25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Sep 10, 2025

'சூப்பர் 500' பாட்மின்டன்பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றார் கிரண்.

நேற்று 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் ஹாங்காங் ,ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 2021, 2024 ஒலிம்பிக்கில் தங்கம்  வென்ற சீன தைபேவின் வாங் சி லின், சியு ஹிசியன் சியா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 21-13 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 18-21 என இழந்தது. மூன்றாவது, கடைசி செட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-10 என வசப்படுத்தியது. 21-10 முடிவில் இந்திய ஜோடி 21-13, 18-21, என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.  இந்தியாவின் கிரண் ஜார்ஜ் ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் 21-14, 21-13 என மலே சியாவின் செயம் ஜூன் வெய்யை வென்றார்.  இரண்டாவதுபோட்டி யில் சக வீரர் சங்கர் முத்துசாமியை 21–81, 21-14 என்ற நேர் செட்கணக்கில் வென்று பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார் கிரண்.

Sep 09, 2025

இன்று முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகிறது.

ஆசிய கோப்பை 'டி-20' தொடர் (செப்.9-28) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது. ஏ' பிரிவு: இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 'பி' பிரிவு: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங். ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும்.12 போட்டி முடிவில் இரு பிரிவிலும் முதலிடம் பெறும் தலா இரு அணிகள் 'சூப்பர்- 4' சுற்றுக்கு முன்னேறும்.ஒவ்வொரு அணியும், மீண்டும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை 'சூப்பர்-4' சுற்றில் மோதும். 6 போட்டி முடிவில் செப். 28ல் நடக்கும் பைனலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் மோதும்.

Sep 09, 2025

பெண்களுக்கான  ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன்.

பெண்களுக்கான  ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் சீனாவில்,நேற்று நடந்த கடைசி போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. இதில் இந்தியா 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.பி' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (7 புள்ளி), ஜப்பான் (7) அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தன.

Sep 09, 2025

உலகடேபிள் டென்னிஸ் சார்பில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பைனலில்இந்தியாவின்திவ்யான்ஷி, அனன்யா ஜோடிவெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

 உலகடேபிள் டென்னிஸ் சார்பில் யூத் ஸ்டார் கன்டெண்டர் தொடர் வடக்கு மாசிடோனியாவில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின்திவ்யான்ஷி, அனன்யா ஜோடி, சீனாவின் வாங்கி, ஜிலிங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 11-8 என வென்ற இந்திய ஜோடி அடுத்த செட்டை 7-11 என இழந்தது.அடுத்த இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வென்றன. 5வது, கடைசி செட்டில் போரா டிய இந்திய ஜோடி 14-12 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-2 என்ற கணக்கில் '' வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

Sep 09, 2025

மத்திய ஆசிய கால்பந்து'நேஷன்ஸ்' கோப்பை தொடர் இந்தியா வெண்கலம் வென்றது.

 தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர் மூன்றாவது இடத்துக்கான போட்டியில், 133வது இடத்திலுள்ள இந்திய அணி, உலகத் தரவரிசையில் 79 வது இடத்திலுள்ள ஓமனை எதிர்கொண்டது. முடிவில் இந்திய அணி என்ற கணக்கில்வெற்றி பெற்று, இத்தொடரில் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலம் வென்றது.

Sep 09, 2025

யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில்கோப்பை வென்றார் அல்காரஸ்.

 யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்நியூயார்க்கில்,  ஆண்கள்ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, இத்தாலியின்ஜானிக் சின்னர் 24, மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய அல்காரஸ், 2வது செட்டை 3-6 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர், அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என தன்வசப்படுத்தினார். இரண்டு மணி நேரம், 42 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 6–2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் 2வது முறையாக கோப்பை வென்றார். சாம்பியன் அல்காரசிற்கு ரூ. 44 கோடி, 2வது இடம் பிடித்த சின்னருக்கு, ரு. 22 கோடி பரிசு வழங்கப்பட்டது. 

Sep 08, 2025

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் ,இந்தியாவுக்கு தங்கம்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தென் கொரியாவில், ஆண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. மூன்று செட்களின் முடிவில் போட்டி 176-176 என சமநிலையில் இருந்து, நான்காவது செட்டில் ,இந்தியா 59 புள்ளி பெற்றது. பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளி கிடைத்தது. முடிவில், ரிஷாப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் அடங்கிய இந் திய அணி 235-233 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவில், முதன் முறையாக தங்கம் வென்றது.  

Sep 08, 2025

அரினா சபலென்காவுக்கு  யு.எஸ்., ஓபன் டென்னிசில் கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது.

நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் - டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' - பெலாரசின் அரினா சப லென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா ('நம்பர் -9) மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வென்றார்.6-3, 7-6 ஒரு மணி நேரம், 34 நிமிடம் நீடித்த போட்டி யில் சபலென்கா 6-3, 7-6, என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று,  சாம்பியன் பட்டத்தை யு. எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக வென்ற,சபலென்காவுக்கு கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது. 

Sep 08, 2025

இந்தியா ஆசிய ஹாக்கி சாம்பியன் பைனலில் தென் கொரியாவைவென்று பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

ஆசிய கோப்பை ஹாக்கி பீஹாரின் ராஜ்கிர் நகரில் ,நேற்று நடந்த  12வது சீசன் பைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டம் துவங்கிய 31வது வினாடியில் ஒரு கோல் அடித்த சுக்ஜீத் சிங் இந்தியாவுக்கு விரைவாக முன்னிலை பெற்றுத்தந்தார்.இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆசிய கோப்பை வென்ற இந்தியா, அடுத்த ஆண்டு (ஆக. 14-30) பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

Sep 08, 2025

தமிழக வீராங்கனை வைஷாலி கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

 'பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.நேற்று முன்தினம் இரவு நடந்த ஓபன் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், ஸ்பெனின் டேனியல் யூபாவை எதிர்கொண்டு ஆடிய குகேஷ் 35-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி 65-வது நகர்த்தலில் ஆன்டன் டெம்சென்கோவை (சுலோவேனியா) வென்றார். தமிழக வீரர்பிரக்ஞானந்தா 65-வது நகர்த்தலில் போரிஸ் ஜெல்பாண்டை (இஸ்ரேல்) தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றார். விதித் குஜ ராத்தி (இந்தியா)- அலெக்சாண்டர் பிரெட்கே (செர்பியா), கார்த்தி கேயன் முரளி-திவ்யா தேஷ்முக் (இருவரும் இந்தியா) இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி ,பெண்கள் பிரிவின் 3-வது சுற்றில் 38-வது நகர்த்த லில் ஒல்கா படேல்காவை (ஆஸ்திரியா) தோற்கடித்து , வெற்றியை பதிவு செய்தார். அத்துடன் அவர் தனது பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். 

1 2 ... 73 74 75 76 77 78 79 ... 137 138

AD's



More News