25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நலம் வாழ

May 08, 2026

கல்லீரலை சுத்தமாக்க....

 ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ்தண்ணீர் ஊற்றி, அதில் நசுக்கிய இஞ்சி மற்றும் ஒரு துண்டு எலுமிச்சையைச் சேர்க்கவும்.இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில்உள்ள  கொழுப்பைக் குறைக்க உதவும். எலுமிச்சை பித்த நீரைச் சுரக்கச் செய்து நச்சுக்களை வெளியேற்றும்.வாரத்தில்3 நாட்கள் செய்தாலே போதும், உங்கள் கல்லீரலில் உள்ள  நச்சுக்களை நீங்கி பலத்தை பெறும்.

May 07, 2026

முதுகு வலி குறைய....

மிளகு, கிராம்பு, சுக்கு டீ - 5 மிளகு,.6 கிராம்பு,.1கிராம் சுக்கு, சேர்த்து நீர் விட்டு டீ செய்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால்முதுகு வலி குறையும்.கொள்ளு ரசம் - கொள்ளு ரசம் குடித்தால்முதுகு வலிக்கு தீர்வு கிடைக்கும்.வெற்றிலை, தேங்காய் எண்ணெய் - வெற்றிலை சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவிவர வலி குறையும்.

May 06, 2026

மாணவர்கள் தேர்வுகளுக்கு முன்பு வாழைப்பழங்களைச் சாப்பிட வேண்டும்.

மாணவர்கள் தேர்வுகளுக்கு முன்பு வாழைப்பழங்களைச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இது அவர்களின் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், வாழைப்பழங்களில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து, அவர்களின் மூளையைக் கூர்மையாக்கி, தேர்வு எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

May 05, 2026

 முதுமையை நீக்கி இளமை பெறச் செய்ய.....

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டில் ,கோலை ஊன்றி குறுகி நடப்பவனும், கோலை வீசி குலாவி நடப்பானே. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.காலையில் இஞ்சிச்சாறு15மிலி,மூன்று டீஸ்பூன்சுத்தமான தேன்எடுத்து  கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.

May 04, 2026

இதயத்தை பாதுகாக்கும் சீத்தாப்பழம் .

சீத்தாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.சீதாப்பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது.இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியை குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.சீதா பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது. சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய், மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் இதயத்தை பாதுகாக்கும்.சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.

May 02, 2026

வாயுவை விரட்டும் பெருங்காயம்.

வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு வந்தா வயிறு புடைச்சிக்கிட்டு மூச்சுவிட முடியாம தவிக்கிற நேரத்துல கால் ஸ்பூன் பெருங்காயப் பொடியை மோர்ல கலந்து குடிச்சா ஏப்பம் வெளியேறும். அதோட வாயு வெளியேறி  வயிறும் குறையும்.பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில்  பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல்  பிரச்சனை தீரும். தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை  அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

May 01, 2026

மருந்து இல்லா உண்மையான சிகிச்சைமுறை .

1. மன அழுத்தம்?- கிரீன் டீ - போதை பழக்கம் இல்லா உங்களை அமைதிப்படுத்துகிறது.2.தலைவலி? - வாழைப்பழங்கள் - வலி நிவாரணிக அதை அடக்குகின்றன.3. மலச்சிக்கல்? - ஆப்பிள்கள் - குடலை அழிக்கும் மருந்துகளைத் தவிர்க்கவும்.4. தொண்டை வலி? - தேன் - உண்மையான சிகிச்சைமுறை ஒரு பாட்டிலில் இல்லை.5. வறண்ட முடி? - சால்மன் - உங்கள் தலைமுடிக்கு உள்ளே இருந்து உணவளிக்கவும்.6. பல்வலி? - கிராம்பு - அதிக விலை கொண்ட மாக்கிரைகளை விட வலுவான நிவாரணம்.7. குறைந்த ஆற்றல்? - ஆரஞ்சு - இயற்கையின் சுத்தமான ஊக்கம்.8.தூக்கமின்மை? - கிவி - மெலடோனின் மாத்திரைகள் தேவையில்லை.

Apr 30, 2026

ஒரு நாளில் 5 நிமிடம் சுவரில் கால்களை உயர்த்தி வைத்தால்...

இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.மன அழுத்தத்தை குறைக்கும்.நரம்பு மண்டலத்தை சீராக்கும் .குதிகால் ,கால்வலி வீக்கத்தை குறைக்கும்.வெரிகோஸ் வெயின்ஸ் குறைய உதவும்.தலைவலி குறைக்கும்.செரிமானத்தை மேம்படுத்தும்.தினமும் 5-10 நிமிடம் செய்தால் போதும்.குறிப்பு: அதிக BP , உடல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை கேட்டுக்கொள்ளுங்கள்.

Apr 29, 2026

வெயில் காலத்தில் நன்மை தரும் வாட்டர் ஆப்பிள் (Water Apple).

உடல் குளிர்ச்சி தரும் அதிக நீர்ச்சத்து (water content) இருப்பதால் வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லது.சுகர் patient க்கு BEST கம்மி கலோரி, கம்மி சர்க்கரை,ஜீரணத்திற்கு உதவும் - நார்ச்சத்து (fiber) இருக்கு.ஹார்ட் health க்கு நல்லது-ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கு,Dehydration ஆகாமல் காக்கும்-உடம்பு தண்ணீர் குறையாமல் help பண்ணும். நல்லா கழுவி நேரடியாக கடிச்சு சாப்பிடலாம்.நடுவுல இருக்கிற விதை (seed) இருந்தா எடுத்துட்டு சாப்பிடலாம்.சின்ன சின்ன துண்டா நறுக்கி கொஞ்சம் மிளகுத்தூள் உப்பு தூவி சாப்பிடலாம்.ஜூஸ் மாதிரி அடிச்சு குடிக்கலாம். (சர்க்கரை சேர்க்காமல்)வயிற்று சளி,குளிர் அதிகமாக இருந்தால் , ரொம்ப அதிகமாக சாப்பிடாதீங்க.

Apr 28, 2026

நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்.

அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.இது மூச்சுக் குழாய் அழற்சி தொண்டைப்புண், போன்றவற்றை சரி செய்யும். அதிமதுரம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நுரையீரலை சுத்தப்படுத்தவும், சுவாசக் கோளாறுகளை தடுக்கவும் பயன்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 49 50

AD's



More News