 10 நிமிடம் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

Sep 14, 2024

மாரியப்பனுக்கு  சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு 

 பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து மூன்று முறை (2016ல் தங்கம், 2021ல் வெள்ளி, 2024 வெண்கலம்) பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என சாதனை படைத்தவர் தமிழகத்தின் மாரியப்பன் நேற்று இவர்  சென்னை திரும்பினார்.  அவருக்கு சென்னை விமான  நிலையத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் உற்சாக , வரவேற்பு அளித்தனர்.

Sep 14, 2024

சமூக வலைத்தளங்களில் 100 கோடிபேர் பின்பற்றும் உலகின் முதல் பிரபலம் ரொனால்டோ

 போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டி யானோ ரொனால்டோ 39. சமீபத்தில் கால்பந்து ன் அரங்கில், அதிகாரப்பூர்வ மாக 900 கோல் அடித்த ளி முதல் வீரர் என சாதனை படைத்தார். இன்ஸ்டாகி - ராமில் (63.9 கோடி பேர்) 2 அதிகம் பின்பற்றப்படும் நபராக உள்ளார். தவிர பேஸ்புக்கில் 17 கோடி பேர், டுவிட் டரில் 11.3 கோடி பேர் ரொனால்டோவை பின்பற் றுகின்றனர்.சீனாவின் சமூ கவலைத்தளங்களில் 1.7 கோடிரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர் சமூக வலைதளங்களில் 100 கோடி பேர் பின்பற்றும் உலகின் முதல் பிரபலம் என சாதனை படைத் துள்ளார் ரொனால்டோ. 

Sep 14, 2024

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, 48 பதக்கம் வென்ற இந்தியா

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், நான்காவது சீசன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.  ஒட்டு மொத்தமாக 48 பதக்கம் வென்ற இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் மொத்தம்30 பிரிவுகளில் போட்டி நடந்தன. இதில் இந்தியா, 21ல் தங்கம் வென்று சாதித்தது. தவிர, 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கம்  வசப்படுத்தியது. 

Sep 14, 2024

'பார்முலா-4'' கார்பந்தயம் சென்னையில் இன்று ஆரம்பம் .

 இந்தியன் ரேசிங் லீக் (ஐ.ஆர்.எல்.,) கார் பந்தயத்தின் 3வது சீசன், ஐந்து சுற்றுகளாக நடக்கிறது. இதில் 'பார் முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப், நேஷ னல் ரேசிங் சாம்பியன் ஷிப் (எல்.ஜி.பி. 4), இந்தியன் நேஷனல் ரேசிங் சாம்பியன் ஷிப் போட்டிகளும் இடம் பெற்றுள்ளன. சென்னை, பெங்கால், கோவா, டில்லி உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும்ஒரு வீராங்கனை உட்பட 4 'டிரைவர்' இடம் பெற்றிருப்பர்.சமீபத்தில் முதலிரண்டு சுற்றுகள் (ஆக. 24-25, ஆக. 31- செப். 1) நடந்தன. இதன் முடிவில், சிறந்த அணி களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெங்கால் டைகர்ஸ் அணி 107 புள்ளி களுடன் முதலிடத்தில் உள்ளது.இந்நிலையில் மூன் றாவது சுற்றுக்கான போட்டிகள் சென்னை, இருங்காட்டுகோட்டை யில் உள்ள 'மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க் கியூட்டில்' இன்றும், நாளையும் நடக்கின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 24 25

AD's



More News