25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நலம் வாழ

May 25, 2026

வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி குணமாக...

ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில்2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு அல்லது தேன் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை, மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல் குணமாகும்.இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வறண்ட இருமலைக் குறைக்க பெரிதும் உதவும். தொண்டையில் ஏற்படும் தொற்று மற்றும் எரிச்சலைக் குணப்படுத்த உப்பு நீர்ச்சிகிச்சை மிகவும் பாரம்பரியமானது.

May 23, 2026

கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் கறிவேப்பிலை.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு,நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய்மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருக்கும். கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். 

May 22, 2026

குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதும், பருப்புத் தண்ணீர் கொடுக்கத் தொடங்குங்கள்.

குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதும், பருப்புத் தண்ணீர் கொடுக்கத் தொடங்குங்கள். ஏனெனில், பருப்புத் தண்ணீர் உடலில் இரத்த உருவாக்கத்திற்கு உதவுகிறது.

May 21, 2026

வஜ்ராசனம். 

வயிறு நிறைந்த நிலையில் செய்யக்கூடிய உடலின் ஒரே ஆசனம் இதுதான்.சாப்பிட்ட பிறகு படுப்பது மரணத்தை வரவழைப்பதற்குச் சமம். சாப்பிட்ட உடனேயே, 10 நிமிடங்கள் வஜ்ராசனத்தில் அமருங்கள். இது கற்களை ஜீரணிக்கவும், வயிறு பெரிதாகாமல் தடுக்கவும் உதவும்.

May 20, 2026

 பெரிய பலன் தரும் சின்ன பழக்கம்,

 காலையில் வெளிய வந்து, குறைந்தது 10 நிமிஷம் சூரிய ஒளியில் நிக்க try பண்ணுங்க.தேவையான Vitamin D கிடைக்கும். காலையில சூரிய ஒளி எடுத்துக்கிட்டா எலும்பு பலம், மன அமைதி, நல்ல தூக்கம் எல்லாமே கிடைக்கும்.ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா?மருதாணி பூக்களைப் பறித்து ஒரு துணியில் கட்டி, இரவு தூங்கும் போது தலைமாட்டில் வைக்க, அதன் மணம் உடல் பித்தத்தைக் குறைத்து நல்ல தூக்கம் தருகிறது.

May 18, 2026

எலும்புகளை வலுப்படுத்தும்  பூண்டு பால்.

மூட்டு வலியை குணப்படுத்தும்.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இல்லை.எலும்புகளை வலுப்படுத்தும், சருமம் பிரச்சனைகள் இல்லை.பிளேட்லெட்டுகளை அதிகரிக்கும், இரத்தம் உறைவதைத் தடுக்கும்.செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தும்.ஒற்றைத் தலைவலி, புற்றுநோயைத் தடுக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை இல்லை.முதுமைத் தோற்றத்தைக் குறைக்கும்.

May 13, 2026

நுரையீரலை சுத்தம் செய்ய.....

வெந்நீரில் ஆவி பிடிப்பது சுவாசக் குழாய்களைத் திறந்து, சளியை வெளியேற்ற உதவும்.நிறைய தண்ணீர் குடிப்பது சளியை நீர்த்துப்போகச் செய்து வெளியேற்ற உதவும். இஞ்சி,மஞ்சள், துளசி, மிளகு, அதிமதுரம் போன்றவற்றை டீயில் கலந்து குடிப்பது,நுரையீரலுக்கு நன்மை தரும்.

May 12, 2026

கல்லீரல் காக்கும் விளாம்பழம்.

விளாம்பழத்தை நாட்டு சர்க்கரையோட கலந்து காலைல வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு வந்தாலே குணம் கிடைக்கும், வாய்ப்புண், குடல் புண் (அல்சர்) குணமாகும்.இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.பற்களை வலுடையச் செய்கிறது.உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.தலை வலி குறையும்.கண்பார்வை மங்கல் குணமாகும்.பசியை தூண்ட செய்யும்.இதயத்தை பலம் பெற செய்யும்.மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.வாயுத் தொல்லை நீங்கும்.நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.எலும்புகள் வலுவடையும்.ரத்தத்தை சுத்திகரிக்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும்.பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

May 11, 2026

வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட....

சில காரணங்களால் சில பேர் தூக்கம் வராம தவியா தவிப்பாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, ராத்திரி9 மணிக்கு முன்னாடி சாப்பிட்டா பயன் கிடைக்கும். வெங்காயம் பிடிக்காது, நெய் சேர்க்கமாட்டேன்'னு சொல்றவங்க... சீரகத்தை இளவறுப்பா வறுத்துப் பொடி பண்ணி, வாழைப்பழத்தோட சேர்த்து சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்.

May 09, 2026

தினம் ஒரு பழம் சாப்பிட்டு வர ....

 தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படும். இரத்த சோகை சரியாகும்.இலந்தைப்பழம் சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.அன்னாசிப்பழம் தினம் சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.மாதுளம் பழத்தை படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 49 50

AD's



More News