25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Jun 26, 2026

கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்.

வெள்ளரிக்காய் - அதிக நீர் உள்ளதால், உடலை ஹைட்ரேட் செய்து குளிர்விக்கும்.தர்பூசணி - சுமார் 90% நீர் கொண்டதால், தாகத்தை தணிக்க உதவும்.இளநீர் -உடலை குளிர்வித்து நீர்ச்சத்தை அதிகரிக்கிறது,இயற்கை எலக்ட்ரோலைட்கள் நிறைந்தது.தயிர் & மோர் - உடலை குளிர்விக்கும், குடல் ஆரோக்கியம் மேம்படும், ப்ரோபயாட்டிக் நிறைந்தவை.எலுமிச்சை நீர் - உடலை ஹைட்ரேட் செய்து புத்துணர்ச்சி தரும், வைட்டமின் C நிறைந்தது.முலாம் பழம் - அதிக நீர் உள்ளதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.கரும்பு சாறு - இயற்கை ஆற்றல் பானமாகச் செயல்பட்டு,உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.பச்சை திராட்சை  - நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும்.

Jun 25, 2026

பார்வை குறைபாடு நீங்க.

சாதிக்காயைப் பசும்பாலில் உரசி, இரவு கண்களைச் சுற்றி பற்றுப் போட்டு காலையில் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் முருங்கை கீரையையும், வாரத்தில் ஒரு நாள் அகத்திக்கீரையையும் சமைத்து சாப்பிடவும்.இப்படி செய்வதால் பார்வை குறைபாடு நீங்கி, கண்பார்வை அதிகரிக்க உதவும்.கண்ணாடி அணிந்திருந்தாலும், கழட்டி விடலாம்.

Jun 24, 2026

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்.....

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். இரத்த சோகையை குணப்படுத்தும். இரவு ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும்.அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலைப் போக்கும்.

Jun 20, 2026

சளி, இருமலுக்கு .....

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்: காலையில் வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை மற்றும் தேன் குடிக்கவும்.மூக்கு அடைக்கிறதா: சூடான நீராவியை உள்ளிழுத்து புதினா அல்லது விக்ஸ் சேர்க்கவும்.இரவில் இருமல் உங்களைத் தொந்தரவு செய்கிறது: வாயில் வறுத்த இஞ்சியுடன் தூங்கச் செல்லுங்கள்.சளியுடன் கூடிய இருமல்: துளசி, இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் குடிக்கவும்.தொண்டை வலி: வெதுவெதுப்பான நீர் + மஞ்சள் + உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும்.வறட்டு இருமல்: சிறிது இஞ்சி சாற்றை தேனில் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடவும்.

Jun 17, 2026

ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்க....

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல்,பித்தக் கோளாறு நீங்கும்.மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்தும் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத்தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது.இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.

Jun 16, 2026

ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஏலக்காய்.

ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். மேலும், இது ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் நல்ல நிவாரணமாக திகழ்கிறது.ஏலக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடல்நலத்தை பாதுகாக்க உதவுகின்றன.

Jun 15, 2026

செம்பு மோதிரம் அணிவதால்....

செம்பு மோதிரம் அணிவதால் வியர்வையுடன் தொடர்பில் இருக்கும் போது,செம்பு தோல் வழியாக மெதுவாக கரைந்து இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இது மூட்டு வலி கீல்வாதம் குறைக்கவும், வயிற்றிலுள்ள அசுத்தங்களைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

Jun 12, 2026

வெயிலில் இருந்து வந்த உடனே குளிப்பதையோ அல்லது குளிர்ச்சியான பானங்களை குடிப்பதையோ தவிர்க்கவும்.

உடல் வெப்பம் இயல்பு நிலைக்கு வர 10 நிமிடம் ஓய்வெடுப்பது அவசியம்.வெயிலில் இருந்து வந்த உடனே குளிப்பதையோ அல்லது குளிர்ச்சியான பானங்களை குடிப்பதையோ தவிர்க்கவும்.உடல் வெப்பம் இயல்பு நிலைக்கு வர 10 நிமிடம் ஓய்வெடுப்பது அவசியம்.

Jun 11, 2026

உப்பின் மேல் காலணி இல்லாமல் சில நிமிடங்கள் நின்று பாருங்கள்...

இது மன அழுத்தத்தை குறைக்க உதவும், உடல் நிலையை(posture) மேம்படுத்தும், மற்றும் நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தும். நாள்தோறும் ஓடும் வேகமான வாழ்க்கையில், இவ்வாறான சிறிய இயற்கை முறைகள் உடலுக்கும், மனசுக்கும் கொஞ்சம் ஓய்வை தரும்.

Jun 10, 2026

பற்கள் மற்றும் ஈறுகள் பலப்பட...

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில்ஊற்றிக் கொள்ள வேண்டும். வாயின் எல்லாப் பகுதிகளிலும் படும்படி 15 முதல் 20 நிமிடங்கள்வரை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் வெள்ளை நிற நுரையாக மாறியதும்துப்பிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கழுவ வேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 51 52

AD's



More News