25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Jul 18, 2024

பேரிக்காய்

1. சிறுநீரகக் கோளாறுகளைச் சீர்செய்யும். 2. உடல் எடையைக் குறைக்கும். 3. சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்கும். 4. நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் போக்கும். 5. பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். 6. வைட்டமின் ஏ.பி.சி.இ.கே இருக்கின்றன.7. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. 8. எலும்புகளை வலுவாக்கும். 9. ப்ராஸ்டேட் கோளாறுகளைத் தடுக்கும். 

Jul 17, 2024

வாழைத்தண்டு

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ்குடிக்க வேண்டும். அதிக நீர்ச்சத்து-நார்ச்சத்து கொண்டது.சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.   

Jul 16, 2024

குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். 

 இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.  வைட்டமின் ' A மற்றும் நிரம்பியுள்ளது.   உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  இரத்த சோகையை குணப்படுத்துகிறது. கலோரிகளை எரிக்கிறது.  கண்களுக்கு நல்லது. 

Jul 15, 2024

மூளையை சேதப்படுத்தும் பழக்கவழக்கங்கள்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருதல்.போதிய தூக்கமின்மை.அதிகப்படியான டிவி, மொபைல் & கம்யூட்டரை பார்ப்பது .போதிய நீர் உட்கொள்ளாமல் இருத்தல்.காலை உணவைத் தவிர்ப்பது.உரத்த இசையைக் கேட்பது.அதிக அளவு சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் துரித உணவுகளை எடுப்பது.தலையை மூடிக்கொண்டு தூங்குவது.

Jul 13, 2024

புற்றுநோயை விரட்டும் விரதம் 

குறிப்பிட்ட நேரம் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது, உடலுக்குப் பலவிதமான நல்ல பலன்களைத் தரும். இடைவெளியிட்ட விரத முறை தற்போது எடை குறைப்பு உள்ளிட்டவற்றுக்காகப் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த எம்.எஸ். கே. புற்றுநோய் ஆய்வு மையம் விரதத்தால் புற்றுநோய் செல்கள் அழிகின்றன என்று நிறுவியுள்ளது. புற்றுநோய்க் கட்டிகள் எப்போதுமே சத்துக்களை உறிஞ்சிய படியே இருக்கின்றன. அதனால் பொதுவாகவே கொழுப்பு அதிகமுள்ள பகுதிகளில்  தான் இவை வளர்க்கின்றன. விரதம் இருக்கும் போது உணவின் மூலம் சர்க்கரை கிடைக்காது. இதனால் உடல் தனக்குத் தேவையான ஆற்றலை சேமித்து வைக்கப்பட்டுள்ளகொழுப்பிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் கட்டிகளுக்குப் போது மான கொழுப்பு கிடைக்காமல் இறந்து போகும்.அத்துடன் விரதம் இருப்பதால், ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி பெருகுகிறது. இவை கிருமிகளுக்கும், கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களுக்கும் எதிராகப் போராடுகின்றன. எனவே புற்று நோய்க் கட்டிகள் அழிகின்றன.எலிகளில் சோதித்துப் பார்த்தபோது, ​​வாரம் இருமுறை 24 மணி நேரங்கள் உண்ணாமல்இருக்கும் இந்த விரத  முறை பயன் தந்தது. புற்றுநோய்க்கான மற்ற சிகிச்சை எடுத்துக் கொள்வோர் கூடுதலாக இந்த விரதமுறையைப் பின்பற்றினால் பயன் பெறலாம். ஆனால் இதைக் கடைப்பிடிப்பதற்கு முன்பாக உரிய மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையை பெறுவது அவசியம்.

Jul 10, 2024

உடல் சூட்டை குறைக்க..

 வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்சியில் அரைத்து, பாலுடன் சேர்த்து, கொதிக்க வைத்து, தேவையான சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலை குளிர்ச்சியாக்கும்,  

Jul 09, 2024

பழங்கள் நல்லதா? ஜூஸ் நல்லதா?

சிலருக்கு பழங்களை சாப்பிடுவது நல்லதா அல்லது பழங்களை ஜூஸ் செய்து குடிப்பது நல்லதா என சந்தேகம் இருக்கும். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஜூஸை காட்டிலும் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது என தெரிய வந்துள்ளது. பழங்களில் இருப்பது போல பழ ஜுஸிலும் விட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கும். ஆனால் பழங்களில் இருக்கும் பைபர் சத்தானது, அதை ஜுஸ் செய்து சாப்பிடுவதால் கிடைக்காது என அந்த ஆய்வு கூறுகிறது. 

Jul 08, 2024

சீனி கிழங்கு

ஒரு கப் வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கலோரி, கார்போஹைட்ரேட் புரதம், கொழிப்பு, வைட்டமி ன் ஏ, சி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் போன்றவை நிறைந்திருக்கின்றன.   சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் மூலக்கூறு உள்ளது. இது இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது சர்க்கரைவள்ளி கிழங்கின் இலைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்து கிறது என்கிறது ஆய்வு ஒன்று.   சர்க்கரை வள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது  

Jul 06, 2024

வாத நோய், வாயு நோய் நீங்க வெண்டைக்காய் வற்றல்

ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடல், கை, கால் செயலிழப்பதை வாதநோய் (ஸ்ட்ரோக்) என்கிறோம்.பார்வைக் குறைபாடு, மனநிலை மாற்றம், சுய உணர்வில் தடுமாற்றம், தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, உடல் உணர்வில் மாற்றம், தள்ளாட்டம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்ற தொந்தரவுகள் திடீரென ஏற்படக்கூடும். இவை வாதநோயின் பொதுவான அறிகுறிகள்..சிறிது வாதநாராயண இலைகளை மையாக அரைத்து, மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட்டால் வாதக் கோளாறுகள் நீங்கும். இதன் இலை அல்லது காம்புகளை ரசம் வைத்து அருந்தினாலும் பொரியல் செய்து சாப்பிட்டாலும் வாத நோய் விலகும்.கைப்பிடி அளவு கோதுமை மாவை இளம் வறுப்பாக வறுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதத்தால் வரக்கூடிய வலிகள் மட்டுமல்லாமல் மூட்டுவலியும் விலகும்.வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வாத நோய் தணியும்.நொச்சி வேப்பிலை இரண்டும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாகும். நொச்சி இலை மற்றும் வேப்பிலைகளை காய்ச்சி குளித்து வந்தால் வாத நோய்கள் விலகும்.அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து உணவு உண்பதற்கு முன்னர் அருந்தி வந்தால் வாயுத்தொல்லைகள் விலகிச் செல்லும்.காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மூன்றையும் தேவையான அளவு எடுத்து வறுத்து எடுத்து, இவற்றுடன் புதினா, வல்லாரை, புளி, உப்பு சேர்த்து அரைத்து சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்வுக் கோளாறுகள் விலகும். மலச்சிக்கலும் நீங்கும். வெண்டைக்காயை பொடியாக நறுக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் உலர வைத்து வற்றலாக ஆனபின் சாப்பிட்டு வந்தால் வாத நோய், வாயு நோய் நீங்கும் கை கால்களில் பிடிப்பு, மூட்டு வலி நீங்கும். உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

Jul 01, 2024

காதில் சீழ்வடிதல் குணமாக்கும் தும்பைப்பூ, இலை 

ஒரு கை பிடிதும்பைப்பூ, சிறிது பெருங்காயம் சேர்த்து மைய அரைத்து அதனுடன் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாக காதிற்கு விட்டு வர காதில் சீழ்வடிதல் குணமாகும். தும்பை இலையை அரைத்து, உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும்.அதனால் ஏற்பட்ட தடிப்பும்,அரிப்பும் மறையும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News