நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது. நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
குடற்புழுக்களை நீக்கும் திறன் கொண்டது.ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக்கும்.புத்திக் கூர்மையை உண்டாக்கும்.பித்தம் கபம் ஆகியவற்றை குணமாக்கும்.உடல் எடையை குறைக்க உதவும்.நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.நுரையிரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பித்தத்தைத் தணிக்கக்கூடியது. இயல்பாகச் சூடு நிறைந்த தண்டு என்றாலும் சிறுநீரைப் பெருக்கும் வாழைத்தண்டுப் பச்சடி உடம்பு உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உடல் உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும். அதை உண்டால் குடலில் சிக்கிய மயிர், தோல், ஆகியவற்றை நீக்கும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,வைட்டமின் பி, சி ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்த நீரைப் பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயலைச் சீராக்கிச் சிறுநீரகக் கல் அடைப்பைத் தடுக்கும்.வாழைத்தண்டைப் பொரியல், கூட்டாகச் செய்து சாப்பிடுவது மட்டுமே நமக்குத் தெரியும். அது பல வகைகளில் நமக்கு மருந்தாக உதவுகிறது.சிறுநீரகப் பிரச்னை மற்றும் அதீத உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சிறுநீரை நன்றாக வெளியேற்றும்.
வாழை பூ கொழுப்புகளை கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்க செய்யும். வயிற்று புண்களை ஆற்றும். செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவும். வாய் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். மேலும் மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
வெந்தயம் பசியைக் குறைத்து உணவின் அளவைக் குறைப்பதோடு, உடல் பருமன் கொண்டவர்களின் பெரும் பிரச்னையாக உள்ள ரத்த அழுத்த உயர்வுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும்., நீரிழிவு உள்ளவர்களுக்கு உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இயற்கையான எடைக் குறைப்புக்கு இது கைகொடுக்கும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலியைக் குறைக்கவும், மாதவிடாய்ச் சுழற்சியை முறைப்படுத்தவும் வெந்தயம் பயன்படுகிறது.
வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாழையில் அரைத்து தடவி 2 மணி நேரம் உலர விட்டு பின் கழுவ வேண்டும். இவ்வாறு 20 நாள் வரை செய்ய வேண்டும்.புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
இந்துப்பு கலந்த இளஞ்சூடான நீரில் வாய்க் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கிப் பல்வலி, ஈறுவீக்கம் போன்றவை குணமாகும். ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை இதற்கு உண்டு. உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும்உதவுகிறது. தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இதய பாதுகாப்பிற்கு பேருதவி புரிகிறது.
சொடக்கு தக்காளி காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும். நன்கு முற்றிய பழத்தை சாப்பிட்டால் நுரையீரல் நோய்கள் நீங்கும். சிறுநீரகம் கல்லீரல் பிரச்சினைகள், சரியாகும். இந்த பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் அநீமியா சோர்வு அறிவுத்திறன் குறைபாடுகள் சரியாகும் கட்டிகளை கரைக்கும் ஆற்றலும் இந்த பழத்துக்கு உண்டு.
முட்டையை சிலர் பொதுவாக சோறு வேகவைக்கும் போது அந்த தண்ணீரிலேயே சோறுடன் சேர்த்து வேக வைப்பர்.. இன்னும் சிலர் குழம்பு செய்யும் போது அதிலும் முட்டையை ஓட்டுடன் முழுசாக வேக வைப்பார்கள்.. இது தவறானதாகும்.ஏனென்றால் அந்த பச்சை முட்டையிலிருந்து வெளிவரும் கெட்ட நீர் .ஒரு இறந்த பிணத்தை குளிப்பாட்டும் நீருக்கு சமமாகும். இதனால் கெடுதி அதிகம் ஏற்படும். ஆகையால் முட்டையை அவிக்கும் போது தனியாக ஒரு பாத்திரத்தில் வேகவைப்பது சிறந்ததாகும்..
ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள், நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதுமானது, உடல் உழைப்பு அதிகமான வேலைகளில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை வெள்ளை கரு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடலாம், இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தூங்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும் .எனவே மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.