உடலை அழகாக வைத்துக் கொள்ள வெந்தயக் கீரை
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம். உடலை அழகாக வைத்துக் கொள்வதிலும், வனப்பை தக்க வைப்பதிலும், வெந்தயத்தின் பங்கு அலாதியானது.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் + சிறிது கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலை இரண்டையும் உப்பு சேர்த்த தயிரில் கலந்து ஊற வைத்து, தினமும்சாப்பிட்டாலே தோலில் மினுமினுப்பு வரும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பிறகு பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். தீக்காயங்கள்: இந்த கீரையை பச்சையாகவே, அரைத்து தீக்காயங்களுக்கு பற்றுப்போட்டால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த கீரையை அரைத்து பற்று போடலாம்.
0
Leave a Reply