உடலில் ஏற்படும் வெளுப்பு .
உடலில் ஏற்படும்வெளுப்பு மற்றும் தேமல் நோய் குணமாக சிறந்த மருத்துவகுணம் உள்ள வெள்ளை பூண்டை, வெற்றிலை சேர்த்து ,மசிய அரைத்து ,தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துக்குளித்து வர நல்ல மாற்றம் எற்படும்.
பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் காணும் தேமல் அகலும்.
அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.
நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இந்த நாயுருவி இலையானது எளிதாக கிராமப்புறங்களில் கிடைக்க கூடியது. அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
0
Leave a Reply