25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Apr 12, 2024

குழந்தைகளுக்கு சளி, இருமல் சரியாக கற்பூரவல்லி இலை ( ஓமவள்ளி இலை )

குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, ஓமவள்ளி இலை சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் மென்மையாகத் தடவி விடலாம்.. அதேபோல, வயிறு உப்பி மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம். இலைச்சாறு சற்றுக் காரமாக இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம். இந்த கற்பூரவல்லி இலைகளை கஷாயம் போல தயாரிக்கலாம்.. அதாவது, கொத்தமல்லி விதை, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடித்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி ஒரு கைப்பிடி கற்பூரவல்லி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு, மிக்ஸியில் அரைத்த பொடிகளை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு சுண்ட காய்ச்ச வேண்டும். இறுதியில், வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்தால், கற்பூரவல்லி கஷாயம் தயார். இருமல், சளி, தொண்டை வலி, போன்றவற்றுக்கு மிகவும் நல்லது..

Apr 10, 2024

முடவாட்டுக்கால் கிழங்கு..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதியை தரும் முடக்குவாத பிரச்சனைக்கும், மூட்டு வலி பிரச்சனைக்கும் தீர்வாக இருப்பது முடக்குவாத கிழங்குதான்.. முடக்குவாதத்தினை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து தீர்வு காணாவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். சர்க்கரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்வதால், முடக்குவாதம் கட்டுக்குள் இருக்கும். அதேபோல, இதில் முடவாட்டுக்கால் கிழங்கினை சூப் வைத்து குடிக்கலாம். ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த கிழங்கில், கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் பல சத்துக்கள் உள்ளன. எலும்பு அடர்த்தி: முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் மிகக்சிறந்த மருந்தாகும். எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) நோய்களுக்கும் இந்த கிழங்குகள் மருந்தாகின்றன.. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு.. இந்த கிழங்குக்கு உண்டு. எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளையும் இந்த முடவாட்டுக்கால் போக்கிவிடுவதுடன், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.கருப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக முடவாட்டுக்கால் கிழங்கு உதவுகிறது.. பெரும்பாலும் இந்த கிழங்கை, தோல் சீவி கழுவி, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து போட்டு, சூப் போல வைத்து குடிப்பார்கள்... முடவன் ஆட்டுக்கால் கிழங்கின் மீதுள்ள தோல் மற்றும் முடிகளை நீக்கிவிட்டு, உள்ளே மஞ்சள் கலரில் கிழங்கினை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.. பிறகு கிழங்கினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுகளைகொட்டி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் முடவாட்டுக்கால் சூப் ரெடி.இஞ்சி, பூண்டு, சிறிது தேங்காய் சேர்த்து பேஸ்ட்போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், லவங்கப்பட்டை, சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்து வைக்கப்பட்ட முடவாட்டுக்காலையும், அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.. நன்றாக கொதித்தபிறகு, கடைசியாக பூண்டு, உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சூப் ரெடி. முடவாட்டுக்கால் கிழங்கில் சாறு போல தயாரித்து குடிக்கலாம்.. அதாவது, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், என அனைத்தையும் வதக்கி கொள்ள வேண்டும். பிறகு அதிலேயே சுத்தம் செய்து பொடிபொடியாக நறுக்கப்பட்ட கிழங்கையும் போட்டு வதக்க வேண்டும்.. பிறகு, சோம்பு, பட்டை, சேர்த்து, வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மொத்தமாக அரைத்து கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு ஊற்றி இந்த விழுதை கொதிக்க வைத்து இறக்கி, சுடுசோறில் பிசைந்து சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.. குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்க்கும் இந்த சூப்பை குடிக்க தரலாம்.. மூட்டுவலியை தவிர, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலிக்கும் இந்த சூப் நல்லது. 15 நாட்களுக்கு இந்த சூப் குடித்துவரும்போது நல்ல பலன் கிடைக்குமாம். ஆனால், இந்த சூப்பை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தான் குடிக்க வேண்டும்..

Apr 08, 2024

சளி தொல்லைக்கு ஓமவள்ளி இலை

 ஓமவள்ளி இலை, தூதுவளை, துளசி இலை.,3 இலைகள் மட்டுமே போதும்.. ஒரே நாளில்  சுவாச கோளாறு ஓடிவிடும். சளி, காய்ச்சல் என்றால், மிளகு, இஞ்சி இந்த இரண்டை மூலிகைகளையும் தவிர்க்கக்கூடாது. மக்னீசியம், இரும்பு, வைட்டமின் K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டதுதான் மிளகு.அஜீரண கோளாறுகளை மட்டுமல்லாமல், உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவதும் இந்த மிளகுதான். இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அந்தவகையில், மிளகு ரசம் போலவே, 2 புதினா இலைகளை சேர்த்து மிளகு டீ தயாரித்து குடித்தால், சுவாச கோளாறுகள் தீரும்.இஞ்சியும் அதுபோலவே, தொண்டைக்கு இதமான பண்புகளை கொண்டுள்ளது. அதனால்தான், இருமலுக்கான சிரப்புகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இது சளியை நீக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது.. நுரையீரலிலிருந்து சளியை தளர்த்தி வெளியேற்ற உதவுகிறது.. தொண்டையின் பின்புறத்தில் இருமலை தூண்டும் வலிமிகுந்த கூச்ச உணர்வை இஞ்சி கட்டுப்படுத்தவும் செய்யும்.ஓமவள்ளி இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும். அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், ஓமவள்ளி இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும். ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும். அல்லது இந்த ஓமவள்ளி இலையை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, சிறிது பனகற்கண்டு சேர்த்து குடித்து வந்தாலும் நன்மை பயக்கும். இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும். தலைவலிக்கு இலையைக் கசக்கித் தலையில் தடவலாம். 

Apr 06, 2024

உணவு உண்ட உடனே குளித்தால் ஆரோக்கியத்தை பாதிக்கும்

உணவு உண்ட உடனே குளிக்கக் கூடாது என்பது நம்பிக்கை. இவ்வாறு செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.சோம்பேறித்தனம் ஏற்படும் .உடலில் எரிச்சலை உண்டாக்கும். சாப்பிட்டு30 நிமிடம் கழித்துதான் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நேரமின்மையால்இரண்டு நிமிடம் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடாமல் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்., பல முறை நமக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். இதனால், பல தீமைகள் ஏற்படும். நம்மில் பலர் உணவு சாப்பிட்டவுடன் குளிப்போம்.லேசான சாப்பாடு சாப்பிட்டுவிட்டு உடனே குளிக்கலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.  .உணவு உண்ட உடனே குளித்தால் ஆரோக்கியத்தை பாதிக்கும்

Apr 05, 2024

பப்பாளியின் பயன்கள்

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.பப்பாளி காய் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பப்பேன் என்ற நொதிகளைக் கொண்டிருப்பதால், செரிமானத்திற்கான இரைப்பை அமிலங்களின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாவை வெளியேற்றுவதோடு வயிற்றில் நச்சுத்தன்மை இல்லாமல் வைக்கிறது.பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் குணமடையும்.பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி, விஷம் இறங்கும். பப்பாளி பழத்தினைஅடிக்கடி  சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்குதல் குறைவு.

Apr 03, 2024

பித்தத்தை குறைக்கும் எள்

எள் உடலை தேற்றும் மருந்தாகவும், பித்தத்தை குறைக்கவும், முதன்மையாக திகழ்கிறது.எள்ளில் உள்ள புரதம் மற்றும் போலிக் அமிலம் டி. என். ஏ., உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது.புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வீரியமும் எள்ளுக்கு உண்டு. சரும ஆரோக்கியத்தை காக்கவும் உதவுகிறது.எள்ளை ஊற வைத்து, அந்த தண்ணீரை அருந்தி வந்தால், செரிமான கோளாறுகள் நீங்கும். சிறுநீரை பெருக்கி, மலத்தை இளக்கச் செய்கிறது. கீரையில், பொடித்த எள் மற்றும் வேக வைத்த பூண்டு சேர்த்து சமைத்தால், கீரையின் முழு பலனையும் பெறலாம்.

Mar 30, 2024

பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் கெடுதியானது

பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் கெடுதியானது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.தினமும் ஒரு பழத்தையேனும் பசி எடுக்கும் போது உண்ணுங்கள்.காலை உணவை தவிர்க்காது, ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்.போதியளவு நீர் அருந்துங்கள்.சாப்பிட்டவுடனே பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Mar 28, 2024

வயதானவரும் இளைஞராக.....

உங்க உடம்பின் செல்களை புதுப்பிக்கும் ஆக்சிஜன் தரும் விதைகளை சாப்பிடுங்க மாதுளம்பழம் திராட்சை பழம் இவற்றின் கொட்டைகளையும் வாயால் நன்றாக அரைத்து மென்று சாப்பிடுங்க. பழத்தை விட விதை நமக்கு ஆரோக்கியம்"அதிகம் தருகிறது. தர்பூசணி மற்றும் பூசணி வெள்ளரி சூரியகாந்தி விதைகளை கண்டால் விட்டு விடலே விடாதீர்கள் மேல்உறையை உரித்து சாப்பிடுங்கள். ஆளி விதை கடைகளில் விற்கும். நீரில் ஊறவைத்து வேகவைத்து சாப்பிடுங்கள் அல்லது பவுடராக அரைத்து சாப்பிடுங்கள். இது போன்று விதைகளின் பயன்களைhealthyseeds என்று இணையத்தில் தேடிப்படித்து சாதாரண மளிகை கடையில் தனிதனியாக கேட்டு வாங்கி சாப்பிட்டு வயதானவரும் இளைஞராக மாறுங்கள்

Mar 27, 2024

மனஅழுத்தத்தை குறைக்க..

தரமான உறக்கம்யோகா மற்றும் தியானம்ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுமகிழ்ந்திருக்கவும், சிரிக்கவும் பழகுங்கள்மூச்சுப்பயிற்சிகள்ஹாபிகளுடன் மகிழ்ந்திருங்கள்நல்ல உறவுகளை வளர்த்தெடுத்துக் கொள்ளுங்கள்புகை தவிருங்கள்

Mar 23, 2024

கோடை வெப்பத்திற்கு குறைந்த செலவில் நிறைந்த நன்மைகள் கொண்ட இதமான குளிர்பானம் நீர்மோர்.

மோர் உடல் சூட்டை தணித்து, வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.மோர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.    மோர்,வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும். மூலநோய்க்கு அருமருந்து ஆகும்.மோரில் அதிகம் கால்சியம் உள்ளது, எனவே மோர் குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.மோர் உங்கள் கல்லீரல் மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது.மோர் வைட்டமின்சி மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.  மோர் குறைந்த கலோரிகளை கொண்டது, உடல் எடையை அதிகப்படுத்தாது.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 20 21

AD's



More News