25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பழமொழி.

Jun 13, 2023

முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்.

முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்.பொருள்:முருங்கையின் மகத்துவம் சொல்லும் பழமொழி இது. மேகம் என்பது பால்வினை நோய்களில் ஒன்று ட்ரப்போனமா பலிடம் என்ற பாக்டரியாதொற்றால் இந்த நோய் உருவாகிறது. இதைக்கட்டுப்படுத்தும் ஆற்றல்முருங்கைக்கு உண்டு. முருங்கையில் உள்ள இரும்புச்சத்து உடலுக்குவலுவேற்றும், ரத்தத்தை பெருக் கும். இதனால், உடலில்  தாது வளம்பெருகி பால்வினை நோய்கள் நீங்கும். இதைக் குறிக்கவே முருங்கைஉண்ண நொறுங்குமாம் மேகம் என்றார்கள்.-

Jun 06, 2023

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

சித்த வைத்தியம் தொடர்பான பழமொழி இது. சித்த வைத்தியத்தில் வேர்தான் மூலாதாரம். பல வேர்களைப் பற்றி அறிந்து கொண்டால்தான் வைத்தியம் கற்றுக்கொள்ள முடியும். ஆயிரம் வேரைக் * கொன்றவன் அரை வைத்தியன்" என்று இருந்த பழமொழிதான் காலப்போக்கில் மருவி வைத்தியரைக் கொலைகாரர் ஆக்கிவிட்டது.

May 30, 2023

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டுநாமம்!இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா?பசியால் வாடிய சிவனடியார்ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின்வழியே சென்றபோதுஅங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்றுசென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்றுநினைத்து. ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் இந்தப்பழமொழியாகி, இப்போது ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பதைக் கேலி செய்யப் பயன்படுகிறது.

May 23, 2023

பாம்பைக் கண்டால், படையே நடுங்கும்.

இதில், பாம்பு என்பது மாஹபாரத போர்கலத்தில் அர்ஜீனன், கர்ணன் ஆகியோர் பயன்படுத்திய நாக அஸ்த்திரம் ஆகும். இந்தநாக அஸ்த்திரத்தைக் கண்டு படைவீரர்கள் பயப்படுவார்கள் இதுதான் இப்பழமொழியில் பாம்பு என்று வடிவம் பெற்றுள்ளது.

May 16, 2023

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா? என்பது தான் பழமொழி.குதிர் என்றால், ஆற்று வெள்ளத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட மணல்மேடு. அதில் கால் வைத்தால், நாம் ஆற்றில் மூழ்கி விடுவோம். அதனால் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கைதான் இது. மற்றபடி, குதிரைக்கும் இந்தப் பழமொழிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.

May 09, 2023

வைத்தியனிடம் கொடுப்பதை. வாணியனுக்குக் கொடு,

வைத்தியனிடம் கொடுப்பதை.வாணியனுக்குக் கொடு,பொருள்-நல்ல தரமான உணவுப் பொருள்களை வாங்கி உண்பதற்குப் பயன்படுத்த வேண்டும். கலப்பட உணவால் தான் பெரும்பாலான நோய்கள் உருவாகின்றன. விலை மலிவாகக் கொடுத்தோ அல்லது தரமற்ற உணவுப் பொருளை வாங்கிப் பயன்படுத்தினால் ,நோய் உடலில் ஏற்படும். அதனை மக்கள் தவிரத்தல் வேண்டும். இக்கருத்தை மேற்கூறிய பழமொழி நன்கு புலப்படுத்துகிறது. உணவு சரிவர உண்ணாதிருந்தாலும் உடலுக்குத் தீங்கு நேரிடும். கருமித்தனத்துடன் சிலர் பட்டினியாக இருப்பர். அவ்வாறு உணவினைச்சரியான நேரத்திற்கு உண்ணாதிருந்தால்வயிற்றில் புண் அல்சர் ஏற்பட்டு மருத்துவரை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க மருத்துவத்திற்குச் செலவுசெய்வதைவி டஅதிக விலையாக இருப்பினும் தரமான உணவுப்பொருள்களை வணிகரிடம்வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

May 02, 2023

நாற்பது வயதில் நாய்குணம். அறுபது வயதில் பேய் குணம்,

நாற்பது வயதை எட்டியவர்களுக்கு உலக அறிவு நிறைய இருக்கும். அவர்பேச்சில் உறுதி இருக்கும். நாவண்மை நிரம்பியிருக்கும். அதனைக் குறிப்பிடுவதற்குதான் "நாற்பது வயதில் நாய்குணம்.அறுபது வயதைக்கடந்தவர்கள் அனுபவ அறிவில் நிறைந்திருப்பார்கள். வெறும் எட்டில், எழுத்தில் வரும் அறிவல்ல அது .அந்த அரிய அனுபவத்தைக் குறிப்பிடும் விதமாக சொல்லப்பட்டதுதான் "அறுபது வயதில் அரிய குணம்".

Apr 25, 2023

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்.

பொருள்:அடி என்பது இறைவனின் திருவடி துன்பம் ஏற்படும் போது இறைவனே கதி என்று அவன் திருவடியை பற்றினால், அண்ணன், தம்பி, உற்றார், உறவினர் எவர் உதவியையும் ,எதிர் நோக்கத் தேவை இருக்காது, என்பதை உணர்த்தவே அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 

Apr 18, 2023

ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டும் போக்கும்.

ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டும் போக்கும்.பொருள்:ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும்.அருவி நீரில் பல கனிமச் சத்துக்கள்மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர்  ( MINERAL WATER ) என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ்வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும்.சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும் எனப் பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புகளை பழமொழி எடுத்துரைக்கிறது.

Apr 11, 2023

'இஞ்சி தின்ற குரங்கு போல"

“இஞ்சி தின்ற குரங்கு போல ”   பொருள்இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது, குரங்குக்கு மிகுந்த விருப்பம். இது, மாங்காய் இஞ்சியைப் போன்றது.காரமில்லாதது சற்று இனிப்பும் அதில் இருக்கும். அதை ருசி கண்ட குரங்கு, அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து, கடித்துச் சுவைத்து விடும்.அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும், கோபத்தையும் குறிப்பது தான் இந்தப் பழமொழி.

1 2 ... 9 10 11 12 13 14 15 16 17 18

AD's



More News