அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் தடைபடுவது சொட்டு சொட்டாக சிறுநீர் போவது இதற்கெல்லாம் அருகம்புல் சாறு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துகிறது.படை, அரிப்பு, சொறி சிரங்கு, கடி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.
நாவல்பழத்தில் வைட்டமின் ஏ, சி, சிட்ரிக் அமிலம் உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதயத்தை பாதுகாக்கிறது. பக்கவாதம் வருவதை தடுக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக கற்களைக் கரைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மாலைக்கண் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.
கடுக்காயில் உவர்ப்புசுவை தவிர மீதமுள்ள 5 சுவையும் இருக்கும். இதை உண்பதன் மூலம் வாய், தொண்டை, இரைப்பை, குடல் புண்களை அகற்றும்., மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தி இரத்ததை சுத்தப்படுத்தும். பல நன்மைகள் தரும் இதை சித்த மருத்துவத்தில் அதிகம் உபயோகிப்பர். இதை வெளிச்சம் படாத இடத்தில் சேமித்து வைத்தால் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு இதற்கு கசாயம் - சீரகம்,கொத்துமல்லி விதை, சோம்பு, மிளகு,பட்டை,கிராம்பு, தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்துஇரவே 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து,மூடி வைத்து, காலையில் வெறும்வயிற்றில் 5 நாளைக்கு குடித்துவந்தால் மேலே சொன்ன10 நோய்களும் ஆயுளுக்கும் வரவே வராது.
ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைபட்டிருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறும் . இதனால் முகப்பருக்கள் குறையும். சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது முகப்பருக்களை குணப்படுத்த உதவுகிறது. இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய சரும் செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும் . சைனஸ் பிரச்னை குறைய வாய்ப்புள்ளது .
வகை 2 நீரிழிவு நோய் ஏற்பட வாழ்வியல் முறை,உணவு, மரபியல் எனப் பல காரணங்கள் உள்ளன. இரவு நேரங்களில் அதிக ஒளியில் இருப்பதும் ஒரு முக்கியக் காரணி என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிளின்டர்ஸ் பல்கலை கண்டறிந்துள்ளது. 85,000 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வௌவால் போன்ற சில உயிரினங்கள் பகலில் உறங்கும், இரவில் சுறுசுறுப்பாகத் தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும். மனிதர்களாகிய நாம் இரவில் துாங்கி பகல் வெளிச்சத்தில் இயங்குபவர்கள். எனவே அதற்கு ஏற்றார் போல் தான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும். இதையே சர்க்காடியன் ரிதம் / சுழற்சி என்று கூறுகிறோம். இரவில் அதிக நேரம் டிஜிட்டல், பிற செயற்கை மின் ஒளிகள் மிகுந்த சூழலில்நீண்ட நேரம் பணி செய்யும்போது இந்தச் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பு குறைகிறது. சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கிறது. வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. குறிப்பாக அதிகாலை 12:30 முதல் 6:00 மணி வரை பணி செய்பவர்களுக்கு மற்றவர்களை விட வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 67 சதவீதம் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோஷம் வரப் போகிறது என்று அர்த்தம். தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு தூங்குவதே மருத்துவம். தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதே மருத்துவம். தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம். ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுவோம்.
மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவில் இருப்பதால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும்.தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் மிளகில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை உடலுக்குள் நுழையும். பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி ஏற்படும் நோய்களை தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். புற்று நோய், நார்ச்சத்தில்லாத உணவுகளையும், மாமிச உணவுகளை அதிகளவில் உண்பவர்களுக்கும் வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இவர்கள் உண்ணும் உணவில் மிளகு அவ்வப்போது சேர்த்து உண்ண புற்று நோய் ஏற்படுவதை தடுக்கும்.சளி மற்றும் இருமல் மழை மற்றும் குளிர்காலங்களில் பலருக்கும் ஜலதோஷம் தொற்றி சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டு அவதியுறுகின்றனர்., இக்காலங்களில் மிளகுகளை வாயில் போட்டு மென்று வெண்ணீர் அருத்தினால் இத்தொல்லைகள் நீங்கும்.
சில உணவுகளை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடும் போது, அனைத்து சத்துக்களையும் முழுவதுமாக பெற முடியும். நட்ஸ் வகைகளில் ஒன்றாக பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட இரவில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். ஓட்ஸை ஊற வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள ஃபைடிக் அமிலம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. உலர் திராட்சை, ஆளி விதைகளையும் ஊற வைத்து சாப்பிடலாம்.
இரவில் தூங்கச் செல்லும் முன்பாக புகைப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்காக அமையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரம் காஃபி குடித்துவிட்டு தூங்குவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கின்றனர். மேலும், சிலர் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் ஆகியவற்றை இரவில் உண்பதுண்டு. இரவில் தூங்கச் செல்லும் முன் வாழை, கொய்யா தவிர்த்து பிற பழங்களை தவிர்க்க வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.