பித்தத்தைச் சீராக்காவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் உண்டாகும்.வயிற்று உப்புசம், தலைவலியோடு ரத்தக்கொதிப்பும் ஏற்படும். உளவியல்சிக்கலுக்குக்கூட அடித்தளம் இடும். சுக்குத்தூள் ஆரம்பத்திலேயே இந்தப்பிரச்னைகளை வேரறுக்கும் ஒன்று. சுக்கு, பித்தத்தை சமன்படுத்தும்.
தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.முட்டைக்கோஸ், பாகற்காய், முருங்கைக் காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும்.தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக்கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வரலாம்.நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் நல்ல தீர்வாகும்.
சாராயம். சரக்குன்னு குடிச்சி சிலபேரோட கல்லீரல் கெட்டுப்போய் கிடக்கும். இதுக்கு என்னென்னவோ சாப்பிட்டும் குணமாகலைனா... விளாம்பழத்தை நாட்டு சர்க்கரையோட கலந்து காலைல வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு வந்தாலே கல்லீரல் குணமாகும்.
வாய்ப்புண் அடிக்கடி வருவது உடலில் முக்கிய சத்துக்கள் குறைவும் உடல் எதிர்ப்பு சக்தி குறைவும் இருப்பதைக் காட்டுகிறது. கீரைகளில் முருங்கைக்கீரை, சிறுகீரை சேர்த்தால் உடல் சத்து சமநிலை மேம்படும்.பழங்களில் வாழைப்பழம், மாதுளை சேர்த்தால் உடல் சக்தி அதிகரிக்கும்.காய்கறிகளில் கேரட், பீட்ரூட் சேர்த்தால் இரத்த சத்து மேம்படும்.போதுமான தண்ணீர் குடித்தால் உடல் சூடு குறைந்து வாய்ப்புண் குறையும்.சரியான உணவு பழக்கம் தொடர்ந்து இருந்தால் வாய்ப்புண் மீண்டும் வருவது குறையும்.
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்து விடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புச்சத்தை ஏற்படுத்திவிடும்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர், முக்கால் டம்ளர் எடுத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதில் அரை ஸ்பூன் நெய் மற்றும் சீரக பவுடர் அரை ஸ்பூன் சேர்த்துவெதுவெதுப்பாக குடித்தால் இடுப்பு வலி பறந்து போகும்.சாதம் மீந்து போனால், அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, கூட கடலை மாவு, உப்பு, வெறும் மிளகாய்த்தூள் சேர்த்து தோசை வார்த்தால் அடை போன்று சுவையுடன் ருசியாக இருக்கும்.
தேங்காய் தண்ணீரில் சியா விதைகள் சேர்த்தால், அவை நீரில் ஊறி பெரிதாக வீங்கும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் தருகிறது. இதனால் அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறைந்து. உடல் எடையை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
BP உள்ளவர்களுக்கு காலை ஹைட்ரேஷன் மிகவும் முக்கியம்.அதனால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும்.பொட்டாசியம் நிறைந்த உணவுகள், வாழைப்பழம்,இளநீர் (கொக்கோனட் வாட்டர்) ,ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.எண்ணெய், உப்பு அதிகம் உள்ள காலைஉணவுகளை தவிர்க்க வேண்டும்.நார் சத்து (Fiber) அதிகம் உள்ள உணவுகள்,பச்சைப்பயறு,ஓட்ஸ்,விதைகள் காலை நேரத்தில் சாப்பிட்டால் BP குறைய உதவும்.10 நிமிடம் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep Breathing) BP மீது நல்ல விளைவைக் கொடுக்கும். BP தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். இதில் போதுமான அளவு ஃபோலேட் சத்து உள்ளது, இது கருவின் மூளை மற்றும் தண்டுவடத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.மாதவிடாய் காலங்களில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது, ஏனெனில் அதில் அதிக அளவில் மெக்னீசியம் உள்ளது.
பால், மோர், வெந்தயம், எள், ராகி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள்,முட்டையின் மஞ்சள் கரு, காளான் ஆகிய வைட்டமின் டி உணவுகள், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாதாம், வால்நட் போன்ற புரதம் நிறைந்தவை,வாழைப்பழம், பேரீச்சை, கடலை பருப்பு, பூசணி, சூரியகாந்தி விதை ஆகிய மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பவை. அதேநேரம், இனிப்புகள், குளிர்பானம், கூடுதல் உப்பு மற்றும் அளவுக்கதிமான காஃபின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.