85வது பிறந்தநாள் அஞ்சலி திரு.க.வீ.அழ.ராம.மு.ராம.முத்தையா செட்டியார்
சின்னய்யா அழகப்பர்
சிறுவிழிகள் மலர்ந்த தினம்
சகலகலாவல்லித் தாய்
பன்னெடும் நாள் புரிந்த தவம்
முன்னவர் வழிபாட்டால்
முந்தி வந்த மூலதனம்
முளைத்தெழுந்த தாமரையாய்
முகம் காட்டி மலர்ந்த தினம்
விளைவிக்க கல்விப்பயிர்
விவசாயி ஜனித்த தினம்
சளைக்காமல் அள்ளியிட
சூரியனார் உதித்த தினம்
மழையாகத் தனம் பொழிய
மனை தவழ்ந்த மன்னரினம்
மகத்தான கல்வித்தாய்
மகவொன்றை ஈன்ற தினம்
துளைத்திடும் நோவுக்கே
தனை ஈந்த வள்ளலினம்.
by
வள்ளி முத்தையா
0
Leave a Reply