25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

May 04, 2024

Butter Milk :  மோரை எப்படி   பருகவேண்டும்?

மோர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சிலர் இதை இரவு உணவோடு குடிக்க விரும்புகிறார்கள், மற்றவர்கள் மாலையில் குடிக்கிறார்கள். ஆனால் மோர் குடிக்க சரியான நேரம் ?ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், புரோபயாடிக்குகள், பாஸ்பரஸ், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.மோர் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது, இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கிறது.கோடை வெயிலில் மோர் குடித்தால் புத்துணர்ச்சி பெறலாம். இது உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.உடல் ஆரோக்கியமான தசைகள், தோல் மற்றும் எலும்புகளை உருவாக்க மோர் உதவுகிறது. இதில் பாலை விட குறைவான கலோரிகள் மற்றும் அதிக கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் உள்ளது. நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம்.உண்மையில், இந்த பானத்தை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம். ஆனால் யாராவது வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டால் வெறும் வயிற்றில் மோர் குடிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.இதற்கு, தயிரை ஒரு பிளெண்டரில் போட்டு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை கலக்கவும். அதில் குளிர்ந்த நீரை சேர்த்து மீண்டும் குறைந்த வேகத்தில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை கலக்கவும். இப்போது அதனுடன் கருப்பு உப்பு, புதினா தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.

May 03, 2024

தூதுவளை  இலை juice

 சளி, இருமல்: மழைக்காலங்களில் தண்ணீரில் 3, 4 தூதுவளை போட்டுக்கொதிக்க வைத்து குடித்தால் இருமலை கட்டுப்படுத்தும். இருமல் உண்டாகும்போது, சிறிதளவு தூதுவளை இலையை கழுவ, மென்று சாப்பிட, இருமல் குறையும். ஆவி பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் தூதுவளை முக்கியமானது.தூதுவளையின் மருத்துவ குணங்களை பார்த்தால், இருமல், சளியை விரட்டியடிக்கக்கூடியது.. தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால், நம்மை சளி, காய்ச்சல் என்றுமே அண்டாது.குறிப்பாக மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இந்த செடியின் தேவை நிச்சயம் இருக்கும்.. இந்த இலையின் சாற்றை எடுத்து, அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்தால், சளி, இருமல் குணமாகும். தூதுவளை இலைகளை தண்ணீரில் சேர்த்து குடித்தால், பசி உணர்வு அதிகமாகும்.. உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்...

May 02, 2024

உடலுள்ள உஷ்ணத்தை விரட்டக்கூடிய கீரைகள்,

கீரைகளில் மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். வயிற்றுப்புண், வாய்ப்புண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. அதேபோல, அகத்திக்கீரையை சாப்பிடலாம். அகம் + தீ + கீரையே அகத்திக்கீரையாகும். அதாவது உடலுள்ள உஷ்ணத்தை விரட்டக்கூடியது இந்த அகத்திக்கீரைகள்.. இந்த 2 கீரைகளையும் சமைக்கும்போது, காரம் அதிகம் சேர்க்காமல், வாரம் 2முறையாவது சாப்பிட வேண்டும். எந்த கீரை செய்தாலும், பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். 

Apr 30, 2024

கைகளில் தோல் உறிய என்னகாரணம்

அடிக்கடி கை உரிதல், வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களால்தான் கைகளில் தோல் உரிகிறது. வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிகிறதெனில் வெதுவெதுப்பான நீரில் கைகளை10 நிமிடங்கள் மூழ்க வையுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி நீங்கும்.விட்டமின்E எண்ணெய்யைகைகளில் தடவி மசாஜ் செய்தால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். கைகளும் பளபளக்கும்.கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி கைகளில் மசாஜ் செய்து காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.தேங்காய் எண்ணெய்யைகைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகள் பளபளக்கும்.

Apr 24, 2024

உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவும் பழங்கள்

அன்னாசி பழம் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை எரிக்கும் ஆற்றலும் உண்டு. பேரிக்காய் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட பழங்களில் ஒன்று என்பதால், இவை உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்க உதவும். வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்களும் பொட்டாசியமும் அதிகமாக இருப்பதால், நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவும். அவகேடோ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.  திராட்சையில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் உடலின் ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவி செய்யும். டிராகன் பழம் நார்ச்சத்துக்கள் மிக அதிக அளவில் இருப்பதால் ரத்தத்தில் ஏற்கனவே கடினமாக படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற முடியும். ஆப்பிளில் வைட்டமின் சி, பொட்டாசியம், கரையும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது உயர்கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது. 

Apr 23, 2024

கோடையில் உடலில் நீர் பற்றாக்குறை   தவிர்க்க சர்க்கரை நோயாளிகளுக்கு ஜூஸ்

கோடையில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை அதிகம். சுற்றுச்சூழலில் அதிக வெப்பநிலை காரணமாக, உடலில் நீர் பற்றாக்குறை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நமக்கு அதிக வாந்தி, மயக்கம் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். எனவே, கோடையில் திரவங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.கோடையில் நமக்கு நிவாரணம் என்றால் அது பழங்களிலும், பழச்சாறிலும் தான் இருக்கிறது. பலரும் ஜூஸ்ஸைகுடிப்பார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு அப்படி இல்லை.  இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும்.மாம்பழ ஜூஸ்,தர்பூசணி சாறு,கரும்பு சாறு  ஜூஸ்கள் குடிக்கக் கூடாதுஉடலில் நீர் பற்றாக்குறை   தவிர்க்க சர்க்கரை நோயாளிகள் கோடையில் இளநீர் , சப்ஜா விதைகள் தண்ணீர் , எலுமிச்சை நீர் , மோர்  குடிக்கலாம்சர்க்கரை நோய்க்கு இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. இது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இளநீர் உடல் சூட்டு பிரச்சனைக்கும் நிவாரணம் அளிக்கும்.சப்ஜா விதை நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் நுகர்வு சோர்வு மற்றும் பலவீனத்தையும் குறைக்கிறது.எலுமிச்சை நீரும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க ஒரு நல்ல வழி. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கலாம். ஆனால் இனிப்புக்காக நீங்கள் எதையும் சேர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நீரிழிவு நோயாளிகளுக்கு மோர் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் புரோபயாடிக்குகள் உள்ளன, இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினசரி உணவில் மோர் சேர்த்துக்கொள்ளலாம்.இதில் ஏதேனும் சந்தேகமோ அல்லது உங்கள் உடலில் வேறு ஏதும் தீவிரத்தன்மையோ இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Apr 22, 2024

கர்ப்பப்பையில் நீர்கட்டி 

 பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய (PCOS) வராமல் தடுக்க,  காய்கறி சாலட் சாப்பிட்டு வரலாம் . வேகவைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, வேகவைத்த காளான், வேகவைத்த ப்ரோகோலி, துருவிய பீட்ரூட் மற்றும் மாதுளை சேர்க்கவும் இந்த காய்கறி சாலட்டை தொடர்ந்து சாப்பிட்டு வர, கர்ப்பப்பை ஆரோக்கியமடையும், நீர்க்கட்டி உருவாகாமல் தடுக்கும் மேலும் ஊற வைத்த சியா விதைகளை பாதாம் பாலுடன் சேர்த்து பருகி வரலாம்" அவகேடோ பழத்தை பிரட் டோஸ்டில் வைத்து சாப்பிட்டு வந்தால் (PCOS) A வராமல் தடுக்கும்  . வெள்ளரிக்காய், கேரட் மற்றும் குடமிளகாய் போன்ற காய்கறி கருப்பைக்கு மிகவும் ஆரோக்கியமானவை .

Apr 20, 2024

நோய் எதிர்ப்பு சக்தி உள்ள, ஊறவைத்த உலர் திராட்சை

உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஈர திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சத்துக்கள் நிறைந்தது ஊறவைத்த திராட்சையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஊறவைத்த உலர் திராட்சையை1 வாரம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இதில், உள்ள பீனாலிக் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.ஈரமான திராட்சை கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது, இது கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது. உலர் திராட்சையில் உள்ள ஃபீனால் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.தினமும் திராட்சையை உட்கொள்வதால் சுருக்கங்கள் நீங்கும்.ஊறவைத்த திராட்சையை1 வாரம் சாப்பிட்டு வர முடி வலுவடையும். திராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது. 

Apr 19, 2024

உடலில் பதற்றத்தை கொண்டு வரும் காபி , டீ

காபிஅல்லது தேநீர் பெரும்பாலும் மக்கள் விரும்பும் பானமாக உள்ளது.அதீத காபி அல்லது தேநீர் பருகுதல் உடலில் பதற்றத்தை கொண்டுவருகிறது. மேலும் தூக்க கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஒருவர் தூங்குவது கடினமாக மாறலாம். தினமும் 3 கோப்பைக்கு மேல் டீ, காபிதொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் ஒற்றை தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன

Apr 18, 2024

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்

செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.குடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன.வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது.குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டிஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கர்வி என்னும் நோயைத் தவிர்ப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது.இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, அதனைக் கட்டுப்படுத்துகிறது.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 20 21

AD's



More News