1.குளிக்கும்போது சிறுநீர் வருவது ஒரு சாதாரண எதிர்வினை. 2. வாழைப்பழத்தை உப்பில் சுற்றி சாப்பிட்டால், பெருவிரல் பலவீனமாகும். 3.உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், நாளொன்றில் குறைந்தது மூன்று முறை உணவு உண்ட பின் நடக்க வேண்டும். 4.ஆப்பிள் மற்றும் லவங்கம் சாப்பிடுவது முதிர்வை தாமதப்படுத்த உதவும். 5. உணவு உண்டவுடன் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும்; இது சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நல்லது.
1.பேரீச்சை பழம் - தினம் நான்கு 2 முருங்கை கீரை - வாரம் 2 முறை 3. பீட்ரூட் ஜூஸ் - தினம் 100m 4. சுண்டைக்காய் - வாரம் 2 முறை 5. முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை 6.கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை தினமும் 7.மாதுளை, திராட்சை - வாரம் 2 முறை 8.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4 9. பீர்க்கங்காய் - வாரம் 2 முறை 10. நெல்லிக்காய் - தினமும் ஒன்று
ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. இது பாதாம் பருப்புக்கு இணையான புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் தாதுக்களைகொண்டுள்ளது.100 கிராம் மூல நிலக்கடலையில்1 லிட்டர் பாலுக்கு சமமான புரதம் உள்ளது, மேலும் வறுத்த வேர்க்கடலையில்250 கிராம் இறைச்சியில் கிடைக்கும் தாதுக்கள் கிடைக்கிறது. வாரத்தில்5 நாட்கள் வேர்கடலையை உட்கொண்டால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து நிறைந்த கோந்துப்பொருள் பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து சிறப்பாகச் செயல்பட உதவும். இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில், வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு ,ஊற வைக்க வேண்டும். இதை மறுநாள் காலை எழுந்ததும், பருகி வந்தால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
பன்னீர் ஆப்பிள் என அழைக்கப்படும் ஜம்புக்காய் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் நம்மை காக்கும்.மேலும் காய்ச்சல், வாதம் மற்றும் கை கால் வலிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.இது நீர்ச்சத்து நிறைந்து, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலுக்குச் சக்தியளிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது.பன்னீர்ஆப்பிள்(RoseApple/Jambu) 90% நீர்ச்சத்து கொண்ட சத்தான கோடைகாலப் பழமாகும். இது வெள்ளை முதல் அடர் ஊதா நிறத்தில், கேஷு ஆப்பிள் மற்றும் சாதாரண ஆப்பிள் கலந்த வடிவில் இருக்கும். இந்த பழம் கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.தாகத்தைத் தணிக்கும், உடலுக்கு நீர்ச்சத்தளிக்கும்.வைட்டமின்B மற்றும்C சத்துக்கள் உள்ளன. பச்சையாக உண்ணலாம், சாலட் மற்றும் ஊறுகாய் செய்யப் பயன்படுகிறது.
பப்பாளியை தினமும் சாப்பிடபித்தம் சம்பந்தமான நோய்கள் ,அல்சர் பிரச்னை குறையும்.தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.பப்பாளி பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.பப்பாளி செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இதய ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இதில் வைட்டமின்கள் A, C, E, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.அதேசமயம் பப்பாளி பழம் மலச்சிக்கலை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.இதில் உள்ள பாப்பைன் (Papain) என்சைம் புரோட்டீன் செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலை சரிசெய்கிறது.அதிக வைட்டமின் சி இருப்பதால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழுத்தத்தைக் குறைக்கிறது.வைட்டமின் A மற்றும் E சருமத்திற்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.பப்பாளி இலைச் சாறு டெங்கு காய்ச்சலால் குறையும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
நெல்லிக்காய்ப்பொடி, சுக்குப் பொடி இரண்டையும் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்து அருந்த கண் பார்வை அதிகரிக்கும்.முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.பீட்ரூட் இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் கோளாறுகள் குறையும்.மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.2. ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.3. எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.4. நீரேற்றம் மற்றும் உற்சாகம் தரும்.5. உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறைகளை ஆதரிக்கும்.6. சருமத்திற்கும் கூந்தலுக்கும் அற்புதங்களைச் செய்யும்.7. கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.8. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முத்து சோளம் - உடல் வலிமையை அதிகரிக்கும். தேங்காய் - ஞாபக சக்தியை அதிகரிக்கும்.பலாப்பிஞ்சு - சருமம், கண்களை காக்கும். தட்டைக்காய்(காராமணி) - பக்கவாதத்தை தடுக்கும் அவரைக்காய் ஆக்ஸிஜனை அதிகரிக்கும். மாங்காய்-கொழுப்பை குறைக்கும். நூக்கல் - உடல் எடையை குறைக்கும்.மொச்சை -ரத்த கொழுப்பை குறைக்கும். பரங்கிக்காய்-ரத்த அழுத்தத்துக்கு சிறந்தது.
நீர் தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு அதில் முக்கியமானது முலாம்பழம்.உடலுக்கு குளிர்ச்சி , உடனடிப் புத்துணர்ச்சி தருவதில் முலாம் பழம் பெரிதும் பயன்படும்.மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.முலாம் பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை இதற்கு முலாம் பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.புரதம், சர்க்கரை சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ.சி. என்று பலவித சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.