அடர்த்தியான கூந்தலை பெற
நல்லெண்ணையை ஒரு கப் அளவு எடுத்து அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஆற வைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தடவ முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். "கறிவேப்பிலையை பொடி செய்து தினமும்2 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர கருகருப்பான ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.பின் அடுத்த நாள் ஊறவைத்த வெந்தய விதையில் செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகளை கலந்து மென்மையான பேஸ்ட்டைபோல் அரைக்கவும்.
இதனை உங்கள் தலைமுடியில் தடவி உலர்த்திய பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.இந்த அற்புதமான ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு வளரும்.இவ்வாறு வீட்டில் எளிதாகக் கிடைக்கும் வெந்தயம் மற்றும் செம்பருத்தியை பயன்படுத்தி தலைமுடியின் அழகை அதிகரிக்கவும்.
0
Leave a Reply