25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


நலம் வாழ

Apr 06, 2026

வியர்வை அதிகம் வந்தால் .....

தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.சுத்தமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்.காரமான உணவுகள்,காபி,மதுபானம் தவிர்க்க வேண்டும். தண்ணீர், தயிர், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.நெலிக்காய் சாறு அல்லது ரோஸ் வாட்டர் உடல் முழுவதும் தடவலாம்.வெந்தய தண்ணீர் அதிகமான வியர்வையை குறைக்கும்.குளித்த பிறகு உடல் நன்றாக காய்ந்த உடைகளை அணிய வேண்டும்.தயிர், எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் போன்றவை உடல் வெப்பத்தை குறைக்கும்.வியர்வை அதிகமாக இருந்தால் தோல் மருத்துவரை அணுகவும்.

Apr 04, 2026

மூளை வளர்ச்சிக்கு காலிஃபிளவர் .

காலிஃபிளவர்மூளையை போன்றதோற்றம் உடையது.அதேபோல் இதுமூளை வளர்ச்சிக்கும்உதவுகிறது.வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகமாக உள்ளன. தினமும்90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது.புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு.காலிஃபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்துகளை தயாரிக்கலாம்.

Apr 04, 2026

ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்க..

சுக்கு, மிளகு, திப்பிலி பொடியை சிறிது எடுத்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனைவெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வரலாம். இரவு படுக்கச் செல்லும் முன் திரிபலா சூரணம் பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது ஒற்றை தலைவலி வராமல் தடுப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

Apr 02, 2026

உடல் சூட்டை குறைக்கும் தர்பூசணி.

கோடைகாலத்தில்வெயிலுக்குஇதமாக உடல் சூட்டை குறைக்கும்பழங்களில்தர்பூசணி முதன்மையானது.வைட்டமின்,தாதுக்கள்,கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவைகட்டுக்குள் கொண்டு வரலாம்.நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

Apr 01, 2026

செரிமானத்தை வலுப்படுத்த மோர் அருந்துங்கள்.

வயிறு உப்புசத்தை குறைக்க வாழைப்பழம் சாப்பிடுங்கள்வாயு தொந்தரவு குறைந்து செரிமானம் மேம்பட இஞ்சி டீ குடியுங்கள்நார்ச்சத்து அதிகரிக்க கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்சூடான நீர் குடிப்பது உங்கள் மெட்டபாலிசத்தை தூண்ட உதவும்செரிமானத்தை வலுப்படுத்த மோர் அருந்துங்கள்மலச்சிக்கலை குறைக்க பேரிச்சம்பழம் சாப்பிடுங்கள்செரிமானத்தை மேம்படுத்த பப்பாளிபழம் எடுத்துக் கொள்ளுங்கள்மெட்டபாலிசத்தை அதிகரிக்க க்ரீன் டீ குடியுங்கள்.

Mar 31, 2026

முருங்கை கீரை.

முருங்கை கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது நிற்கும். இளநரை, மலச்சிக்கலை போக்கும். பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வலி இருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு குடித்தால் வலி நீங்கும்.கருவுற்றோர் வாரம் ஒருமுறை முருங்கை கீரை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை மற்றும் பாத வீக்கத்தை தடுக்கும். கீரையை சாறாக எடுத்து பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் சுலபமாக நடக்கும்.துவரம் பருப்பு சேர்த்த முருங்கை கீரை பொரியலை சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதில் உள்ள கால்சியம் தாயின் உடல் பருமனாகாமல் பார்த்துக் கொள்ளும்.முருங்கை கீரையால் சமைத்த உணவை 3 மாதங்கள் உட் கொண்டு வந்தால் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு. ரத்த சோகையை போக்கும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண் டது.இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவுகிறது. முருங்கை கீரையோடு 2 துண்டு பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு அரைத்து செய்யப்பட்ட மருந்து நாய்க்கடி நஞ்சை நீக்கும்.முருங்கை சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கரைத்து ½சங்கு அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று உப்புசம் நீங்கும்.

Mar 30, 2026

முதிர்வை தாமதப்படுத்த உதவும்,ஆப்பிள் மற்றும் லவங்கம்.

1.குளிக்கும்போது சிறுநீர் வருவது ஒரு சாதாரண எதிர்வினை. 2. வாழைப்பழத்தை உப்பில் சுற்றி சாப்பிட்டால், பெருவிரல் பலவீனமாகும். 3.உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், நாளொன்றில் குறைந்தது மூன்று முறை உணவு உண்ட பின் நடக்க வேண்டும். 4.ஆப்பிள் மற்றும் லவங்கம் சாப்பிடுவது முதிர்வை தாமதப்படுத்த உதவும். 5. உணவு உண்டவுடன் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும்; இது சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நல்லது.

Mar 28, 2026

ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை.

1.பேரீச்சை பழம் - தினம் நான்கு 2 முருங்கை கீரை - வாரம் 2 முறை 3. பீட்ரூட் ஜூஸ் - தினம் 100m 4. சுண்டைக்காய் - வாரம் 2 முறை 5. முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை 6.கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை தினமும் 7.மாதுளை, திராட்சை - வாரம் 2 முறை 8.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4 9. பீர்க்கங்காய் - வாரம் 2 முறை 10. நெல்லிக்காய் - தினமும் ஒன்று

Mar 27, 2026

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை.

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. இது பாதாம் பருப்புக்கு இணையான புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் தாதுக்களைகொண்டுள்ளது.100 கிராம் மூல நிலக்கடலையில்1 லிட்டர் பாலுக்கு சமமான புரதம் உள்ளது, மேலும் வறுத்த வேர்க்கடலையில்250 கிராம் இறைச்சியில் கிடைக்கும் தாதுக்கள் கிடைக்கிறது. வாரத்தில்5 நாட்கள் வேர்கடலையை உட்கொண்டால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Mar 25, 2026

ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து நிறைந்த கோந்துப்பொருள் பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து சிறப்பாகச் செயல்பட உதவும். இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில், வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு ,ஊற வைக்க வேண்டும். இதை மறுநாள் காலை எழுந்ததும், பருகி வந்தால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 46 47

AD's



More News