25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

May 21, 2024

பல் வலி,பல்சொத்தை சரியாக

பல் வலி,பல்சொத்தைக்கு கிராம்பு-5கி,  தேங்காய் எண்ணெய்-50 மிலி ,கல் உப்பு-சிறிதளவு, மிளகு -10.  தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். பின்பு ஒரு கிண்ணத்தில் மிளகு கிராம்பு தூளை,எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவுதண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.பயன்படுத்தும் முறை: ஒரு ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும்.பாதிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி, சிறிது நேரம்கழித்து நீக்க வேண்டும். இதனால் பற்களில் ஏற்படும் வலி நீங்கும்.

May 20, 2024

 ஆரோக்கியத்தை மேம்படுத்தும்ஓமதேநீர்

ஓம தேநீர் தனிநபர்களின் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும்நல்லகுடல்ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நன்கு அறியப்படுகிறது. ஓமத்தில் உள்ள தைமோல் மற்றும் பிற செயலில் உள்ள உட்பொருட்கள், இரைப்பை சாறுகளின் சுரப்பைத் தூண்டுவதில் உதவுகின்றன, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை போன்ற அறிகுறிகளை நீக்குகிறது. உணவுக்குப் பிறகு செரிமான பிரச்சனைகள் அல்லது வயிற்று வலி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி, ஏனெனில் இது வயிற்றில் அடக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது.ஓம தேநீர் பசியைத் தூண்டுவதாகவும் அறியப்படுகிறது, இது கோடையில் வெப்பம் பசியை அடக்க முனையும் போது நன்மை பயக்கும். ஓமத் தேநீர் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, இது ஆரோக்கியமான பசியை ஊக்குவிக்கிறது மற்றும் நீங்கள் ஆற்றலுடன் இருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களைப்பெறுவதை உறுதிசெய்கிறது ஓம தேநீர் வீக்கம் மற்றும் வாய்வு ஆகியவற்றிலிருந்துவிடுபட சிறந்தது. வீக்கம் மற்றும் அதிகப்படியான வாய்வு அறிகுறிகள் ஓமத்தின் கார்மினேட்டிவ் குணங்களால் நிவாரணம் அளிக்கின்றன,  வாயு பிரச்சனை மற்றும் செரிமான அசௌகரியத்தையும் குறைக்கின்றன. நாள் முழுவதும் அதிக ஆறுதலையும் நிவாரணத்தையும் வழங்குகிறது.ஓம தேநீர் குடிப்பதன் கூடுதல் நன்மை நச்சு நீக்கம் ஆகும். சிறுநீர் கழிப்பதன் மூலம் கழிவுகள் மற்றும் பிற நச்சுகளை வெளியேற்ற உடலை ஊக்குவிக்கும் டையூரிடிக் பண்புகளை ஓமம் கொண்டிருக்கிறது. ஓம தேநீர், உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறைகளை ஆதரிக்க உதவுகிறது, இது அமைப்பை அழிக்க மற்றும் பொது ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.ஓம தேநீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், இது எடை நிர்வாகத்திற்குஉதவுகிறது.ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இருக்கும்போது, அதிக வளர்சிதை மாற்றம் கலோரிகளை மிகவும் திறம்பட எரிக்க உடலின் திறனுக்கு உதவுகிறது, எடை இழப்பு மற்றும் பராமரிப்புக்கு உதவுகிறது. ஓம தேநீர் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் எடை நிர்வாகத்திற்கு உதவக் கூடும். கோடையில் காலையில்எழுந்தவுடன் முதலில் ஓம தேநீர் குடிப்பதால்ஏராளமான ஆரோக்கிய நன்மைகள்உள்ளன. ஓம தேநீர்செரிமான மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்து. 

May 18, 2024

கோடையில் குழந்தைகளை தாக்கும் கோடை  கால தொற்றுக்கள்.

கோடை காலம் வந்தாலே வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால், இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். வறட்சி, வியர்வை, தூசி போன்றவை கோடையில் ஏற்படும் மற்ற நோய்களுடன் சேர்ந்து இந்த நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகின்றன. கோடை வெயிலின் தாக்கத்தால், சோர்வு பெரியவர்களுக்கு வருவது பொதுவானவை என்றாலும், குழந்தைகள் இந்த நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றன.வயிறு மற்றும் குடல் தொற்று: கோடையில் வைரஸ் தொற்று காரணமாக வயிறு மற்றும் குடல் தொற்றுகள் அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம், குடத்தில் குறைவாக நீர் இருக்கும் போது அடிமட்ட நீர் மிகவும் மாசுபட்டு இருக்கும். அந்த நீரை குடிக்கும் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து வரும். எனவே, இந்த உங்கள் கைகளை நன்கு கழுவி, சுத்தமான மற்றும் நல்ல நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுங்கள்.கொசுக்கள், எறும்புகள், குளவிகள், தேனீக்கள் போன்ற பூச்சிகள் கோடையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவை குழந்தைகளை கடித்தால் அரிப்பு, வீக்கம், வலி மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே, இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு, குழந்தைகள் வெளியில் செல்லும்போது முழுக் கை சட்டை மற்றும் பேண்ட்டை அணியுங்கள். மேலும், பூச்சிகள் பொதுவாக இனப்பெருக்கம் செய்யும் நீர் தேங்கும் பகுதிகளை முடிந்தவரை தவிர்க்கவும்.கோடை காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் வியர்வை காரணமாக, பூஞ்சை தொற்று பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக, அக்குள், உடல் மடிப்புகள், இடுப்பு பகுதி போன்ற இடத்தில் ஈரப்பதம் இருக்கும். இங்கு பூஞ்சை தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளின் இந்த பகுதிகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது  இந்த பாகங்களை துடைக்கவும் மற்றும் கோடைக்கு ஏற்றால் போல் நல்ல ஆடைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுவிர்கள்.கோடை விடுமுறை, வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதற்கான நேரம் . கோடையில் சூரியனின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த கதிர்களின் வெளிப்பாடு சருமத்தை கருமையாக்கும். ஒரு குழந்தையின் மென்மையான தோல் இந்த கதிர்களின் தாக்கத்தை தாங்க முடியாது. எனவே, நீங்கள் குழந்தையை வெளியே அழைத்து சென்றால், நல்ல தரமான சன் ஸ்கிரீனை பயன்படுத்தவும் மற்றும் சூரிய ஒளியில் இருந்து அதிகபட்சபாதுகாப்பைவழங்கும்ஆடைகளைகுழந்தைக்குஅணியுங்கள்.குழந்தையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது மிகவும் முக்கியமானது.

May 17, 2024

கோடைக்காலசரும அரிப்பை போக்க…

வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு முகம் எங்கும் அரிப்பும் எரிச்சலும் தோன்றக்கூடும் இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.தேங்காய்எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்யக் கூடியது. மேலும். நமைச்சல்அரிப்பு போன்றவற்றுக்கும் நல்ல ஒரு மாற்றாக இருக்கும். தினமும் குளிக்கும்முன்பு முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில்தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும அரிப்பு குணமாகும்ஒரு கைப்பிடி நிறைய துளசி இலைகளை பறித்து நீரில் அலசி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம்,கழுத்து, கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளிர்ச்சி சரும அரிப்பை நீக்கிவிடும். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு திறன் தொற்று நோய்களை தடுக்க உதவும். அரிப்புகளையும் குறைக்கும். ஒரு பெரிய பக்கெட் குளிக்கும் நீரில் ஐந்து ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலக்கவும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் சரும அரிப்பு சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலந்து அதில் காட்டனை நினைத்து சருமத்தின் மீது தடவலாம். இதனாலும் சரும அரிப்பு சரியாகும்.முகத்தை வெறும்தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான தயிரைமுகம், கழுத்து, கை, கால்களில் தடவிவிடவும்.15 நிமிடம் கழித்து முகம்மற்றும் கை, கால்களை சோப்புபோட்டு அலசவும். சரும அரிப்பு மற்றும் எரிச்சலும் விரைவில் குணமாகும்.ஓட்ஸில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அரிப்புக்கு மருந்தாக அமைகிறது. சரும எரிச்சலையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை குளிக்கும் நீரில் கலந்து விடவும்.15 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும். 

May 15, 2024

கருப்பு உளுந்து இட்லிப் பொடி!

கருப்பு உளுந்து ஒரு கப் கடலைப்பருப்பு அரை கப் கருப்புஎள் 4 ஸ்பூன் உப்புதேவையானது மிளகாய் 15 பெருங்காயக்கட்டிஒருதுண்டு சர்க்கரைஒருஸ்பூன்புளிகொட்டைபாக்களவுகறிவேப்பிலைஒருகொத்து பூண்டுபற்கள் 4( விருப்பப்பட்டால்)நல்லெண்ணெய் 2 ஸ்பூன்வெறும்வாணலியில்ஒவ்வொருபொருட்களாகசிறிதுஎண்ணெய்விட்டுநன்குகருகாமல்சிவக்கவறுத்தெடுக்கவேண்டும். கருப்புஉளுந்து,கடலைப்பருப்பு,எள்,பெருங்காயகட்டி,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலைஆகியவற்றைவறுத்துஎடுத்துக்கொண்டுஅந்தவாணலியின்சூட்டிலேயேபுளியைபோட்டுநன்குசூடானதும்தேவையானஅளவுஉப்புசேர்த்துசிறிதுஆற விட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். விருப்பப்பட்டால்பூண்டுபற்களையும்நன்குவறுத்தெடுத்துசேர்த்துஅரைக்கவும். கடைசியாகஒருஸ்பூன்சர்க்கரைகலந்துஆறியதும்டப்பாவில்பத்திரப்படுத்தசத்தானருசியானஇட்லிமிளகாய்பொடிதயார்.காலைவேளையில்ஆபீசுக்குகிளம்பும்அவசரத்தில்சாம்பார்வைக்கநேரமில்லாமல்இருந்தால்இதனைசூடானசாதத்தில்சிறிதுநல்லெண்ணெய்விட்டுரெண்டுஸ்பூன்பொடியைபோட்டுகலந்துகெட்டிதயிர், சுட்டஅப்பளம்தொட்டுசாப்பிடருசியாகஇருக்கும். இட்லிதோசைக்கும்தோதாகஇருக்கும். ருசியான அதே சமயம் சத்தான கருப்பு உளுந்து இட்லி பொடி .

May 14, 2024

வெயில் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்

முடிந்தவரை பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். இதனால் உடல் சூடு அதிகமாகும் கோடை காலத்தில் சிக்கனை தவிர்ப்பது மிகவும் நல்லது.இரவு உணவில் சப்பாத்தி மற்றும் தோசை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதனால் தண்ணீர் தாகம் இரவில் அதிகரிக்கும். அதே போல் உடல் அதிகப்படியாக வியர்க்கும். உப்பு அதிகம் சேர்க்கப்படும், பதப்படுத்தப்படும் பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்டை கட்டாயம் தவிர்க்கவும்.அதிகம் காரம், அதிகம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி, கிரேவி போன்ற உணவுகளை வீட்டிலும் சரி, ஹோட்டலிலும் சரி முற்றிலும் தவிர்த்திடுங்கள்.வெயில் காலத்தில் அதிகடியான நட்ஸ்களை எடுத்து கொண்டால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறையும்.வெயில் நேரத்தில் டீ மற்றும் காபி குடிப்பதை முற்றிலும் நிறுத்தி கொள்ளுங்கள்.

May 13, 2024

பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் 

ஊட்டச்சத்து மிக்க காய்கறியாக இருந்து வரும் பூசணிக்காய் உடலுக்கு தேவையானஅடிப்படைவைட்டமின்கள்,தாதுக்கள்,ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளது இதில் இடம்பிடித்திருக்கும் போதிய அளவு பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. அத்துடன் இருதயம் தொடர்பான நோய் பாகிப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வயது காரணமாக ஏற்படும் மாகுலர் சிதைவு பாதிப்பை தடுத்து, கூர்மையான பார்வை பெற உதவுகிறது. பூசணியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்கள், பீட்டா கரோடீன் ஆகியவை ஆரோக்கியமான சருமத்தை பெறஉதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ப்ரீ ரேடிக்கல்லில் இருந்து பாதுகாக்கிறது. நார்ச்சத்துக்கள், ப்ரீபயோடிக் சேர்மானங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுபோக்கு பாதிப்புக்கு தீர்வு அளிக்கிறது பூசணி குறைவான கலோரிகளும், அதிக நார்ச்சத்தகளையும் கொண்ட காய்கறியாக உள்ளது. விரைவில் வயிறு நிரம்பிய உணர்வை தருவதுடன், அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வதை குறைத்து எடை குறைப்புக்கு வழி வகுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட பூசணி உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. கீல்வாதம், இதய நோய்  தொடர்பான அழற்சிகளை போக்குகிறது. நீர்சத்து மிகுந்து காணப்படுவதால் உடலை நீரேற்றதுடன் வைத்திருப்பதோடு உடலின் இயக்கம், செரிமானம், உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. 

May 11, 2024

வயிற்று புண்களை விரட்ட பெஸ்ட் உணவு  மோர், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள்

இரைப்பை அழற்சி என்பது வேறு.. அல்சர் என்பது வேறு.. அல்சர் வர எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. சிகரெட் பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள், ஆல்கஹால் பயன்படுத்துபவர்கள் போன்றோருக்கு அல்சர் வரலாம். அல்லது,பாக்டீரியா தொற்று, மன உளைச்சல், அதீத கவலை, அதிகமாக காபி குடிப்பது போன்ற காரணங்களினாலும் அல்சர் வரலாம்.உணவு சரியாக எடுத்து கொள்ளாதது, அதிக உணவு, அதிக காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும்,அல்சர் வரலாம்.. அதேபோல,உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் போன்றோருக்கும் அல்சர் போன்ற வயிற்றுப் புண் பிரச்சனை வரலாம்.ஒருவகையான வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் அல்சர் வரலாம்.. அல்சர் பிரச்சனை ஆரம்பக்கட்டமாக இருந்தால் உணவு முறை மூலமாகவே தீர்வு காணலாம்.அல்சர் ஏற்பட்டுவிட்டால் வயிற்றில் புண்கள் ஏற்படும். முதலில்,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.. காரணம்,காபியில் காஃபின் என்ற பொருட்கள், வயிறு புண்களை அதிகப்படுத்திவிடும்..வயிற்றில் அமிலத்தன்மையையும் அதிகரிக்க செய்துவிடும்.இதனால் வயிறு வலி அதிகமாகும். இந்த காஃபின் நிறைந்த ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப்பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.காரம் நிறைந்த, மசாலா அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பால் நிறைய குடிக்கக்கூடாது.பாலில் நிறைய கொழுப்பு உள்ளதால், வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை இந்த பால் அதிகப்படுத்திவிடும்.. கூல் டிரிங்க்ஸ்,சோடா போன்ற பானங்களை தவிர்க்கலாம். இதுவும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப்படுத்திவிடும். சிவப்பு இறைச்சியிலும்,நிறைய கொழுப்பு, புரோட்டீன் உள்ளதால், அவைகளையும் தவிர்த்துவிட வேண்டும்.வயிற்றில் அல்சர் புண் இருப்பவர்கள், முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்..காரம், மசாலா இல்லாத நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளை சாப்பிட வேண்டும். தேங்காய்ப்பாலுக்கு வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் தன்மை உண்டு.. தினமும் அரை கிளாஸ் தேங்காய் பால் குடிப்பதால்வயிறுஎரிச்சல்குறையும்,வயிறு புண்களும் மெல்ல ஆற துவங்கும்.அல்லது வெறும் மணத்தக்காளி கீரைகளை நான்கைந்து கழுவி வெறுமனே மென்று சாப்பிடலாம்.தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், புண்களுக்கு சிறந்தது. மோர் குடிக்கலாம்.. இதனால், வயிறு எரிச்சல் தணிவதுடன், உடல் முழுவதுமே உடல் சூட்டினை தணித்துவிடும்.மாதுளை ஜூஸ்களுக்கும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி உண்டு..அதனால், மாதுளை சாறு தினமும் அரை கிளாஸ் குடிக்கலாம்..கீரைகளில் மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். வயிற்றுப்புண்,வாய்ப்புண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது..அதேபோல, அகத்திக்கீரையை சாப்பிடலாம். அகம்+ தீ+ கீரையே அகத்திக்கீரையாகும்.அதாவது உடலுள்ள உஷ்ணத்தை விரட்டக்கூடியது இந்த அகத்திக்கீரைகள்..இந்த2 கீரைகளையும் சமைக்கும்போது,காரம் அதிகம் சேர்க்காமல், வாரம் 2முறையாவது சாப்பிட வேண்டும். எந்த கீரை செய்தாலும், பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். முட்டைக்கோஸ், பூசணிக்காய், முள்ளங்கி, புடலைங்காய்,பூசணிக்காய், வெள்ளரிக்காய், போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.. இளநீர் அடிக்கடி குடிப்பதன் மூலம் அல்சர் குறையும். ஆனால்,இதெல்லாம் அல்சர் புண்களை ஆற்றுவதற்கு ஓரளவு மட்டுமே உதவும்.. மற்றபடி, அல்சர் புண்கள் தீவிரமாவதற்கு முன்பேயே, மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது கட்டாயமாகும். 

May 10, 2024

முடக்கத்தான் கீரையின் நன்மைகள்

முடக்கத்தான் கீரை வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது.இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாகும்.கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் கொடுக்கிறது.இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது.காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது.இதில் உள்ள சிறப்பான வாயுத்தன்மை, மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது.

May 08, 2024

எலுமிச்சை இலை டீ

பல வகையான நோய்களைத் தடுக்கவும் கட்டுப் படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எலுமிச்சை இலைகளை நீரில் கொதிக்க வைத்து டீயாகவும் அருந்தலாம். இலைகளைப் பொடி செய்தும் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.எலுமிச்சை இலைகளில் மிகுந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இது ஒற்றைத் தலைவலி மற்றும் மனநலப் பிரச்சனைகளை வெகுவாக குறைக்கிறது.இதில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்கலாய்டுகள் தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. \மேலும், சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதில் மிகச் சிறப்பாக செயலாற்றுகிறது.இதில் காணப்படும் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து  எடையைக் குறைப்பதில் திறம்பட செயல் படுகிறது.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 20 21

AD's



More News