25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Jun 28, 2024

வேகவைத்த உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து 

தோலுடன் கூடிய 173 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து மதிப்புகள்: கலோரிகள்: 161 கார்போஹைட்ரேட்டுகள்: 36 கிராம் ஃபைபர்: 3.8 கிராம் புரதம்: 4 கிராம் கொழுப்பு: 0.2 கிராம் வைட்டமின் சி: 28% வைட்டமின் B6: 27% பொட்டாசியம்: 26% மக்னீசியம்: 12% இரும்பு: 10% ஃபோலேட் (வைட்டமின் B9): 9%

Jun 27, 2024

ஒரே நேரத்தில் உட்கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் மீனும் முட்டையும் ...

மீனில் புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் இரண்டும் கலந்துள்ளன முட்டையிலும் புரோட்டின் சத்து அதிகமுள்ளது இதனால் சத்து நிறைந்த மீனையும், முட்டையையும் ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக் கூடாதென உடல்நல ஆலோசகர்கள் பரிந்துரைத்துள்ளனர். அப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொண்டால், புரத ஒவ்வாமை, தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள்எச்சரிக்கின்றனர் 

Jun 17, 2024

இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் பாகற்காய்

சர்க்கரை நோயாளிகுக்கு பாகற்காய் ஒரு சிறந்த உணவு. இது கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும். பாகற்காய் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய்  சாறு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். ஆரோக்கியமாக வாழ அவசியம் பாகற்காயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Jun 13, 2024

மூட்டு வலி காணாமல் போக கருப்பு கவுணி அரிசி

கைப்பிடி அளவு. கருப்பு கவுணி அரிசியை, கஞ்சியாக காய்ச்சி வாரத்தில்3 முறை குடித்து வந்தால், மூட்டு வலி பறந்து ஓடி விடும்... ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, சீரகம், பூண்டு ,மஞ்சள் சேர்த்து அரைத்து கஞ்சியாக காய்ச்சி வாரத்தில்3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி காணாமல் போகும்.

Jun 12, 2024

முதுமையை தள்ளி போட தினமும் ஒரு கை பிடி வேர்கடலை

தினமும் ஒரு கை பிடி வேர்கடலை சாப்பிடுவதால்கிடைக்கும் நன்மைகள் சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு, சிறுநீர்த்தாரை எரிச்சலையும் போக்கும்.மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லவும் உதவுகிறது. இளமையாக இருக்க உதவுகிறது.உடல் எடையை கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடலை வலிமையுடன் மாற்ற உதவுகிறது. முதுமையை தள்ளி போடலாம். தேவையற்ற கொழுப்புகள் சேராமல் வேர்க்கடலை பாதுகாக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதயஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Jun 11, 2024

இரத்த அணுக்களின் அளவை அதிகரித்கது கெட்ட கொழுப்பு, குறைய, கருப்பு உலர் திராட்சை

இரத்த அணுக்களின் அளவை அதிகரித்கது கெட்ட கொழுப்பு, குறைய, கருப்புஉலர் திராட்சை தினமும் இரவில்5 கருப்புஉலர் திராட்சைகளை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அந்த நீரை குடித்து திராட்சையை சாப்பிட வேண்டும். இதனால் இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கும், கெட்ட கொழுப்புகள் குறையும், சிறு நீரக பிரச்சனைகள் குணமாகும், உடல் வெப்பம் தணியும், பெண்கள் மாதவிடாய் பிரச்சனைக்கு அருமருந்து, மலச்சிக்கல், எலும்பு பிரச்சனைகள் தீரும்.

Jun 10, 2024

வெள்ளை எழுத்து குறைபாடுகள் நீங்க.....

மூக்கிரட்டைகீரை,பொன்னாங்கண்ணி கீரை சம அளவு எடுத்து, அரைத்து, அதனுடன் மோர் கலந்து, தினமும் குடித்து வர கலங்கலான பார்வை மற்றும் வெள்ளை எழுத்து குறைபாடுகள் நீங்கி கண் பார்வை தெளிவடையும்.

Jun 07, 2024

சுகர் லெவலை கட்டுப்படுத்த ....

இரவு ஊற வைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் வைத்திருக்கலாம்.  உடலுக்கு தேவையான புரதச்சத்தை உலர் பழங்கள் தருவதால், இவை இரத்த சர்க்கரையை கட்டுப்பாடுத்த உதவும்.  சியா விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றன.   சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருகக் காலையில் முட்டையை உட்கொள்ளலாம்.  அதிக நார்ச்சத்து கொண்டுள்ள ஓட்ஸை காலை உட்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.நீரிழிவு நோயாளிகள் சாதாரண வெள்ளை ரவைக்கு பதிலாக, கோதுமை ரவை கிச்சடியாக எடுத்துக் கொள்வது நல்லது.  நீரீழிவு நோயாளிகளுக்கு காலை உணவில் பயறு வகைகள், சுண்டல் வகைகளை எடுப்பது நல்லது.

Jun 05, 2024

சர்க்கரைநோய்முதல்கொலஸ்ட்ரால்வரைகுறைக்கும் காராமணி

காராமணியை நாம் அதிகமாக சமைத்து சாப்பிடுவதில்லை, இந்நிலையில் இதில் புரத சத்து, நார்சத்து, உள்ளது. மேலும் இதில் முக்கிய சத்துகள் உள்ளது.100 கிராம் காராமணில் உள்ள சத்துகள்-  120 கலோரிகள், கார்போஹைட்ரேட்21.45 கிராம், நார்சத்து6.7 கிராம், சர்க்கரை 4.4 கிராம், புரத சத்து 8.3 கிராம், கொழுப்பு சத்து 0.9 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி -காம்பிளக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மெக்னீஷியம், காப்பர், மான்கனீஸ் உள்ளது.ஆன்டி ஆக்ஸிடண்ட் பாலிபினால்ஸ், பிளபாய்ட்ஸ், டன்னின்ஸ் உள்ளது இவை நமது செல்களை சேதமடையாமல் பார்த்துகொள்ளும்.இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்து, கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைக்கும். இதில் உள்ள பொட்டாஷியம், ரத்த அழுத்தத்தை சீராக்கும்.நார்சத்து, நமது ஜீரணத்தை அதிகரிக்க உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. குடல் ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கிறது. இதில் குறைந்த கொழுப்பு சத்து மற்றும் கலோரிகள் உள்ளது. அதிக புரத சத்து, நார்சத்து உள்ளதால், உடல் எடை குறைக்க உதவும்.இதில் உள்ள நார்சத்து, சர்க்கரையை உள்வாங்கிக்கொள்ளும். சர்க்கரை அளவை சீராக்கும். இதனால் அடிக்கடி ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் எலும்புகளை வலுவாக்க உதவும். எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.

Jun 04, 2024

மகிழம்பூ

மகிழம் பூவின் நறுமணத்திற்காகவே பூங்காக்கள், வீடுகள் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படுகிறது. மகிழம்பூ சிவனுக்கு உரியது என்பதால் பெரும்பாலும் இது சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும்.  பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும்.மகிழம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை மூக்கில் உறிஞ்சினால் தலையில் கோர்த்து கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலைபாரம் நீங்கும். 10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப, பல் ஆட்டம் நீங்கி பல் உறுதிப் படும். மகிழம்பூவைகாயவைத்துஅரைத்துப்பொடியாக்கிப்பாலில்காலை,மாலைஅருந்திவரகாய்ச்சல்தலைவலி, உடல்வலி, கழுத்து, தோல்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News